Contact us at: sooddram@gmail.com

 

மரணங்களின் அஸ்தமனம்

1971 மற்றும் 1989 ஆண்டுகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சிகளின் போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை கணக்கில் எடுக்காது, இலங்கையில் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்த அரசு – புலிகள் யுத்தத்தினை மாத்திரம் நோக்குவோமானால், எல்லா இனங்களையும் சேர்ந்த ஏறத்தாள ஒரு இலட்சம் வரையிலான மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டதும், பல இலட்சக் கணக்கானவர்களின் இடப்பெயர்வுகளும், மதிப்பிட முடியாத சொத்துக்களின் அழிவும் இடம்பெற்றுள்ளன. இதற்கு இலங்கை அரச படைகளும், அரச படைகளை எதிர்த்துப்போராடிய ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களும், இந்திய அமைதிப்படையுமே பொறுப்பாளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அரச படைகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்றைக்கும் பொறுப்புக்கூற இலங்கை அரசு உள்ளது. ஆனால் தமிழ்த்தேசிய இயக்கங்களினதும் இந்திய அமைதிப்படையினதும் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூற இன்று எவருமே இல்லை.

யுத்த முனையில் பலியானவர்கள் மற்றும் யுத்தத்தின் நடுவில் சிக்கி கொல்லப்பட்ட பல்லின பொதுமக்கள் தவிர ‘என்னுடன் உடன்பாடு இல்லாதவன் எனது எதிரியே’ என்ற கோட்பாட்டில் யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துத் தமிழ் தரப்பினராலும் ‘மரண தண்டனை’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்கள் மூன்று தசாப்த காலமாக பறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு அவ்வப்போது தமது தேவை கருதி உரிமைகள் கோரப்பட்டும் இருக்கின்றன. அதேவேளை உரிமை கோரப்படாமல், ஆனால் ‘இந்தக் கொலையை எந்த தரப்பு செய்திருக்கக்கூடும்’ என்பது மிகவும் வெளிப்படையாக தெரியும் வண்ணமும், சில கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகள் எமது பொதுவான ஊகங்களை பொய்ப்பிக்கும் வகையிலும், பல ஆண்டுகளாய் இன்னமும் மர்மம் நீடிக்கும் கொலைகள் நிகழ்த்தப்பட்டும், பலர் காணாமலும் போயுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போனவர்கள் சிலருக்கு அவ்வப்போது நினவாஞ்சலிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானோர் நினைவு கூரப்படுவது இல்லை. இதனால் எமது நினைவுகளிலிருந்து மறைந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் மரணித்தவர்களுக்கும் காணாமல் போயுள்ளவர்களுக்கும் பொறுப்புக்கூறவும் இன்று எவருமே இல்லை.

ஆரம்பகாலத்தில் புளொட் இயக்கத்திலிருந்து, பின்னர் தமிழ் - ஆங்கில பத்தி ஊடகவியலாளராக உருவெடுத்து, இறுதியில் புலிகளின் முகாமுக்குள் சரணடைந்த தர்மரத்தினம் சிவராம் கொலை செய்யப்பட்டு பத்தாவது ஆண்டினை நினைவுகூரும் கூட்டங்கள் மட்டக்களப்பிலும் சென்னையிலும் நடைபெற்றதுடன், சில தமிழ்த்தேசிய மற்றும் புலிகள் சார்பு ஊடகங்களும் நினைவுக்குறிப்புகளை வெளியிட்டு இருந்தன. சிவராம் கடந்துவந்த பாதையை முழுமையாக சொல்லப்படாது, அவர் ஒரு ‘சிறந்த’ தமிழ் - ஆங்கில பத்தி ஊடகவியலாளராக அல்லது புத்திஜீவியாக சித்தரிக்கப்பட்டு வருகின்றார்.

1983-1987 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் புளொட்டின் ஆயுதப்பயிற்சி முகாம்களில் சில வதைமுகாம்களாக உருமாறி சித்திரவதைகளும் கொலைகளும் நடந்தேறிய போது, சிவராம் அந்த இயக்கத்தின் முன்னணி நபராக இருந்தவர். இவர் ஒருபோதும் புளொட்டினுள் நிகழ்ந்த அராஜகங்களை எதிர்;த்துப் போராடியவரல்ல. மாறாக, புளொட்டின் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களோடே, புளொட் இயக்கம் சிதையும் வரைக்கும் தன்னை வலுவாக இணைத்து இருந்தவர். புளொட்டின் ஜனநாயக மீறல்களை அம்பலப்படுத்தி ‘புதியதோர் உலகம்’ வெளிவந்த பின்னரும், புளொட்டின் தலைவர்களில் ஒருவரான சந்தியார் புளொட் இயக்கத்தால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பின்னரும் அந்த இயக்கத்தை விசுவாசித்தவர். மேலும் புளொட் இயக்க உறுப்பினர்களான அகிலன், செல்வன் ஆகியோரைக் கடத்தி மூதூரில் கொன்று புதைப்பதற்கு நேரடியாக இவர் துணைபுரிந்தவர்.

புலிகளுக்கும் புளொட்டிற்கும் தாயாதிப்பகை. இதனால் 1982இல் புளொட்டின் ஸ்தாபகரில் ஒருவரான சுந்தரம் புலிகளினால் கொல்லப்பட்டார். பின்னர் 1986இல் புளொட் இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டதோடு பல நூற்றுக்கணக்கான புளொட் உறுப்பினர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு எல்லா தமிழ் ஆயுத இயக்கங்களிலும் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து புலிகள் ஒரு பெரும் பாசிச இயக்கமாக விருட்சம் பெற்ற பின்னரே, புலிகளுக்குள் சிவராம் பிரவேசித்தார்.

2004 இல் புலிகளிலிருந்து கருணா பிரிந்தபோது கருணாவின் ஆலோசகர் வடிவத்தில் சிவராம் மட்டக்களப்பில் நின்றார். ஆனால் கருணா பிரிந்து ஒரு வாரத்தின் பின்னர் வன்னியில் கால் பதித்த சிவராம், அங்கிருந்து கருணாவின் பிளவை எதிர்த்து அறிக்கைவிட்டார். இதுதான் அவரது குத்துக்கரணத்திற்கு மேல் குத்துக்கரணம் அடிக்கும் தன்மைக்கு ஒரு சிறந்த உதாரணம்.. இவரது இந்த துரோகச் செயலுக்காக கருணா அணியினரே சிவராமை சுட்டுக்கொன்றதாக பல ஊடகவியலாளர்கள் பத்தி பத்தியாக எழுதினார்கள்.

தமிழ் தேசிய விடுதலைப் போரட்ட காலத்தில் இயக்கங்களினுள்; இழைக்கப்பட்ட, இயக்கங்களிடையேயான மோதல்களில் நிகழ்த்தப்பட்ட அராஜகங்கள் யுத்தக்குற்றங்களே. சிவராம் போன்ற மோசமான யுத்தக்குற்றவாளியை ஏதோ சில சக்திகள் நினைவுகூர திட்டமிட்டு செயற்படுகின்றன. ஆனால் தமிழீழ ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களினால் கொல்லப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்போன பல்லின மக்கள், போராளிகள், பத்திரிகையாளர்கள், அரச பணியாளர்கள், சமூக சேவையாளர்கள் கல்விமான்கள், அனைவரின் நினைவாஞ்சலிகளை ஒவ்வொன்றாக அனுஸ்டிக்காவிடினும், அவர்களை நினைவில் வைத்திருப்பதற்கு இன்று மிகச் சொற்பமானோரே எஞ்சியிருக்கின்றனர்.

நன்றி: ஆசிரியர் தலையங்கம் - வானவில் இதழ் 53

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com