Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்! தமிழ் முற்போக்கு கூட்டணியும்!!

தமிழ் முற்போக்கு கூட்டணி எனும் புதிய அரசியல் கட்சியொன்று கடந்த வாரம் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது. அதன் தலைவராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். உபதலைவர்களாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரமும், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரான இராஜாங்க அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனும் தெரிவாகியுள்ளனர். நீண்ட நாட்களாக இவர்களது மூன்று கட்சிகளுக்கு மிடையில் இடம்பெற்ற தொடர்ச்சியான பேச்சுவார்த் தைகளுக்குப் பின்னர் ஒரு முடிவிற்கு வந்து இந்தப் புதிய அரசியல் கூட்டணி உதயமாகியுள்ளது. இந்தப் புதிய கட்சியின் உதயம் குறித்து அதன் தலைவர்களினால் மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் இன்றோ நாளையோ கலைக்கப்படலாம் என அறிவித்தல் வரவுள்ள வேளையில் அடுத்த தேர்தலை இலக்காக வைத்து இந்தப் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகமான கருத்து நிலவினாலும் அதுவே உண்மையானது என்றும் கூறலாம். பொதுவாக அரசியல் கட்சிகளது தலைவர்கள் தமது மக்களுக்குச் சேவை செய்வதற்கு பதவிகளை எதிர்பார்ப்பதில் தவறெதுவும் இல்லை. ஆனால் திடீரென முளைக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் கூட்டணிகள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தேர்தல் காலத்தில் மட்டுமே ஒற்றுமையாக இருப்பதுவும் அதன் பின்னர் தமக்குள் கருத்து முரண்பாடுகளை உருவாக்கி பிரிந்து செல்வதுமே இதுவரை காலமும் உள்ள வரலாறாக உள்ளது.

ஆனால் உதயமாகியுள்ள தமிழ் முற்போக்கு முன்னணி நீடித்து நிலைத்து நின்று மக்களுக்குச் சேவையாற்றும் என்பது அதன் ஆரம்ப நிகழ்வுகளிலேயே புலனாகியது.

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த, மூன்று தலைவர்களிடையேயும் ஒருவிதமான உற்சாகத்தைக் காண முடிந்தது. பதவிகளை விடவும் மக்கள் சேவைக்கே முக்கியத்துவம் எனும் அவர்களது கருப்பொருள் ஏனைய கூட்டணிக் கட்சிகளின் கூட்டமைப்புக்களிடையே காணப்படாத ஓர் ஆரோக்கியமான விடயமாக இருக்கிறது. தேர்தலில் வென்று வந்தால் மக்கள் சேவை. அதுவரை கட்சியில் முக்கிய பிரதான பதவி என்பதாகவே கூட்டு வைக்கும் கட்சித் தலைவர்களது எண்ணமாக உள்ள இன்றைய காலத்தில் அதற்கு எதிர்மறையாக மிகவும் ஒற்றுமையாக இந்த தமிழ் முற்போக்கு முன்னணி உருவாக்கம் பெற்றுள்ளது.

இந்தப் புதிய அமைப்பின் தலைவராக தெரிவாகியுள்ள மனோ கணேசன் இதற்கான காரணத்தை விளக்குகையில் அர்ப்பணிப்பான பேச்சுவார்த்தை, தலைவர்களிடையேயான விட்டுக் கொடுப்பு மற்றும் பெருந்தன்மை அதனை விடவும் மக்கள் நலன் குறித்து உணர்வு எனத் தெளிவாகக் கூறியிருந்தார். உண்மைதான், தலைவர் மனோ கணேசனைப் பொறுத்தவரையில் தலைநகரில் ஆரம்பித்த அவரது தீவிர அரசியல் பயணம் இன்று நாடளாவிய ரீதியாக வியாபித்துள்ளது.

ஆனாலும் அவர் வடக்கு கிழக்கில் சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மரியாதை செலுத்துமுகமாக அங்கு தமது அரசியல் தேவையில்லை எனக் கருதி வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் தெரிவு செய்து அவர்களுக்குச் சேவைசெய்யும் எண்ணத்துடன் இந்தப் புதிய கூட்டணியை ஆரம்பித்துள்ளார்.

உண்மைதான், வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் அங்கு வாழும் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே முழுமையாக ஆதரிக்கின்றனர்.

அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் மனோ கணேசன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் தொகைக்கு நிகரான தொகையில் அம்மாகாணங்களுக்கு வெளியேயும் தமிழ் மக்கள் வாழுகின்றனர். இவர்கள் இதுவரை காலமும் பெரும்பான்மைக் கட்சிகளையும்,

தமது பிரதேசங்களிலுள்ள சிறு சிறு கட்சிகளையுமே ஆதரித்து வருகின்றனர். இதனால் தமிழ் மக்களது பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்புக்கள் பல இடங்களில் இருந்தும் அவை முழுமை பெறாது இழக்கப்படுகின்றன. தமிழ் மக்களிடையே ஒற்றுமையில்லாத காரணத்தினாலும், தமிழ்க் கட்சிகளிடையேயான போட்டிகளாலும் தமிழரது வாக்குகளில் பெரும்பான்மையினப் பிரதிநிதிகள் வெற்றிபெற்று வரும் நிலையே பல தொகுதிகளில் காணப்படுகிறது.

இந்நிலையை மாற்றியமைக்கவே இந்தப் புதிய கூட்டணி உருவாகியுள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள், நம்புகிறார்கள். அதுவே உண்மையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் முன்னரும் இவ்வாறு பல கூட்டணிகள் அமைக்கப்பட்டன. அவற்றில் பல சில மாதங்கள் கூட நிலைக்கவில்லை. சில தேர்தல் முடிந்ததும் கலைந்துவிட்டன. இன்னும் சில எம்மவரைப் பாவித்து வேறு சில பதவிகளைப் பெற்றுக் கொண்டதாகவும் அமைந்திருந்தன.

எனவே இவை குறித்து இந்தப் புதிய கூட்டணியின் தலைவர்களுக்கு நிச்சயம் நிறையவே அனுபவம் இருக்கும். சிலர் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கட்சித் தலைவர்களிடையே கோள் மூட்டி கருத்து மோதல்களை உருவாக்கி அதில் தாம் ஆதாயம் தேடவும் முனைவர். இவற்றுக்கு இக்கூட்டணியின் தலைவர்கள் சோரம் போய்விடக் கூடாது. பதவியை விடவும் மக்கள் நலனே முக்கியம் என நினைத்துச் செயற்பட்டால் இதற்கு இடமிருக்காது.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தமிழ் மக்களது ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளதோ அவ்வாறு அம்மாகாணங்களுக்கு வெளியே வாழுகின்ற தமிழ் மக்களது ஆதரவை இக்கூட்டணி பெற வேண்டும். உண்மையில் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்குள்ள மக்களுக்கு இதுவரை அரசியல் ரீதியாக பெரிதாக எதனையும் செய்யவில்லை.

அம்மக்கள் விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் தமக்குத் தலைமை தாங்க ஓர் அமைப்புத் தேவை, அந்த அமைப்பை பலமுள் ளதாக்க வேண்டும் எனும் ஒரேயொரு காரணத்திற்காகவே ஒற்றுமையாக தமிழத் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர். தம்மிடையே ஒற்றுமை யில்லாதுவிட்டால் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி வெளியார் ஊடுருவி தமது அடையாளத்தையே அழித்து விடுவர் என் அச்சம் கொண்டமையே அம்மக்கள் உண்மையில் தமிழ் கூட்டமைப்பை ஆதரிப்பதற்கான பிரதான காரணம்.

அத்துடன் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் போட்டியிடக் கூடிய வலுவான போட்டி கட்சிகள் எதுவும் இல்லை என்பதால் அவர்கள் தமிழ்க் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர். யுத்த காலத்தில் தாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்த வேளைகளில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ள பலர் வெளிநாடுகளில் தமது குடும்பங்களுடன் பாதுகாப்பாக இருந்தமையை அம்மக்கள் மறந்து விடவில்லை.

ஆனால் இப்போதைக்கு இவர்களை விட்டுக் கொடுத்தால் தமக்கு ஆபத்து வேறு கோணத்தில், வேறு வடிவத்தில் வந்துவிடும் என்பதால் விட்டுக் கொடுக்காமல் பொறுமையாகவும், ஒற்றுமையாகவும் உள்ளனர். இனியும் எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். அது தெரிந்தோ என்னமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல தலைவர்களும் மக்களுக்காக உண் மையாகவே உழைப் பவர்களாக மாறி விட்டனர்.

இந்நிலையில் யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு விடுதலைப்புலிகள் ஏதோவொரு வகையில் பாதுகாப்பாக இருந்தது போல வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்த தமிழர்களுக்கு அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கு அன்று பாதுகாப்பாக அல்லது அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் பங்குகொண்டு குரல் கொடுப்பவராக இருந்த ஒரு சிலருள் மனோ கணேசன் முதலாவதாக இருந்துள்ளார் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வெள்ளவத்தையில் விடுதிகளில் தங்கியிருக்கும் போது கைது செய்யப்படுபவர்களையும், அடையாள அட்டை இல்லை எனவும், பொலிஸ் பதிவு இல்லையெனவும் பொய்யாகக் குற்றம் சாட்டித் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர்கள் தலைநகரிலும், இதர பிரதேசங்களிலும் கொடுமைகளை அனுபவித்தபோது துணிந்து குரல் கொடுத்தவர் மனோ கணேசன் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

இன்று சிலர் தாமும் போரிட்டதாகவும், குரலெழுப்பியதாகவும் உரிமை கோரலாம், அறிக்கையும் விடலாம். ஆனால் அன்று இவர்களில் எவரையும் மக்கள் உண்மையானவர்களாகப் பார்க்கவில்லை. நீங்கள் போய் கைது செய்யுங்கள், நான் வந்து மீட்கிறேன். கிடைப்பதை பங்கு போட்டுக் கொள்ளலாம் எனப் பாதுகாப்புப் பிரிவினருடன் கூட்டு வைத்துச் செயற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பற்றி மக்கள் கூறிய, கூறிவரும் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்த வடக்கு கிழக்குத் தமிழருக்காக மட்டும் மனோ கணேசன் குரல் கொடுக்கவில்லை. மலையகத்திலிருந்து வந்து கொழும்பில் தொழில் புரியும் மலையக இளைஞர்கள் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்ட வேளைகளில் அவர்களுக்காகவும் இவரே குரல் கொடுத்து வந்தார். ஏனைய அரசியல்வாதிகளை நாம் குறை கூற விளையவில்லை. இவரைப் போன்று உண்மையாகவும், துணிந்தும் எவரும் செயற்படவில்லை என்பதே எமது கருத்தாகவுள்ளது. அதிலும் அன்று ஆடசியிலிருந்த கட்சிகளில் பதவி வகித்தோர் வாயே திறவாதிருந்தனர்.

யுத்த காலத்திலும், அதன் பின்னரும் காணாமற்போன இளைஞர் யுவதிகளுக்காக ஒரு வலுவான அமைப்பையே உருவாக்கி அதன் மூலம் சர்வதேச ரீதியாக நியாயம் கேட்டார். அமெரிக்க, இந்திய உயர்ஸ்தானிகர்களைக் கண்டு பேசினார். இன்றும் பேச்சு நடத்தி வருகிறார். வடக்கு கிழக்கைச் சேர்ந்த எந்தவொரு அரசியல் தலைவரும் நினைத்தும் பார்க்காத விடயம் இது. இதன் காரணமாக அவர் உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு சிலரின் வற்புறுத்தலின்பேரில் நாட்டிலிருந்து வெளியேறி சில மாதங்கள் இந்தியாவிலும் தங்கியிருந்தார். வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களுக்காக தலைநகரில் இவர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பல. இதன் மூலமாகவே இவ்விடயம் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இவரது மக்களுடன் இணைந்த தனிமனிதப் போராட்டத்தை தமிழ்க் கூட்டமைப்போ அல்லது புலம் பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புக்களோ மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாதது போலவே நடந்து வருவதாக தெரிகிறது. ஆனால் உறவுகளைத் தொலைத்துவிட்டு அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என இன்றுவரை கண்ணீருடன் உணவருந்தும் எத்தனை வடக்கு கிழக்கு வாழ் உறவுகளுக்கு இவர் ஆறுதலாக இருந்துவருகிறார் என்பது சம்மந்தப்பட்ட அவர்களுக்குத் தெரியும். இன்றும் வாருங்கள் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவோம் என இவர் அழைப்பு விடுத்தால் போதும். நம்பிக்கையுடன் ஓடி வருவதற்கு உறவுகளைத் தொலைத்து நிற்கும் உறவுகள் சிறிதளவும் தயக்கம் காட்ட மாட்டார்கள்.

இத்தகைய ஒருவர் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களையும் உள்ளடக்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி சம்பந்தன் ஜயாவுடன் இணைந்து அதன் இணைத் தலைமையாக இயங்க வேண்டும். ஆனாலும் வடக்கு கிழக்கில் அவர்களது அரசியல் செயற்பாடுகளைக் குழப்பக் கூடாது எனும் காரணத்தால் அம்மாகாணங்களுக்கு வெளியே வாழுகின்ற தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழ் முற்போக்கு முன்னணி எனும் புதிய கூட்டணி அமைத்து அதற்கு இவர் தலைமை தாங்குவது உண்மையிலேயே பொருத்தமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கிற்கு வெளியே தமது அரசியலை நடத்துவதில்லை என்ற முன்னைய கோட்பாட்டை அவர்கள் கடைப்பிடித்து இந்தப் புதிய முற்போக்கு கூட்டணிக்கு தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும்.

யுத்த காலத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்ந்த வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கு தன்னாலான பாதுகாப்பு உதவிகளை துணிந்து நின்று செய்ததுடன் யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த ஐந்து வருடங்களாக அங்கு மக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் தனது சாகக்களுடன் தானும் கலந்து வலுச் சேர்த்தமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மறந்து விடக்கூடாது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடலாம் எனும் ஒரு கருத்து நிலவிவருகிறது. இது உண்மையாயின் அது மனோ கணேசன் தலைமையிலான புதிய கூட்டணியை வலுவிழக்கச் செய்ய வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மக்கள் கருதுவர். இதே மனோ கணேசன் தமது முற்போக்கு கூட்டணியில் வடக்கில் தேர்தலில் நின்றால் அவருக்கு அம்மக்களது ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

அந்தளவிற்கு அவர் அம்மக்களது துயரங்களில் எந்த அரசியல் தலைவருமே பங்கெடுக்காத வேளைகளில் துணிந்து பங்கெடுத்திருக்கிறார். ஆனால் மனோ கணேசன் அவ்வாறு நினைக்கமாட்டார். அதேபோன்று அவர் கோரிக்கை விடுக்காவிடினும் அவருக்கு கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும். யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு அவர் செய்த உதவிகளுக்கு அவருக்குச் செய்யும் நன்றிக் கடனாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை நிச்சயம் செய்தே ஆகவேண்டும்.

வடக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நினைத்தால் தமக்குள் ஓர் அமைப்பை ஏற்படுத்தி தமது பிரதிநிதி ஒருவரை இலகுவாகப் பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியும். அல்லது மனோ கணேசனையே தமக்காகப் போட்டியிட முன்வருமாறு அழைப்பும் விடுக்கலாம்.

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள், மனோ கணேசனும் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார். அந்த மக்கள் தம்மை வடக்குத் தமிழராகவே எண்ணி வாழ்ந்து வருகின்றனர். சம்பந்தன் ஐயாவே எமது தலைவர் எனக் கூறுகிறார்கள். யுத்தம் முடிந்த பின்னர் தம்மை வைத்துக் குளிர்காய குளிர்ப்பிரதேசத்திலிருந்து வந்த சில தொழிற் சங்கங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தம்மைப் பிரிக்க வந்தவர்களாகக் கூறித் துரத்தியுமுள்ளனர். கடந்த மாகாண சபைத் தேர்தலில் அவ்வாறு நினைத்து வாக்குக் கேட்ட சிலர் மூக்குடைபட்ட வரலாறும் உள்ளது.

அத்துடன் புதிதாகக் கூட்டணி அமைத்துள்ள கூட்டணியின் தலைவரான மனோ கணேசன், தமது அமைப்பு வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற தமிழ் மக்களுக்காக தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பிரதிநிதித்துவம் செய்ய விளைவதாகக் குறிப்பிட்டுள்ளார். இங்கு சர்வதேச ரீதியாக என அவர் விளித்துக் குறிப்பிட்டுள்ளமையை நாம் கவனத்திற்கு கொண்டே ஆக வேண்டும். தற்போதைய சூழலில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரச்சினையே சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே மனோ கணேசனும் இதுவரை காலமும் குரல் கொடுத்தும் வந்துள்ளார்.

எனவே இவ்விடயத்தில் இவரும், இவரது புதிய கூட்டணியும் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே செயற்பட வேண்டும். அப்படிச் செய்யாது இவ்விடயத்தில் இவர் தமிழருக்காகவெனக் கூறிக் கொண்டு தனித்துச் செயற்பட முனைந்தால் சர்வதேச அரங்கில் உயர்ந்து நிற்கும் வடக்கு கிழக்குத் தமிழரது பிரச்சினைக்கான தீர்வு மலினமடைந்து அல்லது சற்று வலுவிழந்து தொய்வு நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இதன் காரணமாக முப்பது வருட கால போராட்டமும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் அர்த்தமில்லாது போய்விடும். இதனை அறியாதவராக மனோ கணேசன் இருக்கமாட்டார்.

மலையகத் தலைமைகளை பிரதானமாகக் கொண்டு விளங்குவதால் இக்கூட்டணியின் செயற்பாடுகள் மற்றும் சேவைகள் பெரும்பாலும் மலையகத்திற்கு மட்டுமானதாக மட்டுப்படுத்தப்படாது எனவும் வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமது செயற்பாடுகள், சேவைகள் இருக்கும் என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்தையும் இவ்விடத்தில் வரவேற்க வேண்டும். இது அனைத்து மக்களதும் கவனத்தை இவர்கள் பால் ஈர்த்துள்ளது.

அத்துடன் தமிழ் பேசும் மக்கள் என தமிழரையும், முஸ்லிம் மக்களையும் தலைவர் மனோ கணேசன் தனது உரையிலும், அறிக்கையிலும் ஆங்காங்கே விளித்துக் கூறியிருக்கிறார். அப்படியாயின் அவர் தெரிவித்திருக்கும் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் எனும் தமிழ்ப் பேசும் மக்களின் தொகையில் மேலும் அதிகரித்த தொகையே காணப்படும்.

கொழும்பைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் பலர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவேளைகளில் இவரே அவர்களுக்காகவும் குரல் கொடுதத்வர் என்பதை முஸ்லிம்களும் அறிவர். இன்றும் காணாமற்போன பல முஸ்லிம் வர்த்தகர்களது உறவினர்கள் இவரிடமே பதிவுகளை மேற்கொண்டு கண்டு பிடித்துத் தருமாறு கோரியும் வருகின்றனர். அதனால் முஸ்லிம் மக்களையும் அரவணைத்துச் செல்லும் தகுதியை அம்மக்கள் இவரது தலைமையிலான கூட்டணிக்கு வழங்குவர் எனவும் கூறலாம்.

எனவே இனிவரும் காலங்களில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழ் முற்போக்கு கூட்டணி என்பதாக தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி ஒரே குடையின் கீழ் செயற்பட வைக்க இவ்விரு கூட்டமைப்புக்களின் தலைவர்களும் அயராது உழைக்க வேண்டும். தமிழ் முற்போக்க கூட்டணி வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள தமிழ்க் கட்சிகளையும்,

குறிப்பாக பெரும்பான்மையான மலையக மக்களின் ஆதரவைப் பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியையும் தம்முடன் இணைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பதவிகளைப் பங்கு போட்டாவது மக்கள் நலன் கருதி இவ்வாறு செயற்பட்டால் பின்னர் வேறு எவரும் தமிழ் மக்களைக் கூறுபோட முடியாது.

தே.செ.வேலவர் ...-

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com