Contact us at: sooddram@gmail.com

 

மதுபானத்துக்கும் புகைத்தலுக்கும் நிகராக உயிரைக் குடிக்கும் துரித உணவு பழக்கம்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜுலியஸ் மகியால் 1886ம் ஆண்டு தயாரிக் கப்பட்ட மகி இந்தியாவுக்கு வந்தது 1982இல். ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் மகி நூடுல்ஸை விற்று நெஸ்லே நிறுவனம் சம்பாதித்தது ரூ. 1,500 கோடி என்கிறார்கள். இந்தியச் சமையலறைகளில் எந்த அளவுக்கு வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம் இது. காரீயமும் மோனோ சோடியம் குளுட்ட மேட்டும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருப்பதாகச் சொல்லி, இப்போது மகி நூடுல்ஸுக்கு இந்தியாவில் தடை விதித்திருக்கிறார்கள். மகியினால் உண்டாகக் கூடிய ஆபத்துக் களைப் பற்றி மருத்துவர்களிடம் கேட் கிறார்கள். அவர்களும் பேசுகிறார்கள். ஆனால் இது எதுவும் புதிதல்ல.

மகி அறிமுகமான காலத்திலேயே மருத்துவர்கள் இது பற்றி எச்சரித்தது உண்டு. இன்றைக்குப் போலத்தான் அன்றைக்கும் படிக்கிற கேட்கிற நேரத்தில் அதையெல்லாம் படித்துக் கேட்டுவிட்டு சாப்பிடுகிற நேரத்தில் வழக்கம்போலச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது இந்தியச் சமூகம். சரி, இப்போது மகிக்குத் தடை விதித் தாயிற்று, ஆபத்துகள் அதோடு போய் விட்டதா? கிடையவே கிடையாது.

ஒவ்வொரு நாளும் 100 நோயாளிகளைச் சந்திப்பவன் என்கிற முறையில் சொல்கி றேன், மதுப்பழக்கம், புகைப்பழக்கத்துக்கு இணையாக இன்று இந்தியர்களின் உடல் நலனைச் சூறையாடிக்கொண் டிருக்கிறது துரித உணவுப் பழக்கம். தெரிந்தோ, தெரியாமலோ இன்றைய இளைய சமூகத்தை மயக்கிவைத்திருக்கும் துரித உணவு அத்தனையையும் உடைத்துப் பார்த்தால் உள்ளே பதுங்கிக்கொண்டிருந்த பூதமாக வெளிவருவது கோதுமை மா.

புரோட்டா, நூடுல்ஸ், நாண், ருமாலி ரொட்டி, பன், சமோசா, பீட்சா, குல்ச்சா, பர்கர்.. எல்லாமே கோதுமை, கோதுமையில் தவிடு நீக்கப்பட்டு சில இரசாயனப் பொருட்களைச் சேர்த்து வெண்மையாக் கப்படுவதே மைதா எனப்படுவது. இப் படியான உருவாக்கத்தின்போதே நார்ச் சத்தை முற்றிலுமாக இழந்துவிடுகிறது கோதுமை. அடுத்து, பி. கொம்ளெக்ஸ் விட்டமின் கள், கல்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுச்சத்துகளும் குறைந்துவிடு கின்றன. கோதுமையினால் ஆன உணவு என்பதே குப்பை உணவு தான். கூடவே, கோளாறு தரும் உணவாகவும் மாறி விடுகிறது. சீரணிப்பதில் தொடங்கும் கோளாறுகளின் பயணம் மலச்சிக்கல், மூலநோய் என நீண்டு உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு என்று மேலும் விரிகிறது.

கோதுமைக்கு வெண்மை நிறம் தருகிற பென்சோயில் பெராக்சைட்டு புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தைக் கொண்டது. கோதுமையை மிருதுவாக்கச் சேர்க்கப்படும் அலெக்சான், கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கக் கூடியது. சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கோது மையில் சேர்க்கத் தடை விதிக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள் இவை. இந்தியாவிலோ இது தொடர் பான விழிப்பு ணர்வே இன்னும் உருவாகவில்லை.

துரித உணவுகளின் மூலப் பொருளான கோதுமை மட்டும் தான் என்றில்லை. துரித உணவில் சேர்க் கப்படும் எல்லாவற்றி லும் மறைந்திருக்கிறது ஆபத்து. துரித உணவுத் தயாரிப்பில் எண்ணெய்க்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணைய் நல்லது என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை அப்படியல்ல.

எண்ணெய் சுத்திகரிப்பு என்பதே பல வேதிப் பொருட்களைச் சேர்த்து வெப்ப நிலையை மாற்றி, பல கட்டங்களைக் கடப்பது  தான் என்று ஆகிவிட்டது. சரி, வீட்டிலும் அதே எண்ணெயைத் தானே பயன்படுத்துகிறோம் என்று கேட்காதீர்கள். வீட்டில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை 10 முறை மீண்டும் மீண்டுமா பயன்படுத்துகிறோம்? பிரி ரேடிக்கல்ஸ் எனும் நச்சுகள் அதிகரிக்க வழிவகுப்பது இந்த எண்ணெய்க் கலாசாரம். இப்படித் துரித உணவுகளில் ஒவ்வொரு சேர்மானங்களில் புதைந்திருக்கும் ஆபத்து களையும் பெரிய பட்டியல் போடலாம்.

துரித உணவுக் கலாசா ரத்துக்கு அடிமையான வர்களால் தவிர்க்கவே முடியாது குளிர்பானம் பீட்சாவோ, பேர்கரோ கூட நமக்கு ஒரு போத்தல், குளிர் பானமும் தானே தேவைப் படுகிறது? குளிர்பானங்களின் உருவாக் கத்தில் ‘காஃபீன்’ எனும் இரசாயனப் பொருளுக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பை நிலைப்படுத்துவதற்காக, சிட்ரிக் அமிலம், பாஸ் பாரிக் அமிலம் போன்றவையும் சேர்க் கப்படுவதுண்டு. கேரல் மற்றும் பீட்டா கரோட்டீனை வண்ண மூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தருபவை உதாரணமாக, பாஸ்பாரிக் அமிலம் பல்லின் மேற்பூச்சாக இருக்கின்ற என்னாமலைச் சீக்கிரம் சிதைத்து பற்சிதைவுக்கு வழிவகுக்கக் கூடியது. கோலா பானங் களுக்குக் கறுப்பு வண்ணம் தருகின்ற கேரமல் புற்று நோயை உண் டாக்கக் கூடியது. கோலா புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. காஃபின் இரத்த அழுத்தத்தை அதிகரித்து நரம்புத் தளர்ச்சிக்கும் இதய நோய்க்கும் வழிவகுக்கக் கூடியது.

மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக உட்கார்ந்து பெண்கள் பருவடை தலைப் பற்றிப் பேசினால், ஒரு உண்மை தெரியவரும், முன்புபோல இல்லை. இன்றைய குழந்தையை சீக்கிரம் பருவம் அடைந்துவிடுகிறார்கள். அதாவது முன் பருவமடைதல். எட்டு வயதிலேயே பூப்பெய்திவிட்ட குழந்தைகளை நான் சந்தித்திருக்கிறேன்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு, எனினும் நம்முடைய உணவுப் பழக்கத்துக்கு அதில் முக்கிய இடம் உண்டு. பெண்கள் பூப்பெய்வதற்குக் காரணமான ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹோர்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளுக்கு முக்கிய இடம் உண்டு.

முன்பருவமடைதல் என்பது வெறும் உடல் சார்ந்த பிரச்சினை மட்டும் அல்ல. உதாரணமாக, முன்பருவம் அடையும் ஒரு குழந்தையின் எலும்பு வளர்ச்சி விரைவில் நின்று போகிறது. இதனால் அவர்களுடைய உயரம் குறைந்து போகிறது. இது உடல் ரீதியாக மன ரீதியாக, சமூக ரீதியாகப் பல பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது.

மேலும், தினமும் துரித உணவைச் சாப்பிடும் குழந்தைகளில் அறுபது வீதம் பேர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் உடற் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். உடலின் சீரான நிலைமையைக் குலைக்க உடற்பருமன் ஒன்று மட்டும் போதும்.

கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் செயற்கைக் கருவூட்டலுக்கு உள்ளாகிற இளம் தம்பதியரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எங்கோ எப்போதோ கேள்விப்பட்ட நிலை மாறி, பல இளம் தம்பதியினர் குழந்தை யின்மைப் பிரச்சினையை எதிர்கொள்வதை இன்று நேருக்கு நேர் பார்க்கிறோம். காரணம் என்ன? ஹார்வாட் பல்கலைக்கழகமும் முர்சியா பல்கலைக்கழகமும் இணைந்து சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டன. நொறுக்குத்தீனி, துரித உணவுக் கலா சாரத்துக்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கு உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுவதை அவை அந்த ஆய்வின் மூலம் கண்டறிந்தன. மலட்டுத்தன்மைக்கான காரணங்களில் நம்முடைய உணவுப் பழக்கத்துக்கும் முக்கிய பங்கிருப்பதை அவை உறுதிசெய்தன.

இவ்வளவு பாதிப்புகளை எதிர்கொள்கி றோம். ஆனால் என்ன படிப்பினையைப் பெறுகிறோம்?

மகியை நாம் துரத்தியிருக்கலாம். குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும், ஆனால், இன்னும் துரத்த வேண்டியவை நிறைய இருக்கின்றன. அரசாங்கத்தின் தடை அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. துரித உணவுகளை நாமே துரத்தலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com