Contact us at: sooddram@gmail.com

 

சாரணர் இயக்கத்தை வலுப்படுத்தி  ாணவர்களை ஒழுக்க சீலர்களாக்கலாம்

முதலாம் தவணையின் இறுதி வாரங்களில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது, பாட சாலைப் பிள்ளைகளின் மனதிற்குள் புதைந்திருக்கும் சில தீய எண்ணங்கள் வெளிப்படையாக இன்று கொழும்பிலும் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களிலும் வீதிகளில் அரங்கு ஏறுவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில், பாடசாலை மாண வர்கள் விநோத உடைகளை அணிந்து தங்கள் பாடசாலை கொடி களை ஏந்தியவாறு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவண்ணம் வாகனங் களில் செல்வதுண்டு. இன்னும் சிலர் நூற்றுக் கணக்கில் சைக்கிள் ஊர்வலங்களில் சென்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபடுவதும் உண்டு. வேறு சிலர் தொப்பிகளை கையில் வைத்த வண்ணம் வீதியில் செல்லும் பொதுமக்களிடம் பிச்சை எடுப்பதுபோன்று கைச்செலவுக்கு ஏதாவது தாருங்கள் என்று கேட்பதும் உண்டு.

இவை அனைத்தையும் வயது வந்த பொதுமக்கள் சிறு பிள்ளைகளின் விளையாட்டு என்று நினைத்து, தங்களால் முடிந்தளவு பண உதவி செய்து அவர்களை மன்னித்துவிடுவார்கள். அதுபோன்றே, பொலிஸா ரும் இந்த பாடசாலை பிள்ளைகள் மற்றவர்களுக்கு துன்பமிழைக்காத வாறு நடத்தப்படும் சேஷ்டைகளை பார்த்தும் பாராதவர்கள் போன் றும் இருப்பார்கள்.

வட பகுதியில் உள்ள பாடசாலைகளிலும் இதுபோன்று கிரிக்கெட் போட்டி கள் நடைபெறும்போது மாணவர்கள் இவ்விதம் குதூகலிப்பது உண்டு. ஆயினும் இப்போது மாணவர்கள் இந்த கிரிக்கெட் போட்டிகளின் போது மேற்கொள்ளும் வினோதமான விளையாட்டுக்கள் மக்களை துன்புறுத்தும் அல்லது வேதனைப்படுத்தும் அளவுக்கு மோசமடைந் துள்ளது. கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குச் சென்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதற்கு பதில் இவர்களில் சில மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமிருந்தும் வழிப்போக்கர்களிடமிரு ந்தும் கிடைக்கும் பணத்தில் மது அருந்தி, அகெளரவமான முறையில் வீதியில் நடந்துகொள்வதைப் பார்க்கும் பொதுமக்கள் அருவெறுப்பும் வேதனையும் அடைகிறார்கள்.

சில மாணவர்கள் மதுபோதையில் அல்லது மது அருந்தாத சுய நினை வுடன் பெண்கள் பாடசாலைகளை முற்றுகையிட்டு, மாணவிகளையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தும் சேஷ்டைகளிலும் ஈடுபடுவதும் உண்டு. இதனால், ஆத்திரமும்,கோபமும் அடையும் பெண்கள் பாட சாலைகளின் அதிபர்கள் தங்களுக்கு அபயமளிக்குமாறு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வேண்டுகோள் விடுத்து, பொலிஸாரின் பாதுகாப்பை நாடுவதும் உண்டு.

சில மாணவர்கள் பெண் பாடசாலைகளின் வெளிச்சுவரில் கேவலமான துர்வசனங்களை கொட்டை எழுத்துக்களில் எழுதியும், தங்கள் தீய எண்ணங்களை வெளிப்படுத்துவதும் உண்டு. இதுபற்றி, ஒரு சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் தடவை பாடசாலை மாணவர்கள் வீதிகளிலும், பொது இடங்களிலும் இவ்விதம் சட்டவிரோதமான முறையில் முறைகேடாக நடந்துகொண்டால், அவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று அறிவித்துள்ளார்.

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னரும் இத்தகைய கிரிக்கெட் போட்டி கள் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்றன. அன்றும் பாட சாலை பிள்ளைகள் இவ்விதம் வீதிகளிலும் பொது இடங்களிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது, வாகனங்களில் சென்று பொது இடங்களில் மகிழ்ச்சி ஆரவாரங்கள் செய்வதுண்டு.

ஆனால், அன்று இத்தகைய ஆரவாரங்களை பாடசாலை மாணவர்கள் மிகவும் கண் ணியமான முறையில் பொதுமக்களுக்கோ, மாணவிகளுக்கோ மன வேதனை அளிக்காத வகையில் செய்தார்கள். அன்று, ஆசிரியர் களும் பொது இடங்களில் தங்கள் பாடசாலை பிள்ளைகள் முறை தவறி நடக்காதவாறு அவதானிக்கும் பொறுப்பையும் ஏற்று, தவறி ழைக்கும் மாணவர்களை தண்டிக்கவும் தவறியதில்லை.

ஆனால், இன்று பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் சீர்குலைந்து போயிரு க்கிறது என்பதை நாம் வேதனையுடன் ஞாபகப்படுத்துவது பொருத் தமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

பாடசாலை பிள்ளைகளின் ஒழுக்கம் சீர்குலைவதற்கு ஒருவகையில் பெற் றோரும் பொறுப்பை ஏற்கவேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கு அளவு க்கதிகமாக பணத்தையும், சுதந்திரத்தையும் கொடுப்பதே ஒழுக்க சீர்குலைவுக்கான பிரதான காரணமாகும்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் சகல பாடசாலைக ளிலும் சாரணர் இயக்கம் வலுப்பெற்றிருந்தது. அன்று, சாரணர் இயக்கத்தில் அங்கத்தவராக இருக்கும் ஒரு மாணவனுக்காக பாடசா லைகளில் மாணவர் தலைவர் தலைமைப் பதவிகள் கொடுக்கப் படுவதுண்டு. அதுபோன்றே அவர்கள் படிப்பை முடித்து வெளி யேறிய பின்னர் சாரணர் இயக்கத்தில் அங்கத்தவராக இருந்தால், வேலை வாய்ப்புக்களிலும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

1857 ஆம் ஆண்டு பெப்ரவரி 22ந் திகதியன்று, பிறந்த சாரணர் இயக்க த்தின் ஸ்தாபகரான ரொபேட் பேடன் பவுல் பிரிட்டிஷ் இராணுவத்தில் லெப்ரினன் ஜெனரல் என்ற உயர் பதவி வகித்திருந்தார்.

அவர், சாரணர் இயக்கத்தை இலங்கை உட்பட உலக நாடுகள் அனைத்திலும், ஆரம்பித்து, உலகின் எதிர்கால சந்ததியினரை ஒழுக்க சீலர்களாக மாற்றுவதற்காக இவ்வியக்கத்தை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தொனிப்பொருளில் வளர்த்து, சாரணர்கள் பொதுத் தொண்டு களில் தொண்டர் அடிப்படையில் ஈடுபட்டு நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த பண்பை வலியுறுத்தினார்.

இன்றும், சாரணர் இயக்கங்கள் உலகில் இருந்தாலும், அது அந்தளவுக்கு இன்று வலுவுடன் செயற்படவில்லை. அதுவும், இன்றைய மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம், குறைந்து வருவதற்கு ஒரு பிரதான காரணமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com