Contact us at: sooddram@gmail.com

 

என்றும் பொருந்தும் மார்க்ஸின் கோட்பாடுகள்

(அ.அன்வர் உசேன்)

மார்க்ஸ் கல்வி கற்ற பள்ளியில் இறுதி வகுப்பில் ஒவ்வொரு மாணவரும் தனது எதிர் கால இலக்கு என்ன என்பது குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும். தனது 17வது வயதில் எதிர்கால இலக்கு குறித்து மார்க்சின் கட்டுரை அவரது சிந்தனையை வெளிப்படுத் துவது மட்டுமல்ல; ஒவ்வொரு பொதுவுடை மைப் போராளியும் கற்க வேண்டிய வழி காட்டுதல் எனில் மிகை அல்ல. இன்னல்களுக்கிடையே இரும்பு போன்ற உறுதிஒருவன் தனக்காக மட்டுமே வாழ்ந்தால் ஒரு வேளை புகழ்வாய்ந்தவனாகவோ அல் லது சிறந்த கல்விமானாகவோ ஆகலாம். ஆனால் அவன் ஒரு முழுமையான சிறந்த மனிதனாக ஆகவே முடியாது.” எவன் மிகவும் மகிழ்ச்சிக்குரிய மனிதன்? எவன் ஒருவன் மிக அதிகமானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறானோ, அவன்தான் மிகவும் மகிழ்ச்சிக்குரியவன் என்பதை அனு பவம் கூறுகிறது”. ஆகவே வாழ்வின் இலக்கு என்ன? மனித குலத்திற்காக பணியாற்று. இந்த வாழ்வு ரோஜா மலர்ப்பாதை அல்ல. முட்கள் நிறைந்த பாதை! நாம் மனித குலத்தின் நன் மைக்காக பணியாற்றுவது என முடிவு செய்து விட்டால் எந்தஒரு துன்பமும் நம்மை நிலை குலைய வைக்காது. ஏனெனில் இந்த தியாகங் கள் மனித குலத்தின் நன்மைக்காக!”

தனது 17ம் வயதில் எழுதிய இந்த வாசகங் கள் மார்க்சின் வாழ்நாள் முழுவதும் அவ ருக்கு மன உறுதியை அளித்தன. ஏனெனில் தனது சொந்த வாழ்வில் அவர் சந்திக்காத இன்னலே இல்லை எனலாம். ஒவ்வொரு தேசமும் அது பிரஷ்யாவின் சர்வாதிகார ஆட் சியாக இருந்தாலும் பிரான்சின் குடியரசாக இருந்தாலும், மார்க்சை நாடு கடத்தின. முத லாளித்துவ அரசுகளும், பத்திரிகைகளும் அவதூறு பொழிந்தன. மார்க்சின் மகத்தான படைப்பானமூலதனம்வெளியிடப்பட்ட பொழுது அதனை விமர்சித்தால் கூட மார்க் சின் புகழ் பரவி விடும் என அஞ்சிய அவர்கள்அமைதி சதியில்ஈடுபட்டனர். வறுமை மார்க்ஸ் குடும்பத்தை வாட்டியது. எனினும் அவர் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்க ளுக்காக உழைத்தார். கோடிக் கணக்கான உழைப்பாளிகளின் மகிழ்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்ததால் எந்த ஒரு துன் பமும் அவரிடம் ஒரு சிறு ஊசலாட்டத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை!

மார்க்சின் கோட்பாடுகள் இன்றும் பொருந்துமா?

மார்க்ஸ் மறைந்து 128 ஆண்டுகள் கடந்து விட்டன. “128 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மார்க்சின் கருத்துக்கள் இன்று பொருத்தமற்ற வையாகிவிட்டன”. முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத் திக்கொள்வதில் வெற்றிபெற்று விடுகிறது. எனவே மார்க்சின் கருத்துக்கள் தோல்வி அடைந்துவிட்டன”.இவையெல்லாம் இன்று முதலாளித்துவ வாதிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும். இவை உண்மை அல்ல! மார்க்சின் ஆய்வு குறிப்பாக அவரதுமூலதனம்முத லாளித்துவ உற்பத்தி முறை குறித்து மிக ஆழ மாக ஆய்வு செய்யப்பட்டதாகும். முதலாளித் துவம் பற்றி மார்க்ஸ் முன்வைத்த அடிப்ப டைக்கோட்பாடுகள் இன்றளவும் பொருந்து கின்றன. முதலாளித்துவத்தின் உற்பத்தி முறையில் உள்ள வடிவம் மாறலாம். தொழில் நுட்பப் புரட்சி வந்திருக்கலாம். இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தில் முறைசாராத்தன்மை உருவாகியிருக்கலாம். தொழில் மூலதனத்தோடு நிதி மூலதனமும் சமூகப் பொருளாதாரத்தில் முன்வந்திருக்க லாம். இந்த நிதி மூலதனம் இரத்தக்காட்டேரி போல வெறிகொண்டு அலையலாம். ஆனால் இவையெல்லாம் கூட இலாப வெறிக்காகவே முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டது. எனவே மார்க்சின் அடிப்படைக்கோட்பாடு இன்றளவும் பொருந்துகின்ற ஒன்றுதான்.

முதலாளித்துவமும் கொடிய வறுமையும் பிரிக்க முடியாதவை. முதலாளித்துவம் உற்பத்தியைப் புரட்சிகர மாக முன்னேற்றியது. ஆனால் அதன் பலன் கள் ஒரு சிலரின் கைகளில் குவிந்தன என் றார் மார்க்ஸ். எனவே அபரிமிதமான செல்வம் ஒரு சிலரிடத்திலும் மறுபுறத்தில் அபரிமித மான வறுமை உழைப்பாளிகளிடமும் உருவா கியது என துல்லியமாக எடுத்துரைத்தார் மார்க்ஸ். ஏன்இவ்வாறு நிகழ்கிறது என்ப தையும் தோலுரித்துக் காட்டினார்.

அமெரிக்காவில் 90 சதவீதமாக உள்ள அமெரிக்க உழைப்பாளிகளின் வருமானம் 1979-2006ம் ஆண்டுகளுக்கிடையே 15 சதவீதம் உயர்ந்தது. ஆனால் வசதி படைத்த மேல்மட்ட 1 சதவீத செல்வந்தர்களின் வருமா னமோ 144 சதவீதம் உயர்ந்தது. அதுவும் மிக உயரத்தில் உள்ள 0.1 சதவீதம் செல்வந்தர் களின் வருமானம் 324 சதவீதம் உயர்ந்தது. ஒரு அமெரிக்கத் தொழிலாளியின் ஊதி யம் 1989-2007ம் ஆண்டுகளிடையே 10 சத வீதம் உயர்ந்தது எனில், முதன்மை அதிகாரி களின் ஊதியம் இதே காலகட்டத்தில் 167 சதவீதம் உயர்ந்தது. எனவே 40 மில்லியன் அமெரிக்க மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர் எனும் செய்தி ஆச்சரியமற்ற ஒன்று தான். உலகின் செல்வம் அமெரிக்காவில் குவி கிறது எனில் அமெரிக்காவிற்குள் அச்செல் வம் மிகச்சிலரின் கைகளில் குவிந்துள்ளது. உலக முதலாளித்துவத்தின் தலைமையகத் தில் இதுதான் இன்றைய நிலை! முதலாளித் துவத்தின் அதிநவீன தொழில்நுட்பங்களும் புதிய உற்பத்தி சாதனங்களும் செல்வத்தை ஒரு சிலரின் கைகளில் சேர்வதை மாற்ற வில்லை. மார்க்ஸ் கூறியது இன்றும் உண் மையே என்பதை பறைசாற்றுகிறது.

இதே நிலைதான் இந்தியாவிலும்! ஒரு புறத்தில் 77 சதவீதம் மக்கள் அதாவது 84 கோடி பேரின் ஒருநாள் வருமானம் ரூ.20க்கும் கீழே! ஆனால் மறுபுறத்தில் அம்பானி குழு மம், டாடா குழுமம், சன் குழுமம் என பில்லிய னர்களிடம் செல்வம் தஞ்சமடைவதும் தங்கு தடையின்றி தொடர்கிறது. இவர்களுக்காக அரசின் கொள்கைகளும் வளைந்து கொடுக் கின்றன என்பதை அலைக்கற்றை ஊழல் தெளிவாக வெளிப்படுத்தியது. எனவே மார்க் சின் கோட்பாடு அமெரிக்காவிற்கும் சரி, இந்தி யாவிற்கும் சரி இன்றும் பொருந்துகின்ற உண்மையாகவே உள்ளது.

முதலாளித்துவ உற்பத்தி சமூக நன்மைக் காக நடப்பது இல்லை. சமூக திட்டமிடலுக்கு அங்கு இடமில்லை. அதன் நோக்கம் முதலா ளியின் லாபம் மட்டுமே! எனவே உற்பத்தி மிதமிஞ்சிப்போவதும், உற்பத்தி வீழ்ச்சியும், அதன் விளைவாக நிகழும் நெருக்கடியும் முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத அம்சங்கள் என்றார் மார்க்ஸ். உலகப் பொருளா தாரத்தில் நிலவும் இன்றைய கடும் நெருக்கடி மார்க்சின் கூற்று சரியானது என்பதையே நிரூபிக்கிறது. முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத் திக்கொள்ள எது வேண்டுமானாலும் செய்யும். குறிப்பாக முதலாளித்துவம் தனது காலத் திற்கு முந்தைய உற்பத்தி முறைகளை கபளீ கரம் செய்தே உருவாகிறது என்றார் மார்க்ஸ். அதனை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு துவாரத்திலும் இரத்தமும் அழுக் கும் பீறிட முதலாளித்துவம் உருவாகிறது”. இன்று இந்திய விவசாயத்துறையில் கால் பதித்துள்ள முதலாளித்துவம் விவசாயிகளை எந்த நிலைக்குத் தள்ளுகிறது என்பது நமது கண்கள் முன்பு நிகழும் உண்மைகள். ஒரு புறத்தில் கடந்த 11 ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகள் தமது உயிரை மாய்த்துள் ளனர். அதாவது 30 நிமிடங்களுக்கு ஒரு விவ சாயி மரணத்தை தழுவிக்கொண்டார். மற் றொருபுறத்தில் இந்தியாவின் கனிம வளங் களை கொள்ளையடித்திட முதலாளித்துவம், ஆதிவாசி மக்களை வனங்களிலிருந்து விரட்ட முனைகிறது. முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் மத்திய அரசோ, வீழ்ந்துவரும் விவ சாயத்தை பாதுகாத்திட அக்கறை கொள்ளத் தயாராக இல்லை. இந்திய மக்களில் 60 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து இருக் கும் சூழலில் இந்திய முதலாளித்துவம் விவசா யத்துறையில் தனது வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டிட விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் மரணத்தின் விளிம் பிற்கே துரத்துகிறது. இங்கும் மார்க்சின் ஆய்வு சரியானதே என்பது தெளிவாகிறது.

மார்க்சின் கோட்பாடுகள் வறட்டுச்சூத்திரம் அல்ல!

இவ்வாறு மார்க்சின் பல கோட்பாடுகள் அடிப்படையில் இன்றும் சரியானதே என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் மார்க்சின் கோட்பாடுகள் வறட்டுச் சூத்திரங் கள் அல்ல என்பதில் பொதுவுடைமைப் போராளிகள் தெளிவாக உள்ளனர். தற்கால பரிணாமங்களையும் கணக்கிட்டு, தேவை யான செழுமைப்படுத்துதலையும் அமலாக் கிட அவர்கள் தயங்குவது இல்லை. இந்திய தொழிலாளி வர்க்கத்தில் உருவா கியுள்ள முறைசாராத் தன்மை மார்க்ஸ் காலத் தில் இல்லை. அதே போல மார்க்ஸ் காலத் தில் நிதி மூலதனத்தின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தன. லெனின் காலத்தில் இது வளர்ந் தது. அதனை லெனின் தனது ஆய்விற்கு உட்படுத்தினார். எனினும் கடந்த 30 ஆண்டு களில் நிதி மூலதனம் ஒரு பிராங்கஸ்டின் உருவில் இரத்தக்காட்டேரி போல பரிணமித் துள்ளது. இதுபோன்ற பல மாற்றங்களை பொதுவுடைமைப் போராளிகள் உள்வாங்கி யுள்ளனர். இந்த மாற்றங்களை ஆய்வு செய் திடக்கூட மார்க்சின் கோட்பாடுகள்தான் அடித்தளமாக விளங்குகின்றன.

தனது உற்ற நண்பரின் கல்லறை அரு கில் அஞ்சலி உரையாற்றிய ஏங்கெல்ஸ்மார்க்சின் பெயர் காலம் கடந்து நிற்கும். அவ ரது படைப்புகளும் காலத்தால் அழியாமல் நிற்கும்என்றார். மார்க்சின் கோட்பாடுகள் நேற்று உண்மையாக இருந்தன. இன்றும் உண்மையாக இருக்கின்றன. முதலாளித் துவம் உள்ள நாள் வரை அவை உண்மையா கவே இருக்கும். ஏனெனில் மார்க்சின் கோட் பாடுகள் ஒரு விஞ்ஞானம். விஞ்ஞானம் செழுமைப்படும். ஆனால் மறுதலிக்கப் படுவது இல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com