Contact us at: sooddram@gmail.com

 

உற்பத்தியில் பெருந்திரளான மக்கள் ஈடுபடுவதே முக்கியம் -காந்தியடிகள்

(சங்கீதா ஸ்ரீராம்)

இயற்கை விவசாயம் என்பது, செயற்கை உள்Zடுகளின்றி மேற்கொள்ளப்படும் விவசாயம் ஆகும். இது உலகிற்கு புதியதல்ல. ஆரம்ப காலங்களிலே மனிதர்களால் பயன் படுத்தப்பட்டு பின்னர் அவர்களாலேயே மெல்ல மெல்ல கைவிடப்பட்டு, தற்போது மீண்டும் புதியது போல அறிமுகப்படுத்தப்படுகிறது.

இன்றைய நிலையில், இயற்கை விவசாயத்தைக் கைக்கொள்வதாயின் பாழாய்ப்போன விளை நிலங்களின் வளத்தை ஊட்ட வேண்டும். அதற்கு பல்லாயிரம் தொன் கணக்கில் தழை உரமும் மாட்டுச் சாணமும் தேவைப்படும்! அத்தனை தழைப் பொருளுக்கும் எங்கே போவது? என்றகேள்வி எம்முன் எழலாம்.

குப்பை என்று கருதி வைக்கோலையும் மற்ற தழைப் பொருட்களையும் எரிக்கும் பழக்கத்தை நிறுத்துவது முதற்படியாகும். அருகிலுள்ள குளம், குட்டைகளில் பூதாகரமாகப் பரவி வளர்ந்து வரும் ஆகாயத் தாமரை, காட்டாமணக்கு போன்ற தாவரங்களை நிலங்களில் கொண்டு வந்து குவித்து மாட்டுச் சாணக் கரைசலைத் தெளித்தால், அவை உக்கி எருவாகும்.

நீர்நிலைகள் கோடை காலங்களில் வற்றும்போது அவற்றின் படுகைகிலிருந்து வளமான வண்டல் மண்ணை எடுத்துப் பயன்படுத்தலாம். கருவேலம் போன்ற வேகமாக வளரக்கூடிய மரங்கள், காடுகளாய் வளர்ந்து நிற்கும் வேலிக் காத்தான் கிளைகள் ஆகியவற்றை நிலங்களுக்குக் கொண்டுவந்து, கறையான்களை வளர்த்துப் பொடியாக்கி அல்லது மண்ணில் புதைத்து தழைப் பொருளைச் செலவில்லாமல் கூட்டலாம்.

சணப்பு, தக்கைப் பூண்டு போன்ற பசுந்தாள் உரத் தாவரங்களையும் பல தானியங்களைச் சேர்த்தும் மண்ணில் வளர்த்து, மடக்கி உழுது ஊட்டம் சேர்க்கலாம். பஞ்சகெளவியம், ஜீவாமிர்தம், மீன் அமிலம், அமிர்தக் கரைசல் போன்ற தாவர, மாமிசக் கரைசல்களை உபயோகித்து நுண்ணுயிர்களை உடனடியாகப் பெருக்கி மண்ணில் செயலற்றுக் கிடக்கும் பிரமாண்டமான உயிர் உரத் தொழிற்சாலையை மீண்டும் தொடங்கி வைக்கலாம்.

யர்த்தப்பட்ட படுக்கைகள் மற்றும் சுழல் தோட்டம் போன்ற எளிய முறைகளைப் பயன்படுத்தி உருவாக்கிய எருவையும் தண்ணீரையும் அடர்த்தியாகப் பயன்படுத்திச் சேமித்து நல்ல விளைச்சலைப் பெறலாம்.

ஒரு ஏக்கர் நிலத்துக்கு, ஒரு மாட்டின் சாணத்தைக் கொண்டு கரைசல்களைத் தயாரித்து நிலத்தை வளமாக்கலாம் என்று இந்தியாவிலே செய்து காண்பித் திருக்கிறார்கள். ஏன், மாட்டுச் சாணமே இல்லாமல் புளித்த மோர், பலன் தரும் நுண்ணுயிரிகள் போன்றவற்றை மட்டும் வைத்தே மேல் மண்ணை வளமாக்க முடியும். இவையனைத்தையும் சிரத்தையாகச் செய்தால் வெற்றி நிச்சயம்!

தனிப்பட்டவர்களும் இத்தகைய உத்திகளைக் கடைப் பிடிக்கலாம். அதே சமயம் ஒட்டுமொத்த கிராமங் களிலும் இதைச் செய்ய முடியும். அதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம். ஹைதராபாத்திலிருந்து 80 கி.மீ. வடக்கே உள்ள எனாபாவி என்னும் கிராமம் மொத்தம் 182 ஏக்கர் விளை நிலத்தையும் 51 குடும்பங்களையும் கொண்டது.

இரசாயன உள்Zடுகளை வாங்கிக் கட்டுப்படியாகாமல் விவசாயிக்கு ஏகப்பட்ட கடன், ஆரோக்கியக் குலைவு, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இந்தியாவின் எல்லாக் கிராமங்களையும் போலவே எனாபாவியும் பசுமைப் புரட்சியின் மாயச் சுழலில் சிக்கித் தவித்தது. ஓரிரு விவசாயிகளிலிருந்து தொடங்கி 2006ம் ஆண்டுக்குள் மொத்த ஊரும் இரசா யனங்களைத் தூக்கி எறிந்தது.

இதற்குத் துணைபுரிந்த தொண்டு நிறுவனம், படிப்படியாக 45 கிராமங்களுக்கு இந்த மாற்றத்தைக் கொண்டு சென்றது. இந்த அமோக வெற்றியைக் கண்ட ஆந்திரப் பிரதேச அரசாங்கம் 3,000 கிராமங்களுக்கு (17,00,000) இலட்சம் ஏக்கருக்கு, இது மாநிலத்தின் விளைநிலத்தில் 5% ஆகும்) இதைக் கொண்டு சென்றுள்ளது.

இந்த அனுபவத்தின் அடிப்படையில், 2014க்குள் 50% நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு மாற்ற வேண்டும் என்பது இந்த மாநில அரசாங்கத்தின் இப்போதைய இலக்கு.

இந்த முயற்சியின் பலனாக, ஒட்டு மொத்தக் கிராமங்களும் பல வகைகளில் முன்னேறியுள்ளன. மூன்று மாநிலங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி, எந்தக் கிராமத்திலும் பூச்சிக்கொல்லி விஷத்தால் மருத்துவமனையில் யாரும் சேர்க் கப்படவில்லை. மண் வளம், பயிர் நலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதால் பூச்சிகளின் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்டது.

மண் அதிகமான நீரைத் தக்க வைத்துக் கொண்டதால், வரட்சிக் காலத்தை எதுவித பயமுமின்றி எளிதாகக் கடக்க முடிகிறது. நிலக்கீழ் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. பலவகையான பாரம்பரிய ரக விதைகள் பாது காக்கப்பட்டுப் புழக்கத்தில் வந்துள்ளன. வருமானம் பெருகி விவசாயிகள் கடன்களை அடைத்து, அடகு வைத்த பொருட்களை மீட்டுள்ளனர்.

ஆனால் இரசாயனத்துக்குப் பழகிய நிலத்தை இயற்கை முறைக்கு மாற்றினால், விளைச்சல் முதலில் சரிந்து, பழைய விளைச்சல் வர குறைந்தது மூன்றாண்டுகள் ஆகும் என்ற கருத்துக்கள் இல்லாமல் இல்லை.

நிலத்தின் நிலைமையைப் பொறுத்துத் தான் அவை பற்றிக் கருத்துத் தெரிவிக்க முடியும். எந்த வித உறுதியான முடிவுகளையும் சொல்ல முடியாது. அனால் மிகவும் மோசமான நிலத்தைக் கூடச் சில மாதங்களிலே வளமிக்க மண்ணாக மாற்றியமைக்க முடியும் என்பதற்கான நேரடி ஆதாரங்கள் பல உள்ளன.

2004 டிசம்பரில் தாக்கிய சுனாமி, இந்திய, கிழக்காசிய நாடுகள் பலவற்றில் இல ட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் உப்பை வாரிக் கொட்டிச் சென்றது. பயிர்கள், பனைமரங்கள் என அனைத்தும் அதன் தாக்கத்தால் கருகிப்போயின.

ஆனால் இந்தியாவில் செலவற்ற பல முறைகளைக் கையாண்டு, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ரேவதி ஆகியோரின் குழு மேற்கொண்ட மேல்மண் வளப்படுத்தும் உத்திகள் மூலம் தமிழ் நாட்டின் நாகை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஆறே மாதங்களில் நெல்லில் நல்ல விளைச்சலைப் பார்க்க முடிந்தது.

இந்த வெற்றியை அடுத்து, புயலாலும் சுனாமியாலும் தாக்குதலுக்குள்ளான இந்தோனேசியா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேச அரசாங்கங்கள் சேதமான பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்பதற்காக இவர்களை அழைத்தனர். எதிர்பார்த் தாற்போல, சில மாதங்களிலே பழைய விளைச்சலைக் கொண்டு வந்து காட்டியுள்ளனர்.

விளைச்சல் குறைந்தது!” என்று புகார் செய்யும் விவசாயிகளின் அனுபவத்திலும் கூட, இரசாயன இடுபொருட்களுக்கான செலவு குறைந்ததால் இலாபம் நிச்சயம் அதிகரித்ததுதான் உண்மை. இயற்கை விவசாயத்துக்கு மாறியதால் நஷ்டம் ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு இயற்கை விவசாயம் சோறு போடுமா என்ற வினாவும் எம்மத்தியில் எழத்தான் செய்கிறது.

2008 ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்ட அறிக்கையில் இயற்கை விவசாயம் உலகிற்குத் தேவையான உணவை அளிக்கும். அது மட்டுமல்ல. வளரும் நாடுகளில் வளர்ந்து வரும் பட்டினிப் பிரச்சினையைச் சமாளிக்க அதுதான் ஒரே வழி! என்று திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.

24 ஆபிரிக்க நாடுகளில் 114 வேளாண்மை திட்டங்களை அலசி ஆராய்ந்த இந்த அமைப்பு, இயற்கை அல்லது பெருமளவு இயற்கை சார்ந்த விவசாய நடைமுறைகள் விளைச்சலை 100 சதவீதத்துக்கும் மேல் பெருக்கியுள்ளன! என்று குறிப்பிட்டுள்ளது.

வளர்ந்து வரும் மக்கள் தொகை, காலநிலை மாற்றம் ஆகியவற்றைச் சமாளிக்கவும் சமூகக் கொந்தளிப்பையும் சுற்றுச்சூழல் நாசத்தையும் தவிர்க்க விரும்பினால் ஏழைகளுக்கும் பட்டினி கிடப்பவர்களுக்கும் உதவும் வகையில் உலகின் உணவு உற்பத்தி முறைகள் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். பயிர் சுழற்சி முறை, இயற்கை விவசாயம் ஆகியவற்றைப் பயன்படுத்த உணவு உற்பதியாளர்கள் முயல வேண்டும். சிறு விவசாயிகள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இதுவே இன்றைய உலகின் தேவை யாக இருப்பதை காலம் சொல்லுகிறது. இயற்கை விவசாயம் மேற்கொள்ள நிறைய உடலுழைப்பு தேவைப்படும்.

இயற்கை விவசாய உத்திகள் அதிக ஆள் பலத்தையும் நேரத்தையும் கோரு பவை என்பது முற்றிலும் உண்மைதான். இந்த வாதத்தைக் கேட்கும்போது, தொலைக்காட்சிப் பெட்டி முன் செலவிடும் நேரத்தில் கொஞ்சம் நிலத்தில் செலவிட்டால் நிலத்துக்கும் உடல்நலத்துக்கும் நல்லதுதானே! என்றும் சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் உண்மை நிலவரத்தைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் ஒரு விடயம் புலப்படும். சிறு விவசாயி ஒருவர் தனது நிலத்தைக் குடும்பத்தாரின் உதவியை மட்டுமே கொண்டு இயற்கை விவசா யத்திற்குப் படிப்படியாக மாற்ற முடி யும்! தொடக்கத்தில் தேவையாக இரு க்கும் நேரமும் உழைப்பும் மண்வளம் அதிகரிக்க அதிகரிக்கப் படிப்படியாகக் குறைந்து கொண்டேவரும்.

ஒரு கட்டத்தில், வேலையே இல்லாமல், இடுபொருட்களே இல்லாமல் விதைகளை விதைத்து அறுவடையை மட்டும் செய்து கொண்டிருக்கலாம். இதைச் செய்து காட்டியிருக்கும் இய ற்கை விவசாயிகள் சிலர் இருக்கிறார்கள். எதிர்காலத்துக்காக என்று கூறிக் கொண்டு எதையெதையோ பணயம் வைக்கும் நாம், அந்தப் பட்டியலில் உடலுழைப்பையும் சேர்த்துக் கொண்டால், அது நம்மை ஏமாற்றாமல் பலனளிக்கும்.

இந்த உத்திகள் எல்லாம் சிறு விவசாயிகளின் பண்ணைகளுக்கு மட்டுமன்றி பெரிய பண்ணைகளுக்கும் பொருந்தும்?

கிட்டத்தட்ட ஒத்துவராது என்றே சொல்லிவிடலாம். அதனால் என்ன பிரச்சினை? சிறு சிறு பண்ணைகளை ஊக்குவித்து, அவற்றின் மூலம் நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வோமே! பெரிய அளவிலான உற்பத்தி நமக்குத் தேவையில்லை. பெருந்திரளான மக்கள் உற்பத்தியில் ஈடுபடுவதே நமக்குத் தேவை!

என்று காந்தியடிகள் கூறியது இதைத்தான், ஐ.ஏ.ஏ.ஸ்.எடி.டி. அறிக்கையில் உலக நிபுணர்கள் கூறுவதும் இதைத்தான். சிறிய பண்ணைகள் மீதுதான் அமெரிக்க விவசாயத் துறை பெருமளவில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இவை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதுடன், பொருளாதார, சமூக, சுற்றுச் சூழல் ரீதியான நன்மைகளையும் அளிக்கின்றன என்று அமெரிக்க வேளாண்மை துறை அறிவித்து அதைச் சட்டமாகவே ஆக்கியதும் இதைத்தான். உணவுக்கு முதலிடம் என்னும் உலக நிறுவனம் சிறிய பண்ணை விவசாயத்தின் செயற்பாடுகளும் பலன்களும் என்னும் தனது அறிக்கையில் சிறுபண்ணைகளின் ஆறு முக்கியமான அனுகூலங்களை விளக்குகிறது. அவை வருமாறு,

1. பன்முகத்தன்மை: சிறிய பண்ணைகள் பயிரிடும் முறைகள், நிலப்பகுதிகள் முதலான அம்சங்களில் வித்தியாசமான தன்மைகளைத் தன்னகத்தே கொண்டவை. பல தன்மைகளைக் கொண்ட பண்ணைக் கூட்டமைப்பு பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது.

2. சுற்றுச்சூழல்: பொதுவாக சிறு நிலங்களில் நிலவளம், நீர்வளம், உயி ரினங்கள் போன்ற இயற்கை வளங்கள் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன.

3. அதிகாரப்பரவல் மற்றும் சமூகப் பொறுப்பு: நில உரிமை பரவலாவதன் விளைவாக கிராமப்புற மக்களுக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகள் உருவாகின்றன.

தங்கள் தேவை களுக்கான உள்ளூர் வர்த்தகங்களையும் சேவைக ளையும் சார்ந்திருக்கும் விவசாயிகளின் சமூகப் பொறுப்புணர்வு அதிகரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. சமூகத்தின் நலனில்தான் தன் நலனும் அடங்கியிருக்கிறது என்னும் உணர்வு ஏற்படவும் வாய்ப் பிருக்கிறது. இதற்குப் பிரதி உபகாரணமாக, விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமலிருக்கும் பொறுப்புணர்வு நில உரிமையாளர்க ளிடையே ஏற்படக் கூடும்.

4. இயற்கை வேளாண்மை பற்றிய அறிவைப் பாதுகாத்தல்: குடும்பப் பண்ணைகள் மூலம் வேளாண்மைத் திறன்கள் அடுத்த தலைமுறைக்கு எளிதாகக் கைமாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

5. உணவுப் பொருள்களுடன் நெருக்கமான தொடர்பு: நுகர்வோரும் உற்பத்தியில் ஈடுபடச் சிறிய பண்ணைகள் வாய்ப்பளிக்கின்றன. இதன் மூலம் இயற்கையுடனான உறவைப் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.

6. நிலையான பொருளாதாரத்தின் அடித்தளம்: காந்தியடிகள், விளக்கியது போல வளமான சிறுவிவசாயப் பண் ணைகளும் அவற்றைச் சார்ந்த தொழில் களுமே நிலையான பொருளாதாரத்தின் அடித்தளமாக அமையும். அதனால் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புக்காக வந்து சீரழியும் பல கிராமவாசிகளை நல்லபடியாகத் தங்கள் ஊர்களுக்குத் திருப்பி அனுப்பிவைத்தது, தங்கள் சிறுநிலங்களை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

இயற்கை விவசாய இயக்கத்தில் நுகர்வோரின் பங்கும் முக்கியமானது. சமூகம் ஒன்றிணைந்த ஒரு கூட்டமாக வலுப் பெறும் வகையில் நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதன் படி, இயற்கை விளைபொருள் விற்பனை ஆரம்பிக்கப்பட வேண்டும். சிறு இயற்கை விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை பரஸ்பரம் வாங்கிக் கொள்ளுமாறு இந்த அமைப்புகள் பார்த்துக் கொள் கின்றன. மீதமாக இருப்பவற்றை நகர் ப்புறங்களில் சந்தைப்படுத்தவும் உதவு கின்றன.

முடிவாக நம் இயற்கை விவசாயிகள் கையாண்டு வரும் பஞ்சகெளவியம், ஒற்றை நாற்று முறை, பயிர் சுழற்சி போன்ற உத்திகள் மட்டும் நம்மை நம் நெருக்கடியிலிருந்து காப்பாற்றப் போவதில்லை. மனித இனம் அழிவின் பாதையிலிருந்து விலகி வாழ்வின் பாதைக்குத் திசை திரும்ப முதன்மையாகச் செய்ய வேண்டியது வேறொன்று உள்ளது.

வேளாண்மையின் உலகுக்கே தந்தையாக விளங்கும் மசானோபு ஃபுகுவோகா தாத்தா இதை அழகாகக் கூறிச் சென்றிருக்கிறார். ஆய்வாளர்கள் ஆய்வாளர்களாவதற்கு முன்பு அவர்கள் தத்துவவாதிகளாக வேண்டும்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com