Contact us at: sooddram@gmail.com

 

இன்றைய தேவை தமிழர்கள் ஏற்கும் அதிகாரப் பகிர்வே...!

முறையான இன நல்லிணக்கமின்றி எங்கள் தேசத்தில் அமைதி ஒருபோதும் நீடித்து நிலைக்காது. அத்துடன் நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களும் போரினால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களும் தாங்கள் இழந்ததைப் பெறும்வரைக்கும், நம்பிக்கையான எதிர்காலத்தினை நோக்கி அவர்கள் பயணிக்கும் வரைக்கும் உண்மையான இன நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. எத்தனை பாலங்கள், பெருந்தெருக்கள் மற்றும் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன என்பது இங்கு ஒரு பொருட்டல்ல. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்ப துயரங்கள் போக்கப்படும் வரைக்கும் நீடித்து நிலைக்கக் கூடிய அமைதி ஏற்படப்போவதில்லை.

இந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் தங்குமிடம் கிடைத்துவிடுவதால் மாத்திரம் இவர்களது துன்பதுயரங்கள் நீங்கிவிடாது. இந்த வசதிகளை பெறுவதற்காக மாத்திரம் கடந்த 30 ஆண்டு காலப் போர் தொடுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் விட முதன்மையாகத் தாங்கள் சுதந்திரமாக அவமானம் எதுவுமின்றி வாழுகிறோம் என்ற மனப்பதிவு சிறுபான்மையினரின் மத்தியில் ஏற்படவேண்டும்.


போர் முடிவுக்கு வந்து 21 மாதங்கள் கழிந்து விட்டபோதும் ஆணாக இருக்கலாம் அன்றி பெண்ணாக இருக்கலாம் அவர் தமிழராக இருந்தால் மாத்திரம் போதுமானது, சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுத் துன்புறுத்தப்படும் நிலைதான் இன்றும் தொடர்கிறது

இந்தத் தேசத்தில் உண்மையான, நீடித்து நிலைக்கக் கூடிய அமைதி ஏற்பட வேண்டுமெனில் நாட்டினது சிறுபான்மையினரான தமிழர்களாக இருக்கலாம் அன்றி முஸ்லிம்களாக இருக்கலாம், தங்களது இனம் அல்லது மதம் என்பவற்றுக்கு அப்பால், இந்தத் தேசத்தின் சம உரிமையினைக் கொண்ட குடிமக்கள் தாங்கள் என்பதை இந்த மக்கள் உணரும் நிலை ஏற்பட வேண்டும். அரசியல் தீர்வொன்றுதான் இதுபோன்ற தொரு நிலைமையினை உறுதிப்படுத்தும்.

சரி இத்தகைய அரசியல் தீர்வு நோக்கிய பாதையில் நாங்கள் எந்தளவு தூரம் பயணித்திருக்கிறோம்? 

நாட்டின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படுவது அவசியமானது என அரசு உண்மையில் உணருகிறதா? 

இந்த நாட்டில் இன ரீதியிலான பிணக்கொன்று இருக்கிறது என்பதையே ஆட்சியிலுள்ள பலர் ஏற்க மறுக்கிறார்கள். இந்த நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது பொருத்தமற்றதொன்று என்பதே இவர்களின் வாதம். 

ஓகஸ்ட் 2010 இல் கொழும்பு நகரத்தின் வெள்ளவத்தைப் பகுதியில் வசித்துவரும் தமிழர்கள் காவல் நிலையங்களில் பதிய வேண்டும் என்ற அவமானகரமான நடைமுறைக்கு முகம் கொடுத்தார்கள். இதுபோல் தமிழர்களின் பதிவுகளை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்குத் தனியான எந்த சுற்று நிருபங்களும் வழங்கப்படாத போதும், நாட்டின் பொலிஸ் சட்டத்தின் 76 ஆவது சரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நன்மைகருதி இதுபோன்ற பதிவுகளை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு உண்டு என அப்போதைய பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட் டிருந்தார்

எந்த இனக் குழுமத்தினைச் சார்ந்தவர்களின் பதிவுகளை மேற்கொள்வது என முடிவெடுக்கும் அதிகாரம் பகுதிப் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு இருக்கிறதாம். யாழ். குடாநாட்டிலுள்ள மக்களிடமிருந்து கட்டாயத்தின் பெயரில் பணம் பெறுவதாகவும் அவர்களை குடும்பப் படம் எடுக்க வேண்டும் என்றும் சிங்கள மொழியிலுள்ள பல படிவங்களை நிரப்பவேண்டும் என்றும் படையினர்   கட்டாயப்படுத்துவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராயா இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முறையிட்டிருந்தார்.

படைத்தரப்பின் இந்தப் புதிய நடைமுறையானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 


இது விடயம் தொடர்பாக யாழ்.பிராந்தியப் படைத் தலைமையகத்திடம் கோரியபோது பாதுகாப்புக் காரணங்களுக்காக இதுபோன்ற பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், தாங்கள் இவ்வாறு பதிவுகளை மேற்கொள்வது தொடர்பாக படைத் துறையினர் யாழ். மாவட்ட அரச  அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்குத் தெரியப்படுத்தவில்லை. தங்களது செயற்பாடுகள் தொடர்பாக அரச  அதிபருக்குத் தெரியப்படுத்தும் தேவை தமக்கில்லை என்கிறார்கள் படைத்துறையினர்எவ்வாறிருப்பினும்
தமக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மேஜர் ஜெனரல் மடவெல நிராகரிக்கிறார்.

படைத் தரப்பின் இதுபோன்ற செயற்பாடுகள் இன நல்லிணக்கம் மற்றும் நீடித்து நிலைக்கக் கூடிய அமைதி ஆகியவற்றுக்கு ஒருபோதும் வழிவகுக்கப்போவதில்லை. இலங்கையின் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்படுகிறது.இலங்கை சுதந்திரமடைந்தது முதல் இலங்கையில் அரசியல் ஞானம் எவ்வாறு காலத்துக்குக் காலம் மாறிவருகிறது என்பதை இலங்கையின் தேசிய கீதத்தின் வரலாறு எமக்கு எடுத்து விளக்கும்நமோ நமோ மாதா எனத் தொடங்கும் இந்தக் கவிவரிகள் 1940 ஆம் ஆண்டு ஆனந்த சமரக்கோனினால் இயற்றப்பட்டிருந்தது.

ஆனந்த சமரக்கோன் ஆசிரியராகக் கடமையாற் றிய காலி மகிந்தா கல்லூரியில் இந்த வரிகள் முதன் முதலில் பாடப்பட்டிருந்தது. இதன் பின்னர் குறிப்பிட்ட இந்தக் கவிவரிகளை நாட்டின் தேசிய கீதமாகப் பிரகடனப் படுத்தலாம் எனப் பரிந்துரைத்த சேர் ஒலிவர் குணதிலக 1951 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு இந்தக் கவிவரிகளைச் சமர்ப்பித்திருந்தார்கே.கனகரத்தினம் என்பவரால் தமிழ் மொழிக்கு மாற்றப்பட்ட பிரதியையும் கலாநிதி சி.டபிள்யூ கன்னங்கரவினால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்ட பிரதியையும் இதனுடன் இணைந்து அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்த பண்டிதர் என். நல்லதம்பி என்பவரே உண்மையில் தமிழுக்கு மாற்றியிருந்தார் என ஒருசிலர் வாதிடுகிறார்கள். தேசிய கீதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு கால ஓட்டத்தில் இல்லாமற் போய்விட்டது. 

1952 ஆம் ஆண்டு "நமோ நமோ மாதா" எனத் தொடங்கும் இந்தக் கவிவரிகள  இலங்கையின் அமைச்சரவை நாட்டினது தேசிய கீதமாக அங்கீகரித்தது

எவ்வாறிருப்பினும் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தேசிய கீதமாக இந்த வரிகள் பாடப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்கள மொழியிலும் "நமோ நமோ தாயே" எனத் தமிழ் மொழியிலும் பாடப்பட்டிருந்தது. தமிழில் தேசிய கீதத்தினைப் பாடுவது சட்ட விரோதமானது எனக் கூறுவதற்கு அந்தக் காலத்தில் விமல் வீரவன்ஸக்கள் எவரும் இருந்ததில்லை. ஆனால் இன்று நிலைமைகள் மாறிவிட்டன. 

தைப்பொங்கல் நிகழ்வுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ். குடாநாட்டுக்கு வருகைதந்த போது சிங்களத்திலேயே தேசிய கீதத்தினைப் பாடுவதற்குப் பாடசாலைச் சிறார்கள் பணிக்கப்பட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டில் 60,000 படையினர் காவல்புரிந்து வருகின்ற போதும் அதியுச்ச பயிற்சிகளைப் பெற்ற, ஆயுதம் தரித்திருந்த ஆயுததாரிகள் சிலர் உரும்பிராயிலுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளரான எம்.சிவலிங்கத்தின் வீட்டை உடைத்து உள் நுழைந்து அவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இந்தக் கொலையாளிகள் எப்போதுமே பிடிபடாததொரு நிலைமையே காணப்படுகிறது.தமிழ்ச் சிறார்கள் சிங்கள மொழியில் இல்லாமல் தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தினைப் பாடவேண்டும் என்று வெளிப்படையாகவே இந்த உதவிக  கல்விப் பணிப்பாளர் கூறியிருந்தாராம்.

இந்த நிலையில் இலங்கைத் தீவிலுள்ள அனைத்து இனங்களின் மத்தியில் உண்மையான இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் அரசியல் அவா அல்லது அதற்கான தேவை இன்றைய ஆட்சியாளர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை

இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய அமைதி ஏற்படவேண்டுமெனில் அரசியல் தீர்வு முன் வைக்கப்படுவது கட்டாயம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. 


அதிகாரப் பகிர்வுக்கான ஒரு மாற்றீடாக அபிவிருத்தி ஒருபோதும் அமையாது என மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாரோ அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால்
, இது தொடர்பான மாற்றுக் கருத்துக்களும் நிலவுகின்றன.

அதிகாரப் பகிர்வு என்பது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் வழங்கப் போவதில்லை என இவர்கள் வாதிடுகிறார்கள். அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படு மிடத்து நாட்டின் வடக்குக் கிழக்குப் பிராந்தியம் அபிவிருத்தி அடைந்துவிடும் என்றும் பொருளாதார வளத்தினை மக்கள் அனுபவிக்கும் நிலை தோன்றிவிடும் என்றும் இவர்கள் கருதுகிறார்கள்

இங்கு இனப்பிரச்சினை என ஒன்றும் இல்லையே, இந்த நிலையில் அரசியல் தீர்வு எதற்கு என்கிறார்கள் இவர்கள். பெரும்பான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்களில் பலர் இதே கருத்தையே கொண்டிருக்கிறார்கள். 

போர்க் குற்றங்கள் என்று வரும்போதும் அது தொடர்பான பலதரப்பட்ட கருத்துக்களும் இலங்கைத் தீவிலுள்ள மக்கள் மத்தியில் நிலவு கின்றன. போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருக் குமானால் அவை முறையாக விசாரிக்கப்படுவதோடு குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வாதிடுகிறார்கள்போரினால் உளநலன் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் யாரோ அவர்கள் போரில் மறைந்துபோன தங்களின் அன்புக்குரியவர்களுக்கு நீதி கிட்ட வேண்டும் என விரும்புகிறார்கள். அப்போது தான் கல்லறைகளில் அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்கிறார்கள்.

காணாமற் போயிருக்கும் தங்களது பிள்ளை மடிந்துவிட்டதா? அல்லது தடுப்பு முகாம்களில் சித்திரவதையை அனுபவிக்கிறதா? எனத் தெரியாததொரு நிலையில் பெற்றோர்கள் இருப்பது உண்மையில் சோகமானது. 

ஆனால், மேற்குறித்த இந்தப் பார்வை அனைவரிடத்திலும் இல்லை. நாங்கள் போர் தந்த வடுக்களையும் அரசுக்கு எதிரான போர்க் குற்றங்களையும் மறந்துவிட்டு ராஜபக்ஷ எங்களுக்கு அதிகாரப் பகிர்வைத் தரும் நிலையினை ஏற்படுத்துவோம். போரின் இறுதி நாள்களில் நடந்தேறிய சம்பவங்கள் எங்கள் மனதைப் பாதித்துவிட்டனதான். ஆனால் ஜனாதிபதி ராஜபக்ஷ சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

அடுத்துவரும் 24 ஆண்டுகளுக்கு அவரே ஆட்சியில் தொடரும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. இந்த நிலையில் பொறுப்புச் சொல்லும் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்றும் வாதிடுவது விவேகமான முடிவாக இருக்காது.''முட்டி மோதும் அணுகு முறையினைக் கைக் கொள்ளுவதால் எதுவுமே கிடைக்கப் போவதில்லை. நாட்டின் சிறுபான்மைச் சமூகத்தவர்களுக்கு மஹிந்த வழங்க விரும்புவது எதுவோ அதனை எந்தவிதத் தயக்கமுமின்றி ஏற்றுக் கொள்வதுதான் இன்றைய நிலையில் பொருத்தமானது.

சிறுபான்மையினர் இன்னொரு உண்மையையும் விளங்கிக் கொள்ள வேண்டும். நாட்டினது மொத்த சனத்தொகையில் 75 சதவீதத்தினைக் கொண்டிருக்கும் சிங்களவர்களுக்கு கிடைப்பது எதுவோ அதனை ஒரு போதும் தமிழர்களால், ஏன் பிரபாகரனால் கூட ஒரு போதும் அடைய முடியாது.தமிழர்களை சிங்களவர்கள் சந்தேகத்துடன் பயங்கரவாதிகளாக பல தலைமுறை தாண்டியும் பார்க்கும் ஒரு நிலைமையைத்தான் பிரபாகரனும் புலிகள் அமைப்பும் ஏற்படுத்தி விட்டுப் போயிருக்கிறார்கள் என்பதே குறிப்பட்ட இந்தத் தரப்பினரின் வாதமாக இருக்கிறதுஆனால் எது எவ்வாறிருப்பினும் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டு மெனில் உண்மை வெளிவரவேண்டும். இதுநாள் வரைக்கும் தொடர்ந்த போரினால் ஏற்பட்ட வடுக்கள் ஆற்றப்படவேண்டும். இந்த வடுக்களை முடி மறைப்பதற்கு முனைந்தால், ஒருநாள் அதிலிருந்து சீழ் வடியத்தான் செய்யும்.  

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com