Contact us at: sooddram@gmail.com

 

உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது

இலங்கையின் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, வருடாந்தம் எங்கள் நாட்டிற்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதியை உல்லாசப் பிரயாணத் துறையின் மூலம் பெறுவதற்கு அரசாங்கம் வகுத்திருக்கும் திட்டங்கள் இப்போது, மகத்தான வெற்றியடைந்து வருகின்றன. தற்போது, இலங்கைக்கு வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பி வைக்கும் வெளிநாட்டு நாணயமாற்று தேசிய வருமானத்தை கட்டியெழுப்புவதற்கு பிரதான காரணியாக இருக்கின்றது. அதற்கு அடுத்த படியாக ஆடை ஏற்றுமதியும், தேயிலை, றப்பர் ஏற்றுமதியும் இருந்து வருகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, உல்லாசப் பிரயாணத் துறையின் மூலம் கூடுதலான வருமானத்தை பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், நாட்டின் பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கும் வழிகோலும் என்று அரசாங்கம் நம்புகிறது.

தற்போதும் மேற்கத்திய நாடுகளில் குளிர்காலம் தொடர்ந்து கொண்டிருப்பதனால், அங்கிருந்து வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவ்வாண்டில் 8 இலட்சம் உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு குடியரசு ஆகியவற்றிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இலங்கையில் யுத்தம் முடிந்து, மீண்டும் சமாதானம் நிரந்தரமாக குடிகொண்டிருப்பதனால், இப்போது இங்கு வரும் இந்திய உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கைக்கு வருவதற்கு அதிக பணச்செலவு அவசியம் இல்லை என்பதால் இப்போது இந்திய உல்லாசப் பயணிகள் குறிப்பாக அங்குள்ள தமிழர்களும், மலையாளிகளும், வட இந்தியர்களும் அதிகமாக இங்கு வருகிறார்கள்.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு வரும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியளவில் இருந்த போதிலும், இப்போது இவர்களின் வருகை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஒருவர் இந்தியாவிலிருந்து இங்கு வந்து இரண்டு இரவுகளும், மூன்று பகல் பொழுதையும் கழிப்பதற்கு சில உல்லாசப் பயண முகவர்கள் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான சிக்கனக் கட்டணத்தையே அறவிடுகிறார்கள். அதுவும் இந்தியாவிலிருந்து இங்கு வருவதற்கான விமானக் கட்டணமும் சராசரியாக 4500 ரூபா வரையில் குறைக்கப்பட்டிருப்பதும் இதற்கான இன்னுமொரு காரணமாகும்.

இங்கு வரும் தெற்காசிய உல்லாசப் பயணிகள் கொழும்பு மாநகரம், கண்டி மற்றும் அனுராதபுரத்திலுள்ள இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களையும், பெளத்த நாகரீகத்தையும் கண்டு கழிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இத்துடன், சிவனொளிபாதமலை உச்சிக்கு ஏறி, அங்கிருந்து அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து பரவசம் அடைவதற்கும் இந்திய உல்லாசப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய வரலாற்று முக்கியம் வாய்ந்த சிவாலயங்களுக்கும், கதிர்காமத்தில் வீற்றிருக்கும் முருகனை தரிசிப்பதிலும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும், செல்வதிலும் இந்திய பயணிகள் விரும்புகிறார்கள் என்று இந்தியாவின் டைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை எழுதியிருக்கும் ஒரு விமர்சன கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு வரும் இந்தியர்கள் தங்கள் நாட்டில் பேசப்படும் தமிழை விட, இலங்கை மக்கள் தூய செந்தமிழை பேசுவதுடன், தமிழ் இலக்கிய மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிக்கு சிறந்த அடிதளத்தை அமைத்து, தமிழ் தொண்டாற்றி வருகிறார்கள் என்றும் பாராட்டுகிறார்கள்.

இந்தியா இன்று ஆசிய நாடுகளில், குறிப்பாக தெற்காசிய நாடுகளில் பலம்வாய்ந்த பொருளாதார வல்லரசாக வளர்ந்து வருகிறது. இதனால் நாம் கூடியவரையில் இந்தியாவுடனான நட்புப் பாலத்தை கட்டியெழுப்பினால், அதன் மூலம் எமது நாட்டின் வர்த்தகத்தையும் பேணிப் பாதுகாக்க முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

கொழும்பு கம்பன் கழகம், ஏப்ரல் மாதத்தில் 21ந், 22ந், 23ந், 24ந் திகதிகளில் கொழும்பில் மாபெரும் கம்பன் விழாவை கோலாகலமாக நடத்துவதற்கு ஒழுங்குகளை செய்துள்ளது. கொழும்பு கம்பன் கழகம் ஆண்டுதோறும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பெயரில் பெரு விழாக்களை நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நூற்றுக் கணக்கான இந்திய தமிழ் அறிஞர்கள் இங்கு வருகை தருவதுண்டு. இந்த கம்பன் விழாவும் இந்தியர்களின் பங்களிப்புடன் மகத்தான வெற்றியடையும் என்று நாம் நம்புகிறோம்.

தமிழ் நாட்டிலுள்ள செல்வந்த வர்த்தகர்கள் இப்போது இலங்கை வந்து, கொழும்பிலும் தமிழர்கள் செறிந்து வாழும் வட பகுதியிலும் புதிய முதலீடுகளை செய்து தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்விதம் எமது நாட்டின் உல்லாசத்துறை மென்மேலும் வளர்ச்சியடையும் போது, நம்நாட்டு மக்களுக்கு நேரடியாக சுமார் 70 ஆயிரம் வேலைவாய்ப்புக்களும், மறைமுகமாக ஒன்றரை இலட்சம் வேலைவாய்ப்புக்களும் கிடைக்கும் என்று மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com