Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணச் சோசலிசம் 1

சோசலிசம்என்ற சொல்லைக் கேள்விப்படாத வாசகர்கள் எவரும் இருக்கமாட்டார்கள், என்பது மறுக்க முடியாத உண்மை. உலக நாடுகள் பல ஒரு காலத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைமையின் கீழ் சோசலிச அணியாகவும், அமெரிக்கா தலைமையில் பல நாடுகள் முதலாளித்துவ அணியாகவும் இருந்தது பழைய கதையாகிப் போய் விட்டது. மூன்றாவது உலக யுத்தம் தோன்றுமோவென முழு உலக மக்களுமே பனிப்போரின் (Cold War) வெம்மை தாளாமல் அச்சப்பட்ட காலமும் இருந்தது. இவற்றை விபரிக்க விழைந்தால், நான் சுவைபடக் கூறப்போகும் யாழ்ப்பாணச் சோசலிசம் சுவை கெட்டுப் போய் விடுமென்பதால் கைவிடுகின்றேன். மிக நீண்ட காலம் அரச சேவையிலிருந்து இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உத்தியோகத்தரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. யாழ்ப்பாண வாழ்வியல் குறித்து நீங்கள் எழுதியவற்றை வாசித்துள்ளேன். என் அரச சேவைப்பட்டறிவால் பெற்ற 4 வகை யாழ்ப்பாணச் சோசலிசம் பற்றி எழுதுங்கள் என்றார்.

சோசலிசம் என்றால் அனைவரும் சமமாக மதிக்கப்பட்டு வாழும் முறையாகும். நிலமானியச் சமூக முறையை ஒத்த வாழ்வியல் முறைகளிலிருந்து உருவாகிய யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் சமூக பாகுபாடுகள் உள்ளதாகச் சமூக வியலாளர்களால் கூறப்படுகின்றது. ஆயினும் மனிதர்களை மனிதர்கள் மதிக்கும் நான்கு வகைச் சோசலிசங்கள் பற்றி அந்த மூத்த உத்தியோகத்தர் சுவையாகக் கூறிய பட்டறிவை உங்களிடம் பகிர்கிறேன்.

வறுமைச் சோசலிசம், இளமைச் சோசலிசம், பல்கலைகழகச் சோசலிசம், உத்தியோகச் சோசலிசம், என்பவையே அந்த நான்கு வகைச் சோசலிசங்களுமாகும்.

முதலில் வறுமைச் சோசலிசம் என்பதனைப் பார்ப்போம்.

வறுமை வந்த குடும்பமொன்றுக்கு அதன் அடிப்படைத் தேவைகளான உணவு, உடுதுணி, இருப்பிட, கல்வி, பொழுது போக்கு, சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை இருக்கும்.

மிக முக்கியமாக உணவுத் தேவையை நிறைவு செய்ய முடியாது பட்டினி நிலையை எதிர்நோக்குவார்கள்.

பசி வந்தால் பத்தும் பறந்து விடும் தானே. வறுமையில் வாடும் குடும்பமொன்று தமது பசியைப் போக்குவதற்காக சாப்பிட உணவு கிடைத்தால் உண்பார்கள். இதன் போது பெரியவர், சிறியவரெனச் சமூகப் பாகுபாடு பார்க்கமாட்டார்கள். வறுமைச் சோசலிசத்தில் உணவு கிடைத்தால் போதும். வறுமை நீங்கி பணச் செழுமை வரத் தொடங்க அவர்களிடம் வறுமைச் சோசலிசம் அற்றுப் போய் விடும்.

இரண்டாவது வகை இளமைச் சோசலிசம். ரீன்ஏஜ் வயதிலும் அதற்குச் சற்றுப் பின்னான வயதிலும் பாடசாலை, ரியூசன், சக நண்பர்கள் வீடுகளுக்குப் போவார்கள், பழகுவார்கள், உண்பார்கள். இளமைத்துடிப்பில் யாவரும் சமனாகத் தெரியும். மதிக்கும் உணர்வு வரும். வயது சற்று ஏற ஏற இளமைச் சோசலிசம் மெல்ல மெல்ல அற்றே போய் விடும்.

சமூகம் இளைஞரை (ஆண், பெண்) தான் வகுத்த வரையறைக்குள் வாழப் பழக்கி விடும்.

பல்கலைக்கழகச் சோசலிசத்தை மூன்றாவதாகப் பார்ப்போம். பல்கலைக் கழகத்தில் பயிலும் காலங்களில் தாம் உயர் கல்வி கற்கும் சமூகத்தில் முன்மாதிரியானவர்களெனவும், வருங்காலத் தலைவர்களெனவும் உணர்வு பொங்கும்.

அப்போது எங்கும் எதிலும் சமத்துவம், யாவரும் கைகோர்த்து நிற்க வேண்டும், உணவு, குடிபானம், எல்லாமே எல்லோருக்கும் பொதுவானது, பேதமில்லை என்ற கருத்து வரும்.

பல்கலைக்கழகக் கல்விக் காலத்தில் சக நண்பர்களின் வீடுகளுக்கு மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்குச் செல்வது சாதாரணமான ஒன்றாகத் தெரியும்.

இதுதான் பல்கலைக்கழகச் சோசலிசம். பல்கலைக்கழகம் விட்டு விலகியதும் சமூகம் தனது பேதச் சாயங்களை அவர்கள் மீது உடனேயே பூசிவிடும்.

பல்கலைக்கழகச் சோசலிசம் காணாமல் போனோர் பட்டியலில் சேர்ந்து விடுவது நிஜமாகி விடும்.

உத்தியோகச் சோசலிசம் என்றவுடன் அதிகம் யோசிப்பீர்கள்.

அரச, தனியார், கூட்டுறவு, நிறுவனங்களில் கடமை புரிவோர் தமது பிரதேசம் நீங்கி பிற இடங்களில் கடமை புரியும் போது, வீடுகளில் நிகழும் மங்கல, அமங்கல நிகழ்வுகளை மதிப்பார்கள். மங்கல நிகழ்வுகளில் விருந்தோம்பல் நடைபெறும். யாழ்ப்பாணத்தை விட்டு வெளி மாவட்டங்களில் கடமைபுரிவோரிடம் தான் இந்த உத்தியோகச் சோசலிசம் அதிகமாக இருக்கும்.

தாம் ஒரே பிரதேசத்தவர், ஒரே வாழ்வியல் பண்புகளைக் கொண்டவர்கள், ஆதலால் தாம் ஒருமித்துச் செயற்படுவது தமது நலன்களுக்கு நல்லதென நினைப்பார்கள்.

அந்நியோன்னியமாக விருந்தோம்பல் செய்வார்கள்.

உத்தியோக இடமாற்றம் பெற்றோ அல்லது தமது விடுமுறையில் வடக்கே யாழ்ப்பாணம் நோக்கி வரும் போது ஆனையிறவு தாண்டிய உடன் உத்தியோகச் சோசலிசத்தை மிகப் பெருமளவில் கைவிட்டு விடுவார்கள்.

சமூகம் என்ற கொதிக்கும் உலைக்குள் அவர்கள் போடப்பட்டு அவித்து எடுக்கப்பட்டு யாழ்ப்பாண மனிதர்களாக்கப்பட்டு விடுவார்கள்.

உத்தியோகச் சோசலிசத்தை பிற ஊர்களில் இருக்கும் தமது நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று கடைப்பிடிக்கும் பெருந்தன்மையான மனிதர்களும் உள்ளனர்.

பட்டறிவு மனிதர்களுக்குக் கற்றுத்தந்த பாடத்தால் வந்த யாழ்ப்பாணத்தின் நான்கு வகைச் சோசலிசத்தைப் பார்த்தோம். அன்பான வாசகரே உங்களுக்கும் இது போன்ற பார்வை இருப்பின் பதிவு செய்யுங்கள்.

வாழ்ந்த வாழ்வின் சுவடுகள் மீது நடந்து பார்ப்பது ஒரு சுக அனுபவம் தான்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com