Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க வல்லரசின் சிறுபிள்ளைத்தனமான செயல்

உலக நாடுகளுக்கு தான் தான் பொலிஸ்காரன் வேலை செய்வதாக எண்ணும் அமெரிக்கா, அழிவுப் பாதையிலிருந்து மீண்டெழுந்து அபிவிருத்திப் பாதையை நோக்கி நகரும் வளர்ச்சியடைந்து வரும் ஒரு சிறிய நாடான இலங்கை மீது இத்தனை தூரம் பழிகளை சுமத்தி எமது நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளமையானது ஒரு மாபெரும் வல்லரசு நாடொன்றின் சிறுபிள்ளைத்தனமான செயல் என்றே கூறவேண்டும். உலகில் எந்த நாட்டிலுமே பயங்கரவாதம் இருக்கக்கூடாது என்பதற்காக பிறிதொரு நாட்டின் அனுமதியைக் கூடப் பெறாது அடுத்த நாட்டிற்குள் அத்துமீறி அழிக்கும் நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கா, இன்று இலங்கை அரசாங்கம் தனது முயற்சியால் பல கொடூரங்களைச் செய்து வந்த ஒரு அமைப்பான புலிகளை அழித்தமை தொடர்பாக பாடம் கற்பிக்க முனைந்துள்ளமையானது வேடிக்கையாகவே உள்ளது.

ஈராக்கில் தேவையற்ற யுத்தத்தை ஆரம்பித்து நடத்திய போது எத்தனை அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அமெரிக்கப் படைகளால் எத்தனை ஈராக்கியர்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுபோன்று ஏனைய பல நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் செய்த அட்டூழியங்களுக்கு அளவுகணக்கு கிடையாது. ஆனால் இவை மட்டும் மனித உரிமை மீறல் தொடர்பாக குரல் கொடுக்கும் அமைப்புகளின் கண்களுக்குத் தெரியாது. ஏனெனில், அமெரிக்காவுக்கு இவ்வமைப்புகள் பயம் அல்லது இவை அமெரிக்காவின் நிதியுதவியிலேயே இயங்கி வருகின்றன.

இத்தகைய அமெரிக்காவும், மனித உரிமை மீறல் தொடர்பான அமைப்புகளும் இன்று தமது விடயங்களை மூடி மறைத்து விட்டு இலங்கை மீது குற்றம் சாட்டுகின்றன. உண்மையில் உலக நாடுகள் பலவற்றில் அமெரிக்கா அத்துமீறி நடத்திய யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எதுவுமே நடக்கவில்லை என்றே கூற வேண்டும்.

ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று கூறி உண்மைகள் சிலவற்றை மறைக்க இலங்கை அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை. யுத்தம் நடைபெற்றது உண்மை. இறுதி யுத்தம் மிகவும் கொடூரமாக நடந்ததும் உண்மை. கனரக ஆயுதங்கள் பாவிக் கப்பட்டு நடந்த இந்த இறுதி யுத்தத்தில் புலிகளால் பணயமாக பிடித்து வைக்கப் பட்டிருந்த பொது மக்களின் சிலர் இடை நடுவில் சிக்கி உயிரிழந்ததும் உண்மை.

அதற்காக படையினர் வேண்டுமென்றே பொது மக்களைக் கொன்றனர், சரணடைந்தவர்களைச் சுட்டனர் எனக் கூறுவதெல்லாம் பொய். சனல் - 4 என இன்று படம் காட்டிவரும் தொலைக் காட்சிச் சேவை புலிகளால் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்துப் படம் காட்டுகிறது. மக்கள் இறந்து மடியும் போதும் அந்த உயிர்களைக் காப்பாற்றாது வீடியோ படம் எடுப்பதுதான் முக்கியம் எனச் சிந்தித்த புலிகளுடன் ஒப்பிடுகையில் படையினர் எவ்வளவோ மேல் என்றே கூற வேண்டும்.

புலிகளின் வீடியோ சூட்டிங்கிற்கும், துப்பாக்கிச் சூட்டிற்குமிடையில் தப்பிப் பிழைத்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காயங்களுடன் குற்றுயிராக தப்பி யோடி வந்த இரண்டரை இலட்சம் மக்களை இராணுவம் வீடியோ எடுத்து வரவேற்க வில்லை. மாறாக மருந்தளித்து, உணவு வழங்கி தங்க முகாமும் அமைத்துக் கொடுத் தனர். அவர்களை வைத்து நாளைய ஆவணப்படத்திற்கு வீடியோ எடுக்கவில்லை.

சனல் - 4 உண்மையில் ஒரு பக்கக் கதையையே கூறுகிறது, “நாங்கள் சாகிறோம், நீங்க வீடியோவும் படமும் எடுத்துக் கொண்டோ நிக்கிaங்கள்என்று ஒரு வயதான பெண்மணி குரல் எழுப்பியதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது. அதுதான் உண்மை. எல்லாம் புலம்பெயர் தமிழ்மக்களிலுள்ள புலி ஆதரவாளர்களின் டொலர் பணப் பரிமாறல்கள் செய்யும் வேலை. மனித உரிமை மீறல் அமைப்புகள் சிலவும் இதே நிலையில்தான் செயற்படுகின்றன.

இவற்றை வைத்துக்கொண்டு ஒரு வல்லரசு நாடு உலகத்திற்கே பொலிஸ்காரன், எல்லாவற்றிலும் முதல்வன் எனக் கூறும் அமெரிக்கா, இலங்கை மீது யுத்தக் குற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்கிறது. உலகின் எந்த மூலையில் இலங்கை இருக்கிறது என் பதே தெரியாதிருந்த ஒரு காலத்தில் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் களை நடத்தி, இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஒரு அமைப்பை அழித்தமையை இன்று தவறென்றா அமெரிக்காவும் அதற்குச் சார்பான நாடுக ளும் கூறவிளைகின்றன? இது அவர்களுக்குச் சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?

முப்பது வருடகால யுத்தம் முடிவிற்கு வந்த பின்பும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் இழப்புகள் குறித்து ஆராய்ந்து உலக நாடுகளின் உதவியுடன் அப்பிரதேசங் களை மீளவும் துரிதமாகக் கட்டியெழுப்பும் பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வரு கிறது. அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழு மூலமாக அறிக்கை ஒன்றினையும் தயாரித் துள்ளது. அந்த அறிக்கையிலுள்ள விடயங்களை அமுல்படுத்தவும் தயாராக உள்ளது.

ஆனால் அதற்கிடையில் ஜெனீவாவில் இலங்கை மீது மனித உரிமை மீறல், போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்த முனைவது அர்த்தமற்றது. வெற்றியைப் பாராட்டி அபிவிருத்திக்கு உதவியளிப்பதை விட்டுவிட்டு வசைபாடி பிழை கண்டுபிடித்து பழிபோட முயல்வது அமெரிக்காவிற்கு அழகல்ல. அத்துடன் தனது முதுகிலிருக்கும் அழுக்கைக் கவனியாது அடுத்தவர் மீது அழுக்கு எனக் கூறுவது பொருத்தமற்றது. இதனையே அமெரிக்கா இன்று செய்கிறது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com