Contact us at: sooddram@gmail.com

 

ஜெனீவா யுத்தக்குற்றப் பிரேரணையின் நோக்கம், இலங்கையில் அமெரிக்க பொம்மை ஆட்சி!

‘பயங்கரவாதம் ஏழைகளின் யுத்தம், யுத்தம் செல்வந்தர்களின் பயங்கரவாதம்' என்று பிரித்தானியாவின் பிரபல நடிகர் ஒருவர் கூறியிருந்தார். புலிகள் இயக்கத்தை 1997ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துக்கொண்ட நாடு அமெரிக்கா. இவ்வாறு 27 நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பென பட்டியலிட்டிருந்தது. இந்த அமைப்பைச் சேர்ந்த பிரிட்டன், பிரான்ஸ் ஜேர்மனி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில்தான் ஆயுதம், நிதி, கப்பல் மற்றும் பிரசார கட்டமைப்புகள் வலுவாக இயங்கி வந்திருக்கின்றன. இப்போதும் புலிச்சார்பு புலம்பெயர் அமைப்புகள் இந்த நாடுகளில் பலமாக இயங்குகின்றன.

பயங்கரவாதியென பெயர் சூட்டப்பட்ட பிரபாகரனின் படத்தையும் புலிப்பயங்கரவாத அமைப்பினது இலட்சினையையும் தாங்கியபடி இந்த நாடுகளில் புலிச்சார்பு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுகின்றன. அல்-குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் படத்தைத் தாங்கியபடி இந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தமுடியுமா? ஆயுதப் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில்தான் பிரபாகரன் கொல்லப்பட்டார்.

இறைமையும் சுயாதிபத்தியமும் மிக்க வேறொரு நாடான பாகிஸ்தானின் அபோதாபாத்துக்குள்ளிலிருந்து பாகிஸ்தானின் அனுமதியின்றியும் அந்த நாட்டிற்குத் தெரியாமலும் நிராயுதபாணியான ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கா மனித உரிமை பற்றி பேசுகிறது. சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.

ஒரு குறுகிய எல்லைப் பரப்பிற்குள் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில்தான் இறுதியுத்தம் நடைபெற்றது. அதுவும் யுத்த சூழலிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற அப்பாவி தமிழ் மக்கள் மீது தற்கொலைக் குண்டுதாரிகளை புலிப் பிரபாகரன் ஏவிவிட்டார் என்பதும் யாவரும் அறிந்த உண்மை. அத்தகைய பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார் என்று இன்று அழுதுவடிகிறது அமெரிக்கா. வெள்ளைக் கொடியுடனும் வெள்ளைக் கொடி இல்லாமலும் தப்பிச் செல்ல முயன்றபோது தங்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் சடலங்களைக் காட்சிக்கு வைத்து ஏனையவர்களுக்கு புலிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட மக்கள் மத்தியில் அதுவும் குறுகிய நிலப்பரப்பிற்குள்ளேயே மோதல்கள் இடம்பெற்றன. ஆதலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் குற்றம் சாட்டுவது போல படையினர் திட்டமிட்டு மக்களைத் தாக்கினரா? என்பதே இங்குள்ள பிரச்சினை. இவை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்திருப்பது வரவேற்புக்குரியதே.

'சமாதானப் பிரச்சினையும், மனித உரிமைப் பிரச்சினையும் ஒன்றொடொன்று நெருக்கமாக பின்னிப் பிணைந்தவை' என்று 1950களில் ஐ.நாவின் செயலாளர் நாயகமாக விளங்கிய டாக் அமர்சீல்ட் கூறியிருந்தார். இது அப்பட்டமான உண்மை. மனித உரிமைகளை அங்கீகரிக்காவிட்டால் எம்மால் என்றுமே சமாதானத்தைக் காணமுடியாது. 'சமாதானச் சூழல் வரையறைக்குள் மட்டும்தான் மனித உரிமைகளை பூரணமாக அபிவிருத்தி செய்ய முடியும்' என்றும் அமர்சீலட் கூறியிருந்தார். மனித உரிமைகளுக்கும் சமாதான சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பு குறித்து 50 வருடங்களுக்கு முன்னரேயே அவர் அற்புதமாக விளக்கியிருந்தார். இன்றைய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனைப் போன்று ஐ.நா.வின் வரம்புகளை மீறி வெறும் கைக்கூலியாக அவர் செயற்படவில்லை.

புலித்தலைமை அழிவின் விளிம்பிற்கு வந்தபோது 'யுத்தத்தை நிறுத்துக' என்று அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் காட்டுக் கூச்சல் போட்டன. மூன்றாம் தரப்பொன்றிடம் புலித் தலைவர்கள் சரணடைய, அவர்கள் கெஞ்சிக் கூத்தாடின. இறுதி யுத்தம் இறுதிக்கட்டத்தை எய்தியபோது பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சரும் கொழும்புக்கு ஓடோடி வந்தார்கள். புலித்தலைவர்களை பாதுகாப்பதற்காக முக்கி முனகிப் பார்த்தார்கள் முடியவில்லை.

'பயங்கரவாதிகள் எல்லோரையும் ஒரே அளவுகோல் கொண்டு பார்க்கக்கூடாது' என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலர் கிளாரி கிளின்டன் அம்மணி அழுது குளறினார். ஸ்பெயின் பாஸ்க் பிரிவினைவாதிகளும், புலிகளும் நல்ல பயங்கரவாதிகள் என்றார். இலங்கையில் வன்புணர்ச்சி ஒரு யுத்தக் கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்று ஐ.நா.பாதுகாப்பு சபையில் அவர் குற்றம்சாட்டினார். பின்னர் அந்தக் குற்றச்சாட்டு வாபஸ் வாங்கப்பட்டது. இப்படி வாந்தி எடுத்ததும், பின்னர் எடுத்த வாந்தியை நக்குவதும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு என்றும் புதியவை அல்ல.

சரணடையும் புலித் தலைவர்களை பாதுகாப்பதற்காக அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்று இலங்கைக் கடலுக்கு அப்பால் வந்து காத்துநின்றது. அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பிரிவைச் சேர்ந்த விசேட குழு ஒன்று இலங்கை அரசின் அனுமதியைப் பெறாமலேயே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கக் காத்திருந்தது. யுத்தகளத்தில் சிக்கியுள்ள புலித் தலைவர்களை பாதுகாப்பது குறித்து இலங்கை அரசுடன் பேசுவதற்காகவே இந்த விசேட குழு தயார்நிலையில் இருந்தது. இதற்கும் இலங்கை அரசு மசிந்து கொடுக்கவில்லை. இதுவே அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்து வார்த்தது.

வண.பிதா இம்மானுவேல் என்பவரை தலைவராகக் கொண்டது உலகத் தமிழர் பேரவை. புலிகளுக்கு சார்பான இந்த சர்வதேச அமைப்பு லண்டனிலிருந்து இயங்குகின்றது. அமெரிக்காவிலிருந்து இயங்கும் விசுவநாதன் உருத்திரகுமாரனின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உலகத் தமிழர் பேரவை ஆதரித்துவருகிறது. புலிகளுக்கு நிதி மற்றும் பிரசார பலத்தை வழங்கிய அமைப்பே இது. இந்த அமைப்பின் கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். அதாவது புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 2010 பெப்ரவரியில் நடைபெற்ற கூட்டத்திலேயே மிலிபான்ட் கலந்துகொண்டார். அல்குவைதா அல்லது தலிபான் அமைப்புகளுக்கு சார்பான கூட்டங்களில் மிலிபான்டால் உரையாற்ற முடியுமா? இதே உலகத்தமிழர் பேரவையுடன் எரிக் சொல்ஹெய்ம் உட்பட பல நோர்வே நாட்டு அரசியல் வாதிகள் அண்மையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றன.

அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளுக்கு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு.

'மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காவிட்டால் இலங்கையில் யுத்தம் மீண்டும் யுத்தம் வெடிக்கும்' என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்திருக்கிறது. அமெரிக்க நிதி உதவியில் இயங்கும் சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு ஆகியவை புலிகள் அழிக்கப்படுவதற்கு முன்னரும் பின்னரும் இதேபாணியிலான மிரட்டல்களை விடுத்துள்ளன. லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்குவது சர்வதேச மன்னிப்புசபை நியூயோர்க்கிலிருந்து இயங்குவது மனித உரிமைகள் காப்பகம். பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் இருந்து இயங்குகிறது சர்வதேச நெருக்கடிக்குழு. இன்று இலங்கை மீது பாரிய குற்றங்களைச் சுமத்தும் இதே நெருக்கடிக்குழு இலங்கை அரசு மீதான தாக்குதல்கள் ஓயப்போவதில்லை என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தது. 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், புலிகள் அழிக்கப்பட்டு ஒன்பது மாதங்களின் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் எயார்இந்தியாவின் கனிஸ்டா விமானத் தாக்குதலில் 329 பேர் கொல்லப்பட்டனர். சீக்கிய பிரிவினைவாதிகளே இத்தாக்குதலை நடத்தினர். அதாவது சீக்கியத் தீவிரவாதிகள் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பொற்கோவில் மீது இந்தியப் படையினர் தாக்குதல் நடத்தி காலிஸ்தான் போராட்டத்தை ஒடுக்கிய ஒரு வருடம் கழிந்த நிலையிலேயே கனிஸ்டா விமானத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைப் போன்று இலங்கையில் புலிகள் அழித்தொழி;க்கப்பட்டாலும் இலங்கையின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த கனேடியப் புலம்பெயர் தமிழர்கள் திட்டமிட்டிருந்ததாக சர்வதேச நெருக்கடிக் குழு கதைகட்டி விட்டிருந்தது' ‘புலிகளுக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் நெருக்கடிக்குழு இவ்வாறு தெரிவித்திருந்தது. இப்போதும் புலம்பெயர் தமிழர்களை உசுப்பி இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுத்துவதிலேயே நெருக்கடிக்குழு ஈடுபட்டு வருகின்றது.

2011 செப்டம்பர் 11, தாக்குதலுக்குப் பின்னர் தேச பக்த சட்டவிதியை அமெரிக்கா அமுலுக்குக் கொண்டுவந்தது. இந்தச் சட்டவிதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் பயங்கரவாதக் குழுக்கள் என வகைப்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதை அனுமதிக்கவில்லை. இவ்வாறு ஆதரவு வழங்குவோர்களுக்கு பத்து வருடங்கள் அல்லது அதற்கு மேலாக தண்டனை விதிக்க முடியும். ஆனால் அமெரிக்க அரசோ இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் மற்றும் மார்க்சிச அமைப்புகளுக்கு எதிராக இந்த சட்டவிதியைத் தூக்கிப்பிடிக்கிறது. அத்துடன் அமெரிக்க நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் ஏனைய பயங்கரவாத குழுக்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கிறது.

கொசொவோ பிரச்சினை இதற்கு நல்ல உதாரணம். 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி சேர்பியாவிடமிருந்து பிரிந்து சென்றதாக கொசொவோ ஒருதலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனத்தை செய்தது. வெறும் 4212 சதுர மைல்கள் நிலப்பரப்பையும் 18 இலட்சத்துக்கும் குறைவான மக்களை தொகையையும் கொண்ட ஒரு பிரதேசமே கொசொவோ. கொசொவோவின் சுதந்திரப் பிரகடனத்தை உடனடியாகவே அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. கொசோவா சிறிய பிரதேசமாக இருந்தாலும் அமெரிக்க நலன்களைப் பொறுத்தவரையில் அது மிகமுக்கியத்துவம் வாய்ந்தது.

ஐரோப்பிய நாடான கொசொவோவில் எண்ணெய் வளம் இல்லை. அம்போ (AMBO Albanian Macedonian Bulgarian Oil Corporation) எனப்படும் எண்ணெய் குழாய் கொசொவோ ஊடாக செல்கிறது. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அல்பேனிய மசிடோனியன் பல்கேரியா எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் குழாய்களே கொசொவோக்கூடாக செல்கிறது. இதனூடாக அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் குறைந்த செலவுடன் எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதுவே கொசொவோவை அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் அங்கீகரிக்க முக்கிய காரணம்.

இலங்கையைப் பொறுத்தவரையிலும் அமெரிக்க மேற்கத்தைய நாடுகளின் நலன்களுக்கு குந்தகமாக இலங்கை அரசு செயற்படுவதாக அமெரிக்காவும் மேற்குநாடுகளும் கருதுகின்றன. சீனாவுடனும், இந்தியாவுடனும் இன்றைய அரசாங்கம் கொண்டிருக்கும் நெருங்கிய உறவுகள் அமெரிக்காவுக்கு எரிச்சல் ஊட்டுகின்றன. அதுமட்டுமல்ல இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இலங்கை அமைந்திருக்கிறது. இவைதான் மனித உரிமைகளையும் யுத்தக் குற்றங்களையும் அமெரிக்கா தூக்கிப் பிடிப்பதற்கான காரணங்கள்.

புலிகளை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா தடைசெய்ததைப் போன்று கொசோவோ விடுதலை இராணுவத்தையும் அமெரிக்கா தடை செய்திருந்தது. பின்னர் தனது தேவையையொட்டி அந்தத் தடையை நீக்கிவிட்டது.

மனிதஉரிமை மீறல்களைப் பற்றி பேசுவதற்கு அமெரிக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஹிரோசிமா மீதும் நாசகாகி மீதும் அணுகுண்டுகளை வீசி மனிதப் பேரழிவைப் புரிந்த நாடு அமெரிக்கா. வியட்நாமில் மைலாய் படுகொலை உட்பட பல்வேறு படுகொலைகளை அமெரிக்க இராணுவம் புரிந்திருக்கிறது. அமெரிக்காவின் இராணுவத்தளத்தை தியாகோகார்சியாவில் அமைப்பதற்காக அங்கு வசித்த பல்லாயிரக்கணக்கான சுதேசகுடிமக்களை பலாத்காரமாக அமெரிக்காவும் பிரிட்டனும் வெளியேற்றியிருந்தன. பேரழிவுமிக்க ஆயுதங்களைக் கண்டுபிடிக்கப்போவதாகக் கூறிக்கொண்டு ஈராக்கிற்குள் அமெரிக்காவும் நேசப்படைகளும் அத்துமீறி நுழைந்தன. இதனால் இலட்சக்கணக்கான குழந்தைகள் உட்பட இலட்சக்கணக்கான ஈராக்கிய மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் பேரழிவுமிக்க ஆயுதங்களின் ஒரு துரும்பைக்கூட அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆப்கானிஸ்தானிலும் இதேநிலைதான். மற்றைய மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றங்களையும் கண்டுபிடிக்க முயலும் அமெரிக்கா தனது நடவடிக்கைகளையும் ஒருதரம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

இலங்கையை தனது கைப்பொம்மையாக்குவதற்கான அமெரிக்காவின் அடித்தளமே இது. அடுத்ததாக இலங்கையில் தேர்தல் வரும். தேர்தலில் அமெரிக்க நலன்களுக்கு சார்பான ஆட்சியைக் கொண்டு வருவதற்கான சகல நடவடிக்கைகளையும் அமெரிக்கா இப்போதே ஆரம்பித்துவிட்டது.

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பிரச்சாரக் களத்தில் நம்பிக்கையுடன் குதித்துள்ளது. கடந்த தேர்தலில் எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. அவருக்காக அன்று பிரச்சாரம் செய்த தமிழர் தரப்பு பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜெனீவாத் தீர்மானத்தை ஆதரித்துள்ளது. அண்மைய காலங்களில் அக்கட்சியுடன் உடன்பாடு கொண்ட தமிழர் தரப்பு உதிரிக் கட்சிகளும் எதிர்கால நம்பிக்கையுடன் ஜெனீவாத் தீர்மானத்தை மறைமுகமாக ஆதரிக்கக் கிளம்பியுள்ளன.

ஜெனீவா உரையில் இலங்கை அரசுப் பிரதிநிதி தமரா குணநாயகம் குறிப்பிட்டதுபோல, இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்க போர்க்குற்ற பிரேரணையின் உள் நோக்கம்.

நன்றி: தமிழ்குரல்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com