Contact us at: sooddram@gmail.com

 

நாட்டுப்பற்றுள்ள புலம்பெயர் தமிழரும் இலங்கைக்கு சார்பாக செயற்பாடு

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர் களில் ஒரு சிலர் நாட்டுக்கு தீங்கிழைக்கக்கூடிய வகை யில் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள சில தமிழர்கள் நாட் டுப் பற்றுடன் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். ஆசியாவிற்கான உலக அமைப்பின் தலைவர் கே.டி. ராஜசிங்கமும் ஒருவர். இவர் ஏசியன் ரிபியுன் இணையத்தளத்தின் பிரதம ஆசி ரியராக பணியாற்றி வருகின்றார். இவருடன் லண்டனில் புலம் பெயர்ந் துள்ள தமிழ்ப் பெண் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியும் இலங்கை யின் சார்பில் பிரசாரம் செய்வதற்காக ஜெனிவா வந்துள்ளார். இவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் டயஸ்போரா டயலொக் என்ற அமைப்பின் முக்கிய அங்கத்தவராக வும் இருக்கின்றார்.

இவர்களுடன் லண்டனில் உள்ள இலங்கை சிங்களவர் சங்கத்தின் உப தலைவர் டக்ளஸ் விக்கிரமரட்ண, கனடாவில் 1983ம் ஆண்டு முதல் வாழ்ந்துவரும் ஐராணி சில்வா என்ற பெண்மணியும் இங்கு வந்து பலநாட்களாக நாட்டுபற்றுடன் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரை யாடி உண்மை நிலையினை எடுத்துக்கூறி வருகின்றார்கள்.

இந்த நிலையில் அதிர்ச்சித் தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளால் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியொருவர் பின்னணி யில் இருக்கிறாரென்ற உண்மை வெளியானதும் பிரேரணைக்கு ஆதர வாக வாக்களிக்கத் தீர்மானித்திருந்த நாடுகள் பல தங்களது நிலையை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜெனீவா ராஜதந்திர வட்டாரங் கள் கூறுகின்றன.

சிராணி சுப்பிரமணியம் என்ற பெயருடைய இந்தப் பெண்மணி, சனல் 4 தொலைக்காட்சியின் நிர்வாகப் பணிப்பாளரை மணந்து லண்டனில் வசித்து வருகின்றார். இந்தப் பெண்மணி (சிராணி சுப்பிரமணியம்) சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் வர்த்தகப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது. சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் புலம்பெயர் தமிழர்களுடனும், புலிகள் அமைப்புகளுடனும் சேர்ந்து செயற்பட்டு வருவது இந்தச் செய்தி மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. சனல் 4 இலங்கைக்கு எதிராக பொய்யான தகவல்களை வெளியிடு வதற்கு இந்தப் பின்னணியே காரணமாக இருக்கிறதென்பது இராஜ தந்திரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி நிலையம் இலங்கைக்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் புதிய தொலைக்காட்சி விவரண நிகழ்ச்சியொன்றை இன்று ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் பேரவை கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் உள்ள இன்னுமொரு அறையில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்ளும் சகல நாடுகளின் பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளுமாறு சனல் 4 அமைப்பு அழைப்பும் விடுத்துள்ளது. இந்த விவரணப் படத்தில் பொதுமக்கள் யுத்த முனையில் கொல்லப்பட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தனது முதலாவது விவரணப் படத் தில் காண்பித்த காட்சிகளே இதில் மீண்டும் காட்டப்பட்டு, சில விப ரங்களை இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் எல்.ரி.ரி.ஈ. தலை வர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகனின் படமும் காண்பிக்கப்படுகிறது. சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மகாநாட்டின் போது ஏக காலத்தில் இன்னு மொரு மண்டபத்தில் காண்பிக்கவுள்ள தொலைக்காட்சி விவரணப் படங்களில் உள்ள பொய்யான தகவல்களை எடுத்துக் காட்டும் முகமாக, இலங்கை தூதுக் குழுவினர் சார்பில் பாராளுமன்ற உறுப் பினர் ரஜீவ விஜேசிங்க தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை இன்னுமொரு நிகழ்ச்சியை ஜெனீவா ஐ.நா. சபை கட்டிடத்தில் காண்பிக்க விருக்கிறது. இதற்கு சகல அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை யும் வந்து சமுகமளிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலாவது விவரண திரைச்சித்திரத்திற்குஇலங்கையில் நடைபெறும் விந்தையான முன்னேற்றம், முரண்பாடு சமதானம், அபிவிருத்தி மற்றும் வளமான வாழ்க்கைஎன்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி திரைச்சித்திரத்தில் எல்.ரி.ரி.ஈ.யே உலகின் முன் னிலையில் உள்ள ஒரு பயங்கரவாத இயக்கம் என்றும் அதற்கு வெகு தூரத்தில் இரண்டாவது இடத்தில் அல்குவைதா அமைப்பும் இருக்கிறதென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகளை தோல்வியடைச் செய்து, நாட்டில் குழப்பத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்து வதே இந்த சனல் 4 விபரணப்படத்தின் குறிக்கோள் என்று இலங் கையை ஆதரிக்கும் நாடுகள் தெரிவித்துள்ளன.

இத்துடன், இன்னுமொரு 10 நிமிட விவரணப் படத்தையும் இலங்கை தூதுக் குழுவினர் அங்கு காண்பிக்கவிருக்கிறார்கள். இதற்குபொய்யான தகவல்களுக்கு நாம் அளிக்கும் உண்மை யான பதில்என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் 2009 ஜன வரி முதல் மே மாதம் வரையில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணி க்கை 3 லட்சத்து 5 ஆயிரமாக இருந்தது என்றும் இந்த யுத்தத் தின் போது 4 ஆயிரத்து 600 எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் கொல்லப் பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சி எல்.ரி.ரி.ஈ. செய்த படுகொலைகளையோ அவ் வியக்கம் 10 வயது சிறுவரையும் போராளிகளாக சேர்த்துக் கொண்ட அனர்த்தத்தையோ சுட்டிக்காட்ட தவறிவிட்டதென்றும் குறிப்பிடப்படும். நாளை நடைபெறும் இந்த உண்மையை உணர்த்தும் கருத்தரங்கத்தின் மூலம் இலங்கை பற்றி மற்ற நாடுகளின் மனதில் தோன்றியுள்ள சந்தேகங்கள் நிவர்த்தியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com