Contact us at: sooddram@gmail.com

 

வழிகாட்டும் லத்தீன் அமெரிக்க நாடுகள்!

(வெ.மன்னார்)

வாழைக்குடியரசுகள் என்றும், அமெ ரிக்காவின் கொல்லைப்புற நாடுகள் என்றும் அறியப்பட்டிருந்த லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட காலம் மலையேறி விட்டது. நிதி மூலதனம் தன் தாராளமயக் கொள்கையை முதன்முதலில் இங்குதான் பரிசோதனை செய்து பார்த்தது. ஜனநாயக அரசாக இருந்தாலும் சர்வாதிகார அரசாக இருந்தாலும் அவையனைத்தும் அமெரிக் காவின் இஷ்டப்படியே செயல்பட்டுக் கொண் டிருந்தன. இந்த நாடுகள் அனைத்தையும் ஓஏயு என்ற அமைப்பின் கீழ்கொண்டு வந்து தன் மேலாதிக்கத்தை செலுத்தி வந்த அமெரிக்கா, இன்று தானே நம்ப முடியாத அளவுக்கு செல்வாக்கிழந்து, வெறுக்கப்படும் நாடாக லத்தீன் அமெரிக்க மக்கள் மத்தியில் மாறிவிட்டது. இந்த பிராந்தியத்தில் உள்ள 33 நாடுகளும்செலாக்என்ற அமைப்பை உரு வாக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடும் நிலைக்கு வளர்ந்து வருகிறது.

புதிய தாராளமயக்கொள்கைகளின் அமலாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து, நாளும் வதைப்பட்ட மக்கள், பொங்கியெழுந்து உருவாக்கிய புதிய அரசுகள், மக்கள் நலனை மையமாக வைத்து அமலாக்கும் திட்டங்கள், இந்திய மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய அனுபவங்கள். புதிய அரசுகளுக்கு பொறுப்பேற்ற தலைவர்கள் இடதுசாரிகள் என்று அறியப்பட்டாலும், அரசு கட்டமைப்புக்களில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவராமல் படிப்படியான சீர் திருத்தங்களைக் கொண்டுவந்து, ஒரு மக்கள் நல அரசாக அதை மாற்றியுள்ளனர். சாதாரண மக்களிடமிருந்து அவர்கள் பெற்ற ஆதரவையும், செல்வாக்கையும் காண சகிக்காத அமெரிக்க ஏகாதிபத்தியம் வழக்கமான அதன் அரசு கவிழ்ப்பு தகிடுதத்தங்களில் இறங்கி, மூக்கறுபட்டது. ராணுவத்திலேயே பிளவை ஏற்படுத்தி ஒரு பகுதியினரை வெனிசுலாவின் சாவேஸ் அரசுக்கு எதிராக அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதை எதிர்த்து வீறுகொண்டெழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி கலக ராணுவத்தை எதிர்த்து, புறங் காண வைத்து வரலாற்றைப் படைத்தனர்.

வெனிசுலா
உலக அளவில் பெருமளவு எண்ணெய் வளங்கொண்ட வெனிசுலாவின் வருமானத் தின் 90 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதியில் தான் கிடைத்து வந்தது.
பெயரளவுக்கு அரசு கம்பெனியாக இருந்தாலும் அமெரிக்கர்களே முக்கிய பொறுப்புக்களில் இருந்து ஆதிக்கம் செலுத்திவந்தனர். வருமானத்தின் பெரும் பகுதி மக்களுக்குப் போய்ச்சேரவிடாமல் அமெரிக்க கம்பெனிகளே கொள்ளையடித்து வந்தன.

வெனிசுலாவில் ஹியூகோ சாவேஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றபின் கம்பெனி யின் நிர்வாகத்தில் பெருத்த மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. இயக்குநர்கள் மாற்றப்பட்டு அதன் தலைமைப்பொறுப்பு சாவேஸின் நம்பிக்கைக்குரியவரிடம் தரப்பட்டது. இதனால் சாவேஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவாக கம்பெனியின் பெரும்பாலான ஊழியர்கள் செயல்பட்டனர். 2002ல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பின் வெனிசுலாவின் அரசியலையே முடிவு செய்யும் அந்த கம்பெனியின் முழுக்கட்டுப்பாடு சாவேஸின் கைகளுக்குச் சென்று விட்டது. அதன் பின்னரே கம்பெனியின் முழு வருமானமும் சாதாரண மக்களை நோக்கித் திருப்பிவிடப்பட்டது.

வெனிசுலாவில் தற்போது கல்வியறிவு பெற்றோர் 95 சதவீதமாகும். கல்வியும் சுகாதாரமும் அனைத்து நிலைகளிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குழந்தை இறப்பு விகித அளவை 20 சதவீதமாக குறைத்துள்ளது. மொத்த ஜனத்தொகையான மூன்று கோடி பேரில் கிட்டத்தட்ட 90 லட்சம் பேர் கல்லூரிகளிலோ அல்லது பள்ளிகளிலோ படிக்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஐக்கிய நாடுகளின் முகமைகள் கல்வியின்மையிலிருந்து விடுபட்ட நாடாக வெனிசுலாவை அறிவித்து வருகின்றன. ஏழ்மையின் சதவிகிதம் 80 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் குடியிருப்பை உறுதிப்படுத்த உறுதி பூண்டுள்ள சாவேஸ் அரசு, வெள்ளம் வந்த பொழுது வீடிழந்த மக்களை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் குடியேற்றவும் தயங்கவில்லை. உணவு உட்பட அனைத்தும் நியாய விலையில் கிடைக்க பொது விநியோக கடைகளைத் திறந்துள்ளது. இதன்மூலம் வரும் வருமானமும் சமூக நலனுக்கே திருப்பிவிடப்படுகிறது. நகரமயமாக்கல் விரைவுபட்ட நிலையில் குடியேறும் மக்களுக்கு குடியிருக்க 2017 க்குள் இரண்டு லட்சம் வீடுகளை கட்டித்தரும் பிரம்மாண்டமான பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் குடியேறும் அந்த மக்கள் மத்தியில் சமூக குழுக்களை உருவாக்கி, அவர்களின் தேவையை அவர்களே நிறைவேற்றிக் கொள்ளும் திட்டத்தையும் வகுத்துள்ளது. தேவையான நிதியினை அவர்களுக்கு வழங்கி மேற்பார்வையிடும் பணியை மட்டும் மேற்கொள்கிறது. வீடுகட்டுதல், கல்வி, சுகாதாரம் மற்றும் காவல்பணி உட்பட அனைத்தையும் அந்த சமூக குழுக்களே மேற்கொள் கின்றன. சாவேஸ் அரசு வெனிசுலா முழுவதும் இது போன்ற 150 திட்டங்களை மேற் கொண்டு வருகிறது.

ஈக்வேடார்

இந்தியாவைப் பொறுத்தவரையில் பட்ஜெட் பற்றாக்குறையைப் போக்க மானியங்களை வெட்டுவதும், பாமர மக்களுக்கான செலவீடுகளை நிறுத்துவதும்தான் வாடிக்கையாக இருக்கிறது. இதனால் மக்கள் அன்றாடம் அவதிப்படுவது நாம் பார்க்கும் நிகழ்வு. ஆனால் சின்னஞ்சிறு ஈக்வேடார் நாட்டில் மக்களின் அமோக ஆதரவோடு ரபேல் கோரியா என்கிற இடதுசாரி தலைவர் ஜனாதிபதியாக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பட்ஜெட் பற்றாக்குறையைப் போக்க அவர் கையாண்ட அணுகுமுறைகள் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

தாராளமயக் கொள்கையைப் பின்பற்றிய அந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடி யில் சிக்கியிருந்தது. அதன் வருமானத்திற்கு ஆதாரம் எண்ணெய் ஏற்றுமதியும், விவசாய விளைபொருளும்தான். அந்த வருமானமும் மக்களைப் போய்ச்சேரவில்லை. 2007ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ரபேல் கோரியா இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். ஒன்று, எண்ணெய் கம்பெனிகளின் மொத்த விற்பனையில் அரசுக்கு 13 சதவீதமே கிடைத்திருந்த நிலையை மாற்றி 87சதவீதமாக அதை உயர்த்தினார். வருமானம் தலை கீழாக குறைந்தாலும் அந்நிய கம்பெனிகள் நாட்டை விட்டு ஓடவில்லை. ஏனெனில் அவை அந்த அளவுக்கு கொள்ளையடித்துக் கொண்டிருந்தன. இப்படிச்செய்தால், இந்திய அரசு சொல்வது போல அந்நிய முதலீட் டாளர்கள் நம்பிக்கையிழந்து வெளியேறி விடுவர் என்பது ஒரு ஏமாற்றுவாதமே என தெளிவாக இதன்மூலம் தெரிகிறது.

இரண்டாவது நடவடிக்கை, வரிவருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தியது. திறமையான வரிவசூல் நடவடிக்கைகள் மூலம் வரி ஏய்ப்பைத் தடுத்தும், நிலுவை வரிகளை வசூலித்தும், வசூல் முறைகளில் இருந்த ஊழல்களைக் களைந்தும் அதை சாதித்தது. மேலும் வரியின் சதவிகித அளவை 25 சத வீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்ததும் அதற்கு உதவியது. இதற்கு தேவைப்பட்ட தெல்லாம் அரசியல் உறுதியே! அதை வலுவாக கடைப்பிடித்தது ரபேல் கோரியா அரசு. இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளாக முதலாளிகள் பெற்றாலும் அதன் பலன் முதலாளிகளின் பாக்கெட்டுக்குப் போகிறதே தவிர, துளித்துளியாய் கசிந்துங்கூட அது ஏழைகளை எட்டுவதில்லை.

இப்படிக் கிடைத்த வருமானத்தை சமூக நலத் திட்டங்களுக்குச் செலவிடவும், அதற்கான பொது முதலீட்டை அதிகரிக்கவும் அரசு பயன்படுத்திக்கொண்டது. இதனால் மக்களின் அடிப்படைக்கட்டமைப்பு வசதிகள் வியப்படையும் வண்ணம் பெருகியது. கல்வி, பொதுசுகாதாரம், வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டது.

பிரேசில்

நீண்ட காலம் சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்த பிரேசில் 1988 ல்தான் ஜனநாயக காற்றை சுவாசித்தது. 2003ல் லூயிஸ் இனாசியோ லூலா டிசில்வா ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் பெரிதும் உயர்ந்தது. அரசின் மொத்த வருமானத்தில் கல்விக்கு 5.1 சதவீதமும், சுகாதாரத்திற்கு 3.5 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவிலோ இது மக்களின் நீண்டகால கோரிக்கையாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களை விட பெண்களின் கல்வியறிவு சதவீதம் கூடுதல் என்பது ஒரு சாதனையே. ஆண்கள் சதவீதம் 97, ஆனால் பெண்களின் சதவீதம் 99 ஆகும். 4000 பேருக்கு ஒரு பொதுமருத்துவர், பல் மருத்துவர், செவிலியர் ஆகியோருடன் 13 சுகாதாரப் பணியாளருடன் கூடிய ஒரு பொது மருத்துவ சுகாதார நிலையம் உள்ளது. சராசரி ஒரு லட்சம் பேர் வசிக்கும் பகுதியில் 60 பள்ளிகள் உள்ளன. 99 சதவீதமான குடியிருப்புக்கள் மின் இணைப்பினையும், 77சதவீதமான குடும்பங்கள் குழாய் மூலம் குடிநீர் பெறும் வசதியினையும் பெற்றுள்ளன. ஊட்டச் சத்தின்றி எடை குறைந்தோர் வெறும் 2 சதவீத அளவிலேயே உள்ளனர். போல்சா குடும்பம் என்ற பெயரில் அமலாகும் திட்டத்தின் மூலம் உதவி தேவைப்படும் குடும்பங்களின் விவரங்களை நகராட்சிகள் சேகரிக்கின்றன. அவர்களின் தேவைக்கேற்ப உதவிகள் செய் யப்படுவதோடு அதற்கான நிதியினை அரசே நகராட்சிக்குத் தருகிறது. நகர்ப்புறங்களில் வசிப்போர் 85 சதவீதமாக இருப்பதால் குடியேறுபவர்களின் நலன்களை விசேஷமாக கவனத்தில் கொண்டு திட்டம் வகுக்கப்படுகிறது.

தாராளமயக் கொள்கையின் தாக்கத்தால் அவதிப்பட்ட மக்கள், அதற்கான மாற்றுக் கொள்கையுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கும் அரசுகளை ஆட்சிக்கு கொண்டு வந்ததாலேயே இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாயிற்று. இதை இந்திய மக்கள் உணர்வதும் அந்த வழியில் செல்வதுமே இன்று தேவைப்படுவது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com