Contact us at: sooddram@gmail.com

 

சவுதி அரேபியா, குவைத், கட்டார், பிலிப்பைன்ஸ்

அமெரிக்காவின் மிக நெருங்கிய தோழமை நாடுகள் கூட இலங்கைக்கு ஆதரவு

இலங்கையில் வாழும் ஒன்று இரண்டு அல்ல இருபது மில்லியன் மக்கள் அதுவும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மூன்று இனங்களையும் சேர்ந்த பெளத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்ற நான்கு மதத்தவர்களதும் குரலை சிறிதளவேனும் கவனத்தில் எடுப்பதற்கு அமெரிக்கா தவறிவிட்டது. நீண்டகால வரலாற்று பெருமைக்குச் சொந்தமான தேசத்தின் குரலைக் கூட மதிக்காத இவர்கள் தான் மனித உரிமைகளினதும், ஜன நாயகத்தினதும் காவலர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19 வது மாநாட்டில், தாம் சமர்ப்பித்திருக்கின்ற பிரேரணைக்கு ஏன் இல ங்கை மாதாவே ஆட் சேபனை, தெரிவிக்கின்றது என்று ஒரு தரம் அமெரிக்கா நின்று நிதானித்து பார்த் திருக்கலாம்.

ஆனால் அதனை அமெ ரிக்கா செய்யவில்லை. அதற்கு அதன் அதிகார மமதையும், ஏகாதிபத்திய சிந்தனையும், எண்ணமுமே காரணமேயொழிய மனிதாபிமான பார்வை அல்ல.

இலங்கையரின் எதிர்ப் பையும், ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் இப்பிரேரணையை அமெரிக்கா தூக்கிப் பிடித்து நிறைவேற்றி இருக்கின்றது.

இப்பிரேரணை மீது நடத்தப்பட்ட (22.03.2012) வாக்கெடுப்பில் 15 நாடுகள் பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவாகத் துணிந்து வாக்களித்து இருக்கின்றன. எட்டு (8) நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ள வில்லை. 24 நாடுகள் அமெரிக்காவுக்கு சார்பாக பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இவ்வாறு தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் வாக்களிப்பு அமைந் திருந்தது.

என்றாலும் இப்பிரேரணை மூலம் வளர்முக நாடான இலங்கைக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. அதேநேரம் வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவுக்குப் பல பாதகங்களும் ஏற்படவே செய்தி ருக்கின்றன.

குறிப்பாக இலங்கையில் புலிப் பயங்கரவாதம் சுமார் முப்பது வருடங்கள் தலைவிரித்தாடியது. அப்பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குத் தெளிவாகக் கொண்டு செல்வதற்கு இப்பிரேரணை இலங்கைக்கு வழிசமைத்துக் கொடுத்தது. அத்தோடு நின்றுவிடாமல் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் அதாவது, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்குப் பிறகு இந்நாட்டு மக்கள் அனுபவிக்கின்ற சுதந்திரத்தையும், அமைதி, சமாதானத்தையும், நாட்டில் ஏற்பட்டு வருகின்ற துரித அபிவிருத்தியையும் உலக நாடுகளின் கவனத்திற்கு விலாவாரியாகத் தெளிவுபடுத்தவும் இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தலைமையில் ஜெனீவா சென்றிருந்த இலங்கைத் தூதுக்குழுவினர் உச்ச அளவில் பயன்படுத்திக் கொண்டனர்.

இதன் பயனாக அமெரிக்காவின் மிக நெருங்கிய தோழமை நாடுகள் பல இலங்கைக்கு எதிரான இப்பிரேரணையை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள் ளன. அவற்றில் மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள சவூதி அரேபியா, குவைத், கட்டார் ஆகிய மூன்று நாடுகளும் பிரதானமானவை. அமெரிக்காவுக்கும், இந்த மூன்று நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்களில் மிக நெருக்கமான உறவு இருந்து வருகின்றது.

மத்திய கிழக்குக்கான அமெரிக்கா வின் பிரதான படைத்தளம் கூட கட்டாரில் தான் இருக்கின்றது.

அப்படி இருந்தும் இந்த மூன்று நாடுகளும் இலங்கைக்கு எதிரான இப்பிரேரணையை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித் துள்ளன. ஏனென்றால், இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித் தாடிய போது மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் தொடர்பாகவும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் மக்கள் அனுபவிக்கின்ற வசதி வாய் ப்புகள் குறித்தும் போதிய தெளிவை இந்நாடுகள் பெற்று இருப்பதும் ஒரு காரணமாக அமையும்.

அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளின் நீண்டகால நண்பனாக இருந்து வருகின்றார். குறிப்பாக அநியாயங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பலஸ்தீன மக்க ளுக்காக அவர் மூன்று தசாப்தங்க ளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருகின்றார். அதனை அரபுலகமே மறக்காது.

அத்தோடு இலங்கையை ஸ்ரீ-லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் ஆட்சி செய்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிடையிலான உறவு மிகவும் நெருக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இது மறுக்க முடியாத வரலாறாகும்.

இந்த நியாயங்களின் அடிப்படையில் இந்த மூன்று நாடுகளும் அமெ ரிக்காவின் தோழமையை விடவும் இலங்கையின் நட்பே முக்கியமென கருதி இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன என உறுதிபடக் கூறலாம்.

மேலும் அமெரிக்காவின் மற்றொரு நட்பு நாடுதான் பிலிப்பைன்ஸ். அதுவும் சவூதி அரேபியா, குவைத், கட்டார் போன்று அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றது.

அங்கும் அமெரிக்க படைத் தளம் உள்ளது. என்றாலும் இலங்கைக்கு எதிரான பிரேரணை விவகாரத்தில் இலங்கையின் பக்கம் நியாயமிருக்கின்றது என்பதை பிலிப்பைன்ஸ் ஏற்றுக் கொண்டு இருக்கின்றது. அதனால் தான் அந்நாடும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

இதேவேளை மாலைதீவும், பங்களாதேசமும் அமெரிக்காவின் இப்பிரேரணையை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து ள்ளன. எமது அயல் வீட்டானை கைவிட்டு விடக் கூடாது என்ற தோரணையில் தான் இவ்விரு நாடுகளும் செயற்பட்டிருக்கின்றன. அத்தோடு இந்தோனேசியாவும் இதே அடிப்படையில் தான் செயற்பட்டுள்ளது.

இதேவேளை சீனா, ரஷ்யா, கியூபா ஆகிய மூன்று நாடுகளும் இலங்கையின் நீண்டகால சினேகபூர்வ நாடுகளாகும். அந்நாடுகள் இலங் கையுடனான தமது நட்பை மேலும் வலுப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவு நல்கியுள்ளன. அத்தோடு தாய்லாந்தும் இலங்கைக்கே ஆதரவாக வாக்களித்து இருக்கின்றது. இலங் கைக்கும் தாய்லாந்துக்கு மிடையில் சமய, கலாசார ரீதியான நீண்ட காலமாக நட்புறவு நிலவி வருகின்றது. அந்த வகையில் தாய் லாந்து, இலங்கையைக் கைவிட தாம் தயாரில்லை என்பதை இச்சந்தர்ப் பத்தில் பகிரங்கப்படுத்தி இருக்கின்றது.

அத்தோடு உகண்டா, கொங்கோ, மொரிட்டானியா, ஈக்குவடோர் ஆகிய நான்கு நாடுகளும் இப் பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

இதன்படி இப்பிரேரணை விவகாரத்தில் அமெரிக்காவின் தோழமையை விடவும் இலங்கையுடனான நட்பையே பல நாடுகள் பெரிதும் விரும்பியுள்ளன என்பது நன்கு தெளிவாகின்றது. ஏனென்றால் இலங்கையானது அணி சேராக் கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் ஒரு நாடு. அத்தோடு எந்த நாட்டுக்குமே தீங்கோ, கெடுதியோ விளைவிக்காத தேசம் இது.

அதனால் இந்த 15 நாடுகளும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான இப் பிரேரணையை எதிர்த்து துணிந்து வாக்களித்திருக் கையில், வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளையும் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் எடுத்துப் பார்த்தால், மேலும் பல உண்மைகள் புலப்படும். குறிப்பாக அமெரிக்காவின் கடும் அழுத்தம் காரணமாகவே எட்டு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதேநேரம் இந்த அழுத்தம் காரணமாக அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளும் இருக்கவே செய்கின்றன. என்றாலும் உண்மை என்றுமே உறங்காது எப்போதோ ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும். ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் மீது அமெரிக்கா அழுத்தங்கள் எதனையும் பிரயோகிக்காது சுதந்திரமாக வாக்களிக்க இடமளித்திருந்தால் மேலும் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு நல்கி இருக்கும். அதனூடாக இலங்கைக்கு எதிரான இப்பி ரேரணை நிச்சயம் தோல்வியுற்று இருக்கும். இது மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும் உலகில் அதிகார பலம் மிக்க அபிவிருத்தி அடைந்த நாடான அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக வளர்முக நாடான இலங்கை 15 நாடுகளின் வாக்குகளை பெற்றிருப்பது பெரும் சாதனையே. இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செயல் திறன் மிக்க தலை மைத்துவத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றால் அது மிகையா காது.

(மர்லின் மரிக்கார்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com