Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது ஏன்?

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டளித்ததால் அமெரிக்கா பக்கம் சாய்ந்ததாக அர்த்தம் இல்ல . ஏனெனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையின் எதிர்கால நல்வாழ்வைச் சுட்டிக்காட்டும் வகையில் சில வாசகங்களை இந்தியா சேர்த்த செயல் அதற்கு ஆதாரம்.

ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியா மேற்கொண்ட நிலை இலங்கையை சற்று பாதித்திருக்கிறது. அதே சமயம், தமிழகத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆதரவாக இந்தியா இம்மாதிரி முடிவை எடுத்தது என்று பேசப்படுகிறது. தீர்மானம் கொண்டு வரப்படும் வரை, இந்தியா தனக்குத் தான் ஓட்டளிக்கும் என இலங்கை மிகவும் நம்பிக்கையுடன் கூறி வந்தது. கடந்த மாதம் முதல் அத்தகைய பிரசாரம் இலங்கை அமைச்சர்கள் பலராலும் அதிகளவில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. காரணம் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிரான தீர்மானம் எதையும் இந்தியா ஆதரித்தது கிடையாது. ஆனால் இந்த ஒரு மாத கால இடைவெளியில் இந்தியாவில் ஏற்பட்ட சில நிகழ்வுகள், மத்திய அரசு இந்த விஷயத்தில் தனது முடிவை மாற்றுவதற்கு ஏதுவாக அமைந்தன.

தீர்மானம் வெற்றி பெற்றது, இலங்கையின் முயற்சி தோல்வி அடைந்தது குறித்து மிகவும் வருத்தத்துடனும் கோபத்துடனும் கருத்துக்களை வெளியிட்டுள்ள இலங்கைப் பத்திரிகைகள், இந்த தோல்வி இந்தியாவிற்குத் தான் என காட்டமாகத் தெரிவித்துள்ளன. தனது முடிவின் மூலம் அண்டை நாடு ஒன்றின் ஆதரவை இந்தியா இழந்து விட்டதாகவும் புலம்பியுள்ளன. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தது மிகப் பெரும் தவறு என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்கா இன்னும் பலமளிக்கும் என்றும், ஆரூடம் கூறியுள்ளன. அரசு ஆதரவு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள், அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்து விட்டதாக கவலை தெரிவித்துள்ளன.

இந்தியாவின் நிலைப்பாடு, இலங்கையை கோபத்தின் உச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், இலங்கை பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு வெளியுறவுப் பொம்றுப்பில் உள்ள அமைச்சர் குணசேகர, "நமக்கு எதிராக சில உறுப்பு நாடுகள் ஓட்டளித்தது குறித்து நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்நாடுகள், போரை நிறுத்த முயன்றதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு வாழ்வளிக்க விரும்பியவை தான். நம் அண்டை நாடுகள், தமது உள்நாட்டு நெருக்கடிகளால் நமக்கு எதிராக ஓட்டளித்தன' எனத் தெரிவித்துள்ளார். அதேநேரம், அமெரிக்க தீர்மானத்தில், மூன்றாவது பிரிவில் இந்தியா கடைசி நேரத்தில் கொண்டு வந்த திருத்தம், இலங்கைக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என்பதை "தி ஐலேண்ட்' பத்திரிகை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இந்தியப் பிரதிநிதி தீர்மானம் குறித்து பேசாதததும் வரவேற்கப்பட்டிருக்கிறது.

திருத்தம் ஏன்? இந்த விமர்சனங்களை எதிர்பார்த்தே இந்திய தரப்பில் நேற்று விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், இலங்கையின் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதாகவும், 2009ல், மனித உரிமைக் கவுன்சிலில் தான் நிறைவேற்றுவதாகக் கூறிய நல்லிணக்க நடவடிக்கைகளை நிறைவேற்ற இலங்கைக்குத் தற்போது ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தீர்மானத்தை ஆதரித்ததாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவே, தீர்மானத்தில், இலங்கை விரும்பினால் தான் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் தனது உதவி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளை அளிக்க வேண்டும் என்ற திருத்தத்தையும் தான் கொண்டு வந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. அதோடு, இரு நாடுகளுக்கும், மொழி, மதம், இன ரீதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆண்டு உறவின் அடிப்படையில், இலங்கையில் நடக்கும் சம்பவங்களை இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளது.

இதை ஒரே வரியில் கூற வேண்டுமானால், சர்வதேச சமூகத்திடம் இலங்கை உறுதியளித்ததற்கு, நல்லிணக்க நடவடிக்கைளையும், நல்லிணக்க ஆணைக் குழுவின் பிற பரிந்துரைகளையும், இந்தியாவின் உதவித் திட்டங்களை அமல்படுத்துவதையும் கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆமை வேகத்தில் செய்து வந்ததுதான் அந்நாட்டின் மீது இந்தியாவிற்கு நம்பிக்கையின்மை ஏற்படக் காரணம். இக்கருத்தையே அமெரிக்காவும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. மூன்று ஆண்டுகள் சர்வதேச சமூகம் அவகாசம் கொடுத்தும் கூட இலங்கை தனது நல்லிணக்கப் பணிகளில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இவ்விஷயத்தில் இரு நாடுகளும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன என்பதில் சந்தேகம் எழ வாய்ப்பில்லை.

மாறிவிட்டதா கொள்கை? இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா ஓட்டளித்தது ஏற்கனவே இந்தியா பின்பற்றிய அணிசேராக் கொள்கைக்கு எதிரானது அல்ல. ஏனெனில் நேரு காலத்தில், பின்பற்றப்பட்ட கொள்கை நடைமுறையில் இன்று இல்லை. அந்த இயக்கம் முடங்கிப் போய் உருத் தெரியவில்லை.அக் கொள்கையைப் பின்பற்றிய எகிப்து கதி என்ன? இன்று உலகே மாறி இருக்கிறது. "சார்க்' நாடுகள் என்ற கோணத்தில் இந்தியா செய்தது சரியா என்றால், "சார்க்' கொள்கை அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை அளிப்பதுடன், சலுகை வர்த்தகத்தையும் அனுமதித்திருக்கிறது. அதனால் தான் அமெரிக்க தீர்மானத்தை அப்படியே ஆதரிக்காமல், இலங்கை நல்லிணக்க வாழ்வை வலியுறுத்தியது. மேலும், தமிழ்தேசியக் கூட்டமைப்பு இன்று பலமற்ற இயக்கமாக காட்சியளிக்கலாம். ஆனால் புலி ஆதரவு சக்திகள் இல்லாத சூழ்நிலையில், அங்கு வாழும் லட்கணக்கான தமிழர்களுக்கு கவுரவ வாழ்வு தரும் பொறுப்பை இலங்கை அதிபர் ராஜபக்ஷே தட்டிக்கழிக்கமுடியாது. தமிழர்கள் பகுதியில் தேர்தல் நடத்தினாலும், போருக்குப் பின் நல்லிணக்கவாழ்வு அமைய ஏற்படுத்தப்பட்ட குழுவின் ஆலோசனைகள், காலக்கெடுவுடன் நிறைவேற்றப்பட்டதா என்பதை உறுதி செய்யாதவரை இந்தியா நடவடிக்கை ஒரு பாடமாக அமையும். மேலும், ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் உள்ள சீனாவும், அருகில் உள்ள ஜனநாயக இந்தியாவும் இவ்விஷயத்தில் மேற்கொண்டு வரும் அணுகுமுறையை இலங்கை இனி உணர வேண்டும் என்பதும் தூதரக விவகாரங்கள் தெரிந்தவர்கள் கருத்து.

(நன்றி; தினமலர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com