Contact us at: sooddram@gmail.com

 

துன்பங்களை இன்பங்களாக சுமந்து வாழும் எழுவை தீவு மக்கள்

இன்று மிகவும் பிரகாசமான நாளாகும். நீல நிற முகில் களால் சூழ்ந்துள்ள வானம் தெளிவாக இருக்கின்றது. தீவுகளில் வாழும் மக்கள் வாழ்க்கையில் இதுவரை எமக்கு ஆய்வுகளைச் செய்ய முடியாதிருந்த எழுவை தீவை தேடிச் செல்ல தீர்மானித்தோம். கடலின் ஓசையும் அலைகளும் அதன் பயங்கரத்தன்மையும் குறைந்திருந்தது. நாம் யாழ்ப்பாணத்திலி ருந்து குறிகட்டுவான் தரிப்பிடத்துக்கு பறந்து சென்றோம். அரசின் பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையினால் வோட்டர் ஜெட் வாகனமொன்று மீண்டும் ஆயத்தப்படுத்தப்பட்டது. கடற்படை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் பெரேரா நாம் வரும் வரை காத்துக் கொண்டிருக்கிறார். நீண்ட காலத்துக்குப் பின் மீண்டும் கடற் பயணமொன்று. இப்போது கடல் வழியும் சாதகமாக இருக்கின்றது. எங்களை மிக அன்போடு வரவேற்று அவர் கூறினார்.

கடலின் ஒலி குறைந்திருந்தாலும் கரையை நோக்கி வரும் காற்று மிக வேகமாகவே இருந்தது. ஒரு பெண்ணின் குணாதிசயத்தைச் சொல்லிக் கொடுத்த பேர்னாட் ஷோ என்ற அந்த கவிஞனின் அந்த வார்த்தைகளை நான் நினைவு கூருகிறேன். ஆனால் காதை செவிடாக்கும் அமைதிக்கு பின் அடுத்த நிமிடத்தில் எவ்வளவு பெரிய சப்தத்தை அடுத்ததாக கேட்கப் போகிறோம் என்று எண்ணுகிறேன்.

எவ்வாறெனினும் நாம் இப்போது மோட்டார் ஜெட் வாகனத்தில் கட்டாயம் மீண்டும் ஏறித்தான் ஆக வேண்டும். காற்றையும் கடலைகளையும், கிழித்துக் கொண்டு வாகனம் முன்னே செல்கின்றது. அனலை தீவு, நெடுந்தீவு, காரைநகர், பாலைதீவு, நயினாதீவு, காரைதீவு, கச்சதீவு போன்ற தீவுக்கூட்டத்தை தூரத்தில் காண்பிக்கும் இந்த காட்சியானது மிக அழகானது.

இருபத்தைந்து நிமிடங்களின் பின் நாங்கள் கரிப்பன் தரிப்பிடத்தை அண்மித்தோம். கரிப்பன் என்பது எழுவைதீவுக்கு இறங்கும் தரிப்பிடமாகும். அதிக அலங்காரமற்ற ஆனால் அழகான இந்த தரிப்பிடத்திலிருந்து நாம் நடந்து சுமார் 100 மீற்றல் முன்னே சென்றோம். அங்கு இந்தத் தீவுக் கூட்டத்தை பாதுகாத்து வரும் எழுவைத்தீவு கடற்படை காவல் நிலையத்தை அடைந்தோம். நாம் வந்த காரணத்தைக் கேட்டு அந்த அதிகாரிகள் எமக்கு மிக அன்போடு தகவல்களைக் கூறினர்.

ஆனால் ஐயா இந்தத் தீவில் திரிந்து செல்ல மட்டும் தான் செல்ல முடியும். இங்கு பஸ் வண்டிகள் இல்லை. இங்கிருக்கும் பெரிய வாகனம் தான் லேன்ட்மாஸ்டர் உங்களுக்குத் தேவையென்றால் அதிலொன்றை பெற்றுத்தர முடியும்.

ரூபா, சதங்களை விட மனிதத் தன்மையை மதிக்கும் இந்த மனிதர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒரு ஆபரணமாகும். ஆனாலும் அவ்வாறு தேடிக்கொள்ளும் லேன்ட் மாஸ்டரின் சொந்தக் காரனுக்கு கொஞ்ச பணத்தைக் கொடுப்பது எமது கடமையாகும்.

தமது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கூறிய கடற்படை வீரர்கள் சிலர் இன்னும் சில நேரத்துக்குள் எமக்கு ஒரு லேன்ட்மாஸ்டரைப் பெற்றுத் தந்தார்கள். கடற்படை காவல் நிலையத்தில் சுவரொன்றில் தொங்க விடப்பட்டுள்ள எழுவை தீவின் வரைபடத்தை விமல் தனது கமராவினால் படம் பிடித்தது எனக்குத் தெரிந்தது. அது உண்மையில் சுவாரஷ்யமான ஒரு சந்தர்ப்பமாகும்.

இந்த தீவுக் கூட்டங்களின் ஒவ்வொரு தீவையும் இவ்வாறு படம் பிடித்து வைத்திருப்பது பெறுமதிமிக்க ஒரு விடயமாகும். இத்தீவில் வாழும் சனத்தொகையின் எண்ணிக்கை என்ன? நாம் அங்கிருந்த பிரதான அதிகாரியிடம் கேட்டோம்.

உண்மையில் இங்கிருப்பது 161 குடும்பங்கள் மாத்திரமே. ஆட்களின் எண்ணிக்கை 759 ஆகும். அவர்கள் அனைவரும் தமிழ் மக்களாவர். ஒரு பிரதான வைத்தியசாலை, தபாற் கந்தோர், கோயில் போன்றவைகள் ஏனைய தீவுகளைப் போல இங்கும் இருக்கின்றன. ஆனால் இத்தீவு சிறிது பின்தங்கிய ஒரு தீவாகும். போக்குவரத்தெல்லாம் நடையில் தான். என்று அவர் கூறினார்.

3 மீற்றர் நீளமும் 750 மீற்றர் அகலமுமான எழுவை தீவிற்கு இப்பெயர் எவ்வாறு ஏற்பட்டது என யாருக்கும் தெரியாது. ஆனால் ஆடு, மாடுகளின் லாயங்களுக்கு இங்கு குறைவில்லை.

நாம் லன்ட் மாஸ்டரில் ஏறி எழுவை தீவின் கிராம சேவகர் ஏ. ஆருரனைத் தேடிச் சென்றோம்.

இத்தீவில் சாதாரண பிரச்சினைகள், சண்டைகள் என்பன மிகக் குறைவு. மனிதர்களிடையே போட்டித் தன்மை இல்லை. எல்லோரும் ஒரே படகில் தான் போகிறார்கள். ஒரே படகில் தான் வருவார்கள். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தினால் தான் பெரிய முறையீடுகள் விசாரிக்கப்படும். அவ்வாறு கூறிய ஆருரன் தனது ஹம்பர் சைக்கிளில் ஏறி எமது லேன்ட் மாஸ்டரின் பின்னால் தீவுகளின் சுற்றுப் பயணத்தில் எம்மோடு இணைந்து கொண்டார். இப்போது எமது எழுவைத் தீவின் வழிகாட்டி அவர்தான்.

எழுவை தீவின் தபாற்கந்தோர் ஓரளவான வீடாகும். தீவில் ஓடுகளால் அமைக்கப்பட்ட இடைக்கிடை காணப்பட்ட வீடுகளிடையே இந்த சிறிய வீடு தபாற் கந்தோருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. திருமதி தனிநாயகம் திகல்மன் என்பவர் அந்த தபாற் கந்தோரின் தபாலதிபராவார். அவளுடன் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்ள தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரின் ஒத்துழைப்பு கிடைத்தது.

இம்மனிதர்களிடையே நவீன தொழிநுட்பம் இன்னுமில்லை. தொலைபேசிகளின் பாவனை இருந்தாலும் இன்னும் இவர்கள் கடிதங்கள் அனுப்புவதில் தான் விருப்பமாய் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு வெளிப்பிரதேசங்களிலிருந்து இந்த தீவுக்கு 35 - 40 வரையான கடிதங்கள் வருகின்றன. கூடுதலாக தந்திகள் தான் வருகின்றன.

இத்தீவிலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கடிதங்கள் செல்கின்றன? என்று நான் கேட்டேன். 10 கடிதங்கள் போல என்று அவள் கூறினாள்.

இருள் அகன்று போனாலும் அவர்களின் வாழ்க்கைக்கு இருள் (வெளிச்சமற்ற நேரம்) என்பது நன்கு பழக்கப்பட்டதொன்று. அதனால் ஒரு நேர அட்டவணைக்கு ஒரு ஒழுங்கில் வேலை செய்ய பழக்கப்பட வேண்டியுள்ளது. இந்தத் தீவுக்கு வெளிச்சம் கிடைப்பது ஒரேயொரு ஜெனரேட்டரினாலாகும்.

காலை 9.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரையும் மாலை 6 மணியிலிருந்து 10.30 மணியாகும் வரை இந்த ஜெனரேட்டரினால் இத்தீவில் வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நேரத்தில் பிள்ளைகள் தமது படிப்பு விடயங்கள் மற்றும் வேறு வேலைகளையும் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அதிக நேரங்களில் சந்திரன் அல்லது நட்சத்திரங்களின் ஒளியினால் தான் வேலைகளைச் செய்து கொள்ள வேண்டியேற்படும்.

அமாவாசை நாட்களில் அதையும் செய்ய முடியாது. நாம் அங்கிருந்து இன்னும் கொஞ்சம் முன்னால் செல்கையில் வயது முதிர்ந்த இரு பனை மரக்குற்றிகளைக் கொண்டு ஒரு வேலியை அமைக்க பச்சை பனை மரக்குற்றிகளை சேர்த்துக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

இந்த பனை மரக்குற்றிகளை நன்கு காயவைத்து பின்னர் இந்த வீடுகளுக்குச் சொந்தமான காணிகளுக்கு மதிலுக்குப் பதிலாக காய்ந்த பனை மரக் குற்றிகளால் வேலிகள் அமைக்கப்படுகின்றன. அது மிக எளிமையானது. எல்லோரும் மதில்களுக்குப் பதிலாக காய்ந்த பனை மரக்குற்றிகளைக் கொண்டு தான் வேலிகளைக் கட்டுகிறார்கள். அதனால் எவ்வித போட்டித் தன்மையும் இங்கு இல்லை.

வேறு தீவுகளைப் போலவே இத்தீவு வாசிகளினது ஜீவனோபாய தொழில் மீன்பிடித் தொழிலாகும். அதை விட பனங்கள்ளு உற்பத்தி செய்தல், பனங்கிழங்கு உற்பத்தி செய்தல் என்பனவற்றையும் மிக அர்ப்பணிப்போடு செய்து வருகின்றனர். எழுவை தீவின் கடற்கரை மிக அழகானது. எளிமையான தொழிநுட்ப உபகரணங்களைக் கொண்ட படகுகள் சில எனக்குத் தெரிகின்றது. நான் அந்த மணலில் கால் பதித்து முன்னே சென்றேன். கருவாடு காயவைக்கும் மீனவத் தொழில் புரியும் சோடியொன்றை நான் சந்தித்தேன். அவர்கள் தமது துயரங்களை எனது மொழிபெயர்ப்பு அதிகாரியிடம் கூறினார்கள்.

நாம் வறுமையான மக்கள். அன்றன்றைக்கு உழைத்துத்தான் சாப்பிடுகிறோம். மீன் அதிகமாகக் கிடைத்தால் அதில் கொஞ்சத்தை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி மற்றையதை எமது சாப்பாட்டுக்கு எடுப்போம். அப்படியும் இல்லாவிட்டால் எமது பிள்ளைகள் பசியில்தான் இருப்பார்கள். (ஏனைய தீவுகளைப் போல இங்கும் இந்திய ரோலர் படகுக்காரர்கள் வந்து மீன்களைப் பிடித்துச் செல்கிறார்கள்).

வறுமையும் நேர்மையும் இம்மனிதர்களிடத்தில் இருப்பதை நான் உணர்கிறேன். பெண்களைக் கற்பழித்தல், கொள்ளையிடல், களவுகள் என்பன அவர்களிடையே இல்லை. இவை உருவாகக் காரணம் சமூகமொன்று சிக்கல்களுடன் ஒரு முகப்படுத்தப்படும்போது தான் என்று நான் நினைக்கிறேன்.

நாம் லேன்ட் மாஸ்டர் மூலம் எழுவை தீவின் பெரிய பாடசாலையான எழுவை தீவு முருகவேல் பாடசாலைக்குச் சென்றோம். உலக உணவு அமைப்பினால் கிடைத்த பருப்பு போன்றவை அந்த பாடசாலைகளின் முற்றங்களில் வெய்யிலில் காயவிடப்பட்டிருந்தன. சரியாக செருப்பு சப்பாத்து கூட இல்லாமல் சிறு பிள்ளைகள் அச்சந்தர்ப்பத்தில் பகல் போசனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிறிய பலகையினாலான ஒரு பலகைக் கட்டொன்றில் உட்கார்ந்து இருந்த இந்த சின்னஞ் சிறுசுகள் எல்லோரினது முகங்களிலும் துக்கத்துடன் கூடிய போஷாக்கின்மையால் வாடுவதன் அறிகுறிகள் வரைந்திருப்பதாக நினைக்கிறேன்.

உப அதிபர் மேரி லின்டியா எனக்கு பல விடயங்களைக் கூறினார்.

படிப்பில் திறமைகளை வெளிக்காட்டும் பிள்ளைகள் எந்த இடத்திலும் இருக்கிறார்கள். இங்கிருக்கும் பிள்ளைகள் அனைவரையும் வறிய பிள்ளைகளாகவே நான் நினைக்கிறேன். இங்கு எல்லோருமாக 114 பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு வேறு தீவுகளுக்கு அல்லது யாழ்ப்பாணத்துக்குச் சென்று படிக்கக் கூடிய பலம் இல்லை. அரசாங்கமும் பாடசாலைக்குத் தேவையான வசதிகள் சிலவற்றை செய்து கொடுத்தாலும் 2 கணனிகள் கூட பெற்றுக்கொடுத்தாலும் அது மட்டும் அவர்களின் தேவையை ஈடுசெய்யக் கூடியதாக இல்லை.

அது ஆசிரியர் சொன்ன கதை. அதை விட மற்றொரு கதையை அவர்களின் அப்பாவிப் பிள்ளைகளின் தோற்றங்கள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இப்பிள்ளைகளுக்கு தேவையான பேனை, பென்சில்கள், மட்டுமல்லாது சப்பாத்து மேஸ் கூட இல்லை. ஆனாலும் அவர்கள் வட மாகாணத்தில் பலதரப்பட்ட விளையாட்டுகளில் திறமையைக் காட்டுகிறார்கள். உயரப் பாய்தல், நீளம் பாய்தல் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட சில பிள்ளைகளுடன் நான் கதைத்தேன். அக்கதையின் சுருக்கம் இதுதான்.

எங்களுக்குள் சந்திரனின் ஒளியாக மலர உங்களால் முடியும். இத்தீவிற்கு வெளியிலுள்ள உலகுக்கு எம்மை எடுத்துச் செல்ல உங்களால் முடியும். அதற்காக நீங்கள் எம்முடன் கைகோர்ப்பீர்களானால் அம்மா, அப்பா உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும். அத்தகைய ஒரு புண்ணிய இதயம் உங்களுள் வந்தால் தயவு செய்து இவ்வாறு எழுதுங்கள். அதிபர், முருகவேல் மகா வித்தியாலயம், எழுவைத் தீவு, யாழ்ப்பாணம்.

படங்கள்: விமல் கருணாதிலக

சிங்களத்தில : உபாலி சமரசிங்க

தமிழில : நிசா...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com