Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுத்த ஜனநாயகம்!

இலங்கைக்கு எதிராக போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுப் பிரேரணையை ஜெனீவாவில் முன்வைத்த அமெரிக்கா அதில் எதிர்பார்த்த வெற் றியைப் பெற முடியாது முதற் தடவையாக சர்வதேச அரங்கில் பாரிய தலைகுனி வைக் கண்டுள்ளது. உலக நாடுகளுக்கெல்லாம் தானே தலைவன் என்றும் எந்த நாட்டில் எது நடந்தாலும் அதனைக் கண்காணிப்பது மட்டுமல்லாது கட்டுப்படுத்தும் உரிமையும் தனக்குள்ளதாக மார்தட்டி வந்த அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக இருபத்து நான்கு நாடுகள் வாக்களித்திருந்தன எதிராக பதி னைந்து நாடுகள் வாக்களித்திருந்த நிலையில் எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. உண்மையில் இந்த எட்டு நாடுகளும் எதிர்காலத்தில் அமெரிக்காவின் நெருக்குதல்கள் தமக்கு ஏற்படலாம் எனக் கருதியே வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லை. இல்லையேல் நிச்சயம் அந்நாடுகள் அனைத்தும் இலங்கைக்குச் சார்பாக வாக் களித்திருக்கும்.

அத்துடன் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த இருபத்து நான்கு நாடுகளில் இந்தியா உட்பட சுமார் பதினைந்து நாடுகள் அமெரிக்காவின் எதிர்ப் பைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பாத நிலையில் தமது நிலைமையை இலங்கைக்குத் தெளிவாக எடுத்துரைத்த பின்னரேயே தமது வாக்கை பிரேரணைக்கு ஆதரவாக வழங்கி யிருந்தன. அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அவற்றில் பல நாடுகள் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள். சில வல்லரசுகளாக துடித்துக் கொண்டிருக்கும் நாடுகள்.

இந்நிலையில் அந்நாடுகளால் அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாது. எனினும் அமெரிக்காவிற்கு பிரேரணையில் எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைய முடியாதிருந்தமை பெரிய பின்னடைவே. உலக அரங்கில் மிகச் சிறிய நாடாக இருந்த போதிலும் தனது பக்கம் இத்தனை நாடுகளைக் கவர்ந்து அமெரிக்காவுக்கு எதிராகவே வாக்களிக்க வைத்த இலங்கை யைப் பாராட்ட வேண்டும்.

உண்மைக்காகக் குரல் கொடுத்து உலக அரங்கில் இலங்கைக்கு ஆதர வாகச் செயற்பட்ட நாடுகளுக்கு நன்றி கூறவேண்டும். எதிர்ப்பது அமெரி க்க வல்லரசை எனத் தெரிந்திருந்தும் எதிர்த்து வாக்களித்த நாடுகள்தான் உண்மையில் வல்லரசு நாடுகள். இந்நாடுகளின் துணிவைப் பாராட்டாம லிருக்க முடியாது.

எமது அண்டை நாடான இந்தியாவின் நிலைப்பாடு கவலையளித்தா லும், அங்கு மத்திய அரசின் ஆட்சிக்கு உள்நாட்டில் ஆட்டம் கண்டு விடும் ஒரு சூழலில் அதனைத் தவிர்ப்பதற்காக அது அமெரிக்காவை ஆதரித்து தனது இருப்புக்கு வந்த ஆபத்தைத் தவிர்த்துக் கொண்டது. இந்தியா தனது இந்த இக்கட்டான நிலை குறித்து இலங்கைக்கு மறை முகமாகப் பலவாறு தெரிவித்திருந்தது.

யுத்தம் நடைபெற்ற வடக்கு, கிழக்கு பகுதிகளில் பல்வேறு அபிவி ருத்திப் பணிகள் இந்திய அரசினாலேயே மேற்கொள்ளப்படுகிறது. அவை யாவும் வழமைபோன்றும், உறுதியளிக்கப்பட்டது போலவும் தொடரும் எனத் தெரிவிக்கப் பட்டமையிலிருந்தே இந்தியாவின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

உலக நாடுகளில் எங்காவது பயங்கரவாதம் காணப்படின் அதனைத் தனது நாட்டுப் படைகளே அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா குறியாக உள்ளது. பிரிவினையைக் கோரும் நாடுகளிலுள்ள பயங்கரவாதிகளுக்கு தனது ஆயுதங்களை விற்பனை செய்து அடுத்த பக்கம் அவர்களை அழிப்பதற்கு அதே நாட்டு அரசாங்கத்திற்கும் ஆயுதங்களை விற்பனை செய்துவிட்டு இறுதியில் தன்னைஹீரோ’வாகக் காட்ட தனது படைகளைக் கொண்டு பயங்கரவாதிகளை அழிப்பது அமெரிக்காவின் வழமையானஸ்டைல்’.

அமெரிக்காவிற்கு இது இலங்கையில் சரிப்பட்டு வரவில்லை. முதலில் விடுதலைப் புலி களையும், இலங்கையையும் பெரும் பொருட்டாகக் கொள்ளாதிருந்த அமெரிக்கா, புலிகள் முற்றாகவே அழிக்கப்பட்ட பின்னர் உலக நாடுகளில் இலங்கைக்கு எழுந்த பாராட்ட லைகளால் பொறாமை கொண்டதே உண்மை. இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி இலங்கை ஜனாதிபதி ஆர். பிரேமதாச உட்பட பல தலைவர்களைக் கொலை செய்துள்ளதுடன் உலகின் பல நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்த புலிகளை இலங்கை அரசு அழித்த மையை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது.

அழிக்கும் விடயத்தில் சர்வதேச ரீதியாக தான் மட்டுமே ஹீரோவாக இருக்க நினைக் கும் அமெரிக்கா, புலிகளின் அழிப்பின் பின்னர் இலங்கை அரசு மீது கொலை வெறியா கவே இருந்துள்ளது. இதற்கு இலங்கையில் தூதுவர்களாகச் செயற்பட்ட அமெரிக்கர்களும் பிரதான காரணம். இவர்கள் இங்கிருந்து கொண்டே எமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இவர்களது அறிக்கைகள் உலக பொலிஸ்காரன் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தைச் சினம் கொள்ள வைத்தது

தருணம் பார்த்துப் பலமுறை பாய்ந்து பார்த்தனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போன்றோர் மூல மாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி) போன்ற கட்சிகள் மூலமாகவும் அரசாங்கத்திற்குத் தம்மால் முடிந்தளவும் கஷ்டங்களைக் கொடுத்தனர். ஆனால் உள்நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை அசைக்க முடியாது என்பதைக் கண்டனர். மக்கள் அரசுடன் என்பதால் உள்நாட்டில் குழப் பத்தை ஏற்படுத்தும் முயற்சியிலிருந்து பின்வாங்கி சர்வதேசத்தில் இலங்கைக்குக் களங்க த்தை ஏற்படுத்த முனைந்தனர். அதன் விளைவே பிரேரணை.

இந்தப் பிரேரணைக்கு வலுச் சேர்ப்பதற்காகவே சனல் - 4 என்ற வீடியோ சோடிப்பும் நடைபெற்றது. வன்னி யுத்தத்திற்கு சனல் - 4 தொலைக்காட்சி இரு பாகங்களைத் தயாரி க்க முடியுமாயின் ஈராக்கில் அமெரிக்கப் படைகள் செய்த அட்டூழியங்களுக்கு நூறு பாக ங்களைத் தயாரித்திருக்கலாம். லிபியா, ஜெமன், சிரியா, மாலைதீவு போன்ற நாடுகளில் அமெரிக்காவின் பின்னணியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை வைத்து எத்த னையோ வீடியோக்களைத் தயாரித்திருக்கலாம்.

தனது நாட்டுக்கு எதிராக எவராவது செயற்பட்டால் அவர்களை இல்லாது செய்து விடு வது அமெரிக்காவின் இராஜதந்திரம். ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் அழிவுகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க அந்தக் குறிப்பிட்ட நாட்டிற்கு உரிமை இல்லை என்ப தாகவே இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனைக் கொன்றது பிழையெ னில் சதாம் உசைன், பின் லாடன், கடாபி போன்றோர் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டமையும் தவறே. அதற்கு அமெரிக்கா மீது குற்றப் பிரேரணையைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மூலமே ஐக்கிய நாடுகள் சபையின் நேர்மைத் தன்மை புலப்படும். ஐக் கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போர் பக்கச் சார்பின்றி நடக்க வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் நடக்கிறார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. இல்லையெனில் பிரபாகரனைப் பற்றிக் கவலைப்படும் அவர்கள் பின் லாட னைப் பற்றியோ அல்லது கேணல் கடாபி, ஈராக் அதிபர் சதாம் உசைன் ஆகியோரைப் பற்றியும் கவலைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதுபற்றி சிறிதும் அலட்டிக் கொள்ளவே இல்லையே. இதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் பக்கச் சார்பற்ற தன் மையா?

எது எவ்வாறிருப்பினும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணையில் என்ன புதிதாக உள்ளது. ஒன்றுமே இல்லை. எல். எல். ஆர். சி. எனப்படும் ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக் குழுவின் பரிந்துரை அறிக்கையை அமுல்படுத்துமாறு கோரிக்கை முன்வைக் கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவில் வைத்து எமக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனை அமுல்படுத்துவதற்காகவே அரசு தயாரித்தது. அதனை நிச்சயம் அமுல்படுத்தும்.

ஜெனீவாவில் இலங்கை அரசிற்கு பெரும் தண்டனை கிடைக்கும், ஜனாதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் என்றெல்லாம் கனவு கண்ட வர்களுக்கு முடிவு பாரிய ஏமாற்றத்தையே தந்திருக்கும். குறிப்பாக ஐ. தே. க, தமிழ்க் கூட்டமைப்பு, ஜே. வி. பி. போன்ற கட்சிகளும், புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்களது அமைப்புக்களும் தமது முக ங்களை எங்கே மறைக்கப் போகின்றனவோ தெரியவில்லை. உள்நாட் டில் கடந்த ஒரு மாத காலமாக இவர்கள் நடத்திய கூத்துக்களும், விட்ட அறிக்கைகளும் கொஞ்சமா? இவற்றை வெளியிட்டு தமக்கு பிரசாரத்தை தேடிய ஊடகங்கள் இனி எப்படி மக்கள் முன்பாக தமது நம்பிக்கையை வெளிக்காட்டப் போகின்றன?

தமது தாய் நாட்டுக்கு உலக அரங்கில் திட்டமிட்டு சதிசெய்து பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்திய செயலுக்காக நாட்டில் மக்கள் பலர் கொதித் தெழுந்து நடத்திய ஆர்ப்பாட்டங்களும், கண்டனப் பேரணிகளும் வீண் போகவில்லை. அவர்களது தாய் மண் பற்றுக்கு நாம் தலைவணங்க வேண்டும். தாய் நாட்டுக்கு ஒரு அவமானம் என்றதும் தமது தாய்க்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிச் செயற்பட்டவர்களை மறக்க முடியாது. அதேவேளை துரோகம் செய்தவர்களை மன்னிக்கவும் கூடாது.

கற்றறிந்த பாடங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தி அதன் மூலமாக கடந்த முப்பது வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அதன் மூலமாக எமது நாட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் குள்ள நரிகளின் ஊளையிடும் சத்தத்திற்கு முடிவு காணலாம். யுத்தப் பாதி ப்புக்குள்ளான தமிழ் மக்களும் அதனையே விரும்புகிறார்கள். அம்மக்களின் மனங்க ளைக் குழப்ப முயலும் தீயசக்திகளுக்கு இடமளிக்காது செயற்பட வேண்டியது அரசாங் கத்தின் பொறுப்பு, கடமையும் ஆகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com