Contact us at: sooddram@gmail.com

 

ஸ்ரீலங்கா

படங்கள் சொல்லாத கதைகள்

(என்.சத்தியமூர்த்தி)

தற்போதுள்ள சூழ்நிலைகளின் கீழ், மே 2009ல் வடபகுதி யுத்த களத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனின் கொல்லப் படுவதற்கு முன்பும் கொன்ற பின்பும் உள்ள தோற்றங்களைக் காண்பித்து இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் பற்றி ஸ்ரீலங்கா அரசாங்கம், பொய்கள்,பாதி உண்மைகள் மற்றும் ஊகங்கள் என்று கூறி நிச்சயமாக அவற்றை நிராகரித்து விடும் என்பதை மட்டும் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இவை அனைத்திலும் பங்காளியாக இருந்த இந்தியா எச்சரிக்கையாக நடந்து வருகிறது. அந்தப் படங்களின் உண்மைத் தன்மை எப்படியானது என்று அதை வைத்து புதுதில்லியால் நம்பமுடியவில்லை என்று  ெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்திருக்கிறார்.

பிரசுரமாகியுள்ள படங்கள்ஸ்ரீலங்காவின் கொலைக்களத்தில் யுத்தவலயம் அல்லாத பகுதிஎன்கிற தலைப்பில் வெளிவர இருக்கும் ஆவணப்படம் ஒன்றின் ஒரு பகுதி, இந்தப்படம் ஈழப் போர் நான்கின் பொறுப்புக்கூறும் விடயங்கள் பற்றி ஐநா மனித உரிமைச் சபையில் (யு.என்.எச்.ஆர்.சி) கலந்துரையாடவுள்ள நேரத்துடன் பொருத்தப்படத் தக்கதாக ஜெனிவாவில் காண்பிக்கப்பட உள்ளது. இந்த கலந்துரையாடல் கடந்த மார்ச்சில் அமெரிக்காவின் முயற்சியால் ஐநா மனித உரிமைச் சபையில(யு.என்.எச்.ஆர்.சி) கொண்டுவரப்பட்டு அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பிரேரணையின் ஒரு பகுதியாகும். இந்த புகைப்பட வெளியீட்டு முயற்சியானது, இந்த வருடமும் முன்னைய பிரேரணையை தொடர்ந்து நடைமுறைப் படுத்துவதற்காக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக புதுதில்லியின் கரங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு முயற்சி.

இந்த ஆவணப்படம் இந்தியாவின் செல்வாக்கை பெறுவதை நோக்கமாக கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பி.பி.சி. சனல் - 4 ஆவணப்படத்தின் இயக்குநரான கலும் மக்கரே இந்தப்படம் ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில்(யு.என.எச்.ஆர்.சி) கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை பற்றி இந்தியா எடுக்கப்போகும் அடுத்த கட்ட நகர்வை பரீட்சிப்பதாக இருக்கும்என்று தெரிவித்திருப்பதிலிருந்து இது தெளிவாகியுள்ளது. இயக்குநர் சொன்னதாக ஊடகங்கள் தெரிவித்திருப்பது இந்த புதிய சான்றுகள் நிச்சயமாக ஸ்ரீலங்கா மீதான பிரேரணையையும் மற்றம் பொறுப்புக்கூறலையும் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது மட்டுமன்றி அது வலுவான வார்த்தைகளால் உறுதிப்படுத்தப்படுவதுடன், மற்றும் ஸ்ரீலங்கா மீதான தண்டனை விலக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எடுக்கப்பட வேண்டிய சர்வதேச நடவடிக்கைகளை பற்றிய திறமையான திட்டம் பற்றியும் கோடிட்டு காட்ட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின்மீது அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்பதையும் குறிக்கோளாக கொண்டுள்ளது

வேறு ஒன்றும் இல்லையென்றால் இத்தகைய தோரணை எழுப்பும் கேள்வி என்னவென்றால், இந்த படங்கள் அல்லது அந்த ஆவணப்படம் முழுவதுமே, அதிலிருந்து கிளம்பும் தாக்கங்கள் வழியாக உள்நாட்டு கொள்கைகளில் குறிப்பாக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு தொடர்பான கொள்கைளினால் ஏற்படும் கவலைகள் காரணமாக முக்கியமான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றைக் கடைப்பிடிக்கும்படி புதுதில்லியை நிர்ப்பந்தப் படுத்துவதை இலக்காக கொண்டிருந்தனவா என்பதுதான். இதிலிருந்து எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக,மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் என்பன செயற்படலாமென எதிர்பார்க்கப் பட்ட விதத்திலேயே உடனடியாக செயற்பட ஆரம்பித்தன,ஏற்கனவே தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்களில் திட்டமிட்டிருந்தபடியும் மற்றும் சாத்தியமானபடி சமூகத்தின் ஒரு பகுதியினரினதும் கோரிக்கையின்படியும்  கொள்கை வகுப்பாளர்களினால் மேற்கொள்ள விடப்பட்டிருந்த முடிவுகளை தங்கள் விருப்பத்திற்கமைய எடுக்கும்படி புதுதில்லியை  இவர்கள் வற்புறுத்தலானார்கள்.

கூடியளவு சர்ச்சைக்குரியவை

பி;பிசி யின் சனல் - 4 ஒளிபரப்பிய படமானது ஒரு வருடாந்த தொடராக மாறியுள்ள ஒரு தொடர்கதை போலத் தோற்றமளிக்கிறது, கடந்த சில வருடங்களாக அதன் வெளியீடுகள் யாவும் ஐநா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் இடம்பெறும் நேரம்பார்த்து வெளியிடப்பட்டு, ஸ்ரீலங்கா மீது கடும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு தூண்டுதல் செய்வது போலவே உள்ளன. அதன் தயாரிப்பாளர்கள் அந்த ஆவணப்படம் இந்தியாவிலும் காண்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்கள், அநேகமாக அதன் முந்தைய பகுதிகளை, உள்ளுர் தொலைக்காட்சி சேவைகள் ஊடாக காண்பித்ததை போல இதையும் காண்பிக்கலாம். குறிப்பாக அதன் தமிழ் பதிப்பு ஒன்றை மேற்கொள்ள கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன, அவை  ாநிலத்தில் உள்ள தொலைக்காட்சி வலையமைப்புகளில், உத்வேகம் ஊட்டக்கூடிய பேச்சு - நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து திரையிட்டுக் காட்டப்பட்டன.

எனினும் இந்தப் படங்கள் முன்பு காட்டப்பட்டவைகள் போலவே கூடியளவு சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளன. முந்தைய சந்தர்ப்பங்களில் சனல் - 4, தமிழர்களின் இறப்பை அதிகளவு எண்ணிக்கையாக காண்பித்தது, தனது குரலை நியாயப் படுத்துவதற்காக ஐநா ஆணைக்குழுவின் அறிக்கைகளையும் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களையும் ஆதாரமாக காண்பித்தது. ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது ஆரம்ப இலக்கு மற்றும் அறிவிப்பான பூச்சிய இழப்பு என்பதிலேயே பிடியாக இருந்து அந்த எண்ணிக்கையை நிராகரித்து வந்தது,ஆனால் ஆரம்பத்தில் ஐநாவாலேயே தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 7.000 பொதுமக்கள் மரணம் என்கிற எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட நெருக்கமான ஒரு எண்ணிக்கையை தனிப்பட்டவர்களின் இழப்பாக திருத்தியமைத்தது.

இந்த புதிய படம் காண்பிக்கப் பட்டதை தொடர்ந்து பல விடயங்கள் அறியப்பட வேண்டி காத்திருக்கின்றன, ஆனால் ஊடக விளம்பரத்தில் - ஒருவர் பாலச்சந்திரனின் முன்னைய படம்; மற்றும் துப்பாக்கி குண்டுகள் துளைத்து இறந்து கிடக்கும் பின்னைய படம் ஆகிய நிலையான படங்களை வைத்தே தனது செய்தி அறிக்கையை விபரிக்க முடியும், இவை சொல்வதற்கு ஒரு வித்தியாசமான கதையை கொண்டுள்ளது அல்லது அவை எதையோ சொல்லாமல் விட்டுள்ளது. முந்தைய பதிப்பில் உள்ளது போலவே, அந்த ஆரோக்கியமான இளம் பையன் ஒரு துப்பாக்கி இலக்கு வைக்கக்கூடிய வெகு சமீப தூரத்தில் இருந்தே ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளால் சுடப்பட்டிருப்பதாக இதுவும் காண்பிக்கிறது.

இந்தப் படத்தை ஆய்வு செய்த தடவியல்; பகுப்பாய்வாளர்கள் அதை உறுதி செய்துள்ளார்கள், ஆனால் அது ஆயுதப்படைகளின் கொடிய கைவேலை என்பதை உறுதிப்படுத்த சுயேச்சையான உறுதிப்பாடு இன்னமும் தேவையாக உள்ளது என முடிவு செய்துள்ளார்கள். எல்.ரீ.ரீ.ஈ தலைவர் அல்லது அவரது நெரங்கிய சகாக்கள்,இந்தச் சிறு பையன் எதிரியின் கைகளில் அகப்படுவதை விரும்பாமலிருந்திருக்கலாம், அவர்களது கொடூரம் நன்கு பேசப்படுகிறது, இந்த வகையான முடிவு எதுவும் மேற்கொள்ளப்படுவதற்கு முன் சுயாதீன சாட்சிகள் மூலம் அவை சாத்தியமற்றவை என நிரூபிக்கப்பட வேண்டும்.

சமீபத்தைய படம்கூட  ்ரீலங்கா ஆயுதப்படையினர்தான் கொலையாளிகள், மற்றும் அந்தச் சிறுவனை ஒரு பதுங்கு குழியினுள் வைத்து சுட்டு கொன்றுள்ளனர், என்று பார்வையாளரின் முன் அனுமானத்தை தூண்டுகிறது அல்லது முன்கூட்டியே ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அந்தப் பதுங்கு குழி இராணுவத்தினுடையது மற்றும் புலிகளுடையது அல்ல என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும். பதிலளிக்க வேண்டிய மற்றொரு கேள்வி அந்தப் படத்தில் காண்பிக்கப் பட்டிருப்பதைப்போல அந்தப் பிள்ளையால் எப்படி அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்க முடிகிறது (செய்தி அறிக்கையி;ல் நிபுணர்கள் தெரிவித்திருக்கும் அனுமானங்களை நம்புவதாக இருந்தால், அவன் ஒரு போர் வீரனின் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டிருந்தால் எப்படி அவ்வாறு அமைதியாக இருக்க முடியும்), மற்றும் ஒரு கையில் ஒரு பொட்டலத்தை வைத்துக்கொண்டு மறு கையால் அதை சிறுகச் சிறுக கொரித்து தின்பதை காண முடிகிறது, ஒன்றில் அவரைச் சுற்றியுள்ள எல்லாம் நல்லபடியாக இருந்திருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் அங்கிருக்க வேண்டிய அதிர்ச்சி மற்றும் அச்சம் என்பன இல்லாதிருந்திருக்க வேண்டும்.

ஆகச் சிறந்த முறையில் தடயவியல் அறிக்கைகள்; இறந்த பையனின் முந்தைய படம் மற்றும் அவன் இரத்தமும் தசையுமாக உயிரோடு காட்சியளிக்கும் புதிய படங்கள் ஆகியவற்றின் நம்பகத் தன்மையையும்  மற்றும் அவை ஒரே ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டு தொடரின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டனவா  என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் முந்தைய படங்களில் காணும், பாலச்சந்திரனின் உடலுடன் பரவிக் கிடக்கும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் உடல்களை வைத்து  ஆயுதப் படையினர் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களைக் கொன்றதற்கு இந்தப் பிள்ளை சாட்சியாக இருந்திருக்கலாம் என்ற தடயவியல் நிபுணர்களின் ஊகங்களை அடிப்படையாக கொண்டு எழுந்துள்ள கோரிக்கைகளுக்கும் வித்தியாசமான ஒரு வகை அங்கீகாரம் அவசியமாகிறது.

எந்த அளவுக்கு தடயவியல் நிபுணர்கள் விரிவாக மேற்கோள் காட்டி ஊகங்களை  ெரிவித்தாலும் அவை விஞ்ஞானபூர்வமான தரவுகளுக்கு ஆதாரமாக இல்லை, உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் அந்த அறிக்கையினை அடிப்படையாக வைத்து தங்கள் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற ஆதாரத்தை அந்த அறிக்கை உருவாக்கவில்லை. அந்த படத்தின் இயக்குநர் ஏற்கனவே குறிப்பிட்டது போல, அந்தப் படத்தின் நோக்கம்,புதுதில்லியின் கரங்களை வாக்களிக்க தூண்டுவதும்; மற்றும் ஒரு குறிப்பிட்ட வழியில் நடப்பதை வற்புறுத்துவதும் ஆகும், இந்த வகையான முயற்சிகளையிட்டு புதுதில்லி முன்னைக் காட்டிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். முடிவுகள் உண்மைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்க வேண்டுமே தவிர படங்களை அல்ல.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com