Contact us at: sooddram@gmail.com

 

உங்களை விட்டால் வெனிசுலாவிற்கு நல்ல தலைவர் கிடைக்கவே மாட்டார்

இந்த உலகம் எத்தனையோ புரட்சியாளர்களை சந்தித்திருக்கிறது. கார்ல் மார்க்ஸ் தொடங்கி லெனின் மாவோ என்று மிகப்பெரிய புரட்சியாளர்கள். அந்த வரிசையில் புரட்சி என்பதற்கு மறு அடையாளமாகவே மாறியிருந்த ஒருவரும் இருந்தார். அவர்தான் கியூபா புரட்சியின் போது பிடல் கஸ்ட்ரோவுக்குத் துணையாக நின்ற சேகுவேரா. சேகுவேராவை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறதோ அதேபோலத்தான் அவருடைய உயிர்தோழன், கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி, கியூபா நாட்டை மீட்டெடுத்த மாவீரன் பிடல் கஸ்ட்ரோவையும் பார்க்கிறது. இந்த இருவரை அடுத்து சமகாலத்தில் மாபெரும் புரட்சியாளனாக இந்த உலகம் பார்த்தது வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவேஸைதான்.

புரட்சியாளன் என்றால் துப்பாக்கி ஏந்த வேண்டுமே?
ஆனால் இவர் துப்பாக்கி ஏந்தியதில்லை..!
இரத்தம் சிந்த வேண்டுமே?
இவர் இரத்தமும் சிந்தவில்லை...!
போராளிகள் சாக வேண்டுமே?
இவர் அப்படிச் சாகவும் விடவில்லை...!

பிறகு எப்படி இவரை புரட்சியாளன் என்பது என்ற கேள்வி உள்ளே எழும். ஆம்... 21ஆம் நூற்றாண்டுக்கு புரட்சியைப் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்திய வித்தகன் சாவேஸ்.

1954ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி  ாடசாலை ஆசிரியர் பெற்றோர்களுக்கு பிறந்த சாவேஸ் ஆரம்பத்தில் இராணுவ படிப்பை முடித்து இராணுவத்தில் துணை லெப்டினென்ட் ஆக பணிபுரிய ஆரம்பிக்கிறார். அதன் பின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கும் போது பல இளைஞர்களை ஒன்றுதிரட்டி இரகசியமாக புரட்சிப் படை ஒன்றை ஆரம்பித்தார். புரட்சிப் படையை ஆரம்பித்தப் பின் அரசை எதிர்க்க ஆரம்பிக்கிறார் சாவேஸ். மிகக் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்த அந்தப் புரட்சிப்படை, ஒரு கட்டத்தில் தாங்களால் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்று எண்ண, நாம் தோற்கப் போகிறோம் என்று நினைத்து அவர்கள் சரணடைகிறார்கள். பின்னர் அவர்கள் சிறைக்குச் செல்கிறார்கள்.

லத்தீன் அமெரிக்க  ிடுதலைப்போராளி சைமன் பொலிவரின் பெயரிலான பொலிவரிய புரட்சியை அவர் அறிமுகப்படுத்திய போது மேற்கை அச்சம் கவ்வியது. மேற்கத்திய ஊடகங்கள் வெனிசுலாவின் சவால்களை அதிகரித்தன. 1992ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் கார்லோஸ் அண்ட்ரியாஸ் பெரேஸின் அரசை தோற்கடிக்க திடீர் இராணுவ சதிப்புரட்சி ஒன்றில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சாவேஸுக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த சிறைவாசம்தான் சாவேஸ் மீது வெனிசுலா மக்களுக்கு மதிப்பு அதிகரித்த இடம். இப்படியாக மக்கள் ஆதரவு சாவேஸுக்குப் பெருக ஆரம்பித்தது. சிறைவாசம் முடித்து வெளியே வருகிறார். வந்தவுடன் ஐந்தாவது குடியரசு என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்கிறார்.1998ஆம் ஆண்டு வெனிசுலாவில் தேர்தல் நடக்கிறது சாவேஸ் தேர்தலில் போட்டியிடுகிறார். அத்தேர்தலில் அமோக வெற்றியீட்டி அதிபராகிறார்.

அனைத்து மக்களுக்குமான சமூக திட்டங்கள், கல்வி, சுகாதார சேவைகள் என்பன சாவேஸ் மீது பொதுமக்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், வேலையில்லா பிரச்சினை, வறுமை, பொருட்களின் விலைவாசி உயர்வு என்பன வெனிசுலாவில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அந்நாடு போதிய எண்ணெய் வளம் உள்ள நாடாக இருந்த போதும் இச்சிக்கல்கள் தொடர்வது சாவேஸின் நிர்வாகம் மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக 2002ஆம் ஆண்டு அவருக்கு எதிராக அவரது ஆட்சியிலிருந்தே திடீர் இராணுவ சதிப்புரட்சி ஒன்று இடம்பெற்றது. ஆனால் அதை சாவேஸ் முறியடுத்து இரு நாளில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொண்டார். ஆனாலும் லத்தின் அமெரிக்க நாடொன்றின் மிகவும் பிரபலம் வாய்ந்த மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய அதிபராக விளங்கியவர் என்றால் அது ஹூகோ சாவேஸ் மட்டும்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் இன்றுவரை வெனிசுலாவில் வெற்றிபெற்றது சாவேஸ்தான்.

2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் நான்காவது முறையாக வெற்றி பெற்று அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சியை பொறுப்பேற்றிருந்தார். இப்படியாக தனது இரும்புக் கரம்கொண்டு வெனிசுலா நாட்டு மக்களை பாதுகாத்துவந்த சாவஸுக்கு புற்றுநோய் தாக்கியது. 2011ஆம் ஆண்டுதான்  அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதன்முறையாக வெளிப்படையாக அறிவித்தது வெனிசுலா அரசு.

மக்கள் ஆழ்ந்த துயரத்தில் வீதிக்கு வந்து அழ ஆரம்பித்தனர். பிறகு கியூபாவிற்குச் சென்று புற்றுநோய்க்கான மருத்துவத்தை மேற்கொண்டார். இந்நிலையில்தான் கடந்த 5ஆம் திகதி இந்தப் புரட்சி நாயகனின் உயிர் பிரிந்தது.

2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தது. முதல் நாள் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தனது உரையை நிகழ்த்திமுடித்திருந்தார். அடுத்த நாள் வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவேஸ் உரையாற்றவருகிறார் வந்த வேகத்திலேயே அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை சாத்தான் என்று நேரடியாகவே வர்ணித்தார். இந்தச் சொல்லாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து இந்தச் செய்தி உலகம் முழுவதும் பரவி பரப்பை ஏற்படுத்தியது. சாவேஸ் உலகம் முழுவதும் பிரபலமடைந்ததது காரணம் அவருடைய சீர்திருத்தத் திட்டங்கள் மட்டுமல்ல. கியூபா போன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த நாடும் வெனிசுலாதான்.

முதன்முதலாக சாவேஸ் பதவிக்கு வந்தபோது அமெரிக்கா அவரை செங்கம்பளம் விரித்து வரவேற்றது. வெள்ளை மாளிகையில் விருந்து வைத்தது. உலக வங்கி, உலக வர்த்தக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால், அனைத்து நிலைகளிலும் தன் நாடு, தன் மக்கள் என்றே சாவேஸ் பேசியது அமெரிக்காவுக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. 2002, ஏப்ரல் 11ஆம் திகதி வெனிசுலாவின் 'பாதுகாப்புப் போர்திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்த முயன்றவர்களை, தனது இராணுவத்தைக் கொண்டு சாவேஸ் முறியடித்தார். அப்போதுதான், வெனிசுலா உலகத்தின் கண்ணில் புரட்சிகர நாடாக தெரிய ஆரம்பித்தது.

கியூப அதிபர் நனவிலிலும் கனவிலும்கூட அமெரிக்காவை எதித்தவர். அதேபோல சாவேஸும் ஒரு தீவிர இடதுசாரி தலைவர் என்பதால் இந்நாளின் முதலாளித்துவத்தையும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையையும் முற்றுமுழுதாக எதித்தார். அதன் பிரதிபலிப்புத்தான் ஜோர்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று அவர் வர்ணித்தது.

அதை விட அவர் செய்த இன்னொரு விஷயம் உலகத்திற்கு ஆச்சரியமாய் இருந்தது. இராணுவத்தினர் அனைவரையும் மக்கள் பணிக்கு அனுப்பியுள்ளார் சாவேஸ். இராணுவத்தினர் கிராமம் கிராமமாக சென்று சாலைகள் போடுவது, மருத்துவ உதவிகள் செய்வது போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார். இது இப்படியிருக்க விமானப்படை, கப்பற்படை போன்றவைகளை கூட மக்களை ஏற்றி செல்ல பயன்படுத்தியுள்ளார். கோழிக்குஞ்சுகள், தட்டு முட்டு சாமான்கள், வீட்டு பொருட்கள் அனைத்தும் ஏற்றி சென்றுள்ளனர். அதைவிட ஆச்சரியம் என்னவெனில் இராணுவ வைத்தியசாலைகள் கூடபொது மக்களுக்கு திறந்துவைத்திருக்கிறார் சாவேஸ். "மீனுக்கு தண்ணீர ; இராணுவத்துக்கு மக்கள்" என்ற மாவோ வழியை பின்பற்றியவர்தான் சாவேஸ்.

ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் ஏராள சாதனை செய்துள்ளார் சாவேஸ்! அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்ற பின், செல்வந்தவர்களிடம் அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலங்களை அரசுடமையாக்கி ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்தார். அங்குதான் ஆரம்பித்தது பிரச்சினை. அன்றுதான் ஹூகோ சாவேஸுக்கு எதிராக கழகம் வெடிக்க ஆரம்பித்தது. அதன் எதிரொலியாக சாவேஸை எதிர்த்து அவருடைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் தேர்தலில் போட்டியிட்டனர். அவரை எதிரித்து தேர்தலில் நின்றோர் ஆட்சியை பிடித்து விட்டனர்.

ஆனால் ஒரே நாள்தான். மக்கள் எழுச்சியில் அவர்கள் ஆட்சியை சாவேஸ் இடம் ஒப்படைத்து விட்டு விலகி விட்டனர்! சாவேஸின் முக்கிய பலம் பணபலம் அல்ல. இராணுவ பலம் அல்ல. மக்கள் பலம்தான். அதனால்தான் அவரை ஆட்சிபீடத்தில் அமர்த்திவிட்டு அழகுபார்த்தனர் வெனிசுலா மக்கள். சாவேஸுக்கு எதிரான கிளர்ச்சி மற்றுமல்லாது ஆட்சிக் கவிழ்ப்புக்கும் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ காரணம் என்று அவர்கள் மீது பழிவிழுந்தது.

அமெரிக்கா தேவையில்லாமல் மூக்கை நுழைத்து வாங்கிக்கட்டிக்கொண்ட இடம் வியட்நாம். அதன்பிறகு அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் பிடல் கஸ்ட்ரோ. பிடல் கஸ்ட்ரோவை நினைத்துதான் அமெரிக்கா பெரிதும் கவலைப்பட்டது. அதன் பின் சாவேஸும் பெரும் தலையிடியாக அமைந்தார் அமெரிக்காவுக்கு.

இப்படியாக முதலாளித்துவ நாடுகளை எதிர்த்துக்கொண்டும் நாட்டு மக்களைக் காத்துக்கொண்டும் இருந்த சாவேஸ் கடந்த ஓர் ஆண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கியூபாவில்தான் அவருக்கு சிகிச்சை தரப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபடி வெனிசுலாவில் உள்ள தனது அமைச்சரவை சகாக்களுக்கு வீடியோ தொழில்நுட்ப தொலைபேசியில் பேசிய போதிலும் அவர் சோஷலிசம், பொருளாதாரம் ஆகிய இரண்டு வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

'சோஷலிசப் பாதையில் இருந்து மாற மாட்டோம். அதேசமயம், பொருளாதாரப் புரட்சியை வெனிசுலாவில் உருவாக்குவோம். தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான புதிய தொழில்களை தொடங்க வேண்டும். அரசியல் புரட்சியை நடத்தி விட்டோம். பொருளாதாரப் புரட்சி செய்யாமல் அரசியல் புரட்சி மட்டும் செய்வதால் என்ன பலன்?'' என்று கேட்ட சாவேஸ், ''அந்தப் பொருளாதாரப் புரட்சியை கிராமப்புறத்தில் இருந்து தொடங்க வேண்டும்'' என்று தனது அமைச்சரவைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இப்படியானதொரு ஆட்சியாளனையும்... தீரம்மிக்க ஒரு நாயகனையும் இந்த உலகம் இழந்து நிற்கின்றது. ஒரு முறை சாவேஸைக் கட்டிப்பித்த பிடல் கஸ்ட்ரோ இப்படிச் சொன்னாராம்.

உங்களை விட்டால் வெனிசுலாவுக்கு வேறு நல்ல தலைவர் கிடைக்கவே மாட்டார்".

- எஸ்.ஜே.பிரசாத் -

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com