Contact us at: sooddram@gmail.com

 

நாம் கூடிப் பேசி எமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேர வைக் கூட்டத் தொடரில் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள் அமெரிக்காவின் தலைமைத்து வத்தின் கீழ் கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பினரும் இங்கிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் தேசப் பற்றற்ற சில குழுக்களும் ஆதரவு அளித்துக்கொண்டி ருக்கும் இவ்வேளையில் வடக்கில் உள்ள வவுனியா, கிளி நொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சமீபத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இலங்கை அரசாங்கத்தை ஆதரித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நம் நாட்டில் உள்ள தேசத்துரோக சக்திகளுக்கு எதிராக வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள்.

30 ஆண்டுகால யுத்தத்தின் போது துன்பத்தில் மூழ்கி இருந்த வட பகுதியைச் சேர்ந்த இந்த அப்பாவி மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கு ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீங்கிழைப்பதற்கு சில அரசியல்வாதிகளும், சர்வதேச அமைப்புக்களும் எடுத்து வரும் முயற்சிகளை கண்டிக்கும் முகமாக இந்த ஆர்ப் பாட்டம் நடத்தப்படடது.

யுத்தத்தின் போது வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் கொழும்பு மாநகரிலும் செளகரியமாக வாழ்ந்து கொண்டி ருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வெளி நாடுகளில் ஆடம்பர வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் சில குழுக்களுக்கும் இலங் கையில் கஷ்டப்படும் தமிழ் மக்கள் பற்றி பேசுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை என்று இந்த ஆர்ப்பாட்ட த்தின் போது பொதுமக்கள் தங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் நிரந்தர சமாதானமும் அமைதியும் நிலை கொண்டிருக்கும் இவ்வேளையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எமது மக்கள் மீது உண்மையான அக்கறை இருப்பின், அவர்கள் அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்கு முன் வருவது அவசியமாகும்.

இத்தகைய நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமித்து அதற்கான சிறந்த தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதற்குப் பதில் பாராளுமன்றத் தெரிவுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்து வதற்கான தங்கள் நிலைப்பாட்டை அங்கு அறிவித்து, அதுகுறித்து ஏனைய அங்கத்தவர்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு கலந்துரையாட லுக்கு வழி வகுக்க வேண்டும்.

இவ்விதம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பலதரப் பட்ட கருத்துக்களை பல அரசியல் குழுக்களும் முன்வைக்கும் போது, பேச்சுவார்த்தைகளின் மூலம் நிரந்தரத் தீர்வை இனப்பிரச்சினைக்கு ஏற்படுத்துவதற்கான எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய யோசனைகளும் அனைவரின் பரிசீலனைக்கும் வரக்கூடிய சாதகமான சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தாங்கள் கலந்து கொண்டாலும் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்ற பிடிவாதப் போக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக கைவிட்டு இக்கூட்டத் தொடரில் கலந்துகொள்வது அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே நம் நாட்டு மக்கள் குறிப்பாக வட பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் இருந்து வருகின்றார்கள். அவர்களின் இந்த அபிலாஷை நிறைவேற வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மனப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்படுவது அவசியமாகும்.

வெளிநாட்டு அரசாங்கங்களோ வெளிநாடுகளில் உள்ள அரச சார்பற்ற அமைப்புக்களோ இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதை பகிரங்கமாக ஆதரிப்பதைப் போன்று நடித்தாலும் அவை உண்மையிலேயே இலங் கையில் தொடர்ந்தும் இனப்பிரச்சினை சம்பந்தமான கருத்து மோதல்கள் இருப்பதையே மனதார விரும்பு கின்றன என்பதை கடந்த கால நிகழ்வுகள் எமக்கு நிச்சயம் ஞாபகப்படுத்துவதாக இருக்கின்றது.

எங்கள் நாட்டுப் பிரச்சினையை நம்நாட்டு மக்களே கருத்து மோதல்கள் இருந்தாலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிப் பேசி நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். எங்கள் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு எங்களுக்கு வெளிநாட்டவர்களின் அனுசரணையோ உதவியோ அவசியம் இல்லை. அவ்விதம் வெளிநாட்டு அரசாங்கங்கள் இப்பிரச்சினைக்கு அனுசரணையாளர்களாக செயற்பட்டாலும் அது நிச்சயம் தீராத பிரச்சினையாக தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதற்கு கடந்தகால நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

உள்நாட்டில் ஏற்படுத்தப்படும் தீர்வே மக்களின் உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு நிரந்தர தீர்வாக அமையும். அதைவிடுத்து எங்கள் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவதற்கு வெளிநாடுகளின் உதவியை எதிர் பார்ப்பது நிச்சயம் தோல்வியிலேயே முடிவடையும் என் பதை நம்நாட்டு மக்கள் இன்று தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியாவின் உதவி யைப் பெற்றால் என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய நிரந்தர தீர்வு ஏற்படும் என்று எமது மக்கள் அன்று நம்பி இருந்தார்கள். இந்திரா காந்தி உதவி செய்வார், ராஜீவ் காந்தி உதவி செய்வார் என்றெல்லாம் நம்பி இருந்த எங்களுக்கு இறுதியில் கிடைத்த பலன் என்ன? இறுதியில் யுத்தமும் மனித உயிர் அழிவும் சொத்துக்களின் அழிவும் சொந்த மண்ணில் அகதிகளாக மாறும் அனர்த்தமும் மட்டுமே பிரதிபலனாகக் கிடைத்தது.

கடந்த கால வேதனைக்குரிய நிகழ்வுகளை மனதில் கொண்டு எமது பிரச்சினையை நாம் அனைவரும் ஒன்றுகூடி பேசித் தீர்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை புரிந்துகொண்டு யதார்த்தபூர்வமாக நடப்பது அவசியமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com