Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்நாட்டில் வன்முறைக்கு தூபமிட்ட கலைஞரும் ஜெயலலிதாவும் மூக்குடைபட்டுள்ளார்கள்

இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் போன்ற சாத்வீக போராட் டங்களை மேற்கொண்டு சர்வதேச ரீதியில் அழுத்தங்களை கொண்டு வருவோம் என்று கூறிய தமிழ்நாட்டின் இரு அரசி யல் தலைவர்களான கலைஞர் ஐயாவும், ஜெயலலிதா அம்மாவும் தங்களுடைய இந்த சாத்வீக போராட்டம் கைநழுவிப் போய் ஒரு பயங்கரவாத செயற்பாடாக மாறியிருப்பதைப் பார்த்து செய்வதறி யாது இன்று நிலைதடுமாறிப் போயிருப்பதாக தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கப்பெறும் நம்பகரமான தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இலங்கையில் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச்சாட்டுகள் இடம்பெ ற்றன என்று இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களை கொண் டுவர முயற்சி செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இப்போது மூக் குடைபட்டு அவமானச் சின்னங்களாக மாறியுள்ளார்கள்.

இலங்கை மீது சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டுமென்று கலைஞர் கருணாநிதியும், அவருடைய திராவிட முன்னேற்றக்கழக மும், இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொண்டு வந்து இதற்கமைய அமெரிக்கா முன்மொழியும் பிரேரணையை இந் திய அரசு திருத்தியமைக்காவிட்டால் நாம் அரசாங்கக் கட்சியில் இரு ந்து விலகிவிடுவோம் என்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந் தன.

கலைஞர் ஐயாவின் திருகுதாளங்கள் குறித்து நன்கு தெரிந்து கொண்டி ருக்கும் சோனியாகாந்தி அம்மையாரும், பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு செவிமடுக்காமல் ஜெனீவா வில் அமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தில் திருத்தம் செய்ய மறு ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்தியாவும் ஆதரிக்கும், அமெரிக்காவின் பிரேரணையில் இல ங்கை மீது சர்வதேச விசாரணையொன்று நடத்த வேண்டுமென்ற பதம் இடம்பெறவில்லை. இது கலைஞர் ஐயாவுக்கு இந்திய மத்திய அரசாங்கம் கொடுத்த பதிலடியாக அமைந்துள்ளது.

அடுத்தாண்டில் இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பத னால் தற்போதைய காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல்கள் இருக்குமென்பதை புரிந்து கொண்ட கலை ஞர் ஐயா, அதனை வெளிப்படையாக அறிவிக்காமல் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணையை ஒரு காரணமாக வைத்து மத் திய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட குள் ளத்தனமான செயல் இதுவென்று இந்திய காங்கிரஸ் கட்சியினர் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள்.

மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் கலைஞர் ஐயாவும், ஜெயல லிதா அம்மாவும் மத வழிபாட்டுக்காக செல்லும் அப்பாவி இலங்கை பிரஜைகளை குறிப்பாக போதி மரத்து மாதவனின் நற்போதனை களை கேட்டு துறவறம் பூண்டுள்ள பெளத்த பிக்குமார்களை ஈவிரக் கமற்ற முறையில் மிலேச்சத்தனமாக மாணவர்கள் என்ற போர்வை யில் தங்கள் குண்டர்களை அனுப்பி தாக்கிக் காயப்படுத்துவது மாத் திரம் மனித உரிமை மீறல் இல்லையா என்று நாம் கேட்க விரும்புகி றோம்.

தேர்தலுக்கு முன்னோடியாக தங்கள் கட்சிகளை பலப்படுத்தும் மறை முக நோக்கத்துடன் தான் கலைஞர் ஐயாவுக்கும், ஜெயலலிதா அம் மாவுக்கும் இப்போது இலங்கை தமிழ் மக்களைப் பற்றி என்றுமில் லாத பாசமும் கருணையும் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது வெறுமனே தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்காக இடையிடையே பத்திரிகை அறிக் கைகளை விடுத்து பேசா மடந்தைகளாக இருந்த இவ்விருவரும், இப்போது வீராவேசத்துடன் தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தி னாலும், இராணுவத்தினாலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், படு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றெல்லாம் உருக்கமான கண் டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்களே ஒழிய, உருப்படி யாக எந்த உதவியையும் இலங்கைத் தமிழர்களுக்கு செய்யவில்லை என்பதை நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

இலங்கை தமிழர்கள் மீது அந்தளவுக்கு பாசமும், கருணையும், சகோதர உணர்வும் இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டு அரசாங்கமும் அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இன்னமும் அகதிமுகாம்களில் காவலின் கீழ் வைத்து அரைவயிறு உணவை மாத்திரம் கொடுத்து துன்புறுத்துவதற்கு பதில் அந்த மக் களை நிம்மதியாக வாழ வழி செய்திருக்க வேண்டும். அவ்விதம் செய்தார்களா? இல்லவே இல்லை.

தங்கள் சுயநலத்திற்காக கலைஞர் ஐயாவும், ஜெயலலிதா அம்மாவும் தங் கள் அரசியல் செல்வாக்கை பெருக்கிக் கொள்வதற்காக இலங்கை தமி ழர்களை வைத்து வியாபாரம் செய்து வயிறு வளர்க்கிறார்கள் என்று நாம் கண்டிக்க விரும்புகிறோம். இவ்விரு தமிழக அரசியல் தலை வர்களின் சுயநலப் போக்கினால் நட்பு நாடுகளான இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அநாவசியமாக பிரச்சினைகள் ஏற்படுவ தற்கும் இவர்கள் வழியமைத்துள்ளார்கள்.

இலங்கையில் உள்ள சில அமைப்புகள் தமிழ்நாட்டுக்கான விமானப் பயணத்தை தடை செய்து அங்கிருந்து வருவோருக்கும் அனுமதி மறுக்க வேண்டுமென்று எமது அரசாங்கத்தின் மீது இப்போது அழு த்தங்களை கொண்டு வருகின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செயற்படு பவர் அல்லர். அவர் நல்ல அனுபவமிக்க அரசியல் தலைவராவார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் உணர்வுபூர்வமாக இலங்கை க்கு எதிரான எதிர்ப்புகளை வெளிப்படுத்தவில்லை. தங்கள் செல்வா க்கை அதிகரிப்பதற்காகவே அங்குள்ள அப்பாவி பல்கலைக்கழக மாண வர்களை அவர்கள் பலிக்கடாக்களாக பயன்படுத்தி அரசியல் நாடக மாடுகிறார்கள் என்பது ஜனாதிபதி அவர்களுக்கு நன்கு தெரியும்.

அரசாங்கக் கட்சியில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிர ஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்ட மான் தமிழ்நாட்டில் இலங்கையில் இருந்து வருகை தரும் மதப்பெரி யார்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது குறித்து தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது இலங்கைக்கும் இந்தியாவுக் கும் இடையிலான கலாசார, பண்பாட்டு, சமய உறவுகளை சீர்குலைப் பதற்கு அடித்தளமாக அமைகிறதென்றும் அவர் மேலும் அதிருப் தியை வெளியிட்டுள்ளார்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com