Contact us at: sooddram@gmail.com

 

விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு
விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்க !

அண்மையில் நண்பர் ஜோதிஜி கச்சத்தீவு பற்றி எழுதிய ஒரு கட்டுரை தான் என்னை இதை  எழுதத்தூண்டியது. அதில்  நண்பரின் கண்ணோட்டத்தில்  ஒரு வாசகம் - “கச்சத்தீவு என்பதை இந்தியாவால் கைகழுவப்பட்ட துண்டு நிலம்” என்பதே எதார்த்தம். அதில் இனி எந்த காலத்திலும் சொந்தம் கொண்டாடுவது என்பது கற்பனையில் வேண்டுமானால் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். காரணம் இந்த ஒரு பிரச்சனையில் இந்தியா தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்க என்று கைவைத்தால் வைத்த கை சுட்டுவிடும் என்பதை விட கையே இல்லாமல் போய்விடக் கூடிய அபாயமும் உண்டு”

“கை வைத்தால், வைத்த கை சுட்டு விடும் என்றும் கையே இல்லாமல் போய்விடக்கூடிய அபாயமும் உண்டு “ என்றும் நண்பர் எப்படிக் கூறுகிறாரோ … எனக்குத் தெரியவில்லை ! ஆனால  ான் இதை முற்றிலும் வேறான கோணத்தில் பார்க்கிறேன். நம்பிக்கையுடன் பார்க்கிறேன். இன்றில்லா விட்டாலும் எதிர்காலத்தில் கச்சத்தீவும், மீனவர் பிரச்சினையும்  ிச்சயமாகத் தீர்க்கப்படக் கூடியவை தான்.

இரண்டு வழிகள் உண்டு:

  • துணிச்சலான, தமிழகம் சொல்லும் நியாயத்தை உணர்ந்து, ஏற்று, செயல்படக்கூடிய மத்திய அரசு இருந்தால  24 மணிநேரத்தில் இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வரலாம். எப்படி ?

  • கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் ஜூன் 28, 1974 அன்று கையொப்பமிடப்பட்ட கச்சத்தீவு பற்றிய இந்திய-இலங்கை உடன்படிக்கை பிரிவுகள் 5 மற்றும் 6ன் படி

“பாரம்பரியமாக இரு நாட்டையும் சேர்ந்த மீனவர்கள் அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும் அவர்கள் தொடர்ந்து, எந்தவித கட்டுப்பாடும் இன்றி அனுபவிப்பார்கள். கச்சத்தீவு பகுதிக்கு அவர்களது மீன்பிடி படகுகள் சென்று வர இலங்கை அரசிடமிருந்து எந்தவித விசாவோ, அனுமதியோ தேவையிலை” என்று கூறப்பட்டுள்ளது.

(Article 5 – Subject to the foregoing, Indian fishermen and pilgrims will enjoy access to visit Kachchativu as hitherto, and will not be required by Sri Lanka to obtain travel documents or visas for these purposes.

Article 6 -The vessels of Sri Lanka and India will enjoy in each other’s waters such rights as they have traditionally enjoyed therein.)

கச்சத்தீவு உடன்படிக்கை பற்றிய அறிக்கையை இந்திய பாராளுமன்றத்தில் வெளியிட்ட அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங் கூட “மீனவர்கள் இதுவரை மீன்பிடித்து வந்த இடங்களில் தொடர்ந்து தங்கள் தொழிலை செய்ய எந்த தடங்கலும் இருக்காது” என்று உறுதி அளித்துள்ளார்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் -நமது மீனவர்கள் கச்சத்தீவு அருகே செல்வதோ, மீன் பிடிப்பதோ எல்லை தாண்டுவதாகும் என்று இலங்கை எப்படி முடிவு செய்யலாம ? இந்திய அரசு காங்கிரஸ் தலைமையின் சொந்த விருப்பங்களுக்கிணங்க, சும்மா இருப்பதால் தானே இலங்கை வாலாட்டுகிறது. இதை அடக்க வழியா இல்ல ? முதலில், இந்திய  அரச தன் கௌரவத்தையும், உரிமையையும் நிலை நாட்டவும், இந்திய(தமிழக ?) மீனவர்கள் நலனை பாதுகாக்கவும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்தப்படியே, இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க  உரிமை இருக்கிறது என்பதை மத்திய அரசு முதலில் இலங்கையிடம் வெளிப்படையாக அறிவித்து, இலங்கை கடற்படையினராலோ, மீனவராலோ அங்கு வரும் தமிழக மீனவர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலோ, துன்புறுத்தலோ நிகழக் கூடாது என்பதையும் வலியுறுத்திக் கூற வேண்டும்.

இந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு இந்திய கடற்படைக்கு உத்திரவு இடப்பட்டுள்ளது என்றும் இலங்கை கடற்படை விதிமீறினால், இந்தியக் கடற்படை  ொறுத்துக் கொள்ளாது என்றும் இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதை உறுதி செய்ய கச்சத்தீவு அருகே இந்திய கடலோர காவல்படையின்கப்பல்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு, அங்கு மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட  ேண்டும்.

இதையும் மீறி இலங்கை கடற்படை தொந்திரவு கொடுக்குமேயானால், கச்சத்தீவு பற்றிய ஒப்பந்த விதிகளை இலங்கை மீறுவதை  ாரணம் காட்டியே, இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஒரு தரப்பாக ரத்து செய்து கச்சத்தீவை நிரந்தரமாகத் தன் பொறுப்பில் ஏற்க வேண்டும்.

(ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படியே கூட, இரு நாடுகளிடையே சில விதிகளுக்கு உட்பட்டு ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு, பிற்காலத்தில் எதாவது ஒரு தரப்பினர் அந்த விதிமுறைகளின்படி நடக்கவோ, ஏற்கவோ மறுத்தால், அந்த காரணங்களுக்காகவே ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை எதிர் தரப்பினருக்கு கிடைக்கிறது.)

அடுத்த வழி  ீதிமன்ற வழி !!

உச்சநீதிமன்றத்தில( சுப்ரீம் கோர்ட் ) நீண்ட காலமாகத் தூங்கிக்கொண்டிருக்கும் கச்சத்தீவு பற்றிய வழக்கை, தொடர்ந்து நிகழும் மீனவர் படுகொலைகளை காரணம் காட்டி, அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைக்க வேண்டும். அடிப்படையிலேயே – இந்திய -இலங்கை அரசுகளால் செய்து கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டரீதியாக செல்லத்தக்கது அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.

உண்மையில் கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லத்தக்கத ?

இந்திய மண்ணில் ஒரு அங்குல நிலத்தைக் கூட அண்டை அயல் நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமானால், எல்லைகளை மாற்ற அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்த விவகாரத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படவே இல்ல ! சம்பந்தப்பட்ட மாநிலமான தமிழ் நாட்டையும் கலந்து ஆலோசிக்காமல் பாராளுமன்றத்தின் அனுமதியையும் கோராமல் இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார் தன்னிச்சையாக இலங்கையுடன் ஜூன் 28, 1974 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டு பின்னர் பாராளுமன்றத்திற்கு அதனை ஒரு தகவலாக மட்டுமே தந்தார். அதையும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஸ்வரண் சிங்கின் ஒரு அறிக்கை மூலமாக. முறைப்படி பாராளுமன்ற அங்கீகரிப்பிற்காக ஒப்பந்தம்
முன்வைக்கப்படவே
இல்ல !

அதிமுக்கியமான விஷயம் இப்படி ஒரு ஒப்பந்தம் போடவே இந்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ இல்லை. ஒப்பந்தத்தின் வாசகங்களே தவறானவை. கச்சத்தீவு இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைக்குரிய ஒரு பகுதியாக ஒப்பந்தத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுவே தவறு.

கச்சத்தீவு – எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல், ராமநாதபுரம் ஜமீனின  இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்பது கீழே காணப்படும் விவரங்களிலிருந்து புரியும்.

In 1947 one Mr.Mohammed had taken lease of the island of Katcha Theevu which was registered in the Sub-Registrar’s office of Indian town of Rameswaram (Ref: Reg.No. 278/1948.). After India attained independence, the Indian State of Madras by way ofGovernment Order No: 2093 dated 11.8.1949 declared that Katcha Theevu as barren land under Rameswaram revenue village Survey Number: 1250 in an area of
285 acres and 20 cents. Thus for centuries Katcha Theevu was under the Princely state of Ramnad in British India, and under Government of Madras in Independent India.

இவ்வாறு சந்தேகத்திற்கே இடமில்லாமல், தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை அரசியல் சட்டப்படி அதற்குரிய அதிகாரம் இல்லாமலே இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்நாளைய இந்திய அரசின் செயல் சட்ட விரோதமானது.

இந்த உண்மையை தகுந்த ஆதாரங்களுடன், சிறந்த வழக்கறிஞர்களின் துணையோடு நிச்சயமாக உச்ச நீதி மன்றத்தில் நிரூபித்து, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் ஆணையை உச்சநீதிமன்றத்திலிருந்து பெற முடியும்.

எனவே நிச்சயமாக, கச்சத்தீவு முடிந்து போன கதை அல்ல. அதற்குரிய நேரமும், அதனை செய்து முடிக்கத்தகுதியுள்ளவர்களும் இன்னும் வரவில்லை – அவ்வளவ !

(கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை)

( vimarisanam - kavirimainthan )

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com