Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை இந்திய அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது

இது குள்ளத்தனமான இராஜதந்திரத்தின் பக்கவிளைவாகும். இலங்கையை சர்வதேச அரங்கொன்றில் தண்டிக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் ஆசை இலங்கையை விட அதற்கு வால்பிடிக்கும் இந்தியாவையே பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் 2009 மே மாதத்தில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் ஆயுதப் படையினரால் துவம்சம் செய்த இறுதி நாட்களில் ஆயுதப் படையினர் பொதுமக்களின் மனித உரிமைகளை மீறக்கூடிய வகையில் நடந்து கொண்டதுடன் யுத்தக் குற்றங்களையும் புரிந்தார்கள் என்று அமெரிக்கா முன்மொழிந்த பிரேரணை நிறைவேறியது.

அன்றைய தினம் உலக நாடுகளில் இலங்கைக்கும் உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றோம். பாகிஸ்தான், தாய்லாந்து, கொங்கோ, மியுரிட்டானியா, உகண்டா, இந்தோனேசியா, குவைத், மாலைதீவு குடியரசு, பிலிப்பைன்ஸ், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஈக்வடோர் மற்றும் வெனிசுவேலா ஆகிய 13 நட்பு நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் அழுத்தங்களை தூக்கியெறிந்துவிட்டு இலங்கைக்காக வாக்களித்தமை நம்நாட்டு மக்களின் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீரை பெருக்கெடுக்க வைத்தது.

ஜப்பான், மலேசியா, அங்கோலா, பொட்ஸ்வானா, பெர்கினா பசோ, கென்யா மற்றும் கஸகஸ்தான் ஆகிய, இலங்கை மீது நட்பு பாசத்தை செலுத்தும் 8 நாடுகள். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் அழுத்தங்களை உதாசீனம் செய்து இலங்கையை ஆதரிக்கும் முகமாக வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தமை அமெரிக்காவின் அகங்காரப் போக்குக்கு இந்நாடுகள் அளித்த பலத்த பதிலடியாகும்.

வழமை போல் இந்தத் தடவையும் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை ஆதரிக்கும் பணபலம் மிக்க அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் விரல்விட்டு எண்ணக்கூடிய சில அமைப்புகளின் கட்டளைக்கு சிரம்தாழ்த்திஆமாபோடும் நவனீதம்பிள்ளை அம்மையார் இந்தத் தடவையும் ஜெனீவாவில் இலங்கையை தண்டித்து குதூகலிக்க முயற்சி செய்த போதிலும், அவரது முயற்சி இலங்கையை தண்டிப்பதை விட எமது அயல்நாடான இந்தியாவுக்கு பாரதூரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தி இந்திய மத்திய அரசாங்கத்தையே ஆட்டம் கொள்ளும் அளவுக்கு அரசியல்வானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அடுத்தாண்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் சில மாநில தேர்தல்களும் நடைபெறவுள்ள இவ்வேளையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப் பட்ட அமெரிக்கப் பிரேரணை இந்திய மத்திய அரசாங்கத்தில் பெரும் சர்ச்சையையும் நெருக்கடி நிலையையும் உருவாக்கியிருக்கிறது.

இலங்கை மீது சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டுமென்று கலைஞர் கருணாநிதியும், அவருடைய திராவிட முன்னேற்றக்கழகமும், இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை கொண்டு வந்து இதற்கமைய அமெரிக்கா முன்மொழியும் பிரேரணையை இந்திய அரசு திருத்தியமைக்காவிட்டால் நாம் அரசாங்கக் கட்சியில் இருந்து விலகிவிடுவோம் என்றும் அச்சுறுத்தல்கள் விடுத்திருந்தன.

கலைஞர் ஐயாவின் திருகுதாளங்கள் குறித்து நன்கு தெரிந்து கொண்டிருக்கும் சோனியாகாந்தி அம்மையாரும், பிரதம மந்திரி மன்மோகன்சிங்கும் அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு செவிமடுக்காமல் ஜெனீவாவில் அமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தில் திருத்தம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்தியா ஆதரிக்கும், அமெரிக்காவின் பிரேரணையில் இலங்கை மீது சர்வதேச விசாரணையொன்று நடத்த வேண்டுமென்ற பதம் இடம்பெறவில்லை. இது கலைஞர் ஐயாவுக்கு இந்திய மத்திய அரசாங்கம் கொடுத்த பதிலடியாக அமைந்துள்ளது.

அடுத்தாண்டில் இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதனால் தற்போதைய காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்திய அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல்கள் இருக்குமென்பதை புரிந்து கொண்ட கலைஞர் ஐயா, அதனை வெளிப்படையாக அறிவிக்காமல் இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணையை ஒரு காரணமாக வைத்து மத்திய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட குள்ளத்தனமான செயல் இதுவென்று இந்திய காங்கிரஸ் கட்சியினர் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள்.

மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் கலைஞர் ஐயாவும், ஜெயலலிதா அம்மாவும் மத வழிபாட்டுக்காக செல்லும் அப்பாவி இலங்கை பிரஜைகளை குறிப்பாக போதி மரத்து மாதவனின் நற்போதனைகளை கேட்டு துறவறம் பூண்டுள்ள பெளத்த பிக்குமார்களை ஈவிரக்கமற்ற முறையில் மிலேச்சத்தனமாக மாணவர்கள் என்ற போர்வையில் தங்கள் குண்டர்களை அனுப்பி தாக்கிக் காயப்படுத்துவது மாத்திரம் மனித உரிமை மீறல் இல்லையா என்று நாம் கேட்க விரும்புகிறோம்.

தேர்தலுக்கு முன்னோடியாக தங்கள் கட்சிகளை பலப்படுத்தும் மறைமுக நோக்கத்துடன் தான் கலைஞர் ஐயாவுக்கும், ஜெயலலிதா அம்மாவுக்கும் இப்போது இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி என்றுமில்லாத பாசமும் கருணையும் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது வெறுமனே தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்காக இடையிடையே பத்திரிகை அறிக்கைகளை விடுத்து பேசா மடந்தைகளாக இருந்த இவ்விருவரும் இப்போது வீரா வேசத்துடன் தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினாலும், இராணுவத்தினாலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றெல்லாம் உருக்கமான கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்களே ஒழிய, உருப்படியாக எந்த உதவியையும் இலங்கைத் தமிழர்களுக்கு செய்யவில்லை என்பதை நாம் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

இலங்கைத் தமிழர்கள் மீது அந்தளவுக்கு பாசமும், கருணையும், சகோதர உணர்வும் இருந்தால் ஏன் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டு அரசாங்கமும் அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இன்னமும் அகதிமுகாம்களில் காவலின் கீழ் வைத்து அரைவயிறு உணவை மாத்திரம் கொடுத்து துன்புறுத்துவதற்கு பதில் அந்த மக்களை நிம்மதியாக வாழ வழி செய்திருக்க வேண்டும். அவ்விதம் செய்தார்களா? இல்லவே இல்லை. தங்கள் சுயநலத்திற்காக கலைஞர் ஐயாவும், ஜெயலலிதா அம்மாவும் தங்கள் அரசியல் செல் வாக்கை பெருக்கிக் கொள்வதற்காக இலங்கை தமிழர்களை வைத்து வியாபாரம் செய்து வயிறு வளர்க்கிறார் கள் என்று நாம் கண்டிக்க விரும்புகி றோம். இவ்விரு தமிழக அரசியல் தலைவர்களின் சுயநலப் போக்கினால் நட்பு நாடுகளான இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் அநாவசியமாக பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வழியமைத்துள்ளார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு செயற்படுபவர் அல்ல. அவர் நல்ல அனுபவமிக்க அரசியல் தலைவராவார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் உணர்வுபூர்வமாக இலங்கைக்கு எதிரான எதிர்ப்புகளை அங்கு வெளிப்படுத்தவில்லை. தங்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்காகவே அங்குள்ள அப்பாவி பல்கலைக்கழக மாணவர்களை அவர்கள் பலிக்கடாக்களாக பயன்படுத்தி அரசியல் நாடகமாடுகிறார்கள் என்பது ஜனாதிபதி அவர்களுக்கு நன்கு தெரியும். தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் தங்கள் மக்கள் ஆதரவை பெருக்கிக் கொள்வதற்காக இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற பலதரப்பட்ட அழுத்தங்களை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கொண்டு வந்தன.

மத்திய அரசாங்கத்தினால் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத சில கோரிக்கைகளை முன்வைத்து அதன் மூலம் தங்கள் செல்வாக்கை பெருக்கிக் கொள்வதற்கு திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த அளவு வெற்றியளிக்கவில்லை. இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென்று கலைஞர் ஐயா விடுத்த கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையுடன் சர்வதேச விசாரணையை இலங்கை மீது மேற்கொள்ள வேண்டுமென்ற சொற்கள் அமெரிக்காவின் பிரேரணையில் இறுதிக் கட்டத்தில் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலைஞரும், ஜெயலலிதாவும் தங்கள் ஆதரவை பெருக்கிக் கொள்வதற்கு எடுக்கும் இலங்கை எதிர்ப்பு நடவடிக்கைகள் இப்போது வன்முறையாக மாறியிருக்கின்றது. இந்த வன்முறைகளை தூபமிட்ட இவ்விருவரும் இதனை இப்போது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியாத அளவுக்கு அது விஸ்வரூபம் எடுத்து இவ்விருவரையும் அச்சுறுத்தக்கூடிய அளவுக்கு உருமாறியிருக்கிறது. இந்த வன்முறைகள் எல்.ரி.ரி.ஈ.யின் பயங்கரவாத அமைப்புக்கு மீண்டும் உயிரூட்டக் கூடியதாக மாறிவிடும் என்று இந்தியாவின் அரசியல் அவதானிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். தமிழ் நாட்டில் இப்போது நடைபெற்று வரும் வன்முறைகளும் எதிர்ப்பு போராட்டங்களும் பயங்கரவாதத்திற்கு ஒப்பானவை என்று புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் சமயோசிதமாக தெரிவித்திருப்பது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும்.

இந்திய அரசியலில் குள்ளத்தனமான இராஜதந்திரத்தை பயன்படுத்துவதில் நான்கு பேர் பிரபல்யம் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் முதன்மை இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக குள்ளத்தனமாக காய்நகர்த்தல்களை மேற்கொள்வதில் முன்னிலை வகிப்பவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இரண்டாவது இடத்தையும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீருக்கு அடியில் நெருப்பை அணையாமல் கொண்டு செல்லக்கூடியவர். இவர் மூன்றாவது இடத்தையும் எப்போதும் அமைதியாக வார்த்தைகளை அளந்து பேசினாலும் கண் சிமிட்டாமல் தான் செய்ய நினைத்ததை எவருக்கும் அச்சமின்றி செய்யும் பிரதம மந்திரி நான்காவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

சோனியாகாந்தியின் மகனும் இலங்கையில் இனப்பிரச்சினையை ஏற்படுத்தி எங்கள் தாய்நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுப்பதற்கு அடித்தளம் அமைத்த இந்திராகாந்தியின் பேரனுமான ராகுல் காந்தியை இந்திய காங்கிரஸ் அடுத்த பொதுத் தேர்தலில் பிரதம மந்திரி பதவியில் அமர்த்துவதற்கு சோனியா காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் முயற்சி செய்தாலும் அந்த முயற்சி கைகூடாதென்று புதுடில்லியில் உள்ள அரசியல் வட்டாரங்கள் ஹேஸ்யம் தெரிவிக்கின்றன.

ராகுல்காந்தியும் எங்கள் நாட்டின் எதிர்க்கட்சித்தலைவரைப் போன்று தேர்தல்களில் தேல்வியடைவதில் சாதனைகளை ஏற்படுத்துவதில் வல்லவராக இருக்கிறார். ஆகவே, அடுத்தாண்டு நடைபெறும் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடி மாநில அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்திய தேசிய அரசியலில் இறங்குவதென்று தீர்மானித்துள்ளார்.

இவரது இந்த முடிவைப்பார்த்து இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தாண்டில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தினால் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதம மந்திரியாகிவிடுவார் என்று பயந்து காங்கிரஸ் கட்சி எவருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக அடுத்த சில மாதங்களில் திடீரென்று பாராளுமன்றத்தை கலைந்து பொதுத் தேர்தலை நடத்தினால் தங்களுக்கு வெற்றி கிடைக்குமென்ற நப்பாசையில் இருந்தது. ஆனால், இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை அவர்களுடைய திருகுதாளங்களை சீர்குலைத்து இவ்வாண்டில் தேர்தலை நடத்தினால் படுதோல்வி கிடைக்கு மென்ற புதியதோர் அச்சத்தை காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

ஜெனீவா பிரேரணை இலங்கையை விட இந்தியாவையே அதிகமாக பாதித்திருக்கிறது என்று கூறினால் அதில் தவறு இருக்காது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com