Contact us at: sooddram@gmail.com

 

அரசியலில் நாணயம் இல்லாதவர்களுக்கு எல்லா விடயங்களிலும் தோல்வி கிட்டும்

அரசியலிலும் இராஜதந்திரத்திலும் நாணயம் இருக்க வேண்டும். நாம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை அந்நாடுகளின் கொள்கைளைப் பார்த்து கண்டனம் தெரிவிப்பது உண்மைதான். ஜனநாயக நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் அரசியலை கண்ணியமாக நடத்துவார் கள். தமது அரசியல் எதிராளியைக் கூட அநாகரிக மான முறையில் காலைவாரி அரசியல் குப்பைக் கூடைக்குள் தொப்பென்று போட்டுவிட மாட்டார் கள். தங்கள் அரசியல் எதிராளியைக்கூட அந்நாடுக ளில் மதித்து, கெளரவப்படுத்தும் நற்பண்பை அந்நாட்டுத் தலைவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் அப்படியாக கண்ணியமாக நடந்து கொள்ளும் அரசியல் தலைவர்களின் யுகம் இன்று மறைந்துவிட்டது. இலங்கையை தண்டிப்ப தற்காக அமெரிக்கா, ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றிய பிரேரணை இலங்கை யைவிட இந்தியாவுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்போது எந்நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற பதற்ற நிலை தோன்றியி ருப்பதனால் அந்நாட்டின் அரசியல்வாதிகள் ஒருவர் முதுகில் இன்னொருவர் குத்தும் அளவுக்கு அரசியல் பகடையாட்டம் சூடுபிடித்துள்ளது.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி தனக்கு வயதான போதிலும் மீண்டுமொரு தடவை முதல மைச்சர் ஆசனத்தில் அமர்ந்துவிட வேண்டுமென்ற பேராசை காரணமாக சிந்தித்து செயலாற்றும் சக்தியை இப்போது இழந்துள்ளார் என்று தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல் அவதானிகள் அவரைப் பார்த்து கிண்டல் செய்கின்றார்கள்.

அரசியல் அவதானிகள் அவ்விதம் கூறினாலும் கலைஞர் கருணாநிதி எப்போதும் குள்ளத்தனமாக சிந்தித்து காய்நகர்த்தல்களை செய்வதில் எவருக்கும் ஈடு இணையற்ற தலைவராக இருக்கிறார். இந்திய காங்கிரஸ் கட்சி ஊழல், நிர்வாக சீர்கேடு போன்ற காரணங்களினால் மக்கள் ஆதரவை இழந்துள்ளது என்பதை நன்கு புரிந்து கொண்ட கலைஞர் ஐயாவும், அவரது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தம்பி மாரும் நாம் தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டிக் கொண்டிருந்தால் அடுத்த தேர்தலில் மண் கவ்வ வேண்டியிருக்கும் என்று நினைத்து அரசா ங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப் பினை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு அமெரிக்கா ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த பிரேரணை ஒரு சிறந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. இந்திய அரசாங்கத்தினால் செய்ய முடியாத கோரிக்கைகளை விடுத்து, இந்தத் திருத்தத்தை அமெரிக்காவின் பிரேரணையில் சேர்த்துவிடுங்கள் என்று கருணாநிதி அரசாங்கத் தலைவர்களிடம் பிடிவாதம் பிடித்தார்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் முழு அதிகார த்தையும் தனது கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி குள்ளத்தனமாக சிந்திப்பதில் கருணாநிதியை விட திறமைசாலி என்பதனால் அதனை ஏற்கமுடியாது என்று திட்ட வட்டமாக முடிவெடுத்து அந்த முடிவை நிறை வேற்றுமாறு தன் சொற்படி நடக்கும் பிரதம மந்திரி மன்மோகன்சிங்கிற்கு அறிவித்தார்.

தங்கள் கோரிக்கை நிறைவேறக்கூடாது என்று காத்திருந்த கலைஞர் ஐயாவும், அவரது கட்சியும் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து மத்திய அர சாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது. இந்த முடிவு இந்திய அரசியலில் ஒரு பெரும் சர்ச்சையையும் அரசியல் நெருக்கடியையும் உருவாக்கி யிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை தேர்தலில் வீழ்த்தி மத்திய அரசாங்கத்தை அமைக்கும் சக்தி வாய்ந்த பாரதீய ஜனதா கட்சி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியடையும் அறிகுறிகள் தென்படுவதனால் இதனைப் பயன் படுத்தி சோனியாகாந்தி இந்திய பாராளுமன்றத் தேர்தலை அடுத்த சில மாதங்களில் நடத்துவதற்கான இரகசியத் திட்டத்தை தீட்டியிருந்தார்.

இந்த இரகசியத் திட்டம் கருணாநிதியின் காதுக ளுக்கு எட்டியவுடன் நாம் காங்கிரஸ் கட்சிக்கு அளி க்கும் ஆதரவை வாபஸ் பெறவேண்டுமென்று முடி வெடுத்தார். இந்த முடிவை எடுத்து சில மணித்தியாலங்களில் சோனியாகாந்தியின் அரசாங்கம் கருணாநிதி மீது வஞ்சம் தீர்க்கும் முகமாக அவரது மகன் ஸ்டாலின் வீட்டை சி.பி.ஐ. பொலிஸாரை முற்றுகையிட வைத்து, கருணாநிதியின் குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அவமானப் படுத்தியது.

இந்த சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்த முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா இப்போது திரிசங்கு நிலையில் இருக்கிறார். அடுத்த தேர்தலில் கரு ணாநிதியின் திராவிட முன்னேற்றக்கழகத்தை தூக்கி யெறிந்துவிட்டு சோனியாகாந்தி தன்னை அரசாங்கக் கட்சியில் சேர்த்துக் கொள்வாரா என்ற நப்பாசையில் காங்கிரஸ¤டன் சேருவதா அல்லது பாரதீய ஜனதா கட்சியை ஆதரிப்பதா என்று முடிவெடுக்க முடியாத நிலையில் இப்போது மனம் குழம்பியிருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இந்திய அரசியலில் முக்கிய கதாபாத்திரங்களான கருணாநிதி, சோனியாகாந்தி, ஜெயலலிதா மற்றும் மன்மோகன்சிங் ஆகியோர் அரசியல் மற்றும் இராஜதந்திர பிரச்சினைகளை அந்தந்த மட்டத்தில் அணுகாமல் திரைமறைவில் ஒருவரை ஒருவர் வீழ்த்தி பயனடையும் கொள்கையை கடைப்பிடிப்பதனால் இந்த நான்கு அரசியல்வாதிகளுக்கும் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி யிருக்குமென்றும் இதனால் ராகுல்காந்தியை அடுத்த பிரதமமந்திரியாக அமர்த்தும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி படுதோல்வியடையும் என்றும் அரசியல் அவதானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசியலில் கறுப்பு குதிரையாக இருக்கும் குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு இந்திய பிரதமர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் நம் பிக்கை தெரிவிக்கின்றன.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com