Contact us at: sooddram@gmail.com

 

தமிழக மாணவர் எழுச்சியும் ஐ.நா தூக்குத் தண்டனை நாடகமும்

(சபா நாவலன்)

வன்னிப் படுகொலை விட்டுச் சென்றிருக்கும் வருடாந்த வைபவங்களுள் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாக ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் என்ற பெயரில் நடத்தப்படும் சந்தர்ப்பவாதிகளின் ஒன்றுகூடல் பிரதானமானதாகும். அவலங்களின் அழுகுரல்கள் நான்கு வருடங்களின் பின்னர் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க மக்கள் ராஜபக்சவை யாராவது தண்டித்து விடுவார்கள் என நாட்களை நம்பிக்கையோடு ஓட்டுகிறார்கள். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கூடுவதற்கு சற்று முன்னதும் பின்னதுமாக புலம் பெயர் நாடுகள் தூக்குததண்டனை நாடகம் ஆரம்பித்துவிடும். நாடகத்தில் நடிப்பதற்காக புலம்பெயர் தமிழ் அரசியல் தலைவர்கள், இலங்கை அரசு, அமரிக்க அரசு, இந்தியா, தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் என்று ஒரு நட்சத்திரக் கூட்டம் தயாராகிவிடும். மிரட்டல்கள், வெற்றி முழக்கங்கள், சொல் வீச்சுகள் ஆகியவற்றோடு இறுதிவரை நகர்ந்து செல்லும் நாடகத்தின் முடிவு முன்னமே எதிர்பார்தவாறு இலங்கை அரசைக் காப்பாற்றிவிடும்.

வன்னிப் படுகொலைகளை நடத்துமாறு இலங்கை அரசை ஊக்கப்படுத்திய நாடுகளில் ஒன்றான அமரிக்க அரசிற்கு ராஜபக்ச ஆட்சி ஒரு வரபிரசாதம். தண்டிக்கப் போகிறோம் என்று ஆதாரங்களைக் காட்டிப் பயமுறுத்தியே இலங்கையை அவர்களின் பல்தேசிய முதலாளிகளுக்காக ஒட்டச் சுரண்டிவிடுவார்கள். மனித உரிமை ஆணயகத்தில் தீர்மானம் நிறைவேற்ற சில மாதங்களின் முன்னதாகவே பேரங்கள் ஆரம்பமாகிவிடும்.

பேரத்தில் பெற்றுக்கொண்ட பலாபலன்களுக்கு ஏற்றவாறு அமரிக்க அரச தீர்மானம் முன்வைக்கப்படும்.

ராஜபக்ச பேரினவாத அரசு தெற்காசியாவின் அதி உயர் கிரிமினல் அரசுகளில் ஒன்றாகும். சிங்கள பௌத்த அடிப்படை வாதத்தைத் தோற்றுவிப்பதும் அது ஏற்படுத்தும் மனிதக் கொலைகளின் எச்சங்களிலிருந்து தனது குடும்ப ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதும் ராஜபக்ச ஆட்சியின் உள்ளூர் தந்திரோபாயம். உலகின் ஆதிக்க பலம் மிக்க நாடுகளால் எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படத்தக்க அத்தனை ஆதரங்களையும் விட்டுவைத்திருக்கும் ராஜபகச அரசு, அதற்காகவே அமரிக்க எதிர்ப்பு நாடுகளோடு சாத்தியமான அணிசேர்க்கைக்கு முயல்கிறது.

அமரிக்க ஏகபோக அரசு அழிக்க முயலும் நாடுகளோடு உறவை வளர்த்துக்கொள்ள முயலும் ராஜபக்ச குடும்ப அரசை கவிழ்க்கப்போவதாக இந்திய அமரிக்க அரசுகள் மிரட்டி சமநிலைக்கு அழைத்து வருவதற்கான நிகழ்வுகளில் ஒன்றே போர்க்குற்ற விசாரணை.

அமரிக்காவின் எழுதப்படாத அடிமை நாடாக இந்திய அரசு மாறி நாளாகிவிட்டது. தெற்காசியப் பிராந்தியத்தில் அமரிக்க நலனுக்காக அனைத்தையும் மேற்கொள்ளத் தயாரான இந்திய அரசு தேற்காசியாசாபக் கேடு. தெற்காசியாவில் மக்கள் நலன் சார்ந்த ஒவ்வொரு அசைவுமே இந்திய அரசினது பல்தேசிய முதலைகளின் கோரப்பசிக்கு எதிரானதாகவே அமையும் என்ற நிலை காணப்படுகிறது.

இவர்களுக்கு மத்தியில் தூக்குததண்டனை நாடகத்தின் கதாநாயகர்களாக உதித்தவர்கள் தான் இந்திய மாணவர்கள். ஈழப் போராட்டத்தை மையமாக முன்வைத்து அவர்களின் நெருப்பாக எழுந்த அவர்களின் குரல் குறிப்பான அரசியலை மையப்படுத்தி சென்னை விமான நிலைய முற்றுகையாக எழுச்சி பெற்றது. இந்திய அரசிற்கு எதிரான முழக்கங்களோடு விமான நிலையத்தில் போராடிய மாணவர்களிடம் தெளிவான அரசியல் தெரிந்தது.

சீமான்,வைகோ,நெடுமாறன் போன்ற அரசியல் கோமாளிகள் மாணவர்களின் போராட்டத்தில் ஆள்பிடிக்க வலைவீசினார்கள். யாரும் அகப்படாத நிலையில் இந்திய உளவுத்துறையும் திமுகவும் இணைந்து ஏற்பாடுசெய்த மற்றொரு நாடகத்தில் கருணாநிதி மத்திய அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொண்டார். 2009 இனப்படுகொலைகளின் போது கருணாநிதி இலங்கை அரசோடு இணைந்து நடத்திய நாடகத்தின் புதிய பதிப்பு இது.

இதைவிட மாணவர்கள் மத்தியில் ஆள்பிடிக்க முடியாமல் தோற்றுப்போன பரம்பரை ஈழ வியாபாரிகள் கும்பல் நிராயுதபாணிகளான பௌத்த துறவிகளைத் தாக்கியது.

ஒரு புறத்தில் மாணவர்கள் போராட்டத்தைத் திசைதிருப்பவும், மறுபுறத்தில் தமிழ் நாட்டின் மாணவர் போராட்டத்தின் உணர்வலைகளை சிங்கள மக்களுக்கு எதிரான இனவாதப் போராட்டமாக குறுக்கிக் காட்டவும் இத்தாக்குதல் பயன்பட்டிருக்கிறது.

பௌத்த துறவிகள் மீதான் ஒவ்வொரு அடியும் புலம்பெயர் தமிழ் இனவாதிகளுக்கு மகிழ்சியை வழங்கியதற்கும்அதிகமாக இந்திய உளவுத்துறையும், இலங்கை அரசும் கொண்டாடியிருப்பார்கள் என்பது அனுமானம் என்றாலும் உண்மை.

இறுதியாக புலம் பெயர் தமிழ் அரசியல் தலைவர்களின் கும்மாளம் இந்தத்தடவை முன்னையதிலும் அதிகமாகவே இருந்தது. இந்திய அரசியல் வாதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களும் தாம் வழங்கிய துண்டறிக்கையுடனேயே காலைக்கடன் கூடக் கழிக்கப்போவதாக இவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஜெனிவாவிற்கி அப்பாவி மக்களையும் அழைத்துக்கொண்டு ஊர்திகளில் சென்று திரும்பினார்கள். அமரிக்கா ராஜபக்சவோடு பேரம் பேசுவதற்கு வழமைபோல உதவியாக இருந்த இவர்கள் இந்தியா சொன்னதால் தான் அமரிக்கா இலங்கையை தப்பிக்க விட்டதாக எல்லாம் முடிந்ததும் மக்களை நம்பக் கோரினார்கள்.

ஈராக்கின் மீது படையெடுத்து லட்சம் லட்சமாக மக்களை அழித்துப் போட்டபோது ஐக்கிய நாடுகள் நிறுவனம், அமரிக்காவின் நட்பு நாடுகள், ஏன் இந்தியா கூட எதிர்த்தபோது அமரிக்கா படையெடுத்தது. இந்தியப் பாதுக்கப்பில் ஓட்டை விழுந்துவிடும் என்று ஆப்கான் கணவாய்களையே உற்றுப் பார்த்துகொண்டிருந்த இந்தியா அழுததையும் கண்டுகொள்ளாமல் அங்கு படைகளை அனுப்பியது அமரிக்கா.

தெற்காசியாவில் இந்தியாவின் அயல் நாடுகளைக் கையாள்வதற்கு தனது நம்பிக்கைக்கு உரிய நண்பனான இந்தியாவை நம்பியிருக்கும் அமரிக்கா தனது பிராந்திய நலனை இந்தியாவின் ஊடாகவே உறுதிப்படுத்திக்கொள்கிறது.

புலம் பெயர் தமிழ் அரசியல் ‘மேதைகளும், தலைவர்களும்’ பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டத்திலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் அழிக்கும் ஐரோப்பிய அரசியல்வாதிகளோடு கூட்டம் போட்டு கும்மாளமடித்து அமரிக்காவை திருப்திப்படுத்தியிருந்தோம் என்கிறார்கள். தாம் பேசியதைக்கேட்டு ‘புல்லரித்துப்’ போன அமரிக்கா இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை நடத்த முற்பட்ட வேளையில் இந்திய அரசு தலையிட்டு கெடுத்துவிட்டதாக ஆரம்பத்தில் கூறியவர்கள் பின்னதாக இந்தியா சமர்ப்பித்த ‘வெற்று’ ஆலோசனைகளைக் கண்டு இந்தியாவைப் பாராட்டினார்கள்.

இவர்களின் வில்லத்தனம் அப்பாவித்தனமாகத் தோன்றினாலும் ராஜபக்சவிற்கு பலம் சேர்பதே இதுதான். ராஜபக்சவைக் காப்பாற்றுவதுகூட இதுவே.

இந்த நிலையில், 2009 வன்னிப்படுகொலைகள் சிறுவர்களாக்விருந்த தமிழக மாணவர்கள் இந்த ஈழ நாடகத்தின் முதலாவது கதாநாயகர்களாக எழுச்சி பெற்றார்கள். ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆரம்பித்தவர்கள், இந்திய அரசும் போர்க்குற்றவாளி தான் என்றார்கள். தமிழக இனவாத அரசியல் வாதிகளைப் புறந்தள்ளினார்கள். அமரிக்க அரசை தெருவில் இழுத்துக் கேள்விகேட்டார்கள்.

ராஜபக்ச அரசின் ஆதாரத் தூண்களான பல்தேசிய நிறுவனங்களை நோக்கி முழங்கினார்கள். விமான நிலையத்தை முற்றுகையிட்டார்கள், இராணுவ மையத்தை முற்றுகையிட்டார்கள். மரீனா கடற்கரையில் உண்ணாவிரதமிருந்தார்கள். போராட்டங்கள் தொடர்கின்றன.

புலம்பெயர் தலைமைகள் முன்வைக்கும் அரசியலுக்கு நேர் எதிரான திசையில் ஆரம்பித்திருக்கும் மாணவர்களின் கோரிக்கைகளை கண்டு ஜெயலலிதாவும் கருணாநிதியும் மட்டுமல்ல, இந்திய அரசும் அமரிக்க அரசும் கூட மிரண்டுபோனது.

இன்றைய முதலாளித்துவ  நெருக்கடி தன்னெழுச்சியான போராட்டங்களை உலகம் முழுவதும் தோற்றுவித்திருக்கின்றது. இப் போராட்டங்களை எல்லாம் மக்கள் சார்ந்த புரட்சிகர அரசியல் தலைமைகள் வழிநடத்துவதற்குப் பதிலாக எதிரிகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. வால் ஸ்ரீட் போராட்டத்திலிருந்து அரபு நாடுகளின் எழுச்சி வரைக்கும் பிற்போக்கு அரசியல் தலைமைகளால் கையகப்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டடுகள்ளது. இந்த நிலைமையைப் தமிழக மாணவர்கள் புரிந்துகொள்வதும் புரட்சிகர அரசியல் தலைமைகளை அடையாளம் கண்டுகொள்வதும் அவசியம். ஈழப் போராட்டத்தில் மட்டுமல்ல தெற்காசியாவை அழிந்துகொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை செய்வதற்கு தமிழக மாணவர்கள் முன்னணி சக்திகளாக உலகத்திற்கே உதாரணமாக முடியும்.

இதுவரைக்கும் தமிழகதில் தமது முற்றத்தில் கொல்லப்படும் அவலங்களைக் கண்டுகொள்ளாது புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு உணர்ச்சியூட்ட மட்டும் தமிழ் இனவாத அரசியலை முன்வைத்து வியாபாரம் நடத்திய கும்பல்களை மாணவர்கள் இனம்காட்டியுள்ளனர்.. சீமானில் ஆரம்பித்து சின்னதான இனவாதக் குழுக்களைக் கூட மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.

ஊறுகாய் போன்று அவ்வப்போது இடதுசாரி அரசியலைத் தொட்டுக்கொண்ட ஈழ ‘உணர்வாளர்கள்’ இப்போது தீவிர இடது அரசியல் வேண்டாம் என்று கூறும் அளவிற்கு மாணவர்களின் போராட்டங்கள் அவர்களை மிரட்டுகின்றன.

ஈழத் தமிழர்களின் அவலங்களை அமரிக்க அரசு தனது அரசியல் பொருளாதார அதிகாரப் பேரத்திற்காகப் பயன்படுத்திக்கொள்கிறது. வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகள் தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள். இந்திய அமரிக்க சீன அரசுகள் தமது நலனுக்கு உகந்த பல்தேசியப் நிறுவனங்களின் சுரண்டலுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

இவற்றின் உள்ளூர் முகவர்களே புலம் பெயர் அமைப்புக்களும், தமிழக இனவாதிகளும், தேசிய வெறியூட்டும் அரசியல் கொள்ளைக்காரர்களும். இவை அனைத்திற்கும் அப்பாலான அரசியல் இன்று மக்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். அரசுகளுக்குப் பதிலாக புலம்பெயர் நாடுகளிலுள்ள ஜனநாயக முற்போக்கு இயக்கங்களுடனும், உலகம் முழுவதிலும் உள்ள போராடும் மக்களோடும் கூட்டிணைவை ஏற்படுத்திக்கொள்ளும் மக்கள் இயக்கத்தை ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களும் , தேசிய உணர்வுகொண்ட புலம்பெயர் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com