Contact us at: sooddram@gmail.com

 

உலகில் ஏராளமானோரை பீடிக்கும் இரண்டாவது பெரும் நோயாக உருவெடுக்கும் மனச்சோர்வு

(ஏ. எல். நாமர்கனி)

ரோக்கியம் என்பது மனிதனின் உடல் சார்ந்த ஆரோக்கியத்தை மாத்திரம் குறித்து நிற்காது, அது அவனது உள ரீதியான ஆரோக்கியத்தையும் பெரிதும் வேண்டி நிற்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியத்திற்கான வரைவிலக்கனத்தைப் பின்வருமாறு தருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, மனச்சோர்வு 2020ம் ஆண்டளவில் சர்வதேச மட்டத்தில் மிகப் பிரதானமான இரண்டாவது நோயாக விளங்கும் என எதிர்வு கூறியுள்ளது. இந்நோய் வாழ்நாளில் நீண்ட ஆயுட் காலத்தைக் கொண்டு சஞ்சரிக்க கூடிய, உலக சனத்தொகையில் 16 வீதத்தினரை வியாபித்துள்ள தற்கொலைக்கு தள்ளிச் செல்கின்ற மிகவும் பயங்கரமும் ஆபத்தும் மிக்க ஒன்றாகும்.

வெகு வேகமாகவும், இலேசாகவும் பரவக்கூடிய இந்நோயின் நூற்று வீதம் அனர்த்தங்கள் நிகழும் பகுதிகளில் அதிகரித்துக்காணப்படும். கால் நூற்றாண்டு கால யுத்தத்தினால் நேரடியான பாதிப்புகளுக்குட்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் மக்களில் பலர் மனச்சோர்வு நோய்க்கு உட்பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

மனச்சோர்வு இரண்டு வகையாக இனங்காணப்பட்டுள்ளது.

1. பாரிய மனச்சோர்வு
2. எதிர்த்தாக்க மனச்சோர்வு

பாரிய மனச்சோர்வு தற்கொலை எத்தனங்களுக்கும் கூட இட்டுச் செல்லும், எதிர்த்தாக்க மனச்சோர்வு ஒரு பாரிய இழப்பாலோ அல்லது வேறொரு குறிப்பிட்ட காரணத் தினாலோ ஏற்படக்கூடியது.

மனச்சோர்வில் இன்னொரு வகையுமுண்டு. அது உள்ளுறை மனச்சோர்வு என்ற பெயரில் அழை க்கப்படுகின்றது. இது புறக்காரணிகள் எதுவுமின்றியே ஏற்படக் கூடியது.

மனச்சோர்வுக்குட்பட்ட 79 வீதத்தினர் தனிமைப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் உள மனோ நிலையில் ஏற்படும் ஒழுங்கீனமேயாகும். ஒருவரை சமூகத்திலிருந்து தனிமைப் படுத்துவதனாலும் மனச்சோர்வு ஏற்படும். அவ்வாறே மனச்சோர்வு ஏற்பட்டாலும் தனிமைப்படல் ஏற்படும், சமூகத்தில் சுதந்திரமாகவும் திறமையாகவும் செயற்பட தடங்களாக அமைகிறது.

உளச் சோர்வு கோளாறுகள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவற்றுள் சில வருமாறு,

1. Major depression
பிரதான உளச்சோர்வு

இந்நோயாளிகள் தூங்கவோ, படிக்கவோ, பணிவிடைகளில் ஈடுபடவோ, உண்ணவோ, மகிழ்ச்சி கரமான நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாதவாறு தடுத்து அவர்களை செயற்பட முடியாதவர்களாக ஆக் குவதும் துன்பத்துக்குரியவர்களாக மாற்றுவதும் இந்நோயின் அறிகுறி களாகும். சிலர் இந்நோயினை ஒரு தடவை அனுபவித்தாலும் மற்றும் சிலர் மீண்டும் மீண்டும் அனுபவிக் கின்றனர்.

2. Dysthymia/Mild chronic Depression
தீவிரமில்லாத நீடித்த மனச்சோர்வு

இவ்வகையானது கடினமான தாகவோ, இயலாமைக்கு உட்படுத் துவதாகவோ இருக்காது. ஆயினும் இந்நோய் பிரதான மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லக்கூடியது. இந்நோய்க் குட்பட்டோர் 2 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு இந்நோயின் அறிகுறிகளை அனுப விப்பர்.

3. Psychotic Depression
மனோவியல் மனச்சோர்வு

பிறமை, தவறான நம்பிக்கை மற்றும் உண்மைத் தன்மையிலிருந்து விலகல் என்பவற்றால் மனச்சோர்வு தீவிரமடையும் போது Psychotic Depression - மனோவியல் மனச்சோர்வு ஏற்படுகிறது. உதாரணமாக ஒரு பெண்ணின்/ஆணின் மீது ஏற்பட்ட வெறுப்பு, அவநம்பிக்கை அவ்வினத்தின் மீதே அதீத வெறுப்பையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

4. Postnatal Depression
குழந்தை பிறப்புக்கு பின்னரான மனச்சோர்வு

இது குழந்தை பெற்றெடுப்புக்குப் பின்னரான ஒரு குறுகிய காலத்துக்குள் பெண்களுக்கு ஏற்படுகின்ற மனச்சோர்வாகும். 10 முதல் 15 வீதம் வரையிலான பெண்கள் குழந்தைப் பெற்றெடுப்புக்குப் பின்னர் இவ்வியாதிக்கு உட்படுகின்றனர். ஆயினும் அவர்களுள் பலர் இந்நோய் பற்றிய விளக்கமின்மையால் இதற்கான சிகிச்சையை மேற்கொள்வதில்லை.

5. Seasonal Affective Disorder
பருவகால மனச்சோர்வு

இது சூரிய வெளிச்சம் குறைந்த குளிர்காலத்தில்/ மாரி காலத்தில் ஏற்படுகின்ற நோயாகும். ஸ்கன்டிநேவிய நாடுகளில் பல மாதங்களுக்கு இக் கால நிலை நீடிக்கும். கோடை/ இலையுதிர் காலம் வந்தவுடன் இந்நோய் விலகிச் சென்றுவிடும். இதற்குப் பிரதானமாக வெளிச்ச மருத்துவம் பரிகாரமாகக் கொடுக் கப்படுகிறது.

6. Bipolar Disorder
(Manic- Depressive illness)
திடீரென ஏற்படும் மனச்சோர்வு

இது பொதுவான ஒரு நோயல்ல. இது குறித்த நோயாளிகள் திடீர் திடீரென மிகத்தீவிர போக்கை அல்லது மிகக் குறைந்த மட்டத்திலான நடத்தைப் போக்கை வெளிப்படுத்துவர்.

மனச்சோர்வுக்கான காரணங்கள் இன்றும் உறுதியாக அறியப்பட வில்லை. இத்துறையில் நிபுணத்துவம் பெற்றோரின் கருத்துப்படி இது பரம்பரை, உயிர் இரசாயன சூழல், தனிப்பட்ட அனுபவங்கள், உளவியல் காரணங்கள் முதலானவற்றின் கூட்டினால் ஏற்படுகின்றது. எம்ஆர்ஐ பரிசோதனையின் மூலம் மனச்சோர்வு உள்ளவர்களின் மூளை அது இல் லாதவர்களின் மூளையைப் பார்க்கிலும் வித்தியாசமாக காணப்படுவதாக தெரிய வருகிறது. மூளையுடன் சம் பந்தப்பட்ட சிந்தனை, தூக்கம், மனோநிலை, பசி, நடத்தை முதலான வற்றின் தொழிற்பாடுகள் சாதாரண நிலையில் காணப்படவில்லை.

எவ்வாறாயினும் ஒரு குடும்பத்தில் மனச்சோர்வு காணப்படுமாயின் ஒருவரிடத்தில் மனச்சோர்வு இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. பல்வேறுபட்ட பரம்பரை அலகுகள் சூழலினதும் ஏனைய காரணிகளினதும் செல்வாக் குக்கு உட்படுவதனால் ஆபத்தான மனச்சோர்வு ஏற்படுவதாக பரம்பரை யியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குடும்ப அங்கத்தவர் ஒருவரின் இழப்பு, மிக விருப்பத்துக்குரிய ஒருவரின் சிநேகிதம் துண்டிக்கப்படல், உடலியல் ரீதியிலான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பயங்கரமான ஒரு அனுபவம் மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லும். பின்வரும் நோய் கள் மனச்சோர்வை ஏற்படுத்தக் கூடியதென கண்டறியப்பட்டுள்ளன.

ஐக்கிய இராச்சியத்தில் மனச்சோர்வு ஒரு பொதுக்கோளாறாக காணப்படு கிறது. இங்கு ஆண்களை விடவும் பெண்கள் இந்நோய்க்கு ஆட்பட்டுள்ளனர். இங்கு 10% வீதமான சிறுவர்கள் ஏதோவொரு நேரத்தில் மனோவியல் சம்பந் தப்பட்ட நோய்களுக்கு உட்படு கின்றனர். வயது முதிர்ந்தவர்களில் ஐந்து பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். இங்கு பெண்களை விடவும் ஆண்கள் மூன்று தடவையாவது தற்கொலை க்கு முயற்சிக்கின்றனர்.

மனச்சோர்வுக்கான அறிகுறிகளை உளவியல், உடலியல் மற்றும் சமூகவியல் சார்ந்த அடையாளங்களாக வகுக்கலாம்.

உளவியல் சார்ந்த அறிகுறிகள்

1. அதீத கவலையிலும், சோகத்திலும் ஆழ்ந்திருத்தல்,

2. தாழ்வு மனப்பான்மை

3. தன்மீது நன்மதிப்பற்ற எண்ணம்

4. வாழ்வில் நாட்டமில்லாமை

5. உதவுவதற்கு யாருமில்லாமல் தான் கைவிடப்பட்டதான உணர்வு

6. அழுது புலம்புவது போன்றதான உணர்வு.

7. குற்றவுணர்வு

8. எளிதில் கோபப்படல்/ காரணமின்றிக் கோபப்படல்

9. சகிப்புத் தன்மையற்றுச் செயற்படல்.

10. வாழ்வில் தீவிர அவ நம்பிக்கை கொள்ளல்.

11. தற்கொலை மீதான நாட்டம்.

12. மனம் அமைதியில்லாமல் சஞ்சலப்படல்.

உடலியல் சார்ந்த அறிகுறிகள்

1. உடல் செயற்பாடுகளில் சுறுசுறுப்பில்லாமை.

2. தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் கவனியாது விடல்.

3. சிறு விடயங்களில் கூட கவனம் செலுத்துவது கடினமாக இருத்தல்.

4. பேச முடியாமல் சிரமப்படல்/மிகவும் ஆறுதலாக கதைத்தல்.

5. பசியின் அளவு வித்தியாசப்படல், (பசியின் அளவு மிகக் கூடுதலாகவோ, குறைவாகவோ இருத்தல்)

6. பசியின் வேறுபாட்டைப் பொறுத்து உடல் நிறையில் மாற்றம் ஏற்படல்.

7. பாலியல் நாட்டமில்லாமை.

8. முன்பு எளிதாக செய்தவைகளைக் கூட செய்ய முடியாத சத்தியற்ற நிலை.

9. உடல் களைப்படைந்து சோர்ந்து காணப்படல்.

10. பெண்களின் மாதவிடாய்ச் சக்கரத்தில் மாற்றம் ஏற்படல்.

11. அடிக்கடி தலைவலி மற்றும் உடல்வலிகள் ஏற்படல்.

12. நித்திரைக் குழப்பம் ஏற்படல்.

சமூகம் சார்ந்த அறிகுறிகள்

1. பொது விவகாரங்களில் நாட்டமின்மை.

2. பாடசாலை வேலைகளில் மகிழ்ச்சியின்றி ஈடுபடல்.

3. நண்பர்களிடமிருந்து தூர விலகி நடத்தல்.

4. பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டமின்மை

5. குடும்ப வீட்டுப் பிரச்சினைகள் ஏற்படல்.

6. அன்புக்குரியவர்கள் மீதான பற்று அற்றுப்போதல்.

மனம் சோர்ந்து போனால் என்ன செய்யலாம்?

மனச்சோர்வுக்கான அறிகுறிகளிற் சிலவோ அல்லது பலவோ காணப்படும்போது முதலில் ஒரு உள நல ஆலோசகரைச் சந்திக்க வேண்டும். சாதாரண மனச்சோர்வாயின் அவரால் அது கையாளப்படும். தீவிரமான மனச்சோர்வுக்கு உட்பட்டோர் உள மருத்துவ நிபுணர்களின் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுவர்.

கடுமையான மனச்சோர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் உயர்வான சிகிச்சை முறைகள் தற்போது காணப்படுகின்றன. அவசர சிகிச்சையின் மூலம் அடிக்கடி ஏற்படும் மனச்சோர்வை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மனச்சோர்வு நோயை பல்வேறு சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியுமாயினும் மிகப் பொதுவான முறையில் மருந்துகள் மற்றும் உளவியல் உரையாடல் முறையில் (Psychotherapy) குணப்படுத்த முடியும்.

மனச்சோர்வுக்கெதிரான மருந்துகளை வழங்குவதன் நோக்கம், மூளையில் உள்ள நரம்புக் கடத்திகளை சாதாரண நிலைக்குக் கொண்டு வருவதாகும்.

மேலும் மனச்சோர்வு நோயை குணப்படுத்த தன்னாலான பின்வரும் வழிமுறைகளையும் கையாளலாம்.

* மறை எண்ணங்களுக்கு பதிலாக நேரான உறுதியான எண்ணங்களால் மனதை நிரப்பிக்கொள்ளல்.

* நேரத்துக்கு உண்ணவும், உறங்கவும் முயற்சித்தல்.

* மது அருந்துவதை கட்டுப்படுத்தல்.

* குடும்பப் பிரச்சினைகளை அமைதியான, உசிதமான முறையில் தீர்த்துக்கொள்ளல்,

* கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளிலிருந்து விடுபட ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாளல்.

* சமய கிரியைகள், வழிபாடுகள், தியானங்கள் முதலானவற்றில் ஈடுபடுவதோடு, பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைக்க வல்ல இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடல்.

* புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தலில், நேரத்தை கழித்தல்.

* தேகப் பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடல்

* நகைச்சுவை மற்றும் மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசித்தல்.

* மனதுக்கினிய நண்பர்களிடம் மனம் விட்டுப்பேசுதல்.

* கணினியில் நேரத்தைச் செலவிடல்.

* கலை இலக்கிய ஆக்கப் பணிகளில் ஈடுபடல்.

* காலை, மாலை நேரங்களில் மைதானம்/ கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடல்.

* சித்திரங்கள் வரைவதில் ஆர்வமுள்ளோர் அதில் ஈடுபாட்டைக் கூட்டுதல்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com