Contact us at: sooddram@gmail.com

 

ஐ.நா. மீது நம்பிக்கை ஏற்பட வேண்டுமாயின்...

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவினால் எமது நாட்டிற்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டுள்ள போர்க்குற்றச் சாட்டுத் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் தற்போது உலாவி வருகிறது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இலங்கை இராணுவம் செயற்பட்ட விதம் சர்வதேச நெறிமுறைகளை மீறியதுடன் பொதுமக்களையும் கொன்று மனித உரிமைகளை மீறிய செயலாகக் காணப்பட்டதாகவே ஐ.நா.வினால் குற்றம் சாட்டப்பட் டுள்ளது. இதனை வைத்துக்கொண்டு அமெரிக்கா எமது நாட்டிற்கு எதிராக இம்மாதம் ஜெனீவாவில் மீண்டுமொரு பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது.

ஆனால் உண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு வலுவற்றதாகக் காணப்படுகிறது. உலக நாடுகள் பலவும் இலங்கை மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. சர்வதேசப் பயங்கரவாதி என வர்ணிக்கப்பட்ட பின்லேடனை அமெரிக்கப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்யச் சந்தர்ப்பம் இருந்தபோதும் வேண்டுமென்றே சுட்டுக் கொன்றது. இது உலகறிந்த விடயம். ஆனால் உலகின் மற்றுமொரு பயங்கரவாதியாக வர்ணிக்கப்பட்ட அதுவும் உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரான பிரபா கரனும் அவரது சகாக்களும் அமெரிக்கப் படைகள் போலல்லாது இலங்கை இராணுவம் நடத்திய மரபுவழிப் போர் வழி முறையிலேயே கொல்லப்பட்டனர். இதனால் அமெரிக்காவிற்கு எமது நாட்டிற்கு எதிராகப் பிரேரணையைக் கொண்டுவர எவ்விதமான தகுதியோ அல்லது அருகதையோ கிடையாது.

உலக நாடுகளையே உலுக்கிய இரு பயங்கரவாதிகளை கொன்று மக்களின் எதிர்கால வாழ்வில் பயமற்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திய இரு நாட்டுத் தலைவர்கள் மீதும் ஐக்கிய நாடுகள் சபை இரு வகையான நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பது கவலை தரும் விடயமாகும். உண்மையிலேயே அமெரிக்கா அல் ஹைதா இயக்கத்தின் தலைவரை மட்டுமே அழித்துள்ளது. அதன் தலைவர்கள் உறுப்பினர்கள் இன்றும் ஆயுதப் போராட்டத்தில் அமெரிக்கா உட்படப் பல நாடுகளுக்கும் சவாலாகவே இருந்து வருகின்றனர். ஆனால் இலங்கையோ முப்பது வருட காலமாக இருந்து வந்த புலிகள் இயக்கத்தையே வேரோடு அழித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே புலிகள் இயக்கம் இருந் துள்ளது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உட்பட எத்தனையோ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எண் ணிலடங்காப் பொதுமக்கள் அதனைவிடவும் சகோதர இயக்கப் படுகொலைகள் என புலிகள் செய்த கொலைகளின் பட்டியல் மிக நீண்டதாகவே உள்ளது.

தமது நாட்டினால் தடை செய்யப்பட்ட இத்தகைய ஒரு பயங்கரவாத அமைப்பினை அழித்தமையை தவறு என்றும் மனித உரிமை மீறல் என்று ஐ.நா.வில் அமெரிக்கா வாதிடுவதும், அதற்குச் சில நாடுகள் ஆதரவு கொடுப்பதுவும் உண்மையிலேயே வேடிக்கையாக உள்ளது, தமக்கு ஒரு கொள்கை ஏனையோருக்கு வேறுவிதமான கொள்கை என்பதாகவே அமெரிக்காவினது நிலைப்பாடு உள்ளது.

இத்தனை கொடிய பயங்கரவாத அமைப்பை ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கம் மக்களின் ஆதரவுடன் தனது படையைக் கொண்டு அழித்தமையைத் தவறு என்று எவராவது குறிப்பிட்டால் அதனை விடவும் முட்டாள்தனம் எதுவுமாக இருக்க முடியாது.அதனையே இன்று ஐ.நா. நிபுணர் குழு செய்துள்ளது.அப்படியாயின் பயங்கரவாதிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக் கூடாதா? அவர்களது பயங்கரவாதச் செயல்களை ரசித்துக் கொண்டு மக்களை அவர்கள் கொன்று குவிப்பதை ஓர் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? எனும் கேள்வி எழுகிறது. இறுதியாக நடத்தப்பட்ட உச்சக் கட்டப் போரில் பொது மக்கள் சிலர் கொல்லப்பட்டது உண்மையாகவே இருந்தாலும் கூட அது புலிகளால் கேடய மாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை அவர்களே சுட்டுக் கொன்றதாக சாட்சிகள் கூறுகின்றன. போர் இடம்பெற்ற சம்பவத்திலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம், அப்பகுதியில் கடமையாற்றிய வைத்தியர்கள், அரச அதிகாரிகள், தப்பிவந்த பொதுமக்கள் எனப் பலரும் புலிகளே பொதுமக்கள் சிலர் மரணமாவதற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேரில் இருந்த சாட்சிகள் இந்தச் சாட்சிகளை விடுத்து வெளிநாடுகளில் விலை கொடுத்து வாங்கப்பட்ட ஊடக நிறுவனங் களினதும் ஊடகவியலாளர்களினதும் சோடிக்கப்பட்ட வீடியோ ஒளி நாடாக்களை வைத்துக்கொண்டு ஐ.நா. தனது உறுப்புரிமை பெற்ற ஒரு ஜனநாயக நாடான இலங்கை மீது அப்பட்டமான குற்றச்சாட்டைச் சுமத்துவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது எவரினதோ வற்புறுத்தலின்பேரில் அல்லது புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பாரிய பணப்பரிமாற்றத்தின் விளைவாகச் சோடிக்கப்படும் ஒரு குற்றச் சாட்டாகவே கொள்ள முடியும். அமெரிக்கா பின்லேடனைக் கொன்றது சரி என்றால் அதே அமெரிக்கா ஈராக்கில் அதன் சர்வாதிகார அதிபரைக் கொன்று இன்றுவரை பின்னணியிலிருந்து நடத்திவரும் பயங்கரவாதக் கொலைகள் சரி என்றால் சிரியா, ஜெர்மன் போன்ற நாடுகளில் உள்ளூர் பயங்கரவாதக் கிளர்ச்சிக் காரர்களை கொன்று வருவது சரி என்றால் இலங்கை பிரபாகரனைக் கொன் றதும் சரியே. அமெரிக்காவிற்கு ஒரு நியாயம். இலங்கைக்கு ஒரு நியாயம் வழங்க உலக நாடுகள் இடமளிக்கக் கூடாது.

புலிகளை அழித்தமைக்கு இலங்கை மீது விசாரணை என்றால் பின் லேடனை அழித்தமைக்காகவும் ஏனைய பயங்கரவாதத் தலைவர்களை அழித் தமைக்காகவும் அமெரிக்கா மீதும் ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். அதுதான் ஐ.நா.வின் நேர்மையான பக்கச்சார்பற்ற செயற்பாட்டை உறுதிப் படுத்தும் இல்லையேல் எதிர்காலத்தில் ஐ.நா. வின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லாது போகும்.

(நன்றி: தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com