Contact us at: sooddram@gmail.com

 

ஜோஷி இப்படிப் பேசலாமா? ஆதங்கப்படும் ஈழத் தமிழர்கள்

'ன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை அழிக்க காங்கிரஸ் அரசுதான் துணை புரிந்தது!’ என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க... இந்திய எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யிடம் நியாயம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் பிரிட்டன் ஈழத் தமிழர்கள். அடுத்து, பி.ஜே.பி. ஆட்சிக்கு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், அவர்களாவது தமிழர்களின் நியாயத் துக்காக நிற்க வேண்டும் என்பதை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த மாதம் டெல்லிக்கு வந்த 'பிரித்தானிய தமிழர் பேரவை’யின் தலைவர்களில் ஒருவரான பத்மநாதன் தலைமையிலான குழுவினர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் பி.ஜே.பி-யின் முன்னணித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலரையும் சந்தித்துப் பேசினர்.

இதற்கிடையில், இலங்கை வருமாறு சுஷ்மா சுவராஜுக்கு அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்திருந்தது. 'போர் பாதிப்புகளை சுதந்திரமாகப் பார்வையிட வெளிநாட்டு ஊடகங்கள், தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு மறுக்கும் நிலையில்... சுஷ்மா அங்கு சென்றால் போர்க் குற்றம் சாட்டப்படும் அரசுக்கு ஆதரவாக அமைந்துவிடும்என்று பிரிட்டன் தமிழர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதை ஏற்றுக்கொண்ட சுஷ்மா, உடனே இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்துவிட்டார்.

ஆனால், பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, திடீரென இலங்கைக்குப் பயணம் செய்தார். சிங்கள இன வெறியர்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் 'அனகாரிக தர்மபாலாஎன்ற புத்த மார்க்கவாதியின் நினைவு நிகழ்வில் ஜோஷி விரிவுரை ஆற்றினார். இலங்கை பிரதமர் ஜெயரத்ன, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் உள்பட பலருடனும் பேசினார்.

பின்னர் பேசிய ஜோஷி, ''வன்முறை நீங்கிய அமைதி தவழும் நாடாக இலங்கை மாற வேண்டும். அதற்கு ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என அனைத்து இலங்கையர்களும் பணியாற்ற வேண்டும்!'' என்கிறபடி கருத்து வெளியிட, புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு! ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இருந்து ஆதரவுக் குரல் கொடுத்துவரும் இந்து ஆதரவு அமைப்புகள் தனி ஈழ நாட்டுக்கு ஆதரவளித்து வந்த நிலையில்... ஜோஷியின் கொழும்புப் பேச்சு புலம்பெயர் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

''ஏதோ ஒரு காரணத்துக்காக ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களைக் கருவறுத்துக் கொன்றதற்கு காங்கிரஸ் கட்சி துணையாக நின்றது. படுகொலைக்கு எதிராகவும், ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும் நடந்துகொண்ட பி.ஜே.பி., இப்போது காங்கிரஸ் வழியிலேயே செல்கிறதா? கட்சியின் நிலைப் பாட்டுக்கு மாறாக மூத்த தலைவரான ஜோஷி பேசலாமா?'' என அடுத்தடுத்து கேள்விகளை அள்ளி வீசுகிறார்கள், பிரிட்டன் தமிழர்கள். பி.ஜே.பி. மூத்த தலைவர்களை சந்தித்துவிட்டுச் சென்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் பத்மநாதனிடம் நாம் இதுபற்றி கேட்டோம்.

''இலங்கைத் தீவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு முன்பே, ஈழத் தமிழருக்கு தனியான அரசு செயல்பட்டது. சிங்களர்களின் கையில் அதிகாரம் வந்ததும் தமிழரின் அரசாட்சி பறிபோனது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி ஆட்சி என அமைதி முறையில் தமிழர்கள் போராடினர். எதையுமே தர சிங்களத் தரப்பு முன்வரவில்லை. அன்று முதல் இன்று வரை திட்டமிட்ட இனப் படுகொலைகளை நடத்திவருகிறது. ஈழத் தமிழர்களை எங்களின் பாரம்பரியப் பிரதேசங்களைவிட்டு அகற்றி, அந்த நிலத்தை இலங்கை அரசு தனதாக்கிக்கொண்டு வருகிறது. புத்த மதத்தைப் பின்பற்றாத தமிழ் மக்களின் நிலங்களில், புத்த சின்னங்களை அமைத்து, ஈழத்தை சிங்கள பவுத்தமயமாக்கி வருகிறார்கள். இது ஒரு முழுமையான இன அழிப்பு. போர் முடிந்த பிறகும் ஈழத்தில் தமிழர்களின் துன்பம் தீரவில்லை. ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், இலங்கை அரசு செய்த இனப் படுகொலை, போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக சுதந்திரமான விசாரணைக் குழு வேண்டும் என்கிறார், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். ஐரோப்பிய நாடாளுமன்றமும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியாவும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆறரை கோடி தமிழ் மக்களும் வாழும் பாரதத்தை ஆளப் போகிறவர்கள், இதை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும். வரலாற்றில் இருந்த தனி ஈழ அரசையும் மீட்டுத்தர வேண்டும். ஈழத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அவாவும் இதுதான்!'' என்று முடித்தார் பத்மநாதன்.

- இரா.தமிழ்க்கனல்

"ஜோஷியின் கொழும்புப் பேச்சு புலம்பெயர் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது" - எந்தப் புலம்பெயர் தமிழர்கள்னு சொன்னா நல்லா இருக்கும். ஓ, இப்போ தமிழர்னா, ஒன்லி இலங்கைத் தமிழர் தான் போல. சொல்லவே இல்லை? -- ஜோஷி சொன்னதில் தப்பே இல்லை. வேற்றுமையில் ஒற்றுமைனு கேள்விப்பட்டதில்லையா? அதே போல, நானறிந்த வரையில், அங்குள்ள தமிழர்களின் நிலை மெல்ல மெல்ல மாறிவருகிறது. அதைக் குலைக்கிறதுக்குன்னே வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இம்மாதிரி ஒரு கூட்டம . ஏம்பா, புலம்பெயர்ந்த ....ங்க எல்லாம், திரும்பி இலங்கைக்கு போய் கொஞ்சமாச்சும் போராடுங்களேன். நாடு கடந்த தமிழீழம், காடு கடந்த தமிழீழம்னு பம்மாத்து பண்ணாமல், ஒற்றுமையான ஈழம்னு ஒன்றை அமைக்க முயலலாமே? இல்லைன்னா உங்களை மாதிரி கொழுப்பெடுத்தவனுங்களால, அங்கே அப்பாவி மக்களின் நிலை இன்னும் இன்னும் மோசமடையும். புலிங்க காசை திருப்பி யாரும் கேட்கல.

*''இலங்கைத் தீவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு முன்பே, ஈழத் தமிழருக்கு தனியான அரசு செயல்பட்டது** இந்தியாவிலும் பல சமஸ்தானங்கள் இருந்தன. அடதை இப்போதுபேசி அனைவரும் பலனாடு கேட்கலாமா? ஒன்றுபட்ட இலங்கை அனைவருக்கும் அமைதி தரும்!!!

கொள்கை என்று எதுவும் இல்லாமல் பதவி ஒன்றே குறி என்று அலையும் பிஜேபியைப் பின் தொடர்ந்து போவது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் குழுக்களுக்கு நல்லதல்ல. அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒருவகையில் அவர்கள் சிங்கள அரசிற்கு நெருங்கியவர்கள்... அமெரிக்கா இஸ்ரேல் ஆகியவற்றிற்கு பிஜேபி நெருக்கம். அதே நெருக்கம் சிங்கள அரசிற்கும் உண்டு.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com