Contact us at: sooddram@gmail.com

 

''அமைதியை விரும்பும் தமிழக மக்களுக்கு விடப்படும் சவால்!'' - ஏழு பேர் விடுதலை பற்றி ஒரு வாசகர் கடிதம்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை தமிழக அரசு விடுதலைசெய்ய எடுத்த முடிவு, அதற்கு தமிழ் அமைப்புகள் தெரிவித்துவரும் ஆதரவு ஆகியவை பற்றி திருச்சி திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த வாசகர் மூ.சுதந்திர செல்வன் எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகள்:

 ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு கொலைக்குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்தவுடன், இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடும் மனிதர்களை நினைத்தால், 'நெஞ்சு பொறுக்குதில்லை... இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்என்ற மகாகவி பாரதியாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ராஜீவ் காந்தி இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்து கம்ப்யூட்டர் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அவரே மீண்டும் பிரதமராக வருவார் என்ற நேரத்தில், வெளிநாட்டுத் தீவிரவாத கும்பலால் திட்டமிட்டு மனித வெடிகுண்டால் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்குக் காரணமானவர்களே... இன உணர்வு என்ற விஷத்தைத் தூவி விடுதலைப் புலிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிரமாக ஆதரித்தவர்கள்தான். ஏனென்றால், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியவர்கள் அவர்கள்தான். தமிழ், தமிழர் நலன் என்று பேசி, உணர்வுகளைத் தூண்டிவிட்டு, பிரிவினைவாதம் பேசி சுயலாபம் அடைய நினைப்பவர்களுக்குக் கீழ்க்கண்டவற்றை முன்வைக்கிறேன்.

1. 1965-ம் வருடம் இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நான்கு தலைமுறைகளை இந்தி கற்றுக்கொள்ள முடியாமல் செய்தவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான ஆங்கில பயிற்று மொழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு இருக்கிறதே? அந்தப் பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுகிறது. அவற்றில் படிப்பவர்கள் எல்லாம் இந்தியை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக் கொண்டவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தானே? பணம் இருப்பதால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை வீட்டு தமிழர்கள் பிள்ளைகள்தானே?

2. தமிழையே தாய்மொழியாகக்கொண்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே வாழ்ந்துகொண்டு இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள், பல கிராமங்களில் சாதி இந்துக்கள் வாழும் தெருக்களில் செருப்பணிந்து செல்வதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் ஏறிச் செல்லக் கூடாது என்றும் கட்டுப்பாடு இருக்கிறது. அவர்களுக்கு இரட்டை டம்ளர் வைத்து டீ வழங்கப்படுகிறது. தமிழர் நலன் பேசுபவர்கள் இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது உண்டா? அப்படி போராட்டம் நடத்தினால், மற்ற சாதி வாக்குகள் தங்களுக்கு விழாது என்ற சுயநலம்தானே?

3. ஓர் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று மனித நேயம் பேசுபவர்களுக்கு... ராஜீவ் காந்தியுடன் 18 பேர் கொல்லப்பட்டார்களே... அவர்களும் தமிழர்கள்தானே. அப்போது எங்கே போயிற்று மனித நேயம்?

4. கொலைகாரர்களில் ஒருவரான நளினிக்கு பெண் என்ற முறையில் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பரிந்துரை செய்தது சோனியா காந்திதானே? அந்த மனித நேயத்தை இவர்கள் பாராட்டியது உண்டா? அதுதானே உண்மையான மனித நேயம்?

5. ஏழு பேர் விடுதலையை இனத்தின் அடிப்படையில் கொண்டாடுவதை ஏற்றுக்கொண்டால்... அப்சல் குரு தூக்கிலிடப்படாமல் விடுதலை செய்யப்பட்டு, அவரைச் சார்ந்த சிறுபான்மை சமூகத்தவர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி இருந்தால், சிறுபான்மைச் சமூகத்தவர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டு இருப்பார்கள். பல இடங்களில் மதக்கலவரம் நடந்திருக்குமே?

7. 'பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்தார். அது ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகத்தான் என்பது அவருக்குத் தெரியாதுஎன்று அவர் தாயார் சொல்கிறார். 'பேட்டரி வாங்கியதற்கான பில்லை பேரறிவாளன் வேறொருவரின் பெயரில் வாங்கினார் என்று பேட்டரி கடையின் உரிமையாளர் சாட்சியம் அளித்திருக்கிறார்என்கிறார் விசாரணை அதிகாரி ரகோத்தமன். பேட்டரி வாங்கியது சாதாரணமாகத்தான் என்றால், பில்லை ஏன் வேறு ஒருவர் பெயரில் வாங்க வேண்டும்?

8. இரண்டு சகோதரர்களுக்குள்ளோ அல்லது நண்பர்களுக்குள்ளோ ஏற்படும் வாய் தகராறு முற்றி கொலையில் முடியும் சம்பவங்களை நாம் நித்தமும்  ார்க்கிறோம். அதுபோன்ற கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் கொலையாளிக்கு வேண்டுமானால் ஆயுள் தண்டனை வழங்கலாம். ஏனெனில் அதுபோன்ற கொலைகள், உணர்ச்சி வேகத்தில் நடைபெறுவது. ஆனால், ராஜீவ் கொலை போன்ற சம்பவங்கள் திட்டமிட்டு, பல்வேறு சதிகள் செய்து செய்யப்படுவது. அதற்குத் தூக்கு தண்டனைதான் வழங்கப்பட வேண்டும்.

9. சாதி, மதம், இனம், மொழி என்ற அடிப்படையில் திட்டமிட்டு கொலை செய்யும் கொலையாளிகளையோ அல்லது தீவிரவாதிகளையோ விடுதலைசெய்தால் என்ன நடக்கும்? தங்கள் சாதி சார்ந்த கொலையாளிகளை விடுதலைசெய்ய வேண்டும் என்று சாதியச் சங்கங்கள் போராடினால், சட்டம் - ஒழுங்கு என்னவாகும்? அமைதியை விரும்பும் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியுமா?

சமீபத்தில் மதுரை வந்திருந்த கட்சித் தலைவர் ஒருவரை பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பார்த்து, 'நீங்கள் முதல்வரைச் சந்திக்கக் கூடியவர். என் விடுதலைக்காக சி.எம்-மிடம் சிபாரிசு செய்தால் நம்ம சாதி ஓட்டுகள் அப்படியே உங்களுக்கு...’ என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இப்படி ஒவ்வொரு சாதியினரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவரும் கொலை குற்றவாளிகளை விடுதலைசெய்யச் சொல்லிப் போராடினால், நாடு என்ன ஆகும்? 'நமக்குப் போராட ஆட்கள் இருக்கிறார்கள்என்ற எண்ணம் ஏற்பட்டு, யாரும் யாரையும் கொலைசெய்யலாமே! அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின், அப்புறம் சட்டம் எதற்கு? காவல் துறை எதற்கு? நீதிமன்றம் எதற்கு?

10. ராஜீவ் காந்தியைக் கொலைசெய்த குற்றவாளிகளை சுய லாபத்துக்காகவோ அரசியல் லாபத்துக்காகவோ விடுதலைசெய்வது என்பது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். இது இந்திய இறையாண்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் விடப்பட்ட சவால் மட்டுமல்ல... அமைதியை விரும்பும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விடப்பட்ட ஒரு பெரும் சவாலாகவே அமையும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com