Contact us at: sooddram@gmail.com

 

தமிழருக்கு தமது சுயரூபத்தை வெளிக்காட்டிய சர்வதேசம்

சர்வதேசம், சர்வதேசம் எனக் கூறி உலக நாடுகளின் பின்னால் சுற்றித் திரிந்து தமது சொந்த நாட்டிற்கு எதிராகவே விசாரணை நடத்தி சட்டநட வடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வந்த தமிழ் அரசியல் தரப்பினருக்கு அச்சர்வதேசம் ஜெனீவாவில் நல்லதொரு பாடத்தைப் புகட் டியுள்ளது. உள்நாட்டு பயங்கரவாத அழிப்பு யுத்தத்தில் எமது படைவீரர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறிய தமிழ்த் தரப்பு உள்நாட்டில் அதனைத் தீர்க்க முயலாது சர்வதேசத்திடம் நியாயம் கேட்டுப் புறப்பட்டு இன்று இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உலகில் பயங்கரவாதத்தை அழிப்பதில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா இவர்களது ஒரு பக்கக் கதைகளை மட்டுமே கேட்டு ஒரு ஜனநாயக நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கும் என இவர்கள் நம்பியிருந்தமை இவர்களது அறி யாமையைக் காட்டியுள்ளது. உள்நாட்டில் உங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என சர்வதேசம் இன்று கூறியுள்ளமை இது முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் இக்கோரிக்கை அமெரிக்கா உட்படப் பல நாடுகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா போர்க் குற்ற விசாரணையை சர்வதேச மட்டத்தில் நடத்த பிரேரணை கொண்டுவரும், அதற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கும் என்பதாக தமிழ்த் தரப்பு நம்பியிருந்து ஏமாந்துள்ளது. பயங்கரவாதிகளை அழிக்குமாறு உலக நாடுகளுக்குக் கூறி வருவதுடன் நேரடியாகவே ஒத்துழைப்பும் வழங்கிவரும் அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகள் அப்பயங்கர வாதிகளை அழித்தமையை குற்றம் என விசாரணை நடத்த முன்வருமா என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் எப்போதோ புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

உள்நாடு ஒன்றில் சிறுபான்மையாக வாழும் ஓர் இனம் தாம் பெரும் பான்மையாக வாழும் இனத்தால் பாதிக்கப்படுவதாகத் தொடர்ச்சியாகக் கூறி வருவதை அமெரிக்கா கருத்திற் கொண்டு சில நகர்த்தல்களை மேற் கொண்டதே தவிர ஆரம்பம் முதலே இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வி தமான அழுத்தத்தையும் அது கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் இலங்கை அரசாங்கம் போருக்குப் பின்னர் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவ துடன் உள்நாட்டிலேயே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எடுத்து வரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அமெரிக்கா உட்பட பல உலக நாடுக ளும் அவதானித்ததன் விளைவாகவே சர்வதேச விசாரணைக் கோரிக்கை தோல்வி கண்டது.

அமெரிக்காவும், இலங்கை வரும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் தம்மால் முன்வைக்கப்படும் பாதிப்புக்கள், இழப்புக்கள் தொடர்பான ஆவணங்களை மட்டுமே சேகரித்துச் செல்வதாக தமிழ்த் தரப்பு இதுவரை காலமும் நம்பியிருந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளும் சரி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகளும் சரி இலங்கை வந்து செல்லும்போது இருதரப்பினரும் முன்வைக்கும் கருத்துக்களை முறையாக உள்வாங்கியே நாடு திரும்புகின்றனர். அவர்கள் அனைவருமே தமது இராஜதந்திர பணிகளைப் பக்கச்சார்பின்றிச் செய்துள்ளனர்.

இந்த உண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கற்றறிந்த தலைவர் களுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்கள் உள்ளூர் அரசியலுக்காக அவற்றை வெளிக்காட்டவில்லை. அண்மையில் ஜெனீவாவில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி எழிலனை வாயை மூடிவைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவருக்கு உத்தரவிட்டமை இதற்கு சான்றாக அமைகிறது. அதேபோன்று இவ்விடயம் நன்கு தெரிந்தமையினால்தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் அரசியல் கதைப்பதில்லை எனக் கூறி வருவதுடன் ஜெனீவா விஜயத்தையும் தவிர்த்துக் கொண்டார்.

உண்மையில் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள உலக அரசியல் தெரியாத சிலரும், சுயலாப அரசியல் செய்து வரும் மனோ கணேசன் போன்ற சிலரும், விடயம் தெரிந்திருந்தும் பிரசாரத்திற்காகவும், சூடான செய்திகளை வெளியிடுவதற் காகவும் சில தமிழ் ஊடகங்களுமே சர்வதேச விசாரணைக் கோரிக்கை எனும் மாயையை தமிழ் மக்கள் மனங்களில் விதைத்தன. இதற்கு புலத்தில் தொடர்ந் தும் சொகுசு வாழ்க்கை வாழ விரும்பும் தமிழர் பலரும் ஒத்துழைப்பு நல்கி வந்தனர்.

இன்று அனைத்துமே புஸ்வாணமாகியுள்ள நிலையில் விசாரணை நடத்துவதாயின் உள்நாட்டிலேயே நடத்தி தீர்வு காண முன்வருமாறு சர்வ தேசம் கையை விரித்துள்ளது. இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்படப் பல தமிழ் அரசியல்வாதிகளும் முன்னரேயே கேட்டிருந்தனர். ஜனா திபதி அவர்கள் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்த வருமாறும், பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கருத்துக்களை முன்வைக்கு மாறும் கோரிக்கை விடுத்தார். சர்வதேசம் தமக்கு எல்லாம் தரும் என நம்பி அவை அனைத்தையும் தட்டிக் கழித்த தமிழ் அரசியல் தரப்பின் நிலை இன்று கவலைக்கிடமாகியுள்ளது. அரசாங்கத்துடன் பேசியே தீர்வினைக் காண வேண்டிய கட்டாய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழ் அரசியல் தரப்பு இனியாவது வீறாப்பு பேசுவதையும், தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பதையும் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வொன்றினைக் காண முன்வர வேண்டும். அதற்கு தமிழ்க் கூட்டமைப் பிலுள்ள தலைவர் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும். கிணற்றுத் தவளைகளாக இருந்து கொண்டு உலக அரசியல் நிலை தெரியாது அறிக்கை அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளை தமிழ் ஊடகங்கள் ஓரங்கட்ட வேண்டும். தமிbழம், தமிழ்த் தேசியம் எனப் புறப்பட்ட தமிழ்ச் சமூகம் இன்று சர்வதேசத்தினால் நம்பிக் கெட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையேல் மிச்சமாக இருப்பதையும் இழந்துவிடும் நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலுள்ள சிலர் தமிழினத்தைத் தள்ளிச் சென்றுவிடுவர் என்பதே உண்மை. இலங்கை வந்து சென்ற வெளிநாட்டுத் தூதுவர்களிடமும், ஐ.நா பிரதிநிதி களிடமும் ஆயர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தெரிவித்த கருத்துக்க ளுக்கு வர்ணப் புகைப்படங்களுடன் தலைப்புச் செய்திகளைப் போட்ட தமிழ் ஊடகங்கள் இனியாவது சர்வதேசத்தின் உண்மை நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

அரசாங்கத்தை தமிழ் மக்களின் விரோதியாகச் சித்தரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். உள்ளூரிலேயே விசாரணையோ, தீர்வோ காண ஆக்கபூர் வமான கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்களிடம் கேட்டு வாங்கிப் பிரசுரிக்க வேண்டும். தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமெனத் திறந்த மனதுடன் இருக்கும் ஜனாதிபதி அவர்கள் மூலமாக விரைவானதொரு தீர்வை உள்நாட்டிலேயே காண அனைத்துத் தரப்பினரையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com