Contact us at: sooddram@gmail.com

 

மீண்டு வருமா ஆர் 370?

திட்டமிட்டே தொடர்பு துண்டிப்பு, உலகுக்கு அறிவித்தது மலேசியா

“நிச்சயம் விமானம் கடத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று தந்தையொருவர் கதறியழும் காட்சியை தொலைக்காட்சிகளில் பார்க்கக் கூடியதாகவிருந்தது. " எனக்கு அவன்தான் ஒரேயொரு பிள்ளை." அவனில்லாவிட்டால் நான் வாழ்ந்தென்ன பயன்" என்று அண்மையில் காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ_க்கு சொந்தமான ஆர் 370 விமானத்தில் பயணித்த 239 பயணிகளில் சீனாவைச் சேர்ந்த ஒருவரின் தந்தை அழும் காட்சிகளையும் இவ்விமானத்தில் பயணித்த ஏனையோரின் உறவுகளின் நிலைமைகளைப் பார்க்கும் போதெல்லாம் நடுவானில் அந்தரத்தில் பறத்தலின் அபாயம் சில்லென்று தண்டுவடத்தினைத் தாக்கிப்போகும்.

இவ்வாறான விபத்துகள் குறித்து நாம் அவ்வப்போது கேள்விப்படுகின்றோம். ஆனாலும் பல லட்சம் பேர் நாளாந்தம் ஏதேதோ தேவைகளுக்காக வானில் பறந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

வழக்கமாக இவ்வாறான விமான விபத்துகள் நேரும் சந்தர்ப்பங்களில சில மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது ஒரிரு நாட்களுக்குள்ளாகவோ விமானத்தினதும் அதில் பயணித்தோரினதும் நிலை குறித்தும் தகவல்கள் வெளியாகிவிடும். ஆனால் ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும், எல்லாப் பக்கத்தாலும் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் விமானத்தின் கதி என்ன வென்பது மர்மமாயிருப்பது, விஞ்ஞானம் அசுர வளர்ச்சி கண்டுவிட்ட ஒரு காலத்தில் சற்றே அச்சம் தருவதுதான்.

மலேசிய தலைநகர் கோலாலம்பு+ரில் இருந்து சீன தலைநகர் பீஜpங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், கடந்த ஞாயிறன்று அதிகாலையில் காணாமல் போனது. கடல் மற்றும் ஆகாயமார்க்கமாக தேடியும் அந்த விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை.

தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த அந்த விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், விபத்தில் சிக்கி அனைவரும் உயிரிழந்தார்களா? அல்லது விமானம் கடத்தப்பட்டதா? என்று பலவாறாக சிந்திக்கப்பட்டது.

விமானத்தின் கட்டுப்பாட்டறையில் இருந்து கடைசியாகக் கிடைத்த செய்தி றந யசந கiநெ . பழழன niபாவ என்பதுதான். இவ்விமானத்தின் தலைமை விமானியாகவிருந்தவர் 53 வயதான கப்டன் சஹாரி அஹமட் 'h. ஏறத்தாள 18,365மணிநேர பறத்தல் அனுபவங் கொண்டவர். சில சமயங்களில் கட்டுப்பாட்டறைக்குள் பயணிகளை அனுமதித்திருக்கிறார் அவர் என்ற குற்றச்சாட்டுக்களும் தற்போது எழுந்துள்ளன.

இவ்விமானத்தில் போலி கடவுச்சீட்டில் இருவர் பயணித்ததாகவும் அவர்கள் விமானத்தினைக் கடத்தியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.

காணாமல்போயுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பயணித்திருந்த இரண்டு நபர்கள் பற்றிய விவரங்களை சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல், வெளியிட்டது. இவர்கள் இருவருமே ஈரானியப் பிரiஜகள் என்று அது தெரிவித்தது. இவர்கள் இருவருமே செல்லுபடியாகக்கூடிய ஈரானிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், பின்னர் அங்கிருந்து பீஜpங் கிளம்பிய அந்த விமானத்தில் திருடப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஏறியிருந்தார்கள் என்றும் இண்டர்போல் கூறுகிறது.

கடவுச்சீட்டைக் கொண்டு பயணித்திருந்த இரண்டு பேரில் ஒருவர் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராகவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என மலேசிய பொலிசார் கூறுகின்றனர்.

19 வயது ஈரானிய இளைஞரான இந்நபர் nஜர்மனிக்குள் குடியேற முயன்றிருந்த ஒருவராக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

nஜர்மனியில் வாழும் தனது தாயைச் சென்றடைவதற்காக இந்த இளைஞன் nஜர்மனிக்கு செல்ல முற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விமானம் கடத்தப்பட்டடிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் நிராகரிக்கப்பட்டு மீண்டும் அது வீழ்ந்து நொறுங்கியிருக்கலாம் என்ற வகையில் மீண்டும் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையிலேயே மீண்டும் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகின.

239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யாவில் அதி நவீன தொழில் நுட்ப உதவியுடன் கடத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை ஆதாரங் காட்டி செய்திகள் வெளியாகின.

உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் 4 பேரும் ஒருசேர இந்த விமானத்தில் பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் போலி கடவுச்சீட்டு மூலம் அந்த விமானத்தில் பயணித்து சீனா சென்று தரையிறங்கும் முன் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோள்; கண்ணில் படாமல் ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர்.

அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன அரசாங்கம் பயணிகளின் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து அகற்றி தனியார் விடுதியில் தங்க வைத்தனர்.

அவ்வுறவினர்களை ரகசியமாக விமான பயணிகளிடம் பேச வைத்துள்ளனர். இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீன அரசாங்கமும் தங்கள் நாட்டிற்கு ரஷ்யா நட்பு நாடு என்பதாலும் இரு நாட்டிற்கும் அவப்பெயர் ஏற்படாமல் இருக்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதாகவும் கூறப்பட்டது.

காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீன பயணியின் செல்போன் விமானம் காணாமல்ப்போன 3, 4 நாட்களின் பின்னரும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் புதிய தகவலை வெளியிட்டனர்;. அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது, மணி ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் தெரிவித்தனர்.

அந்த பயணிக்கு டயல் செய்யும் காட்சி பீஜpங் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது. எனவே, செல்போன் சிக்னல்களை வைத்து விமானத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், இதற்காக செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பயணிகளின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தும் வகையில் சீனா 10 செயற்கைக்கோள்களை செயல் படுத்தியது. இதையடுத்து, கடந்த புதன் கிழமை சீன செயற்கைக்கோள்கள் தென் சீன கடற்பகுதியில் மர்ம பொருள் மிதப்ப தாக படங்களை வெளியிட்டது. பிறகு, மலேசியா மற்றும் வியட்நாமுக்கு இடைப் பட்ட பகுதியில் இவ்விருநாடு களையும் சேர்ந்த மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டை யில் இறங்கினர். ஆனால் அதுபோன்ற மிதக்கும் பொருள் எதுவும் அங்கு தென்படவில்லை. இந்நிலையில், சீன அதிகாரிகள் தங்கள் செயற்கைக்கோள்கள் தவறாக படங்களை அனுப்பியிருப்பதாக வும், விமானத்தின் பாகம் எதுவும் அந்த படத்தில் இல்லை எனவும் தெரிவித்தனர். மலேசிய விமானம் வியட்நாம் வான் பகுதியில் தெற்கு சீன கடற்பகுதியில் விழுந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. பின்னர் மலாக்கா ஜலசந்தி பகுதி யில், அந்த விமானம் கடைசியாக பறந்ததாக மலேசியா தெரிவித்தது.

இதையடுத்து அப்பகுதியில் கடந்த 5 நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதைய டுத்து அந்தமான் கடற்பகுதி வரை தேடும் பணியை விரிவுபடுத்த மலேசியா முடிவு செய்தது.

, காணாமல் போன விமானம் ரேடாரின் தொடர்பில் இருந்து அகன்ற நிலையில், சுமார் 4 மணி நேரம் வரையில் வானத்தில் சுற்றி திரிந்துள்ளது. இதனால் இந்திய பெருங்கடல் அல்லது வங்கக் கடல் பகுதியில் விமானம் விபத்துக்கு உள்ளாகி விழுந்திருக் கலாம் என்ற சந்தேகமே தற்போது வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து, இந்திய பெருங்கடல் பகுதியிலும், சென்னை கடற்கரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை விமானங்களும், கப்பல்களும் ஈடுபடுத்தப்பட ;டுள்ளன. அந்தமான் தெற்கே இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 3 போர்க் கப்பல்களும் அந்தமான் கடலில் சுமார் 35,000 சதுர கி.மீட்டர் தொலைவுக்கு விமானத்தைத் தேடி வருகி ன்றன. இவை தவிர தாய் லாந்து கடலில் முகாமிட் டுள்ள இந்தியா வின் சாகர் போர்க்கப்பலும் விரை வில் தேடுதல் பணியில் இணைய உள்ளது. மேலும் இந்தியாவின் உளவு செயற் கைக் கோளான ருக்மணி மூலமும் விமானத்தை தேடும் பணி தொடங்கியுள்ளது.

காணாமல்ப்போன மலேசிய விமானம் குறித்த முன்னுக்குப் பின்னான செய்திகள் வெளிவந்த வண்ணமேயுள்ளன. இவ்வாறு விமானங்கள் மர்மமான முறையில் காணாமல்ப்போவது இது முதற்தடவையல்ல.

டிரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன்ஸ் விமானம் 800 1996ம் ஆண்டு ஜ_லை 17ம் திகதி அமெரிக்காவின் Nஜ.எ/ப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரீஸ{க்கு கிளம்பியது. 230 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் லாங் ஐலேண ;டின் கிழக்கு மோரிசஸ் கடற்கரை பகுதிக்கு அருகே விபத்துக்குள் ளானது. இதில் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர். எரிபொருள் டேங்க் வெடித்த தால் தான் விபத்து ஏற்பட்டது என்று 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப ;பட்டது. ஆனால் அந்த விமான சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உண்மை என்னவென்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

1980ம் ஆண்டு ஏரோலைனீ இடாவியா விமானம் 870 இத்தாலியின் பொலோனாவில் இருந்து பாலர்மோ நகருக்கு கிளம்பியது. அந்த விமானம் டிரேனியன் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியாகினர். அந்த விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது இதுவரை தெரி யவில்லை.

பான் ஆம் விமானம் 103 1988ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி 243 பயணிகளுடன் nஜர்மனி யில் உள்ள பிரான்க்பர்ட் டில் இருந்து அமெரிக்கா வின் டெட்ராய்ட்டுக்கு சென்றது. அந்த விமானம் ஸ்காட் லாந்தின் லாக்கர்பீ நகரில் விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் பலியாகினர். இந்த விமா னத்தை லிபியாவின் அப் போதைய அதிபர் கடாபி தான் தாக்க உத்தரவிட்ட தாகக் கூறப்படுகிறது.

ஏர் பிரான்ஸ் ஏர் பிரான்ஸ் விமானம் 1611 1968ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி கார்சிகா தீவில் இருந்து நைஸ் நகருக்கு சென்றபோது மெடிடெரேனி யன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானம் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் 2007ம் ஆண்டு பிபிசி ரேடியோவில் அந்த விமானம் ஏவுகணை தாக்கி அல்லது குண்டுவெடிப்பால் சிதறியிருக்கும் என்றும், உண்மை காரணத்தை பிரான்ஸ் அரசு மறைப்ப தாகவும் கூறப்பட்டது.

1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதி யில் உள்ள பெர்முடா முக்கோணப் பகுதியில் பறந்த தி ஸ்டார் டைகர் என்ற விமானம் மாயமானது. விமானத்தின் பகுதி களோ, பயணிகளின் உடல்களோ கிடைக்கவே இல்லை. இந்த சம்பவம் நடந்த மறு ஆண்டே அதே பகுதியில் தி ஸ்டார் ஏரியல் விமானம் மாயமானது. அது குறித்தும் எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் இவ்விமானங்கள் மர்மமான முறையில் காணாமல்ப்போனது விஞ்ஞானமும் தகவல் தொழில்நுட்பமும் பாரிய வளர்ச்சி கண்டிராத காலத்தில் தான். இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே சுருங்கிப் ;போயுள்ள நிலையிலும் தங்கள் உறவினர்களின் கதியென்ன என்று தெரியாமல் பரிதவிப்பது மலேசிய அரசின் அலட்சியப்போக்காலா அல்லது உண்மையிலேயே விமானத் தினைத் தேடுவது கடினமானதாக உள்ளதாவென்பது புதிராக வேயுள்ளது. ஏனெனில் காணாமல் போன விமானம் குறித்த எந்த வொரு தகவலையும் மலேசிய அரசு ஊர்ஜpதப்படுத் தாதலால் அதில் பயணம் செய்த வர்களின் உறவினர்கள் அவ் ;விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன விமானத்தில், காணாமல் போய் பலமணிநேரங்களின் பின்னர் பெறப்பட்ட நலிவான சமிக்ஞைகளின் பிரகாரம்; வடமேற்காகப்பயணித்த விமானம், சடுதியாக தெற்குநோக்கித் திரும்பி எரிபொருள் தீரும் வரை பறந்து இந்துசமுத்திரத்தில் வீழ்ந்து நொறுங்கியிருக்கலாம் என்பதாக செய்மதிகளை ஆதாரங்காட்டி அமெரிக்க அதிகாரிகள் கருத்துக் கூறிய நிலையில், சனிக்கிழமையன்று ஊடகவியலாளர் மத்தியில் கருத்துக் கூறிய மலே சியப் பிரதமர், விமானம் கடத்தப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

விமானம் காணாமல் போவதற்கு முன்னதாக திட்மிட்டே அதன் தொடர்புகளை துண்டிக்கப்பட்டுள்ளனவென்பது தற்போது தெளிவாகியுள்ளது. விமானம் ஓட்டுவதில் திறன் மிக்க ஒருவராலேயே இது மேற்கொள்ளப்பட்டடிருக்கின்றது அதற்கான காரணங்களையே நாங்கள் அலசுகின்றோம். விமானிகள் பயணிகள் பற்றி தீவிர விசாரிக்கப்படுகின்றது என்றார்.

மலேசியப்பிரதமரின் அறிவிப்பு தங்கள் உறவுகளைக் குறித்துக் கவலை கொண்ட சொந்தங்களுக்கு நிச்சயம் ஆறுதலாய் அமையும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com