Contact us at: sooddram@gmail.com

 

தஞ்சம் கோருவோரின் புதைகுழியான மத்தியதரைக் கடல்

"போகும் வழியில் நான் இறந் தால் இறந்துவிட்டுப் போகிறேன். இங்கு தொடர்ந்து இருந் தாலும் வறுமையில் இறக்கத்தான் போகிறேன்." வட ஆபிரிக்காவில் இருந்து உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு ஐரோப்பாவுக்கு கனவு உல கைத் தேடிப் போகும் ஒருவர் சொன்ன வீர வசனம் தான் இது. வட ஆபிரிக்காவின் மத்தியதரைக் கடல் பக்கம் திரும்பி எட்டிப் பார்த் தால் ஐரோப்பா தெரிந்துவிடும். மறு பக்கம் திரும்பிப் பார்த்தால் வறுமை, யுத்தம், சண்டை என்று ஏகப்பட்ட பிரச் சினை. எனவே அங்கிருந்து எதிலா வது தொத்திக்கொண்டு ஐரோப்பா செல்ல முயற்சிப்பவர்கள்தான் அதிகம். இப்படி ஓட்டைப் படகில் ஏறி ஐரோப்பா செல்ல முயற்சிப்பவர்கள் பற்றிய எந்த கணக்கு வழக்கும் தெரியாது கடலில் மூழ்கி இறந்தாலும் எத்தனை பேர் என்று சரியாக கணக் குப் பார்த்துச் சொல்ல முடியாது. இப்படி முகவரி இல்லாமலேயே பல நூறு பேர் மத்தியதரைக் கடலில் சமாதியாகி இருக்கிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமாகி இருக் கிறது. என்ன செய்வது என்று தெரி யாமல் முழு ஐரோப்பவுமே தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு கூட்டுப் படை ஒன்றை தயாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப் பாவில் ஆலோசனைகள் நடத்தப்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகள் இன்னும் ஒரு முடிவுக்கு வந்ததாக தெரிய வில்லை.

ஒட்டுமொத்தத்தில் ஐரோப்பாவுக்கு தஞ்சம் கோரி வருபவர்களால் ஏற்க னவே பொருளாதார சிக்கலை எதிர் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் அரசியல் ரீதியிலும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கின்றன. ஐரோப்பாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலை யில் இந்த குடியேறிகள், இருக்கும் வேலையையும் அபகரிப்பதாக கூறி அங்கு அதற்கு எதிராக பல இயக் கங்களும் முளைக்க ஆரம்பித்து ள்ளன. கிரேக்கம், ஸ்பெயின், பிரா ன்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த நிலைமை தீவிரம் அடைந் திருக்கிறது.

2011 ஆம் ஆண்டு வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரபு வசந்தம் ஐரோப்பாவுக்கு இந்த தஞ்சக் கோரிக்கையாளர் வடிவில் பய முறுத்தியது. இந்த அரபு வசந்தத்தால் யாருக்கு வசந்தம் என்று புரிய வில்லை. வறுமை, யுத்தம், அரசியல் குழப்பங்கள் அதிகரிக்க அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்து சாவதை விட உயிரை பணயம் வைத்து ஐரோப்பாவை படகில் கடக்க முன்வந்தார்கள்.

சிரியாவின் சிவில் யுத்தம் காரண மாக தஞ்சம் கோரிச் செல்லும் சிரியா நாட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்திருக்கிறது. இத னால் சாதாரணமாக மத்திய கிழக்கை கடந்து ஐரோப்பா செல்ல முயற் சிக்கும் ஏனைய நாட்டவர்களை விட வும் சிரியா நாட்டவர்கள் முந்திவிட் டார்கள்.

அதாவது வறுமை மற்றும் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி ஐரோப்பா செல்லும் ஆப்கான் மற்றும் எரிட்ரியா போன்ற நாட்டவர்களை விடவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிரியா நாட்டவர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்திருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக் டோபர் மாதம் ஐ.நா. அகதிகளு க்கான நிலையம், அதாவது யு.என். எச்.சி.ஆர். வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஒன்பது மாதங்களில் 165,000 பேர் மத்தியதரைக் கடலை கடந்து ஐரோப்பாவுக்கு குடியேற முயன்றிருக் கிறார்கள். இது 2013 ஆம் ஆண் டோடு ஒப்பிட்டால் அந்த ஆண்டு முழுவதிலும் 60,000 பேர் தான் இவ் வாறு தஞ்சமடைந்திருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டு தஞ்சக் கோரிக் கையாளர்களின் அரைப்பங்கினர் சிரியா மற்றும் எரிட்ரிய நாட்டவர்க ளாவர்.

தஞ்சக் கோரிக்கையாளர்கள் பயணி க்கும் பரபரப்பான பதையாக மத்திய தரைக் கடலின் மத்திய கடல்வழிப்பாதையான இத்தாலியை சென்றடையும் பதையிலேயே 2014 ஆம் ஆண்டில் 140,000க்கும் அதிக மான தஞ்சக் கோரிக்கையாளர்கள் ஐரோப்பாவை அடைந்திருக்கிறார்கள்.

அதேபோல 2014 ஆம் ஆண்டில் இப்படி தஞ்சம் கோரிப்போய் கடலில் மூழ்கி இறந்தவர்கள் அல்லது காணா மல் போனவர்கள் எண்ணிக்கை 3,000க்கு அதிகம் என கணிக்கப்பட்டி ருக்கிறது. இதுவே 2013 ஆம் ஆண் டில் 600 க்கும் அதிமானவர்கள்தான் கடலில் சமாதியாகி இருக்கிறார்கள். இந்த மரணக் கணக்கெல்லாம் வெறுமனே குத்துமதிப்பானதுதான்.

யாராவது சொன்னால்தான் மத்திய தரைக்கடலில் இப்படி படகொன்று மூழ்கி பலரும் காணாமல் போனதாக ஒரு கணக்கை பதிவு செய்யமுடியும். எவரும் அதனை சொல்லாவிட்டால் அது எந்த பதிவும் இல்லாமலேயே போய்விடும். அப்படி எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பது அவர் களை ஆசை வார்த்தை காட்டி கடத் திச் சென்றவர்களுக்கு மாத்திரம் தான் தெரியும்.

இந்த அகதிகளுக்கு ஐரோப்பாவை வரவேற்கும் இடமாக இத்தாலி மற்றும் மோல்டா நாடுகளே பிரதானமாக காணப்படுகின்றன. ஏற்கனவே கிரேக் கம் இவ்வாறான அகதிகளை வரவே ற்று வரவேற்று ஓய்ந்துபோயிருக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் கிரேக்கம் இப்போதும் தனது நாட்டு மக்களுக்கே உணவு கொடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இதனால் இத்தாலியும் மோல்டாவும் இந்த தஞ்சக் கோர க்கையாளர்கள் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்திடம் இரவு பகலாக அழுது புலம்புகிறது.

கடைசியில் 2014 நவம்பரில் இத் தாலி இந்த தஞ்சக் கோரிக்கையா ளர்களை மீட்கும் நடவடிக்கையை கைவிட்டது. அதற்கு பதில் குறைந்த செலவு கொண்ட ஐரோப்பிய ஒன்றிய மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இப்போதெல்லாம் எகிப்து, லிபியா வில் இருந்துதான் பலரும் அபாயக ரமான படகுப் பயணத்தின் மூலம் ஐரோப்பாவை வந்தடைவதாக ஐரோப்பிய ஒன்றிய எல்லை அமைப் பான பிரொன்டெக்ஸ் குறிப்பிட்டுள் ளது. பிரொன்டெக்ஸ் அமைப்பின் அறிக்கையின்படி பார்த்தால் 2013 ஆண்டு மத்தியதரைக் கடலில் மத்திய கடல்வழிப் பாதையைப் பயன்படுத்தி 40,304 சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் ஐரோப்பாவை நோக்கி வந்திருக்கிறார்கள். இது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 28.8 வீத உயர்வாகும். அதுவே 2014 ஆம் ஆண்டில் மேலும் அதிகரித்திருக்கிறது. அதாவது கடந்த ஆண்டில் 150,000க்கும் அதிகமானவர்கள் ஐரோப்பா சென்றிருக்கிறார்கள்.

இது மட்டுமல்ல மத்தியதரைக் கடலில் கிழக்கு கடல்வழிப் பாதை யால் 2014 ஆம் ஆண்டில் 40,000க் கும் அதிகமான சட்டவிரோத குடி யேற்றக்காரர்கள் பயணித்திருக்கிறார் கள்;. இது ஐரோப்பா எல்லையில் கண்டறியப்பட்ட தஞ்சக் கோரிக்கை யாளர்கள் எண்ணிக்கைதான். கணக ;கில் இல்லாதவர்கள் எத்தனை என்று கணக்குச் சொல்ல ஒருவரும் இல்லை. அதாவது தஞ்சக்கோரிக்கை யாளர்கள் மேலும் பல பாதை களாலும் ஐரோப்பாவை சென்றடைகி றார்கள்.

கிரேக்கம் தஞ்சக்கோரிக்கையாளர் களின் பிரதான இடம்மாறும் பகுதியாக இன்றும் இருந்து வருகிறது. இவ் வாறான குடியேறிகள் பல்கான்ஸ் நிலப்பகுதி ஊடாக பயணித்து வடக்கு ஐரோப்பாவை சென்றடைய முயல்கி றார்கள். குறிப்பாக துருக்கியின் ஊடாக வரும் சிரிய நாட்டு அகதிகள் இப்போது பல்கேரிய நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள்.

2013 ஆம் ஆண்டாகும்போது ஐரோப்பாவில் சிரிய தஞ்சக் கோரிக் கையாளர்கள் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்திருக்கிறது. அதா வது ஐரோப்பிய ஒன்றிய எல்லை நாடுகளில் 25,546 சிரியர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்த தஞ்சக் கோரிக்கையாளர்களில் 24 வீதமாக இருந்திருக்கிறது. இதற்கு அடுத்து எரிட்ரிய நாட்டவர்கள் 11,298 பேரும், ஆப்கான் நாட்டவர்கள் 9,494 பேரும் இருந்துள்ளனர்.

சர்வதேச குடி யேறுவோர் அமைப்பின் அறிவிப்பின் படி ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக வரும் தஞ்சக் கோரிக் கையாளர் எண்ணிக்கை வெறும் 10 வீதம் மாத்திரம் என்று குறிப்பிடுகிறது. எனவெ தரை வழி மற்றும் வான் வழியால் அங்கு எத்தனை பேர் போகி றார்கள் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

அரபு வசந்தத்திற்கு முன்னர் இருந்த நிலையைப் பார்த்தால் மத்தியதரைக் கடலின் மேற்கு கடல் வழிப் பாதையில் ஸ்பெயின் பெரும் தலையிடியைச் சந்தித்து வந்தது. அங்கு ஸ்பியினின் கனேரி தீவை நோக்கி வறிய துணை சஹாரா நாட்டவர்கள் ஓய்வில்லாமல் வந்த வண்ணம் இருந்தார்கள். பொறுக்க முடியாமல் ஸ்பெயின் மொரோக் கோவுடன் அந்த கடல் மார்க்கத்தைக் கடுமையாக்கியதை அடுத்து இந்த நிலைமை மாறியது.

சிரியா மற்றும் ஈராக்கில் இஸ் லாமிய தேசம் குழுவின் அட்டகாசம் மற்றும் தொடரும் யுத்தம் தஞ்சக் கோரிக்கையாளர்களை அதிகரிக்க முக்கிய பங்களிப்புச் செய்திருக்கிறது. குறிப்பாக சிரியாவைப் பார்த்தால் உள்நாட்டு யுத்தத்தால் அயலில் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் மூன்று மில்லியன் சிரிய அகதிகள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். தவிர சிரியாவுக்குள்ளும் மில்லியன் கணக்கானவர்கள் அகதியாக்கப்பட்டிரு க்கிறார்கள்.

இதுமட்டுமல்ல ஆபிரிக்காவின் வறுமைப்பட்ட நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அபாயகரமாக குடியேற்ற பயணத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்கடத்தல்காரர்களால் மோசமாக நடத்தப்பட்டு வருகிறார்கள். இவர்கள் கொடிய வெயில் மத்தியில்; பாலைவனங்கள், கொ^ர யுத்தம் நடக்கும் லிபியா வரை அழைத்து வரப்பட்டே மத்தியதரைக் கடலில் அபாயகரமான பயணத்தை ஆரம்பிக் கிறார்கள்.

இவ்வாறு வரும் ஆபிரிக்க நாட்டு தஞ்சக் கோரிக்கையாளர்களில் சோமாலிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதே நிலைதான் எரிட்ரியாவிலும் இருக்கிறது. இந்த நாடுகளில் இருக் கும் இளைஞர்கள் ஒன்று கட் டாய அயுதப் போராட்டத்தில் சேர்க்கப் படுகிறார்கள். அப்படி இல்லை என் றால் அடிமை வாழ்க்கை வாழ்கிறார் கள்.

மறுபக்கம் வறுமை மற்றும் துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுக் கும் ஆப்கான் நாட்டவர்களும் தொடர் ந்து புகலிடம் கோரி நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஆப்கானில் தலிபான் தாக்குதல்கள், போராட்டக் குழுக்கள் மற்றும் குற்ற கும்பல்களின் அட்^ழியங்களுக்கு அளவே இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரியவர்கள் பட்டியலில் 2013 ஆம் ஆண்டாகும்போது சிரிய நாட்டவர்கள் முன்னிலை பெற்றார்கள். அதாவது 46,960 சிரிய நாட்டவர்கள் தஞ்சம் கோரி இருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் 35,140 ரஷ்யர்கள் ஐரோப்பிய ஒன்றி நாடுகளில் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். ரஷ்யாவின் செச்சனியா மற்றும் பதற் றம் கொண்ட ஏனைய கவ்காசஸ் பிராந்திய மக்களே பெறும்பாலும் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருக்கிறார் கள்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரியிருக்கும் கெசோவோ மற்றும் செர்பியர்களின்; பெரும்பாலான வர்கள் ரோமா இனத்தவர்களாவர். இந்திய பூர்வீகம் கொண்ட இவர்கள் நாடோடிகள் போன்று இருப்பதால் ஒதுக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார் கள்.

ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றுக்கு தஞ்சம் கோரி செல்பவர் குடியோற்றக் காரராக அடையாளப்படுத்தப்பட்டாலும் இவர்களால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் சுதந்திரமாக நடமாட முடியும். அதிலும் ஒருசில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் n'ன்கென் வலயத்தில் இருக்கிறது. இந்த வலயத்தில் இருக்கும் நாடுக ளுக்கு இடையில் கடவுச் சீட்டு அல்லது வேறு எந்த ஆவணமும் இன்றியே நடமாட முடியும்.

ஐரோப்பிய ஒன்றி சட்டத்தின்படி புகலிடம் கோருபவருக்கு உணவு, முதலுதவி மற்றும் அடைக்கலம் பெறும் உரிமை இருப்பதாக கண்டிப் பாக சொல்லப்படுகிறது. கைவிரல் அடையாளம் மற்றும் வாக்குமூலங் களை கொடுத்த பின்னர் அவர்களால் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியும். முதல் முயற்சியிலேயே இவர் களால் புகலிடக் கோரிக்கையை வெல்ல முடியாவிட்டால் அதற்கு எதி ராக அவர்களுக்கு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும். இப்படி முறையிட்டே காலத்தை கடத்தவும் முடியும்.

புகலிடக்கோரிக்கையாளர்கள் வந்தி றங்கி ஒன்பது மாதத்திற்குள் அவர் களுக்கு தொழில் புரியும் உரிமை கிடைக்க வேண்டும். எனினும் புகலி டக் கோரிக்கையாளர் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல வகைகளை கையாள்வதாக ஐரோப் பிய ஒன்றியத்தின் நிறைவெற்று அதி காரம் கொண்ட ஐரோப்பிய ஆணை யம் குறிப்பிடுகிறது.

2013 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 435,760 பேர் புகலிடம் கோரி இருக்கிறார்கள். 2012 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால் அது 30 வீத அதிகரிப்பாகும். 2013 ஆம் ஆண்டு முடியும்போது 352,000 பேர் தமது விண்ணப்பத்திற்கு முடிவை எதிர் பார்த்து காத்திருந்தார்கள். இதிலே nஜர்மனியிலேயே அதிகம் பேர் புகலிடம் கோரி இருக்கிறார்கள். அது மொத்த எண்ணிக்கையில் கால் பங் காகும்.

2013 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோரிய வர்களில் மூன்றில் ஒரு பங்கு விண் ணப்பம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சிரிய நாட்டவர்களின் விண் ணப்பமே அதிகமாக ஏற்கப்பட்டிருக் கிறது. அதேபோல் எரிட்ரியா மற்றும் நாடற்ற அகதிகளின் விண்ணப்பங்கள் அதிகம் ஏற்கப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய ஆணையத்தின் தகவ லின்படி பார்த்தால் 100,000க்கும் குறைவான சிரிய நாட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றித்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் வட ஆபிரிக் காவிலும் மத்திய கிழக்கிலும் தேவை யில்லாமல் அரசியல் விளையாட்டு விளையாடி அந்த நாடுகளில் ஸ்திரத் தன்மையை குலைத்து விட்டதற்கு அது தஞ்சக் கோரிக்கையாளர் என்ற வடிவிலும் பிரச்சினைகளை சந்திப்பது இந்த கதையின் மறுபக்கமாக குறிப் பிடலாம்.

(எஸ். பிர்தெளஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com