Contact us at: sooddram@gmail.com

 

கடல் மீன் கைது

இலங்கை மீனவர்களுடன் இணக்கம் காணாமல் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது

“இலங்கை மீனவர்களுடன் இணக்கமான முடிவைக் காண முடியாவிட்டால் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது” என தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘தினமணி’ பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.

‘கடல் மீன் கைது’ எனும் தலைப் பில் எழுதப்பட்டுள்ள இந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கைக் கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்ற 10 படகுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இவர்கள் இரு பிரிவுகளாக திருகோணமலை, காங்கேசன்துறை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியா வந்திருந்த போது பிரதமர் மோடியின் முன்னெடுப்பில் மார்ச் 5 ஆம் திகதி இரு நாட்டு மீன வர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைக்கான நாளை இலங்கை அரசு தற்போது தள்ளி வைத்துள்ளது. தங்களது 100 நாள் முன்னுரிமைத் திட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை என்பதால் பிறகு நடத்தலாம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

உண்மை அதுவல்ல. இலங்கையின் வடக்கு மாகாணத் தமிழ் மீனவர்கள் தற்போது சிறிசேனவுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர். சிறிசேன அரசு பதவியேற்ற பிறகு தமிழக விசைப்படகு ககளின் (டிராவ்லர்) எண்ணிக்கை அதி கரித்துவிட்டதாகவும் இலங்கைக் கடற்படை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். இதனை இலங்கை அமைச்சரும் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கை மீனவர்களின் எதிர்ப்புகளால்தான் தற்போது கைது நடவடிக்கையை தீவிரமாக்கியுள்ளனர்.

தற்போது அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 81 படகுகளும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் குறைகிறது. அப்படியே திரும்ப வழங்கப்பட்டாலும் நம்மூர் காவல் நிலையத்தில் வெறும் கூடாக நிற்கும் வாகனங்கள் போலத்தான் கிடைக்கும் என்பதையும் ஊகிக்கலாம்.

மார்ச் 13 ஆம் திகதி இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பிரச்சினை குறித்துப் பேசுவார் என்றும், ஓர் இணக்கமான சூழலுக்கு வித்திடுவார் என்றும் நம்பிக்கை இருந்தாலும், இந்த விவகாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்போர் தமிழக மீனவர்களும், இலங்கை வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மீனவர்களும்தான். இலங்கை வாழ் சிறுபான்மைத் தமிழர்களின் வாக்குகள்தான் ராஜபக்ஷவை வீழ்த்த உதவியது என்பதை உணர்ந்திருக்கும் சிறிசேன அரசு இலங்கை மீனவர் களுக்குத்தான் அதிக முன்னுரிமை தரும். இலங்கை மீனவர்களின் சொல்தான் அம்பலம் ஏறும்.

ஆகவே, இந்த விவகாரத்தில் இந்தியா - இலங்கை அரசின் முடிவைக் காட்டிலும் அதி முக்கியமானது வடக்கு மாகாணத் தமிழ் மீனவர்களின் உணர்வுதான். அவர்கள் முன்வைக்கும் இரண்டு தீவிரமான புகார்கள். எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழக மீனவர்கள் மிக அதிகமான விசைப்படகுகளைப் பயன்படுத்தி பாக் நீரிணைப் பகுதியில் மீன் வளத்தை அழிக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் பொதுவான கடல் பரப்பில் 70 நாள்களுக்கு மட்டுமே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். மற்ற காலங்களில் அவர்கள் வங்கக் கடலின் மேற்பரப்பில் மீன்பிடித்துக் கொள்ளட்டும்.

அண்ணன் தம்பிகளான இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே விசைப் படகுகள்தான் பிரச்சினையாக இருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தினாலே போதும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்” என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

விசைப்படகுகளை உடனடியாகக் குறைத்துக் கொள்ள முடியாது என்று கூறும் தமிழக மீனவர்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டு கால அவகாசம் கோருகிறார்கள். பொது கடல் பரப்பில் மீன்பிடிப்பது எத்தனை நாள் என்பதிலும் உடன்பட மறுக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் 5,000 விசைப்படகுகள் இருப்பதாகவும். இவற்றில் 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 2,500 படகுகள் இலங்கைக் கடல் பரப்பின் வளத்தை முற்றிலுமாக சுரண்டி விட்டன என்பதும் இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இலங்கை மற்றும் தமிழ் நாடு தரும் புள்ளி விபரங்களின் படி இந்த 10 ஆண்டு காலத்தில் இக்கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் தொன்னுக்கு அதிகமான மீன்களைப் பிடித்துள்ள நிலையில் இலங்கை மீனவர்கள் இதே காலகட்டத்தில் ஆண்டுதோறும் அதிகபட்சம் 10,000 தொன் மீன்கள்தான் பிடித்துள்ளனர்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பிறகு, இலங்கை மீனவர்கள் மீண்டும் தீவிர மீன்பிடித்தலைத் தொடங்கியுள்ளதால் படிப்படியாக அளவு உயர்ந்து தற்போது ஆண்டுக்கு 40,000 தொன் மீன் பிடிக்கிறார்கள். தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்கும் அளவும் 1.5 இலட்சம் தொன் வரை உயர்ந்துள்ளது. அதே கடல் பரப்பு, அதே மீன்வளம். இரு தரப்பும் தங்கள் மீன்பிடிப்பை அதிகரித்துள்ளன.

இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதென்பது, இந்தியா - இலங்கை இருநாடுகளுக்கு இடையிலான ராஜீய விவகாரம் என்பதைச் காட்டிலும் நடைமுறைக்கு சாத்தியமான இரு தரப்பு மீனவர்களின் உடன்பாட்டின் மூலம் எளிதில் தீர்வு காணும் வாய்ப்புகள் உள்ளன. இதற்குத் தடையாக இருப்பது விசைப்படகுகள் மட்டுமே.

அன்றாடப் பிழைப்பாக கடலுக்குச் செல்லும் மீனவர்களின் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும். விசைப்படகு உரிமையாளர்களால் கடல் இல்லாமல் வாழ முடியும். ஆனால் மீனவர்களால் கடலன்னை இல்லாமல் வாழ்தல் இயலாது. இந்த விவகாரத்தை ஒட்டுமொத்த மீனவர் பிரச்சினையாக மாற்றி தீர்வு காண முடியாமல் குழம்புவதைக் காட்டிலும் விசைப்படகு உரிமையாளர் நலன், மீனவர் நலன் என்று பிரித்துப் பார்ப்பதன் மூலம் இலங்கை மீனவர்களுடன் இணக்கமான முடிவைக் காணலாம். இல்லையென்றால் தமிழக மீனவர்கள் கைதாகிக் கொண்டிருப்பதற்கு முடிவே ஏற்படாது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com