Contact us at: sooddram@gmail.com

 

மூன்றரை தசாப்தங்களின் பின்னர் ஜனநாயகத்துக்கான ஒளிக்கீற்று

அரசியலமைப்பில் 19வது திருத்தத்தை மேற்கொள்வதற் கான உத்தேச வரைபுக்கு அமைச்சரவை கடந்த ஞாயிற் றுக்கிழமையன்று அங்கீகாரம் அளித்திருக்கிறது. 19வது திருத்தம் தொடர்பான உத்தேச வரைபு வர்த்தமானியிலும் பிரசுரம் செய்யப்பட்டு விட்டது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை மட்டுப்படுத் துதல், பாராளுமன்றத்தின் மேலாண்மையை முக்கியத்துவப்படுத் தும் வகையில் பிரதமருக்குரிய அதிகாரத்தை அதிகரித்தல், நீதித் துறையின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துதல், சுயாதீன ஆணைக் குழுக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு சீர்திருத் தங்களைக் கொண்டதாக 19வது திருத்தச் சட்டம் அமைகிறது.

நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதையே பிரதான அம்சமாக உள்ளடக்கியுள்ள 19 வது திருத்தச் சட்டத்துக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. புதிய அரசியலமைப்புத் திருத்தமானது ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கான அடித்தளமாக அமையுமென அரசியல் கட்சிகள் அபிப்பிராயம் கொண்டுள்ளன. எனினும் இவ்விடயத்தில் தீர்க்கப்படக் கூடியதான சிறு முரண்பாடுகள் கட்சிகள் மத்தியில் நிலவுவதையும் மறுப்பதற்கில்லை. 19வது அரசி யலமைப்புத் திருத்த சட்டமூலத்தை அவசரமாக பாராளுமன்றத் துக்குக் கொண்டு வரக்கூடாதென்பதில் எதிர்க் கட்சி உறுதியுடன் இருப்பதைக் காண முடிகிறது.

ஜனாதிபதி கொண்டுள்ள நிறைவேற்று அதிகார முறையை ஒழிப் பதற்கு மாத்திரமே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தங்க ளது ஆணையை வழங்கியிருக்கவில்லை. தேர்தல் முறையிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்றே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கட்டுப்படுத்தும் மாற்றமும், தேர்தல் முறைச் சீர்திருத்தமும் ஒரே வேளையில் சமாந்தரமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டு மென்ற உறுதியான நிலைப்பாட்டை எதிர்க் கட்சித் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார். அது மாத்திரமன்றி பாராளுமன்றத்துக்கு பொறுப்புச் சொல்லும் அதி காரத்தைக் கொண்டவராக ஜனாதிபதி இருக்க வேண்டுமென்றும், பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப கடமையாற்றும் அவசியம் ஜனாதிபதிக்கு இருக்க வேண்டியதில்லையெனவும் எதிர்க் கட்சித் தலைவர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

நிறைவேற்று அதிகாரமுறை மாற்றம், தேர்தல் சீர்திருத்தம் ஆகியன ஏக காலத்தில் நடைபெற வேண்டுமென்பதிலும், அடுத்த பொதுத் தேர்தலானது புதிய முறையிலேயே நடைபெற வேண்டுமென்ப திலும் எதிர்க் கட்சி கொண்டுள்ள உறுதிப்பாடு இழுபறி நிலை யைத் தோற்றுவிக்கக் கூடுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சீர்திருத்தமென்பது உடனடியாக மேற்கொள்ளப்படக் கூடிய தல்ல. தேர்தல் திருத்தத்தை மேற்கொள்வதற்கு மூன்று மாதங்களா வது தேவையென தேர்தல் திணைக்களம் சுட்டிக் காட்டியிருப் பதை வைத்துப் பார்க்கும் போது இரண்டு மாற்றங்களையும் சமாந்தரமாக மேற்கொள்வதென்பது சிக்கலுக்குரியதாகிறது.

நிறைவேற்று அதிகார முறைமையானது எமது நாட்டில் கடந்த சுமார் முப்பத்தேழு வருட காலமாக தீர்க்க முடியாத சிக்கலாக இருந்து வருகிறது. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியதையடுத்து, நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஜே. ஆர். ஜயவர்தன 1978 ஆம் ஆண்டில் கொண்டு வந்தார். வரம்பு மீறிய அதிகாரங்களையெல்லாம் ஜனாதிபதியின் வசம் உள்ளடக்கியதாக நிறைவேற்று அதிகார முறையை வடிவமைத்திருந்தார் ஜே. ஆர். “ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மட்டுமே மாற் றியமைக்க முடியாது. மற்றைய அத்தனை காரியங்களையும் நிறை வேற்று அதிகாரத்தினால் செய்ய முடியும்” என்று அன்றைய வேளை யில் ஜனாதிபதி ஜே. ஆர். உள்ளார்த்த அர்த்தத்துடன் நகைச் சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பின்னர் ஜனநாயகமென்ற போர்வையில் சர்வாதிகாரம் நிறைந்த ஆட்சி முறையொன்று கடந்த 37 வருட காலமாக எமது நாட்டில் தொடர்ந்து அமுலில் இருந்து வந்துள்ளது. ஜே. ஆரின் பதவிக் காலத்தின் பின்னர் ஆட்சிகள் மாறிய போதிலும் நிறைவேற்று அதிகார முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்பது வெறும் பேச்சளவிலேயே இருந்து வந்துள்ளது. ஜனாதிபதித் தேர் தல்களின் போது பிரசாரத்துக்குரிய கருப்பொருளாக மட்டுமே இவ்விவகாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தேர்தல் நிறைவுற்றதும் அடுத்த தேர்தல் நடைபெறும் வரை நிறைவேற்று அதிகார முறை யானது பொருட்படுத்தப்பட்டது கிடையாது. அளவுமீறிய அதிகாரங்களையும் சலுகைகளையும் கொண்டுள்ள நிறை வேற்று அதிகாரத்திலிருந்து மீள்வதற்கு கடந்தகால ஆட்சித் தலை வர்கள் மனதளவில் விரும்பியதில்லையென்றே கூற வேண்டி யிருக்கிறது.

மூன்றரை தசாப்தங்களும் முடிவுற்ற பின்னர் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதற்கான நம்பிக்கையை கடந்த ஜனாதிபதித் தேர்தல்தான் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது மைத்திரிபால சிறிசேனவினால் மக்க ளுக்கு வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதியை செயலுருப்படுத்து வதற்கான ஏற்பாடுகள் இப்போது ஆரம்பமாகியிருக்கின்றன. 19 வது திருத்தமானது இலங்கையின் ஜனநாயகப் பரிமாணத்தை உலகுக்குக் காண்பிக்கப் போகிறதென்பது வரவேற்கத்தக்கது. நீண்ட காலத்துக்குப் பின்னர் மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் வரப்பிரசாதமாகவும் இதனைக் கருத வேண்டியுள்ளது.

இதேசமயம் தேர்தல் முறையின் உத்தேச மாற்றம் குறித்து சிறு பான்மை மக்கள் கொண்டுள்ள கவலையும் இன்றைய காலத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. விகிதாசாரத் தேர்தல் முறைமை இல்லா தொழிக்கப்படுமானால் பாராளுமன்றத்தில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டு விடலாமென்ற அச்சம் நியாயமா னது. தேர்தல் முறை மாற்றமானது சிறுபான்மை மக்களுக்கு ஏமாற் றத்தையும் விரக்தியையும் தந்துவிடக் கூடாதென்பதே இங்கு முக் கியம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com