Contact us at: sooddram@gmail.com

 

சரியாகத்தான் சொன்னார் டி. யூ. குணசேகர

எப்போதோ பேசப்பட்டிருக்க வேண்டிய, முக்கியத்துவம் கொடுக் கப்பட்டிருக்க வேண்டிய ஒருவிடயத்தை முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர கடந்த 18ம் திகதி பாராளுமன்றத்தில் உரையா ற்றியபோது தெரிவித்திருந்தார். நாம் தொடர்ந்து எமது இராஜதந்திர உறவை புதுடில்லியுடன் பேணிவருவதிலேயே கவனம் செலுத்தி வந் திருக்கிறோமே தவிர தமிழ் நாட்டு அரசுடன் எமது உறவை பேண வும் மேம்படுத்தவும் முயற்சி மேற்கொண்டதில்லை என்றும் சுதந்தி ரம் பெற்ற காலம் முதல் இந்த அணுகுமுறையையே பதவிக்கு வந்த இலங்கை அரசுகள் பின்பற்றி வந்துள்ளதாகவும் அவர் தன் உரை யில் சுட்டிக்காட்டியிருந்தார். எமது நாட்டை விட பல் மடங்கு விசாலமான, மொழி, மதம், கலாசாரம் என்பனவற்றில் ஒற்றுமைகளைக் கொண்ட மற்றும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களை உடைய தமிழ் நாட்டுடன் இணக்கமான உற வைப் பேணுவதில் அக்கறை கொள்ளவில்லை என்றும் இலங்கை பிரதமர் அல்லது ஜனாதிபதியொருவர் இதுவரை தமிழகத்துக்கு அரசு விஜயமொன்றை மேற்கொண்டதாக வரலாறே கிடையாது என் றும் டியூ குணசேகர தெரிவித்திருக்கிறார்.

நமது அரசியல் வாதிகள் கூர்ந்து கவனிக்க வேண்டிய உரை இது. தமி ழக மக்களையும், அவர்களது எண்ணங்களையும், இந்த அடிப்படை யில் கட்டி எழுப்பப்படும் தமிழக அரசியலையும் இலங்கை தேசிய மட்ட அரசியல் வாதிகள் என்றைக்கும் பொருட்டாகக் கொள்ளாத போக்கின் விளைவாகவே இலங்கைக்கு எதிரான ஒரு வலுவான மக் கள் கருத்து அங்கே கட்டி எழுப்பப்பட முடிந்தது. தமிழக தமிழர் களை மற்றும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் சமூக த்தை அறுபது எழுபதுகளில் எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவுக்கு இழிவு படுத்துவதற்கு அன்றைய பிரதான சிங்கள அரசியல் தலைமைகள் இடம் அளித்தன. வாக்கு வங்கி கருதி இக் கட்சிகள் உமிழ்ந்த இன வாதத்தின் பிரதிபலிப்பாக தமிழகத்திலும் சிங்கள சமூகத்தின் மீது வெறுப்புணர்வு வளர்ச்சி கண்டது. இலங் கைத் தீவு பற்றிய எந்த அறிவும் அபிப்பிராயமும் பெரும்பாலான தமிழகத் தமிழர்களிடம் இல்லை. இலங்கை அரசியல் பற்றி முற்றி லும் வேறான ஒரு அபிப்பிராயமே அங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது.

இங்கே குறிப்பிடப்படும் இவை அனைத்தும் 83ஆம் ஆண்டுக்கு முன் பட்ட நிலையே தவிர வேறல்ல. ஏற்கனவே இலங்கை மற்றும் சிங் கள சமூகம் மீது படிந்திருந்த வெறுப்புணர்வின் மீது பிரபாகரனின் எழுச்சி அலை வினையாற்றியதில், இனிமேல் தமிழகத்துடன் சிங் களத்தீவு எந்தவொரு நல்லுறவையும் பேணவே முடியாதோ என்ற அளவுக்கு உறவு மோசமடைந்தது. முன்னாள் அதிபர் மஹிந்த ராஜ பக்ஷவின் காலப்பகுதியில் அவநம்பிக்கை, வெறுப்புணர்வு, குரோ தம் என சகல எதிர்மறையான விஷயங்களும் தமிழகத்தில் உச்ச நிலைக்கு சென்றன. தமிழகக் காங்கிரஸ் தமிழகத்தில் வேரடி மண் ணோடு பிடுங்கி எறியப்பட்டதற்கும் தி.மு.க. அதள பாதாளத்தில் வீழ் ந்ததற்கும் இலங்கை அரசியல் ஒரு முக்கிய காரணியாகத் திகழ்ந் தது. எதிர்வினையாற்றியது.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போதும் சரி ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை மீதான இந் திய கொள்கையை நிர்ணயிப்பதிலும் சரி இலங்கை - இந்திய சமா தான உடன்படிக்கை கைச்சாத்தாவதற்கு பின்புலத்தில் நின்று எம்.ஜி. ஆர். அரசு வகித்த பங்களிப்பும் சரி, தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கின்ற போதிலும் இலங்கை மீது அது செலுத்தக்கூ டிய அழுத்தத்தையே இவை அனைத்தும் அழுத்தம் திருத்தமாக எடு த்துரைத்தன.

ஆனால் இலங்கை அரசியலின் துரதிஷ்டம், தமிழக அரசியலை எப்ப டித் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அரசி யல் சிந்தனை இலங்கை சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஏற்பட்ட தேயி ல்லை. தமிழக அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக அரசுடன் ஒரு புரிந் துணர்வு 1970 காலத்தில் இருந்தாவது கட்டியெழுப்பப்பட்டு இருந்தி ருக்குமானால் இந்திய மத்திய அரசு கடந்த காலங்களில் மேற்கொ ண்ட இலங்கைக்கு எதிரான போக்கைத் தவிர்த்திருக்கலாம். அல்லது மென்மைப்படுத்தி இருக்கலாம். 1983 ஆம் ஆண்டின் பின்னர் சிங்க ளவர்கள் மிருகத்துக்கு சமமானவர்கள் என்ற ஒரு மனப்பான்மை தமிழகத்தில் வெற்றிகரமாக கட்டியெழுப்பப்பட்டு இலங்கை தீவிர வாத அமைப்புகளி¡ல் அது போஷித்தும் வரப்பட்டது. இவற்றுக் கெல்லாம் எதிராக இலங்கை அரசினால் எந்தவொரு நகர்வையும் எடு க்க முடியவில்லை. மாறாக இலங்கையில் இந்தியத் தமிழர்களுக்கு எதி ரான ஒரு மனப்பான்மையை தேர்தல் நோக்கங்களுடன் உருவாக்கிக் கொள்ள நமது கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன.

தமிழக மக்களுக்கும் ஊடகங்களுக்கும் இலங்கை நாட்டைப் பற்றிய தெளிவான, உண்மையான, யதார்த்தமான விஷயங்கள் போய்ச் சேர் வதில்லை. சிறு உதாரணமாக, ஜயவர்தன என்பதை ஜயவர்தனே என் றும் பண்டாரநாயக்கே என்றும் இன்றளவும் உச்சரித்து வருவதை சுட் டிக்காட்டலாம். சிங்களவர்களை, ஏற்கனவே போலியாக கட்டமைக் கப்பட்ட உருவாக்கத்துக்கு அப்பால் சரியாகவும், நேரடியாகவும், உள்ளது உள்ளபடியும் அறிந்து கொள்வதற்கு நாம்தான் இந்திய ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அதேபோல தமி ழகத்தைப் பற்றியும் அங்கு வாழும் தமிழர்களைப் பற்றியும் சிங்கள சமூகத்துக்கு இதுவரை உண்மை நிலைகள் எடுத்துச் சொல்வதற்கு நமது அரசுகள் எதையுமே செய்யவில்லை. ஊடகவியலாளர் பரிமா ற்றங்களை இரு அரசுகளும் அடிக்கடி மேற்கொண்டிருக்கலாம். செய்ய வில்லை. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரலாயத்திடம் அரசு இது குறித்து பேசியிருந்தால் மகிழச்சியுடன் ஒத்துழைத்திருக்கும்.

சென்னையில் உள்ள இலங்கை உதவித் தூதராலயம் இலங்கை நாடு, அதன் மக்கள் குறித்த சாதகமான பிரசாரங்களை தொடர்ச்சியாக தமிழகத் தில் மேற்கொண்டு வந்திருக்க முடியும். அப்படிச் செய்து வராததால், அப் படிச் செய்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இலங்கை அர சுகள் உணராததால் இலங்கைத் தூதுவராலய தூதுவரும் அதிகாரிகளும் கடும் பொலிஸ் பாதுகாப்புடன் சென்னையில் தங்கியிருக்க வேண் டிய ஒரு சூழல் சமீப காலம் வரை அங்கு நிலவியதை சுட்டிக்காட்டு வது பொருத்தமாக இருக்கும்.

இலங்கைக்கு மிக அண்மையில் ஆறரைக் கோட்டித்தமிழர்கள் இலங்கை மீதான வெறுப்புணர்வுடன் வாழ்வது எமக்கு நல்லதல்ல. இதை படிப் படியாக மாற்றுவதற்கான சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முடிவுக்கு வந்ததோடு இலங்கை மீதான வெறு ப்பும், காழ்ப்புணர்ச்சியும் தமிழகத்தில் பெருமளவுக்கு தணிந்துள்ளன. எனினும் அது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. இலங்கையில் நல் லாட்சி உதயமாகியுள்ள ஒரு தருணத்தில் பாரதப் பிரதமர் இலங்கை க்கு விஜயம் செய்து மக்கள் மனதை வென்று சென்றிருக்கும் வேளை யில், தமிழகம் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களை வெல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான சாத்தியமான திட்டங்களை வகு த்து செயல்படுவதற்கான மிகச் சரியான காலம் தற்போது உதய மாகியிருக்கிறது.

எழும்பூர் மகாபோதி நிலையம், இலங்கை உதவித் தூதரகம் இரண்டை யும் இதன் பொருட்டு பயன்படுத்தலாம். வெளிவிவகார அமைச்சு டியூ குணசேகரவின் உரையை சாதகத்தன்மையுடன் அணுக வேண் டியது முக்கியம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com