Contact us at: sooddram@gmail.com

 

தனது எம்.பி பதவியை தக்க வைப்பதற்காக இழிநிலை அரசியல் செய்யும் சிறீதரன்!

அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்.பிக்களாக உள்ள ஒருசிலர் தொடர்ந்தும் தமது எம்.பி பதவியை தக்கவைப்பது பெரும் சவாலானதாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்தி, சதி செய்து வேலை பார்த்தால் மாத்திரமே தாம் வெல்ல முடியும் எனும் அளவுக்கு ஒருசிலரின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இவ்விரு மாவட்டங்களும் இணைந்ததே ஒரு தேர்தல் தொகுதியாக இருந்து வருகின்றது. இந்நிலையில் சிறீதரனின் எம்.பி கனவும் பல்வேறு அரசியல் காரணிகளாலும், சமுக விழிப்புணர்ச்சியாலும் களைந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பட்டதாரிகள் நியமனம், ஆசிரியர் நியமனம், முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கல், கிராமங்களுக்கு உட்கட்டுமான வசதிகள் முழுமைப்படுத்தி கொடுத்தமை என்று கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமான அளவுக்கு வேலை செய்துள்ள மு.சந்திரகுமார் எம்.பி, சிறீதரன் எம்.பியின் வெற்றிக்கு பெரும் அச்சுறுத்தலான மனிதராக மாறியிருக்கிறார்.

மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறி (வன்னி மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு) அந்த மாவட்டத்தில் தான் சந்தித்த முதலாவது தேர்தலிலேயே (வடமாகாணசபை) யாரும் எதிர்பார்க்காத வகையில் கூடியளவு வாக்குகளைப்பெற்று மூன்றாவது இடத்தை கைப்பற்றிய சித்தார்த்தன் அவர்களும் அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்குவதாக முடிவு செய்துள்ளார்.

இவைபோதாதென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இம்முறை தேர்தலில் தமது கட்சியின் சார்பில் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் இரத்தினவேல் மாஸ்டரை களம் இறக்கவுள்ளதும் கூடுதல் சேதி!

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பிள்ளைகள் சாள்ஸ் அன்ரனி மற்றும் துவாரகா இருவரையும் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை எழுத அனுமதித்தமை தொடர்பில் சிறீலங்கா அரசால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அந்த விசாரணைக்கு அவர் சமுகமளிக்க மறுத்ததினால் சிறீலங்கா அரசால் அதிபர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கல்விக்கழகத்தின் ஆதரவிலேயே இவர் தொடர்ந்தும் அதிபர் பதவியை வகித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உட்பட அன்றைய கிளிநொச்சி மாவட்ட கல்விச்சமுகத்தினரின் நன்மதிப்பை பெற்றவருமாவார். அத்துடன் இவரும் தீவுப்பகுதியை சேர்ந்தவரே!

இன்னும் ஒரு முக்கிய விடையத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை விடவும், மாவட்டம் விட்டு மாவட்டம் போய் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட்டவர்களே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.

க.வி.விக்னேஸ்வரன் ஐயா (கொழும்பிலிருந்து), அனந்தி சசிதரன் (கிளிநொச்சியிலிருந்து), சித்தார்த்தன் (வவுனியாவிலிருந்து). இந்நிலையில் திருமதி அனந்தி சசிதரனும் தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்த நிலையில், தமது வெற்றிக்கு வேட்டு வைத்து விடுவார் என்று கிலி பிடித்து மாவை.சேனாதிராசா ஏற்புடையற்ற காரணங்களை கூறி, அனந்தியை கட்சியிலிருந்து நிறுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இதன் பின்னணியிலும் சிறீதரன் எம்.பியே மாவையை தூண்டிவிடும் கருவியாக இருந்து செயற்பட்டிருந்தார்.

முள்ளிவாய்க்காலில் மருத்துவ உதவிகள் ஆபத்தான காலகட்டத்தில் மானுடநேய மருத்துவ பணியை வழங்கி ஐ.நாவின் உயரிய விருதுபெற்ற வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள், புலம்பெயர் உறவுகளின் நிதி அனுசரணையை பெற்று ‘கல்வி கனைக்சன்’ எனும் தொண்டு அமைப்பை நிறுவி கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர்களின் படிப்புக்கு உதவிவரும் நிலையில், அவரும் தனக்கு சவாலான மனிதராக தேர்தலில் இறங்கி விடுவாரோ என்று கிலிப்பிடித்து ‘சத்தியமூர்த்தி டொக்டருக்கு காசு எடுக்க வேண்டாம். அவர் அரசின் கையாள், முகவர்’ என்றெல்லாம் கனடா உள்ளிட்ட நாடுகளில் விசமத்தனமான பிரசாரங்களை சிறீதரன் எம்.பி செய்து வருகின்றார்.

சிறீதரன் எம்.பிக்கு எப்போதோ, பாராளுமன்ற காய்ச்சலும், அதைத்தொடர்ந்த தோல்விப்பயமும் பிடித்துள்ள நிலையில், அவர் தனது எம்.பி பதவியை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக எதையும் செய்யத்துணிந்துள்ளார். அதற்காக எப்படியெல்லாம் மூளையை கசக்கி பிழிந்து குறுக்கு வழியில் சென்று, சதி செய்து வெற்றி பெற முடியுமோ, அத்தனை வழிகளிலும் ஓட ஆரம்பித்துள்ளார்.

தனக்கு எம்.பி பதவி வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பை கலைத்து விடுவதற்கும் அவர் தயார் என்பதை அண்மைக்கால அவரது பேச்சுகளும், நண்பர்களுடனுடான உரையாடல்களும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.

வரும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சி மட்டும் வென்று அதிகப்படியான உறுப்பினர்கள் தெரிவாகக்கூடியவாறு சம்பந்தன் ஐயாவும் தானும் வியூகம் வகுத்துள்ளதாகவும், இதர கட்சித்தலைவர்களின் பேச்சுகள் இங்கு எடுபடாது என்றும், என்ன செய்ய வேண்டும் என்பதை தானும் சம்பந்தன் ஐயாவும் ஏற்கனவே முடிவு செய்து செய்து விட்டதாகவும் கூறிவருகின்றார்.

அதில் ஒன்று, கூட்டமைப்பின் இதர கட்சிகள் அவற்றுக்கு வழங்கப்படும் ஆசன ஒதுக்கீட்டில் அக்கட்சிகள் விரும்பிய வேட்பாளர்களை தெரிவு செய்ய அனுமதிக்க முடியாதாம்.

இரண்டாவதாக, அனந்தி சசிதரன் சித்தார்த்தன் உள்ளிட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாதாம்.

மூன்றாவதாக, ஆசன ஒதுக்கீடு வழங்காமல் விட்டால், சித்தார்த்தன் தானாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறிப்போகலாம். நாங்க அவரை கூட்டமைப்புக்குள்ள இருக்கச்சொல்லி கேட்டோமா? அவரால கூட்டமைப்புக்கு என்ன தேவை இருக்கிறது? என்றெல்லாம் பிதற்றி வருகின்றார்.

நான்காவதாக, தான் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சரவணபவன் எம்.பிக்கு என்ன வேலை? மாவை.சேனாதிராசாவுக்கு என்ன வேலை? தனக்கு முன்அறிவித்தல் தராமல் எப்பிடி அவர்கள் இங்கு வர முடியும்? நிகழ்ச்சிகளை நடத்த முடியும்? நீங்கள் எப்பிடி ஒழுங்குபடுத்திக்கொடுக்க முடியும் என்று அங்குள்ள கிராம மட்ட அமைப்புகளுடன் சின்னப்பிள்ளைத்தனமாக முரண்டு பிடித்து வருகின்றார்.

ஐந்தாவதாக, கடந்தவாரம் கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க புதிய தெரிவை செய்யவிடாமல், சுதந்திர தினத்தில் சம்பந்தன் கலந்து கொண்டதை நியாயப்படுத்தி வரும் தனது பிரத்தியே செயலாளர் பொன்.காந்தனை கொண்டு குழப்பங்களை விளைவித்தார். அதற்கான காரணம், முன்னாள் வட்டக்கச்சி ம.வி அதிபரும், பின்னாள் கிளி.மத்திய கல்லூரி அதிபருமாகிய இரத்தினவேல் மாஸ்டரின் ஆதரவாளர்கள், மாஸ்டருக்கு நன்கு பரிச்சயமான சமுகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் அப்பதவிகளை அலங்கரிக்க இருந்த நிலையில், அவர்களுக்கு குடிகாரர்கள் என்று வீண்பட்டத்தை சுமத்தி, அவரது ஊதுகுழலாக செயல்படும் இணையத்தில் செய்தி வெளியிட்டு கல்விப்பராம்பரியம் மிக்க சமுகத்தை கலங்கப்படுத்தியிருக்கிறார்.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தனது வெற்றிக்கு அச்சுறுத்தலாக, சவாலாக இருக்கின்றவர்களுக்கு ஆசனம் வழங்கப்படாமல் அதை எப்பிடி தடுக்கலாம், தட்டிப்பறிக்கலாம், எப்பிடியெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று தாறுமாறாக சிந்தித்து சிறீதரன் செயற்பட்டு வருகின்றார். தனது எம்.பி ஆசனத்தை தக்க வைப்பதற்காக (பதவி சுகத்துக்காக) ஒருவேளை கூட்டமைப்பு உடைந்து போகத்தான் வேண்டும் என்றால் கூட, அதற்கும் அவர் தயாராகவே உள்ளார் என்பதையே அண்மைக்கால இவரது அரசியல் அநாகரிக செயல்கள், ஜனநாயக விரோதப்போக்குகள் எமக்கு எடுத்தியம்புகின்றன.

(Vasakan Vasu Viluthukal)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com