Contact us at: sooddram@gmail.com

 

பறக்கும் போது விமானிகள்
தூங்கி விடுவதுதான் விமான விபத்துக்களுக்கு காரணமா?

கடந்தாண்டு மார்ச் 8ல் தனது பயணத்தில் காணாமல்போன மலேசிய விமானம் தொடர்பில் பொதுவான விமானப் பயணங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தாம் சேகரித்த தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஒரு மேற்கத்திய ஊடகவியலாளர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று இந்து மா கடலின் தென் பிராந்தியத்தில் 239 பயணிகளுடன் காணாமல் போன எம்.எச். 370 என்ற மலேசிய போயிங் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மலேசியா, சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள், தேடுதலில் பயனேதும் காணாத நிலையில் அம்முயற்சியை கைவிட்டுள்ளதாக இப்போது அறிவித்துள்ளன. அவ்விமானத்தில் பயணம் செய்தவர்களில் இருவர் போலி கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்திருப்பதாகவும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களாயிருந்து விமானத்தைத் தகர்த்திருக்கலாமென்ற யூகங்களும் எழுப்பப் படுகின்றன. அப்படியானால் தகர்க்கப்பட்ட விமானத்தின் பாகங்களோ, சிதைவுகளோ எங்கே? ஒருவேளை விமானம் கடத்தப்பட்டிருந்தால் அது எங்கேயாவது தரையிறக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான தடயமெதுவும் இதுவரை தென்படவில்லை.

விமானம் கடத்தப்பட்டு ஓராண்டு பூர்த்திய டைந்துள்ள இவ்வேளை பார்த்து, பொதுவான விமானப் பயணங்களின் நிலவரம் குறித்து அதிரடியான ஒரு கட்டுரையை வெளியிட்டு அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது மலேசியாவிலிருந்து வெளியாகும் ஏசியாவீக் என்ற பிரபல சஞ்சிகை. பெரும்பாலான விமானப் பயணங்களின்போது அவற்றைச் செலுத்தும் விமானிகள் தங்களை மறந்து தூங்கிவிடுகிறார்களென்ற கட்டுரையே அது. கடந்தாண்டில் மலேசிய விமானம் காணாமல் போனதற்கு, அதனைச் செலுத்திய விமானிகளின் அசமந்தப் போக்குத் தான் காரணமோ என்றுகூட மக்கள் சந்தேகிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள் இக்கட்டுரையைப் படித்த பின்னால் அதைவிட, அடிக்கடி விமானப் பயணங்களை மேற்கொள்வோருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது இக்கட்டுரை.
நெடுந்தூரங்களை நோக்கி நீண்ட நேரம் பறக்கும் விமானங்களில் இவ்விதம் விமானிகள் பலரும் தூங்கிவிடுவதாகச் சொல்லப்படும் தகவலால் பயணிகளிடையே அச்சமும் ஐயமும் எழுந்துள்ளது காரணமாகவே தாம் அதுபற்றிய ஆய்வுகளில் இறங்கியதாக இக்கட்டுரையின் ஆசிரியர் போல் ஸ்மித் தெரிவிக்கிறார்.

தற்போது விமானங்களின் கட்டுப்பாடு முழுவதும் கம்பியூட்டர் மயமாக்கப்பட்டிருக்கிறது. விமானிகள் செய்ய வேண்டிய வேலைகளை கம்பியூட்டர்களே செய்கின்றன. அதனை திuto pilot systலீசீ என்பர். விமானம் வானில் ஏறுவது முதல் தலையில் இறங்குவது வரை கவனித்துக் கொள்வது கம்பியூட்டர்கள்தான். போக வேண்டிய வான்பாதை, தூரம் உள்ளிட்ட பல விடயங்களை கம்பியூட்டரில் முன்கூட்டியே அமைத்து விடுவதால் விமானிகளுக்கு வேலை குறைவு. விமானத்தின் தலைப்பகுதியில் (விலிவிறிபியிஹி) அமர்ந்திருக்கும் விமானி, உதவி விமானி ஆகியோரின் பணியே விமானம் திட்டமிட்ட உயரத்தில், சரியான பாதையில், சரியான வேகத்தில் செல்கிறதா என்பதைக் கண்காணிப்பதுதான். ஆனால் நெடுந்தூரப் பயணங்களில் விழிப்போடு இருக்க வேண்டிய விமானிகள் அசதியில் தூங்கி விடுகின்றனர். அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் அயர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணயர்ந்து விடுவதாகச் சொல்கிறார்கள்.

இது குறித்து மலேசியாவின் ஓய்வு பெற்ற விமானி ஒருவரிடம் கேட்டோம்., என்னதான் ஓட்டோ பைலட் சிஸ்டம் நடைமுறையில் இருந்தாலும் விமானத்தின் கட்டுப்பாடு விமானிகளிடம் தான் இருக்கும். விமானத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே அதனைச் சரி செய்யும் பெரிய பொறுப்பு அவர்களுக்கே இருக்கும். விமானத்தை ஓட்டும் அறையில் சிறைக்கூண்டு மாதிரி குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் வயர்களின் நடுவே அமர்ந்து வேலை செய்யும்போது உடலில் அசதி வருவது இயற்கை. போதாக் குறைக்கு மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருப்பது சற்றுக் கஷ்டமான காரியந்தான். இப்படியான கஷ்டங்கள் இதர வேலைகளில் இருப்பதில்லை.

உதாரணமாக, ஒரு விமானம் 12 மணிநேரம் தொடர்ந்து பறக்கிறது என வைத்துக்கொள்வோம். அதிலிருக்கும் விமானிகளுக்கு ஓய்வு கிடைக்காது. எங்கேயாவது ஒரு விமானத்தளத்தில் இறங்கி ஏறும் நிலையிலிருந்தால் சுமார் அரைமணி நேரமாவது ஓய்வு கிடைக்கும். அது இல்லாவிட்டால் எழுந்து சற்று நேரம் விமானத்தினுள் உலாவி விட்டு வரலாம். இயற்கை உபாதைகளுக்காக கழிவறை செல்லலாம். மற்றப்படி அவர்கள் எழுந்து விமானத்தின் ஓட்டும் அறையை விட்டு வெளியே செல்ல முடியாது. இருந்தாலும் விமானம் பறக்கும் போது தூங்குவது ஆபத்தானது. ஆனால் நம் நாட்டு விமானிகள் அப்படிச் செய்கிறார்களா என்பது பற்றித் தெரியாது என்றவர் சொன்னார்.

நீண்ட தூரம் பயணிக்கும் விமானியின் ஒவ்வொரு பணி நேரத்திற்குமிடையே குறைந்த பட்சம் 22 மணிநேர இடைவெளி (ஓய்வு) இருப்பது அவசியம். ஆனால் அதனை விமான நிறுவனங்கள் பின்பற்றுவதில்லையென்ற குற்றச்சாட்டுக்களும் உள்ளன. பிரச்சினைக்கு ஆரம்பமே அதுதான். ஒரு விஷயம் தெரியுமா? உலகிலுள்ள விமானிகள் பத்துப்பேரில் நால்வர் விமானம் பறக்கும்போது தூங்கிவிடுகிறார்கள். குறிப்பாக சுவீடன், நோர்வே, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகமுள்ளதாக இக்கட்டுரை ஆசிரியர் போல் ஸ்மித் தெரிவிக்கிறார்.

அண்மையில் துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானமொன்று இறங்கும் தறுவாயில் அங்கிருந்த உயர்ந்த கோபுரமொன்றில் மோதி மண்ணில் வீழ்ந்து நொறுங்கியது. விமானிகள் உட்பட அதில் பயணம் செய்த பயணிகளில் 158 பேர் ஸ்தலத்திலேயே இறந்துபோனார்கள். மீதிப்பேர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். அந்த விபத்துக்கு விமானியின் தவறுதான் காரணமென்று சொல்லப்பட்டது. ஆனால் விமானியின் அறையின் (விoவிkஜீot) உரையாடல் ஒலிப்பதிவை ஆராய்ந்தபோது அதில் விமானியின் குரட்டைச் சத்தம் பெரிதாகக் கேட்டதாகவும் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து சகவிமானி அவரைத் தட்டியெழுப்ப, அவரிடமிருந்து “ஐயோ கடவுளே” என்ற அலறல் கேட்டதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்தது.

அண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி உலகில் நடக்கும் 15 வீதமான விமான விபத்துக்களுக்கு விமானிகள் தூங்கி விடுவதுதான் காரணமென்று தெரியவந்துள்ளது. இதனைத் தவிர்க்க வழியுண்டா என்று தனியார் ழிஜீying ணீlub பயிற்சியாள் ஒருவரிடம் உசாவினோம். இதர தொழில்களைப் போலில்லாமல் விமானம் ஓட்டுவதில் நிறைய ஞிisk இருக்கிறது.

நீண்டநேரம் பயணிக்கும்போது விமான ஒரே இருப்பில் (ஜிosition) உட்கார்ந்திருப்பது சிரமமான காரியம் என்பதுதான் உண்மை. அப்போது இலேசாகக் கண்ணயர்வது உண்டு. அதனை உறக்கமென்று சொல்ல முடியாது. அதனைக் கூட சக விமானியிடம் கூறிவிட்டுத்தான் செய்ய முடியும். அப்போதும் கூட அவர் விழிப்பாகத்தான் செயற்படுவார். ஆனால் இப்போது நிலைமை மாற்றம் பெற்று ஓட்டோ பைலட் சிஸ்டம் நடைமுறையில் இருக்கிறது. அதனால் விமானம் தளத்தை விட்டு எழும்பும்போதோ, அல்லது தரையிறங்கும் போதோ எந்தப் பிரச்சினையும் வராது என்றவர் தமது கருத்தைச் சொன்னதாக ஊடகவியலாளர் போல் ஸ்மித் தமது கட்டுரையில் மேலும் தெரிவிக்கிறார்.

எஸ். ஜோன்ராஜன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com