Contact us at: sooddram@gmail.com

 

மீண்டும் முன்னாள் புலி உறுப்பினர்களின்

வாழ்வில் வினை விதைக்கும் எழுத்துதாயுதம் வைத்திருக்கும் வித்தியாதரன்

பிரபாகரன் பரலோகம் போகும் வழி மேல் விழி வைத்து காத்திருந்த வித்தியாதரன், முள்ளிவாய்க்கால் முடிவுவரை புலி உள்ளவரவிட்டு அடிக்கும் ராணுவம் தலை தெறிக்க ஓடும் எண்டுதான் உதயனில உசுப்பேத்தினவர். கருணா அடையாளம் காட்டின பிறகு அடிச்சார் குத்துக்கரணம். அகிலம் அணித்திரண்டு வருது மாத்தி யோசியுங்கோ எண்டு தலைவருக்கு செய்தி அனுப்பினனான் அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு எண்டார். இனி வட மாகாண சபை தான் எங்களுக்கு ஒரு தீர்வு. அதுக்கு நான் முதல்வராய் வாறதுதான் நல்லதெண்டு எல்லாரும் சொல்லுகினம். எனக்கெண்டா விருப்பமில்லை ஆனா நான் முதல்வர் ஆகிற மாதிரித்தான் கனவு வருகுது எண்டு கதை அளக்க தொடங்கினார்.

இடையில பாராளுமன்றதேர்தலில தான்தான் எண்டு நெஞ்சு நிமித்த மச்சான்காரர் முதுகில குத்திப்போட்டர். நீர் விட்டுக் குடும் எண்டு சம்மந்தர் சமரசம்பேச கடுப்பானவரிடம், தம்பி உம்மட மச்சான் தனக்கு தராட்டி தன்ர உதயன் பேப்பரில ஒரு செய்தியும் போடமாட்டாரம். அதில வாற எங்கட வீராவேச அறிக்கையை பாத்தாத்தான் சனம் வீட்டு சின்னத்துக்கு போடுவம் எண்டு முடிவெடுக்கும். இல்லாட்டி வெத்திலையில கேட்டாலும் வீணைக்கு போட்டிடும். பொறுமையாய் இரும் மாகாணசபை முதல்வர் பதவி உமக்குத்தான் எண்டு மாவையார் சொல்ல இலவு காத்த கிளி போல் கனவு பலிக்கப் போகுது எண்டு காத்திருந்தவருக்கு வினையாய் வந்தார் விக்கினேஸ்வரன் ஐயா.

மாப்பு எனக்கு மாவை வைச்சிட்டார் ஆப்பு எண்டு வித்தியர் விசனப்பட ஐயோ தம்பி உனக்கு பொய் சொன்ன என்ர கனவும் அதுதான். நீ என்னை நம்பினாய் நான் சம்மந்தரை நம்பினான். நான் உன்னை வெட்டி விட அவர் என்னை வெட்டி விட்டார் என்று மாவையரும் மனம்வருந்தினார். வினை விதைத்தால் தினையா அறுக்க முடியும் ?

மாவையாரின் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் உறவு இனி வேண்டாம் என்று அவர் தலைமை தாங்கும் தமிழ் அரசு கட்சியில் தான் வகித்த பதவியை விட்டு விலகிய வித்தியர் புலிகளின் தலைவரின் பிடரியை தடவிய என்னால் சரணடைந்த புலிகளை மேய்ப்பது சுலபம் என்று, அவர்களிற்கு தலைமை தாங்கி தன் மச்சானிடம் பறிகொடுத்த எம் பி பதவியை பிடிக்க போட்ட திட்டம் தான் இப்போது அவர் எடுத்திருக்கும் முன்னாள் புலி போராளிகள் காவலன் அவதாரம்.

விடைகொடு எங்கள் நாடே என்று ஓடிப்போன எம் உறவுகள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இவர் போய் ஐயோ அய்யய்யோ எங்கள் பன்னீராயிரம் புனர்வாள் வழிக்கப்பட்ட போராளிகள் நிலை பாரீரோ என கூறி. அவர்களை என் பின்னால் வரச்சொல்லுங்கள் நான் அவர்களின் நலம் பேண பெரு நிதி தாருங்கள், அவர்களை நான் பாதுகாக்க எனக்கு பதவி வேண்டும் அதற்க்கு என்னை பாராளுமன்றம் அனுப்ப எனக்கு வாக்களிக்க சொல்லுங்கள் என்று கூட்டம் போடுகிறார். கூடவே தான் எழுதின புத்தகத்தையும் வித்து காசாக்கிறார் இந்த காரியவாதி.

கூட்டமைப்புக்குள் காணப்படும் குத்துவெட்டு இன்னம் பெரிதாகும் என்று கணக்கு போடுகிறார். காரணம் இனி யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர் தான் வரவாய்ப்புள்ளதாக செய்தி. கூட்டமைப்பு பட்டியலில் தமிழரசு கட்சியில் மாவை , சரவணபவன் , சுமந்திரன் , தமிழ்மாறன் , தவராஜா , விநாயகமூர்த்தி , சிறிதரன், ரெலோ, ஈ பி ஆர் எல் எப், புளட் எண்டு இப்பவே நிரம்பி வழியுது.

இதில விடுபட்ட கொஞ்சப்பேர் வெயிட்டிங் லிஸ்டில இருக்கினம். கூடவே சித்தர், சிவாஜி, அனந்தி, விந்தன், கஜதீபன் ஆகியோரும் ஓட்டத்துக்கு தயார் எண்டு மணந்து பிடிச்ச சம்மந்தர் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டவை தமது சேவையை தொடர்ந்தும் செய்யவேண்டும் எண்டு மறைமுகமாய் வடக்கு கிழக்கு உங்களுக்கு தெற்கு எங்களுக்கு எண்டு சொல்லிப்போட்டார்.

எண்டாலும் உள்ளுக்கால உதைச் சொல்ல உவர் யார் எண்டு முணுமுணுப்பு கேட்குது. கைதடி மாகாண சபையை விட்டு கோட்டே பாராளுமன்றம் போற ஓட்டத்துக்கு தயாராகி எல்லா போராட்டங்களிலும் தாமே வலியப்போய் கலந்த்துகொள்ளுகினம்.

அடுத்த தேர்தல் அல்லோல கல்லோல்ல படப்போகுது. தமிழ் அரசு கட்சி புலி ஆசீர்வாதம் பெற்று பதவிக்கு வந்தாலும் புலிச்சாயம் வேண்டாம் எண்டு புலிகள் விட்ட பிழைகளை இப்ப விமர்சிக்கும் கட்சி. ஈ பி ஆர் எல் எப், ரெலோ , புளட் முந்தி அரசோட சேர்ந்து புலி வேட்டை ஆடி பிறகு பதவிக்காக புலிவாலை பிடித்த கட்சிகள், கஜேந்திரகுமார் குதிரையோட களம் காண வந்தாலும் அவர்கள் புலி போனபின் களட்டி விடப்பட்ட கட்சி,

ஆக மொத்தத்தில் எல்லோரும் புலிகளுக்கு பாதகம் செய்தவர்கள் நான் மட்டும் தான் கடைசிவரை புலிகள் விழமாட்டர்கள் உள்ளுக்க வரவிட்டு அடிப்பார்கள் எண்டு கிளிநொச்சி விழுந்த பின்பும் எழுதித்தள்ளி முள்ளிவாய்க்காலில் நந்திக்கடலில் பிரபாகரனை ஜீவ மோட்ச்சம் அடையச் செய்தனான்.
எனவே புனர்வாள்வளிக்கப் பட்ட 12000 போராளிகளுக்கு தலைமை தாங்கி களம் இறங்கினால் அவர்களின் உற்றார் உறவினர் நண்பர் மற்றும் அனை வரது வாக்குகளுடன் யாழ் மாவட்ட குழம்பிய குட்டை தேர்தலில் தன் மைத்துனரால் தட்டிப்பறிக்கப்பட்ட பதவியை எட்டிப்பிடித்து விடலாம் என்று சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்க நாசூக்காக செயல்படுகிறார் திருவாளர் வித்தியாதரன்.

தன்னை கடத்த சென்னவருடனே கள்ளத்தொடர்பு வைத்திருந்து இந்தியாவுக்கு தலையும் மகிந்தவுக்கு வாலுமாக செயல் பட்டு மகிந்த மண்கவ்விய பின் அவர் தம்பி பல்லு புடுங்கிய பாம்பானபின் பயம் தெளிந்து என் எழுத்து ஆயுதத்தை துணிந்து வெளியிடுகிறார்.

முன்பே வெளியிட்டு இருந்தால் தான் தான் என் எழுத்து மூலம் இளைஞர்களை புலியில் இணையத் தூண்டினேன் என்ற இவரது வாக்கு மூலத்தை கோத்தா பார்த்திருந்தால் இவரும் புனர்வாழ்வு முகாமில் 12000 புலிகளுடன் புனர்வாழ்வு பெற்றிருப்பார்.

தப்பிவிட்டார் புத்திசாலி தாண்டவக்கோனார். பிரபாகரன் இருக்கும் வரை புலிவால், மகிந்த இருக்கும் வரை மாகாணசபை பிரேமி அதுவும் தவறியபின் மலரும் இணையத்தள சாமி, இப்ப பாராளுமன்ற பதவிக்கு அலையும் ஆசாமி எண்டு தன் வித்தையை காட்டுகிறார் வித்தியாதரன்.

தன் சுயநலத்துக்காக மீண்டும் தம் சகஜ நிலை வாழ்க்கைக்கு திரும்பி உறவுகளுடன் வாழ முனையும் போராளிகளை பயன்படுத்துவதால் அவர்களிர்ற்கு ஏற்படபோகும் பாதகம் பற்றி மக்களே சிந்தியுங்கள்.

கிளிநொச்சி வீழ்ந்த பின்பு மட்டுமல்ல அதற்க்கு முன்பே இந்திய தூதரக தொடர்புமூலம் புலிகளை நிர்மூலம் ஆக்கும் உலக நாடுகளின் இரகசியத்திட்டம் இவருக்கு தெரியும்.

அதற்கும் முன்பே ஒஸ்லோ உடன்படிக்கையில் கையொப்பம் இட்ட அன்ரன் பாலசிங்கம் இலண்டனிலே தங்கிவிட்டார். ஒப்பந்தத்தை ஏற்காத பிரபாகரன் அதை கருணாவின் முகத்தில் எறிந்து அவரை துரோகி என திட்டித் தீர்த்தத்தை அறிந்த அன்ரன் பாலசிங்கத்தார் அதன் பின் வன்னிப்பக்கம் வரவேயில்லை.

இறுதிக் காலத்தில் எரிக் சொல்ஹெய்யும் கையை பிடித்து தமிழர் எதிர்கால நிலை பற்றி அவர் எதிர்வு கூறியதை அருகில் இருந்து அறிந்தவர் திரு வித்தியாதரன். தம்பி கேட்கிறான் இல்லை உலகம் ஒரு முடிவெடுத்திட்டுது எங்கட சனம் அழியப்போகுது எண்டு அவர் சொன்னதை அப்பவே உதயனில வித்தியர் எழுதி இருந்தால்

வித்தியை பிரபாகரன் மாமனிதர் ஆக்கியிருந்தாலும் முள்ளிவாய்க்கால் பேரவலம் தவிர்க்கப்பட்டு மக்கள் மனதில் என்றென்றும் ஒரு உண்மையான பத்திரிக்கையாளனாய் நித்தியமாகி இருந்திருப்பார்.

ஆனால் இவரது எழுத்து ஆயுதம் அவர்களை பேரழிவில் தான் தள்ளியது. அதே ஆயுதத்தை விற்றுக் காசாக்கும் இவரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது முன்னாள் போராளிகளுக்கு சங்கூதவா ?

ஐ.தே.க வில் போட்டியிட கிடைத்த அழைப்பை மறுத்த வித்தியின் அழைப்பை யாழ் வந்த பிரதமர் ஏற்று முன்னாள் புலி போராளிகளை சந்தித்தது வித்தியின் விலாங்குமீன் வித்தைதான். சப்ரா புகழ் சரவணபவன் மைத்துனர் தான் யு.என்.பி யில் கேட்டால் யாழில் வாக்கு விழாது எனவே புலி போராளிகள் மீது சவாரி செய்து பாராளுமன்றம் சென்ற பின் யானையுடன் பவனி வர புலித்தோல் போர்த்துகிறார்.

(Mathavan Sanjayan)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com