Contact us at: sooddram@gmail.com

 

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பாகம் (04)

இலங்கைப் படையினருக்கு இந்திய கடற்படை உதவியது

யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பற்றிய செய்மதி உருவங்கள், நிழற்படங்கள் மற்றும் வீடியோப் படங்களை அது உள்ளடக்கியது. ஐக்கிய நாடுகள் இணையத்தளத்தின் மூலம் விடுக்கப்பட்ட அதன் நடவடிக்கைகள் பற்றிய அறிவித்தலுக்குப் பதிலளிக்கு முகமாக கிடைக்கப்பட்ட சமர்ப்பணங்களையும் அது உள்ளடக்கியது. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக சரி பிழை பார்க்க முடியவில்லை என்ற போதிலும், சில சமயங்களில் அவை ஏனைய மூலகங்கைளை உறுதிப்படுத்த உதவின. உதாரணமாக இலங்கை அரசாங்கத்தின் அல்லது குறிப்பான வேறு பகிரங்க அறிவித்தல்கள் பற்றிய சம்பந்தப்பட்ட ஊடக மூலங்கள் இவ்வத்தியாயத்தில் மேற்கோள் காட்டப்பட்ட போதிலும், குழு சேகரித்த தகவலை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரம் அவை உதவுகின்றன. வன்னியில் நடந்தேறிய விடயங்கள் பற்றிய பல அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகள் இருக்கின்றன. இவ்வறிக்கைகள் சிலவற்றை இக்குழு மீளாய்வு செய்த போதிலும், இக்குற்றச்சாட்டுக்களைத் தொகுப்பதற்காக அது அவற்றில் தங்கியிருக்கவில்லை என்பதோடு, குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றிய மதிப்பீட்டினை குழு தானாகவே மேற்கொண்டது.

50. சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இலங்கையில் அல்லது வன்னியில் இருந்த சில சர்வதேச அமைப்புக்களின் அலுவலர் கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், தூதுவர்கள், கல்விமான்கள் மற்றும் ஏனைய தனிநபர்களை உள்ளிட்ட ஆயுதந்தாங்கிய மோதல் பற்றிய நிபுணத்துவம் அல்லது அனுபவம் கொண்ட பலருடன் குழு கலந்துரையாடியது.

51. குழுவின் ஆணை உண்மையைக் கண்டறிவதை அல்லது புலனாய்வினை உள்ளடக்காத அதே வேளையில் பகிரங்க செயற்களத்தில் கிடைக்கக்கூடிய குற்றச் சாட்டுக்கள் மேலதிக புலனாய்வினை போதிய அளவில் தேவைப்படுத்துகின் றனவா என்பதை மதிப்பீடு செய்வது அவசியம் என குழு நம்புகிறது. அவை காரணமாக எழும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் சிக்கல்களை நெறிப்படுத்த இக்குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றி நிர்ணயிப்பது குழுவுக்கு வழிவகுக்கும். சம்பந்தப்பட்ட செயல் அல்லது சம்பவம் நேர்ந்தது என்பதை நம்புவதற்கான நியாயமான அடிப்படை இருந்தால்“ ஒரு குற்றச்சாட்டு நம்பகமானது என்பதாக குழு நிர்ணயிக்கும். குழு பிரயோகிக்கும் இத்தரக் கட்டளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அரசாங்கம் ஒன்றுக்கு அல்லது வேறு பாத்திரங்களுக்கு பதிலளிப்பதற்கான பொறுப்பை ஏற்படுத்துகிறது.

52. குற்றச்சாட்டொன்று நம்பகமானதா என்பதை நிர்ணயிப்பதற்காக, தன் வசமுள்ள தகவலை முழுமையாக, அதன் ஏற்புடைய தன்மை, எடை மற்றும் ஒவ்வொரு மூலங்களினதும் நம்பத்தகு நிலை அத்துடன் முழுமையாக தகவலுடனான அதன் தொடர்பு ஆகியவற்றைக் குழு கவனத்துக்கு எடுத்துக் கொள்கிறது. ஏற்புடைத்தானது மற்றும் நம்பகரமானது என குழு தீர்மானிக்கும் அடிப்படை மூலங்களைக் கொண்டிருந்தால் மாத்திரமே குற்றச்சாட்டொன்று நம்பகரமானது என எடுத்துக் கொள்ளப்படுறது. இந்த அடிப்படை மூலங்களை, நேரடி மற்றும் மறைவான, ஏனைய தகவல்களின் மூலங்கள் உறுதிப்படுத்துகின்றன. கீழே தரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நம்பரகமான மற்றும் முரண்பாடற்ற தகவல் மூலங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. உண்மையிலேயே, அநேகமான குற்றச்சாட்டுக்கள் சான்றின் உயர் தரத்தினை நிறைவு செய்வதாகத் தென்படுகின்றன.

53. நம்பகமானவை என அது காணும் இக்குற்றச்சாட்டுக்களை, கூடிய அளவிலான அவற்றின் சூழ்நிலைப் பொருத்தம் மற்றும் சகல அம்சங்களையும் வழங்குவதற்காக சட்ட வகுதிகளின் கீழ் அவற்றை வரிசைப்படுத்தாமல் சொற்றொடர் விளக்கமாக சமர்ப்பிப்பதை குழு தெரிவு செய்துள்ளது. இவ்விளக்கத்தை நிரூபிக்கப்பட்ட உண்மை எனக் கொள்ளலாகாது என்பதோடு, குறிப்பான பொறுப்புக்களை நிர்ணயிப்பதற்கான ஏதும் முயற்சி மேலும் உயர்நிலையிலான ஒரு அமைப்பைத் தேவைப்படுத்தும்.

ஆ. இராணுவ உத்திகள் மற்றும் நடவடி க்கைகளின் பின்னணி

54. இவ்வத்தியாயத்தின் இ முதல் ஊ பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ள நம்பகமான குற்றச்சாட்டுக்களை புரிந்து கொள்வதற்கான அவற்றின் சூழ்நிலைப் பொருத்தத்தைப் பெறுவதற்காக, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான அரசாங்கத்தின் மற்றும் எல்.ரி.ரி.ஈ இன் அரசியல் மற்றும் இராணுவ உத்திகள் அத்துடன் கொள்ளளவுகளை குழு ஆராய்ந்தது. பொதுவான உத்தியின் பகுப்பாய்வுக்காக, பகிரங்கமாகக் கிடைக்கக்கூடிய அரசியல் மற்றும் இராணுவ பகுப்பாய்வுகள், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இராணுவ அலுவல்களுக்கான சர்வதேச இராணுவ நிபுணர்கள் போன்ற பல்வேறு மூலங்களில் குழு சார்ந்திருந்தது. குறிப்பான குற்றச்சாட்டுக்களை குழு ஆராயும் போது, அடிப்படை மூலங்களை அடிப்படையாகக் கொண்டு அதனை அது மேற்கொண்டது.

1. இலங்கை அரசாங்கம்

55. தோல்வியில் முடிவடைந்த சமா தானச் செயற்பாட்டைத் தொடர்ந்து 2006 இல் எல்.ரி.ரி.ஈ இனைத் தோற்கடிப்பதற் காக பல முனை கொண்ட முழுமையான தொரு உபாயத்தை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டது. இராஜதந்திர மற்றும் அரசியல் அம்சங்கள், யுத்த வலயம் பற்றிய தகவல் மற்றும் அதற்கான பிரவேசத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அத்துடன் மிகவும் கண்டிப்பான இராணுவ அம்சங்களை இவ்வுபாயம் உள்ளடக்கியது.

56. இராஜதந்திர ரீதியில், "பயங்கர வாதம் மீதான யுத்தத்தின்' சூழ்நிலைப் பொருத்தத்தில், பல நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக சாதகமான உலகளாவிய சூழலை அரசு பயன்படுத்திய தோடு, ராஜீவ் காந்தியை எல்.ரி.ரி.ஈ படுகொலை செய்த காரணத்தினால், இப்பிராந்தியத்தில் இந்திய அரசாங்கத்தின் கூடிய ஒத்துழைப்பையும் அது பெற்றுக் கொண்டது. ஒரு முக்கிய உதாரணமாக, எல்.ரி.ரி.ஈ கடல் மூலம் அதன் விநியோகத்தைப் பேணுவதற்காக வைத்திருந்த மிதக்கும் களஞ்சியங்களை இடைமறிப்பதில் இலங்கைப் படையினருக்கு இந்திய கடற்படை நேரடியாக உதவியது.

57. உள்நாட்டு ரீதியில், ஒன்றுபட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைமைத்துவத்தை அரசாங்கம் உறுதிப்படுத்தியது. ஜனாதிபதி தன்னையே பாதுகாப்பு அமைச்சராக நியமித்து, தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்தார். பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமித்தார். பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகிய இருவருக்கும் எல்.ரி.ரி.ஈக்கு எதிரான பரவலான யுத்த அனுபவம் இருந்ததோடு, 2006 இல் இருவரும் எல்.ரி.ரி.ஈ இன் படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பிக் கொண்டவர்களாவர். தொடர்ந்து இராணுவ வரவு செலவுத் திட்டத்தில் பாரிய அதிகரிப்புக்கான பாராளுமன்ற அனுமதியை ஜனாதிபதி பெற்றுக் கொண்டார். 2008 இல் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அது அதிகரித்ததோடு, தேசிய வரவு செலவுத் திட்டத்தின் சுமார் 20 சதவீதத்தை அது பிரதிநிதித்துவப் படுத்தியது.

58. இராணுவத்தைப் பொறுத்த வரையில், லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கை இராணுவத்தை நன்றாக உற்சாகப்படுத்தி அதற்கு ஆற்றலை வழங்கினார். ஆயுதப் படையினரின் எண்ணிக்கை 300,000 என மும்மடங்காக அதிகரிக்கப்பட்டு கிரமமான சுழற்சி மூலம் யுத்தமுனைக்கு புதிய படையினர் தொடர்ச்சியாக அனுப்பப்பட்ட னர். புதிய உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை இராணுவம் கொள்வனவு செய்ததோடு, பல்குழல் ஏவுகணை செலுத்திகள், மோட்டார் மற்றும் ஹோவிட்சர்கள், எம்ஐஜி 29 உலங்கு வானூர்திகள், கபிர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர் துப்பாக்கி தாங்கிய விமானங்கள் ஆகியவற்றைக் கொண்டு அதன் போர்க்கருவிகளை அது பலப்படுத்தியது. இலங்கை விமானப்படை ஆளற்ற பறக்கும் கலன்களை ஏவுபார்ப் பதற்காக, இலக்குகளைக் கண்டு பிடிப்பதற்காக மற்றும் அதனைத் தொடரும் யுத்த சேதத்தை மதிப்பீடு செய்வதற்காகப் பெற்று சேவையில் ஈடுபடுத்தியது.

59. சளைக்காத தாக்குதலை பல முனைகளில் மேற்கொள்வதற்காக, இலங்கை இராணுவம் அதன் சிறந்த ஆயுதங்கள் மற்றும் படையினர் எண்ணிக்கை அத்துடன் ஆகாயத்தில் அதன் ஆதிக்கம் ஆகியவற்றில் தங்கியிருந்ததோடு, அவற்றினை எல்.ரி.ரி.ஈ இனால் சமாளிக்க முடியவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கான சகல முயற்சிகளும் நிராகரிக்கப்பட்ட தோடு, யுத்த நிறுத்தமொன்றை மீண்டும் அணி திரள்வதற்காக எல்.ரி.ரி.ஈ பாவிக்கும் என்று அரசாங்கம்“ வாதிட்டதால், யுத்த நிறுத்தம் எதுவும் வழங்கப்படவில்லை.

60. வளைந்து கொடுக்கக் கூடிய, உளவுத் தகவலினால் உந்தப்பட்ட மற்றும் கெரில்லா செயல்முறை போன்றவற்றை காலாட்படையை முன்னடத்திச் சென்று எதிரிக்கு ஆகக் கூடிய சேதத்தை விளைவிப்பதற்காக இலங்கை இராணுவம் பிரயோகித்தது. இதற்காக, கொமாண்டோ நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற தன்னிறைவுள்ள சிறப்புக் காலாட்படை நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதை உள்ளிட்டவாறு, இராணுவத் தளபதி தனது படையினரை மறுசீரமைத்து அவர்களுக்கு மீள் பயிற்சி அளித்தார். எல்.ரி.ரி.ஈ தளபதி மாத்தயாவுடன் முன்பு சம்பந்தப்பட்டிரு ந்த தமிழ் போராளிகளை உள்ளடக்கிய ஆழ ஊடுருவும் அலகுகளை எதிரிகளின் அணிகளுக்குப் பின்னால் சடுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் வேவு பார்ப்பதற்காகவும் இலங்கை இராணுவம் பிரயோகித்தது. முன்னேறிச் செல்லும் போது இராணுவத்தினரிடையே காயமேற்படுவதைக் குறைப்பதற்காக களத்தை எளிதாக்குவதற்கும் எல்.ரி.ரி.ஈ இன் பாதுகாப்பு அரண்களை ஊடுருவுவதற்காக கனரக பீரங்கிகள் பாவிப்பதற்கானதுமான சில இலங்கை இராணுவ நடவடிக்கைகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன. மனிதாபிமான நடவடிக்கையொன்றின் மூலம் அப்பிரதேசத்தில் இருந்து பொதுமக்களை விடுவிப்பதற்காக மற்றும் அச்செயற்பாட்டின் போது பூஜ்ய பொதுமக்கள் பாதிப்புக்கான அதன் முயற்சிகள் பற்றி அரசாங்கம் கூறி வந்த அதே வேளையில், முன்னேறிச் செல்லும் போது பீரங்கிகளைப் பிரயோகிப்பது பற்றி தீர்மானம் எடுப்பதற்கான கணிசமான தன்விருப்புரிமை களத்திலுள்ள படையினருக்கு வழங்கப்பட்டிருந்ததாக வும் தெரிகிறது.

61. செல்வெடிகளைச் செலுத்து முன், இலக்குகளை இனங்காண்பதற்காக ஆளற்ற பறக்கும் கலன்கள் அதிகமாகப் பாவிக்கப்பட்டன. அவற்றிலிருந்து தொடர்ச்சியாக படங்கள் புவிச் செயற்பாட் டுத் தளங்களுக்கு அனுப்பப்பட்டதோடு, தாமதமின்றி தீர்மானம் எடுப்பதற்காக அத்தகவலை தளபதிகள் பிரயோகிக்கக் கூடியதாகவிருந்தது.

62. கொழும்பிலுள்ள இணை நடவடிக்கைகள் தலைமையகத்தில் இருந்து யுத்த முன்னெடுப்புக்கு லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமை தாங்கியதோடு நடவடிக்கையை நடத்திச் செல்வதற்காக அனுபவமிக்க தளபதிகளை அவர் தேர்ந்தெடுத்தார். வன்னி பாதுகாப்புப் படையினருக்கு வன்னியில் தலைமையகம் அமைத்து மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமை தாங்கினார். மேலும், யாழ்ப்பாண தீபகத்திலிருந்து தெற்கு நோக்கி முன்னேறிச் சென்ற (மேஜர் ஜெனரல் கர்மல் குணரத்ன தலைமையிலான) 53ஆவது பிரிவு மற்றும் (பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைøயிலான) 55ஆவது பிரிவு, (மேஜர் ஜெனரல் எச்.சி.பி.குணதிலக்க தலைமையிலான) 56ஆவது பிரிவு, (மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான) 57ஆவது பிரிவு, (பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான) 58 ஆவது பிரிவு மற்றும் (மேஜர் ஜெனரல் நந்தன உடபத்த தலைமையிலான) 59 ஆவது பிரிவு ஆகியவற்றை உள்ளிட்ட 6 முக்கிய படைப்பிரிவுகள் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது செயலாற்றின. அவை அனைத்தும் தெற்கில் இருந்து தென்மேற்குத் திசையில் முன்னேறின. சிறப்புப் படைகள் மற்றும் கொமாண்டோக் களும் முக்கியமானதொரு பங்கினை வகித்தன. வலுவான தலைமைத்துவம், புதிய பயிற்சி மற்றும் காரியம் சாதிப்பதற்கான உறுதிப்பாடு பல வெற்றிகளுக்கு வழிவகுத்து, கைவிட்டுச் செல்பவர்களின் வீதத்தைக் குறைத்து இலங்கை இராணுத்தினரிடையே மனத் தைரியத்தை மேம்படுத்தின. 63. அதன் கிரமமான இராணுவ நடவடிக்கைகளுக்குப் புறம்பாக, எல்.ரி.ரி.ஈ. இன் பாதுகாப்பான மறைவிடங்களைக் கண்டுபிடிப்பதற்காக, தெற்கில் உள்ள எல்.ரி.ரி.ஈ. இன் வலைப்பின்னல்களை சிதைப்பதற்காக மற்றும் எல்.ரி.ரி.ஈ. உடன் சம்பந்தப்பட்ட வர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை அகற்றுவதற்காக அரசாங்கம் இரகசியமான நடவடிக்கைகளைப் பிரயோகித்தது. இந்நடவடிக்கைகளின் ஆற்றல் மிக்கதொரு சின்னமாக "வெள்ளை வான்' இருந்தது. அரசாங்கத்தை விமர்சிப்ப வர்களை அல்லது எல்.ரி.ரி.ஈ. உடன் தொடர்பு உள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப்படுப வர்களை கடத்துவதற்காக மற்றும் அநேகமாக மாயமாகச் செய்வதற்காக மற்றும் பொதுவாக மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்துவதற்காக வெள்ளை வான்கள் பாவிக்கப்பட்டன. இந்த வெள்ளை வான் நடவடிக்கைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் விசேட அலகொன்று நடத்தியதாகச் சம்பந்தப்படுத்தப்பட்டது. அவ்வாறாகக் கடத்தப் பட்டவர்கள் இரகசிய இடங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு மற்றும் பல்வேறு விதமாகச் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள். பலர் கொலை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் இரகசியமாக அப்புறப்படுத்தப் பட்டன. "புலிகளின் ஆதரவாளர்கள்' எனக் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமைகள் ஈடுபாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரும் இவ்வலைக்குள் சிக்கினர். 2006 முதல் யுத்தம் முடிவடைந்ததற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் 66 மனிதாபிமான ஊழியர்கள் காணாமல் போனார்கள் அல்லது கொலை செய்யப்பட்டர்கள்.

64. இந்த உபாயம் ஊடகம் மற்றும் தகவலின் ஓட்டம் மீது மேலும் கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்து, ஊடக இருட்டடிப்பைத் திணித்து யுத்த முன்னெடுப்புக்களை விமர்சிக்கும் கருத்துக்களை நசுக்குவதையும் கொண்டிருந்தது. 2006 முதல் சுயாதீன ஊடகவியலாளர்கள் எல்.ரி.ரி.ஈ. இன் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டதோடு, சில ஊடகவியலாளர்களை "புலிகளின் ஆதரவாளர்கள்' என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் குறிப்பிட்டது. யுத்தம் பற்றி அறிக்கை விடுவது தொடர்பாக 2008 இல் மேலும் விரிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படியாத ஊடகவியலாளர்கள் அல்லது வேறு விதத்தில் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள் அல்லது கடுமையான அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். யூன் 2008 இல் பாதுகாப்புச் செயலாளர் அசோசியேடட் நியூஸ் பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடட் இனைச் சார்ந்த பிரபலமான இரு ஊடகவியலாளர்களை நேரடியாக அச்சுறுத்தினார். பின்னர் அவர்களுள் ஒருவரான போத்தல ஜயந்த என்பவர் யூன் 2009 இல் வெள்ளை வானில் ஏற்றிச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார். 2009 ஜனவரி 8 ஆம் திகதி, பிரபல பத்திரிகை ஆசிரியர், லசந்த விக்கிரமதுங்க கொழும்பில் வைத்து இனங்கா ணப்படாதவர்களால் கொலை செய்யப்பட்டார். பாதுகாப்புச் செயலாளர் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவக் கொள்வனவுகளின் ஊழலை வழக்கொன்றின் மூலம் பகிரங்கப் படுத்துவதற்காக அவர் தகவலைச் சேகரித்திருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சுயாதீன மகாராஜா தொலைக்காட்சி ஒளிபரப்புப் பின்னலை ஆயுததாரிகள் தாக்கி பாதுகாப்பு ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி அங்குள்ள உபகரணங்களை நொறுக்கினர். இச்சம்பவங்கள் எதுவும் புலனாய்வு செய்யப்படவில்லை. 2006 மற்றும் 2009 ஆரம்பத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறைந்த பட்சம் 10 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இத்தணிக்கை நடவடிக்கைகளின் திரண்ட விளைவாக மற்றும் கொலை செய்யப்படுவோமோ அல்லது தாக்கப்படுவோமோ என்ற அச்சமும் ஊடகத்தின் சுயாதீன மேற்பார்வைப் பங்களிப்பில் தீங்கானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. "என்னிடம் இரு குழுக்கள் மாத்திரமே உள்ளன அவை பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் மக்களும் பயங்கரவாதிகளுமே' என பாதுகாப்புச் செயலாளர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.. 65. எல்.ரி.ரி.ஈ. இனை அதிகளவில் பொறுத்துக் கொள்வது மற்றும் "பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குதல்' தொடர்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்தைச் தொடர்ச்சியாகப் பகிரங்கமான முறையில் விமர்சித்தும் வந்துள்ளது. இவ்வுத்தியின் ஓர் அங்கமாக அதனை படிப்படியாக யுத்த வலயத்தில் இருந்து அகற்றி யுத்தத்தை நிறுத்து வதற்கான அல்லது யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர முயற் சிகள் மறுக்கப்பட்டன அல்லது உதாசீனம் செய்யப்பட்டன.

எல்.ரி.ரி.ஈ. 66. 2008 செப்டெம்பர் அளவில், அதன் கடந்த கால பலத்துடன் ஒப்பீட்டளவில் எல்.ரி.ரி.ஈ. இன் இராணுவத் திறன்கள் கடுமையாகக் குறைந்திருந்தன. அதன் சரி யான பலம் அத்தருணத்தில் தெரியாதிரு ந்த போதிலும், உச்சக்கட்டத்தில் அதன் பலம் 20,000 ஆட்களை விஞ்சவில்லை எனலாம். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது அதன் முக்கிய போராளிகள் எண்ணிக்கை இப்பலத்தின் ஒரு சிறிய அளவாக, 5,000 வரை இருந்திருக்கலாம். தெற்கில், கொழும்பில் மற்றும் ஏனைய இடங்களில் அதன் வலைப்பின்னல்கள் மற்றும் செயற்படாமல் காத்திருந்த அதன் கூறுகள் நலி வுற்று அரசாங்கத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, தற் கொலை நடவடிக்கைகளை மேற்கொள் வதற் கான திறனை அதிக அளவில் இழந்து காணப்பட்டன.

"ஈழம்' தேசம் என இடப்பரப்பைப் பிடித்து வைத்திருப்பதற் கான எல்.ரி.ரி.ஈ. இன் முயற்சி, கெரில்லா அணுகுமுறையில் இருந்து விலகி முன் அணிகள் மற்றும் நிரந்தர இடங்களில் யுத்தம் புரிவதற்கான பாரம்பரிய யுத்தமொன்றை மேற்கொள்வதற்கான மாற்றத்தைத் தேவைப்படுத்தியது. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, அதன் முயற்சிகள் அநேகமாக தற்காப்பு நடவடி க்கைகளாக இருந்ததோடு, கடந்த காலத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்ப ட்ட அதன் சடுதியான எதிர்த்தாக்குதல்கள் இடம்பெறவில்லை. இதன் விளைவாக, தொடர்ந்து சுருங்கி வரும் பிரதேசத்தினுள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்ட எல்.ரி.ரி.ஈ. மண் அணைகள், அரண்கள், கண்ணிவெடிகள் மற்றும் அகழிகள், மறைந்திருந்து தாக்குதல், கண்ணி வெடிப் பொறிகள் மற்றும் வெடிக்கும் சாதனங்கள் ஆகியவற்றுக்குப் பின்னால் இருந்து கொண்டு தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டது.

67. சுமார் 32 நாடுகளில் தடைசெய்யப் பட்ட பயங்கரவாத அமைப்பு என்ற நிலை அதன் சர்வதேச நடவடிக்கைகளை மற்றும் ஆதரவை மட்டுப்படுத்தியது. இலங்கை இராணுவத்துடன் ஒப்பீ“ட்டளவில் எல்.ரி.ரி.ஈ. மிகக் குறைந்த அளவாக இருந்ததோடு, பெரும்பாலான அதன் அணியினர் அனுபவமற்றவர்களாக இருந்த போதிலும், அதன் அடிப்படைக் கட்டமைப்பு அதன் கீழ் செயற்படும் இராணுவ மற்றும் அரசியல் பிரிவு ஆகியவற்றுடன் சீர்குலையாமல் இருந்தது. அவை இரண்டுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிநடாத்திய மத்திய ஆளுமைக் குழுவொன்று தலைமை தாங்கியது. இக்குழு (சூசையின் கீழான) கடல் புலிகள், (பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி மற்றும் ரத்னம் மாஸ்டர் தலைமையிலான) வான் புலிகள், சார்ள்ஸ் அன்ரனி பிரிகேட் என்ற சிறந்ததொரு யுத்தம் புரியும் அலகு, கரும் புலிகள், பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரவு மற்றும் நடேசன் தலைமை தாங்கிய அரசியல் அலுவலகம் ஆகியவற்றை மேற்பார்வை செய்தது. அநேகமாக இத்தலைவர்கள் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் கொல்லப்பட்டார் கள்.

68. அதன் அணிகளைத் தக்க வைப்ப தற்காக எல்.ரி.ரி.ஈ. முக்கியமாக வலுக்கட் டா மாக ஆட்சேர்ப்பதில் தங்கியிருந்தது. ஆரம்பத்தில் அதன் படைக்கு ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பிள்ளையை எடுத்த எல்.ரி.ரி.ஈ., யுத்தம் மும்முரமடைந் ததும் கொடூரமாகச் செயற்பட நிர்ப்பந்திக் கப்பட்டு, 14 வயதுடைய இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமியர் உள்ளிட்ட ஒரே குடும்பத் தில் இருந்து பல பிள்ளைகளை அணிசேர்த் தது. அவர்களது யுத்த நடவடிக்கைகளுக்கு வேறு விதமாக பொதுமக்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, அவர்கள் மேலதிக இடர்களுக்கு உட்படும் வண்ணம் உதாரணமாக அவர்களை அகழிகள் தோண்டுவதற்கு, அரண் அமைப்பதற்கு ஈடுபடுத்தியது. 69. குறிப்பாக அதன் மிதக்கும் களஞ்சியங்களின் இழப்புக்குப் பின்னர் எல்.ரி.ரி.ஈ. இன் விநியோகச் சங்கிலித் தொடர் தடைப்பட்ட போதிலும், தொடர்ந்தும் அது பீரங்கிக் குண்டு மற்றும் மோட்டார் வெடிகள் அத்துடன் சில பல்குழல் எறிகணை செலுத்திகள் உள்ளிட்ட சில ஆயுதக் குவியல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. தாம் அமைத்துக் கொண்ட அரண்களுக்குப் பின்னால் இருந்து கடினமான எதிர்ப்பை வழங்கியதோடு சரமாரியான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் அது மேற்கொண்டன. கரும் புலிகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு, முன்னேறிக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின ருக்கு எதிரான அதிகமான மற்றும் பொதுமக்களுக்கு அதிக சேதத்தை விளைவித்த யுத்த வலயத்துக்கு வெளியே சில தற்கொலைத் தாக்குதல்களையும் மேற்கொண்டது. கடல் புலிகளிடம் தொடர்ந்தும் சில கடற்படை உபகரணங் கள் மற்றும் படகுகள் இருந்ததோடு, 2009 பெப்ரவரியில் எல்.ரி.ரி.ஈ. வசம் எஞ்சியிருந்த செயற்படக்கூடிய விமானம் கொழும்புக்கு மேலாகத் தற்கொலை நடவடிக்கை ஒன்றின் போது சுட்டு வீழ்த்தப்பட்டது.

70. தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதே ச த்தில் பொதுமக்களைத் தடுத்து வைத்திருப்பது எல்.ரி.ரி.ஈ. இன் வியூகத்துக்கு முக்கியமானதாகவிருந்தது. பொது மக்கள் இருப்பதானது தனி நாட்டுக்கான எல்.ரி.ரி.ஈ. இன் வாதத்தை நியாயப்படுத்துவதாகவும் இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு எதிரான கேடயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, வன்னியில் இருந்த பொதுமக்களை அங்கிருந்து சென்று விடாமல் எல்.ரி.ரி.ஈ. தடுத்தது. பொதுமக்களுக்கான சேதம் கணிசமான அளவு அதிகரித்த போதிலும், சர்வதே தலையீடு ஏற்பட்டு யுத்தம் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் வெளியேறுவதை எல்.ரி.ரி.ஈ. தடுத்தது. இறுதி நேரம் வரை அதன் தலைமைத்துவத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக பீரங்கிச் சூட்டுக்கு பெருமளவானோர் பலியாக புதிய மற்றும் நன்கு பயிற்றப்படாத அணியினரையும் பொதுமக்களையும் அது பயன்படுத்தியது.

( தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com