Contact us at: sooddram@gmail.com

 

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பாகம் (05)

ஐ.நா.அலுவலர்களை வெளியேற்ற வேண்டாமென கெஞ்சிய வன்னி மக்கள்

3. யுத்தப் பிரதேசத்தில் இருந்த பொதுமக்கள்

71. 2008 செப்ரெம்பரில் இலங்கை இராணுவம் பல முனைகளில் இருந்தும் வன்னி நோக்கி முன்னேறியதோடு அதனால் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற முடியாத அதிக எண்ணிக்கை யிலான பொதுமக்கள் அங்கு சிக்குண்டனர். அப்பிரதேசத்தை விட்டகலுமாறு கிரமமாக அரசாங்கம் துண்டுப் பிரசுரங்களை மேலிருந்து வீசியது (ஆயின் அதனை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றிய குறிப்பான தகவலை வழங்கவில்லை). ஆயினும், அதிகமானோர் அங்கேயே இருந்தனர். எல்.ரி.ரி.ஈ.இன் அனுமதிச் சீட்டுத் திட்டத்துக்குப் புறம்பாக, எல்.ரி.ரி.ஈ. இன் கட்டுப்பாட்டுப் பிரதேச த்தில் பொதுமக்கள் சிக்குண்டதற்கு மேலும் பல காரணிகளும் பங்களித்தன. இம்மக்களுள் பெரும்பாலானோருக்கு வன்னியே அவர்களின் குடியிருப்புப் பிரதேசமாகும்.

இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய அனுபவம் பலருக்கு இருந்ததோடு, 1995 முதல் அவர்கள் எல்.ரி.ரி.ஈ. உடன் சேர்ந்து நகர்ந்தனர். தம் அனுபவத்தில் இருந்து அவர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்றால் அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்ப டுவார்கள் என அவர்கள அஞ்சினர். அவர்கள் வெள்ளை வான் பற்றியும் அச்சம் கொண்டிருந்ததோடு, இராணுவத்தினரால் கற்பழிப்பு அல்லது சித்திரவதை செய்யப்படுவதையிட்டும் பயந்தனர்.

மேலும், வலுக்கட்டாயமாக எல்.ரி.ரி.ஈ அணிதிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அநேக குடும்பங்களின் உறவுகள் எல்.ரி.ரி.ஈ இல் இருந்தனர். அது எவ்வாறாயிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்வதாயிருந்தால், செல் வெடி வரும் திசை நோக்கி, யுத்தம் நடைபெறும் இடங்களை மற்றும் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியும் இருந்தது.

72. இலங்கை இராணுவம் குண்டுகளை எறிந்த வண்ணம் வன்னி நோக்கி மேலும் முன்னேறிய போது, வேறு எங்கும் இனிச் செல்ல முடியாது என்ற நிலைக்கு வரும் வரை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மேலும் ஆழமாக எல்.ரி.ரி.ஈ. இன் கட்டுப் பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்றனர். சில இடம்பெயர்ந்தவர்கள் தொடர்ச்சி யாக, சிலர் இரு வருடங்களாக, மேற்கில் மன்னாரில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் நகர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இடம்பெயர்ந்தவர்கள் தமது உடமைகளை உழவு இயந்திரங்கள், பைசிக்கில்கள் அல்லது மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வீட்டுப் பிராணிகள் இருந்தால் அவற்றையும் தம்முடன் எடுத்துக் கொண்டு சென்றனர்.

அதிகமாக அவர்கள் தம் உடமைகளை கைவிட்டுவிட்டு, கடினமான சில சந்தர்ப்பங்களில், தம் உறவுகளை கைவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. இடம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாக இருந்ததோடு தொடர்ச்சியாக இடம்பெயர்வதால் அது மேலும் மோசமடைந்து உணவு உட்பட அடிப்படைத் தேவைகள் தட்டுப்பாடும் அதிகரித்தன. பொதுமக்கள் அதிகமாகத் தாக்கமுறும் நிலையை அடைந்து உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்காக மனிதாபிமான உதவி மீது தங்கியிருக்க வேண்டியிருந்தது. தனியாகப் பயணித்த பெண்கள், விதவைகள் அல்லது கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயோதிபர்களை உள்ளிட்ட இடம்பெயர்ந்த சனத்தொகையில் அதிகமானோர் குறிப்பாக இலகுவாகத் தாக்கமடையக் கூடியவர்களாக இருந்தனர்.

இ. யுத்தத்தின் போதான அது தொடர்பான நம்பத்தக்க குற்றச்சாட்டுக்கள் 1. பீடிகை: வன்னியில் இருந்து சர்வதேசத்தை அகற்றல்

73. 2008 செப்டெம்பரில், எல்.ரி.ரி.ஈ. இன் வலுவான இடமாகவும் நடப்பிலுள்ள தலைநகருமான கிளிநொச்சி நோக்கி 57 ஆவது மற்றும் 58ஆவது படைப்பிரிவுகள் முன்னேறியபோது, அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கை முனைப்பான ஒரு கட்டத்தை அடைந்தது. முக்கியமாக "கிளிநொச்சிப் பெட்டி' என்று நகரினுள் அழைக்கப்பட்ட பிரதேசமொன்றில் தமது மற்றும் ஏனைய சர்வதேச அமைப் புக்க ளின் அலுவலகங்களைக் கொண்டிருந்த ஐ.நா. எல்.ரி.ரி.ஈ. இன் கிளிநொச்சிப் பகுதியில் மனிதாபிமான மையமொன்றைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

1. போர்முனைகள், செப்டெம்பர் 2010 மூலம்: இலங்கை அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்

74. 2008 கோடைக்கால இறுதியில், பாதுகாப்புப் பிரதேசம் என அது குறிப்பிட ப்ப ட்டு அதன் எல்லைகள் இலங்கை அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்திருந்த போதி லும், கிளிநொச்சிப் பெட்டி மீது பீரங்கி மற்றும் வான் தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டன. பின்னர் 2008 செப்டெம்பரில், வன்னியில் உள்ள மனிதாபி மான பணியாட்களின் பாதுகாப்பைத் தொடர்ந்தும் தன்னால் உறுதிப்படுத்த முடி யாது என அரசாங்கம் அறிவித்தது. அம்மாத இறுதியில், ஐ.நா. மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் சர்வதேச பணியாட்டொகுதியினரை கிளி நொ ச்சியில் இருந்து வெளியேறுமாறு அது கேட்டுக் கொண்டது. அச்சமயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுக்கான அச்சுறுத்தல் முக்கியமாக இலங்கை இராணுவத்தின் தாக்குதலாக இருந்ததோடு, பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் நம்பகத்தன்மையை அவ்வாறு அது வலுவிழக்கச் செய்தது. மாறாக அது அவ்வாறு செய்ய விரும்பவில்லை.

75. ஐக்கிய நாடுகள் அதன் நடவடிக்கைகளை வன்னியில் இடைநிறுத்தி கிளிநொச்சியில் இருந்து அதன் அலுவலகங்களை வவுனியாவுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்தது. ஏனைய சர்வதேச அமைப்புக்களும் தமது சர்வதேச பணியாட்டொகுதியினை வாபஸ் பெற்றனர். இருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் உள்நாட்டு ஊழியர்களுக்கு அங்கிருந்து செல்வதற்கான அனுமதியை எல்.ரி.ரி.ஈ மறுத்தது. சுமார் 320 எண்ணிக்கையிலான சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் பலவற்றின் தேசிய ஊழியர்களும் அவர்களைச் சார்ந்தோரும் வன்னியில் தொடர்ந்தும் தங்கியிருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஊழியர்கள் கிளிநொச்சியில் இருந்து வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், ஐக்கிய நாடுகள் வளவுக்கு அருகில் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் அங்கிருந்து வெளியேறும் தினம், 2009 செப்டெம்பர் 15 அல்லது அதற்குச் சமீபத்தில், அவர்கள் இல்லாத நிலையில் தமக்கு என்ன நேருமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் கூட்டமொன்று அவர்களைச் சூழ்ந்து கொண்டு போக வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.

76. கிளிநொச்சியில் இருந்து ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் சர்வதேச ஊழியர்கள் வாபஸ் பெறப்பட்டது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் முக்கியமானதொரு திருப்பத்தைக் குறிப்பதாகவிருந்தது. அத்தருணம் முதல் வன்னியில் என்ன நடந்தேறுகிறது என்பதை வெளியுலகுக்கு அறிவிப்பதற்கு இயலுமான சர்வதேச அவதானிகள் எவரும் அங்கிருக்கவில்லை.

இலங்கை இராணுவத்துடன் இருந்த அல்லது எல்.ரி.ரி.ஈ. உடன் செயற்பட்ட ஊடகவியலாளர்கள் மாத்திரமே தொடர்ச்சியாகச் செய்தி அறிக்கைகளை விடுத்தனர். சர்வதேச அமைப்புக்களின் உள்நாட்டு ஊழியர்கள், சமயத் தலைவர்கள், உள்நாட்டு அரச ஊழியர்கள், வைத்தியர்கள் அல்லது எல்.ரி.ரி.ஈ. இனருக்கு ஆதரவான தமிழ்நெட் இணையத்தளம் போன்றவற்றில் இருந்து கிடைத்த குறுந்தகவல், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் ஏனைய மூலங்களில் இருந்து அறிக்கைகள் வெளியாகின. இம்மூலங்கள் அனைத்தும் தமிழர்களிடம் இருந்து கிடைத்ததால் அவற்றை அரசாங்கம் கிரமமாக கேள்விக்குட்படுத்தி அல்லது நிராகரித்து விட்டது.

77. 2009 ஜனவரியில், மிக முக்கியத்து வம் வாய்ந்த பல வெற்றிகளை அரசாங்கம் ஈட்டியது. 2008 நவம்பரில், யுத்த வியூகக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பூநகரியையும் மேற்குக் கரையோரத்தின் பெரும்பாலான பகுதிகளையும் இலங்கை இராணுவம் கைப்பற்றி ஏ32 வீதியைத் திறந்தது. மீண்டும் 2009 ஜனவரி 2ஆம் திகதி, இலங்கை இராணுவத்தின் 57ஆவது மற்றும் 58ஆவது படைப்பிரிவுகள் கிளிநொச்சியைக் கைப்பற்றின. ஜனாதிபதியும் சர்வதேச சமூகமும் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு எல்.ரி.ரி.ஈ. இனை வலியுறுத்தினர். 2009 ஜனவரி 9ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 53ஆவது மற்றும் 55ஆவது படைப்பிரிவுகள் ஆனையிறவைக் கைப்பற்றி ஏ9 வீதியைத் திறந்து, 23 வருடங்களில் முதற்தடவையாக நெடுஞ்சாலை முழுவதையும் அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பின்பு அதே மாதத்தில், ஜனவரி 25 ஆம் திகதி, 59ஆவது படைப்பிரிவு மேலுமொரு முக்கிய எல்.ரி.ரி.ஈ. தளமான முல்லைத்தீவைக் கைப்பற்றியது. இந்நிகழ்வுகள் ஆயுதப் போராட்டத்தின் வேகம் மற்றும் தீவிரத் தன்மையில் புதியதொரு கட்டத்தைக் குறித்து, எல்.ரி.ரி.ஈ. இன் தோல்வி நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தியது.

(30) 2. போர்முனைகள், ஜனவரி 2009 மூலம்: இலங்கை அரசாங்க பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம். 2. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் தடைகள் 78. ஐக்கிய நாடுகளின் சர்வதேச பணியாட்தொகுதியினர் கிளிநொச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், இலங்கையில் உள்ள ஐ.நா.வின் வதிவிட/ மனிதாபிமான கூட்டிணைப்பாளர் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் தலைவர், உணவு, தங்குமிட வசதிகள் மற்றும் மருந் துகளை வன்னிக்கு வாராந்தம் எடுத்துச் செல்வதற்கான வாகனத் தொடர்களைக் கொண்ட மனிதாபிமான உதவியைத் தொடர்வதற்காக அரசாங்கத்தின் அங்கீ காரத்தைப் பெற்றனர். இருந்த போதிலும், பாதுகாப்பு அமைச்சு வாகனத் தொடரில் செல்பவர்கள் மற்றும் உணவு சாராத பொருட்கள், அவை இராணுவத் தேவைக ளுக்காகப் பாவிக்கப்படலாம் எனக் கூறி கடினமான கட்டுப்பாடுகளை விதித்தது. கீழே விபரமாக விளக்கப்பட்டுள்ளது போன்று எடுத்துச் செல்லக் கூடிய மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் அளவுகள் மீதும் அவர்கள் கட்டுப்பாடுகளை விதித்தனர். 2008 ஒக்டோபர் 8ஆம் திகதி முதலாவது வாகனத் தொடர் வவுனியாவைச் சென்றடைந்தது. ஐந்து மாதக் காலப்பகுதியொன்றில் மொத்தம் 11 வாகனத் தொடர்கள், 7,435 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களுடன், அது பொதுமக்களுக்குப் போதுமானதாக இல்லாவிடினும், வவுனியாவுக்குச் சென்றன.

79. வாகனத் தொடரின் பயணத்தை சூழ்ந்த நிலைமைகள் மிகவும் ஆபத்தாக இருந்தன. 9ஆவது மற்றும் 10ஆவது வாகனத் தொடர்களின் போது, வீதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் செல்வெடிகள் விழுந்ததோடு, இலங்கை இராணுவமும எல்.ரி.ரி.ஈ. இனரும் வாகனத்தொடரைப் பாவித்து மறைந்திருந்தும் இராணுவ நிலைகளை முன்நகர்த்துவதில் ஈடுபட்டனர் 2009 ஜனவரி 16ஆம் திகதி, வவுனியாவிலிருந்து ஓமந்தை ஊடாக புதுக்குடியிருப்புக்கு (பிரிகே) அதன் பதினொராவது வாகனத் தொடரை ஐ.நா.அனுப்பியது. மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்குப் புறம்பாக தொடரில் இருந்த சிலர் எல்.ரி.ரி.ஈ. இடம் இருந்து ஐ.நா.தேசிய ஊழியர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் விடுவிப்பதற்காகப் பேச்சுக்களில் ஈடுபட நாடினர். 11ஆவது வாகனத் தொடரில் 7 சர்வதேச ஊழியர்கள் இருந்ததோடு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சீனி, எண்ணெய் மற்றும் கோதுமை ஆகியவற்றை ஏற்றிய சுமார் 50 லொறிகள் அதில் அடங்கின. வாகனத் தொடர் பொருட்களை இறக்கிய போதிலும், வவுனியாவுக்கான வீதியில் கடும் சண்டை நடைபெற்றதால் அங்கிருந்து செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. யுத்தம் நான்கு நாட்கள் நீடித்தது.

3. யுத்த சூன்ய வலயத்தில் பொதுமக்கள் மீதான இலங்கை இராணுவத்தின் செல்ல டித் தாக்குதல் "முல்லைத்தீவின் விடுவிக்க ப்படாத பிரதேசங்களில் சிக்குண்டுள்ள அல்லது எல்.ரி.ரி.ஈ. இனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆகக் கூடிய பாதுகாப்பை வழங்குவதற்கு பாதுகாப்புப் படையினர் முழுமையாக உöதிபூண்டுள்ளதால், இதனை இராணுவத் தலைமையகம் பாதுகாப்பு வலயமாக குறித்துள்ளது'. என வன்னிக்கான கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் ஜயசூரிய அறிவித்தார். யுத்த சூன்ய வலயத்தின் மற்றும் எல்லைகள் பற்றிய படங்கள் அரசாங்க அதிபர்களினால் தெளிவு படுத்தப்பட்டன. தம்மீது கடப்பாடானது என யுத்த சூன்ய வலயத்தை எல்.ரி.ரி.ஈ. ஏற்றுக் கொள்ளவில்லை.

(31) எல்.ரி.ரி.ஈ. இன் மேற்கு மற்றும் தெற்குப் பாதுகாப்புக் கோடுகள் மற்றும் முன்னேறி வரும் இலங்கை இராணுவத்தினரின் முன்னிலைக்கு 800 மீற்றர் வடக்கே ஏ 35 வீதியின் எல்லை அமைந்திருப்பது ஆகியவற்றை நோக்குமிடத்து, அங்கு யுத்த சூன்ய வலயத்தை அமைப்பதற்கான விவேகம் தெளிவாகவில்லை, 3. யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போதான யுத்த சூன்ய வலயங்கள்

81.
ஜனவரி 19 இல் இருந்து 21 வரை அல்லது அதற்கு அண்மித்த தினங்களில், இலங்கை இராணுவத்தினரின் செல் குண்டுகள் முதலாவது யுத்த சூன்ய வலயத்தில் அமைந்திருந்த வல்லிபுரம் ஆஸ்பத்திரியில் விழுந்து அதனால் நோயாளிகள் இறந்தனர். யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் முழுவதிலும், குறிப்பாக காயமடைந்த எல்.ரி.ரி.ஈ இனர் இருந்த வன்னியிலுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக ஆஸ்பத்திரிகள் அனைத்தும் போல பலமுறை பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகின.

82. 2009 ஜனவரி 21ஆம் திகதி, தேசிய ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு வாகனத் தொடர் 11 பிரிகேட் இல் இருந்து வவுனியா செல்ல முயற்சித்தது. ஆயினும் தேசிய ஊழியர்கள் இருந்ததால் வாகனத் தொடரை வவுனியா நோக்கிச் செல்ல எல்.ரி.ரி.ஈ. அனுமதிக்கவில்லை. தேசிய ஊழியர்களுடன் இருக்க விரும்பிய இரு ஐ.நா. சர்வதேச ஊழியர்களை அங்கேயே விட்டு விட்டு அநேகமான சர்வதேச ஊழியர்கள் வவுனியாவுக்குத் திரும்பினர்.

(32) 83. 2009 ஜனவரி 23ஆம் திகதி, புதுக்குடியிருப்பு (பிரிகே) மீது இலங்கை இராணுவத்தின் பாரிய தாக்குதல் ஒன்று கட்டாயமாக நடைபெறப் போகிறது என்பதால் ஐ.நா. வின் ஊழியர்கள் முதலாவது யுத்த சூன்ய வலயத்துக்கு இடம் பெயர்ந்தனர். ஏ 35 வீதியினூடாக சுதந்திரபுறம் சந்திக்கு அருகில் தளம் அமைத்த அவர்கள், தாம் இருக்கும் இடம் பற்றி வன்னி கட்டளைத் தளபதிக்கு அறிவித்தனர்.

அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களும் யுத்த சூன்ய வலயத்துக்கு இடம் பெயர்ந்து தம் தங்குமிடங்களை ஐ.நா. தலத்தைச் சுற்றி அமைத்துக் கொண்டனர். யுத்த சூன்ய வலயத்தின் ஏனைய பகுதிகள் தங்குமிடங்களை அமைப்பதற்கு ஏற்றதாயில்லை என்பதால் ஏ 35 வீதிக்குச் சற்று வடக்கே அவர்கள் நிலைகொண்டனர். அருகில் உணவு விநியோக மத்தியொன்றை உதவி அரசாங்க அதிபர் அமைத்தார். பகல் வேளையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து செலுத்தப்பட்ட செல் வெடிகள் அவ்வப்போது யுத்த சூன்ய வலயத்தில் விழுந்தன. இரவில், உணவு விநியோக மத்தியில் விழுந்த செல் வெடிகளால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர்.

84. ஜனவரி 24ஆம் திகதி அதிகாலை யில், யுத்த சூன்ய வலயத்தில் நூற்றுக் கணக்கான செல் வெடிகள் வந்து விழுந்தன. ஐக்கிய நாடுகளின் பதுங்கு குழிக்குச் செல்ல முடிந்தவர்கள் பாதுகாப்புக்காக அதற்குள் விரைந்தனர். பெரும்பாலான உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு பதுங்கு குழிகள் இருக்கவில்லை என்பதோடு பாதுகாப்புத் தேடி அவர்களால் எங்குமே செல்ல முடியவில்லை. மக்கள் உதவி கோரி கூச்சலிட்டு அழுது கொண்டிருந்தனர். நன்கு அனுபவம் உள்ள இராணுவ அதிகாரியான ஐ.நா. பாதுகாப்பு அதிகாரியும் ஏனையவர்களும் செல்வெடிகள் இலங்கை இராணுவத்தினரின் தெற்குத் திசையில் அமைந்த நிலைகளில் இருந்து வருவதை அவதானித்தனர்.

கொழும்பிலுள்ள ஐ.நா. பாதுகாப்புத் தலைவருக்கும் வவுனியாவில் உள்ள வன்னி பாதுகாப்புப் படைத் தளபதியின் தலைமை அலுவலகத்துக்கும் கொழும்பிலுள்ள இணைந்த நடவடிக்கைகள் தலைமையகத்துக்கும் அவர் அவசரமாக தொலைபேசியில் கதைத்து செல்வெடிகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் செல்வெடிகள் திசையை சரி செய்த பின் மீண்டும் செல்வெடிகள் வந்து விழ ஆரம்பித்தன. இரவு முழுவதும் செல் தாக்குதல் தொடர்ந்தது. ஐக்கிய நாடுகள் தலத்தையும் உணவு விநியோக மத்தியையும் தாக்கியதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

85. பொழுது புலர்ந்தவுடன் ஐக்கிய நாடுகள் ஊழியர்கள் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்து பார்த்ததும், பெண்கள் மற்றும் சிறார்களை உள்ளிட்ட பலரின் துண்டிக்கப்பட்ட உடல்களும் உடல் உறுப்புக்களும் அங்கு சிதறிக் கிடப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. சிறு குழந்தைகளின் உடல்கள் சிதறி மேலே மரங்களில் சிக்குண்டிருந்தன. முந்திய நாள் பதுங்கு குழியை அமைக்க உதவியார்களும் இறந்தவர்களுள் இருந்தனர்.

86. யுத்த சூன்ய வலயத்தில் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் இருந்த போதிலும், ஐ.நா. தலத்தினுள் எல்.ரி.ரி.ஈ. இனர் எவரும் இருக்கவில்லை. 500 மீற்றர்களுக்கு அப்பால் மற்றும் யுத்த சூன்ய வலயத்தின் பின்னால் தூரத்தில் இருந்து எல்.ரி.ரி.ஈ. பீரங்கிக் குண்டுகளைச் செலுத்திய போதிலும் ஐ.நா. தலம் இருந்த இடத்தில் தெளிவாகப் பொது மக்களே இருந்தனர். யுத்த சூன்ய வலயத்தில் இருந்த ஒரேயொரு சர்வதேசத் தொடர்பான ஐ.நா. தலத்தை நோக்கி அது ஏன் செல் வெடிகளை ஏவியது என்பதற்கான விளக்கத்தை அரசாங்கம் வழங்கவேயில்லை.

(33) 87. கடுமையான செல்தாக்குதல் இடை விடாது தொடர்ந்தது. ஜனவரி 24ஆம் திகதி, யுத்த சூன்ய வலயத்தில் அதுவும் அமைந்திருந்த மற்றும் சின்னங்களால் தெளிவாக அடையாளமிடப்பட்டிருந்த உடையார்கட்டு ஆஸ்பத்திரி பல செல் வெடிகளினால் தாக்கப்பட்டது. ஜனவரி 25ஆம் திகதி இரவில், முதலாவது யுத்த சூன்ய வலயமும் ஐ.நா. தலத்தைச் சூழவுள்ள பிரதேசமும் தொடர்ந்து செல் தாக்குதலுக்கு இலக்காகின. யுத்த சூன்ய வலயத்தின் மீது இரண்டு நாளாக நடை பெற்ற செல் தாக்குதலில், நூற்று கணக் கான பொதுமக்கள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.

சரமாரியான செல் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக இலங்கை இராணுவத்தினருக்கு எதிர்த் திசையில் வடக்கில் இரணைபாலை அல்லது மீண்டும் பிரிகே நோக்கி பொதுமக்கள் தப்பியோட ஆரம்பித்தனர். செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ஐசிஆர்சி) மற்றும் உதவி அரசாங்க அதிபருடன் சேர்ந்து யுத்த சூன்ய வலயத்தை விட்டும் மீண்டும் பிரிகேவுக்குத் செல்ல ஐ.நா. குழுவினரும் தீர்மானித்தனர். அவர்கள் அங்கிருந்து சென்றதும் கைவிடப்பட்ட பதுங்கு குழியில் பாதுகாப்புத் தேடி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்றனர்.

88. பிரிகேவுக்குச் (பிரிகே புதுக்குடியிருப்பு) செல்லும் ஏ35 வீதி மருங்கில் யுத்த சூன்ய வலயத்தினுள் பாரிய அழிவினைக் குறிக்கும் காட்சியே தென்பட்டதோடு, தாவரங்கள் கூட சிதைந்து காணப்பட்டன. வீதியின் பக்கத்தில் அழிந்த தங்குமிடங்கள், சிதறிக்கிடந்த பொருட்கள் மற்றும் இறந்த மிருகங்களுக்கிடையே இறந்த அல்லது படுகாயத்துக்குள்ளானவர்கள் விழுந்து காணப்பட்டனர். நூற்றுக்கணக்கான சேதமடைந்த வாகனங்களும் வீதியில் கிடந்ததோடு, வல்லிபுரம் ஆஸ்பத்திரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டிகள் பாரிய சேதத்துக்குள்ளாகியிருந் தன.

89. ஏ35 வீதியில் யுத்த சூன்ய வலயத் துக்கு அப்பால் அமைந்திருந்த மஞ்சள் பாலத்தைக் கடந்த பிரதேசம் இங்கிருந்த நிலைமையை விட மிக மாற்றமானதாக இருந்ததோடு அங்கு சிறிய அளவிலான செல் தாக்குதலே நடைபெற்றிருந்தது. முரண்பாடாக, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சூன்ய வலயத்துக்கு வெளியே அமைந்திருந்த புதுக்குடியிருப்பு, அங்கு அதிக எண்ணிக்கையிலான எல்.ரி.ரி.ஈ. இனர் மற்றும் குறைவாக பொதுமக்கள் இருந்த போதிலும், செல்தாக்குதலுக்கு உள்ளாகியதாகத் தெரியவில்லை.

4. பிரிகே ஆஸ்பத்திரி மீது இலங்கை இராணுவத்தின் செல்வெடித் தாக்குதல்

90. இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி அளவில் பிரிகே இனை (புதுக்குடியிருப்பை)த் தாம் கைப்பற்றுவோம் என 55ஆவது மற்றும் 58ஆவது படைப்பிரிவுகள் வெளியிட்டிருந்த முனைப்பின் ஓர் அங்கமாக இப்பிரதேசத்தில் யுத்தம் உக்கிரமடைந்தது. வன்னியில் பிரிகே ஆஸ்பத்திரி மாத்திரமே எஞ்சியிருந்த நிரந்தர ஆஸ்பத்திரி என்பதோடு அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ.யும் அது நடுநிலையானது என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

ஐந்து வைத்தியர்களை உள்ளிட்ட மருத்துவப் பணியாட்டொகுதியினர் அதிக சிரமத்தை எதிர்நோக்கியதோடு மட்டுப்பட்ட அளவிலேயே மருந்து வகைகளும் இருந்தன. முதலாவது யுத்த சூன்ய வலயம் மீதான தாக்குதல் யுத்தத்தின் ஒரு திருப்பு முனையாக இருந்ததோடு, பொதுமக்களிடையே சேதம் அதிகரித்த வண்ணம் இருந்தது. யுத்த சூன்யப் பிரதேசத்தில் காயமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிரிகே ஆஸ்பத்திரியில் இருந்தனர். தினம்தோறும் 100க்கும் அதிகமான புதிய நோயாளிகள், அவர்களுள் அநேகர் யுத்த சூன்ய வலயத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர். பலர் படுகாயம் அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய செல்வெடிக் காயங்களுக்குள்ளாகியிருந்த னர். அதிகமாக கைக்குழந்தைகள், சிறு பிள்ளைகள் மற்றும் முதியோரைக் கொண்ட காயமடைந்தோர் எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் நிறைந்து காணப்பட்டனர். (34)

91. 2009 ஜனவரி 29ஆம் திகதி, எல்.ரி.ரி.ஈ. இனால் வெளியேற அனுமதிக்கப்படாத தேசிய ஊழியர்கள் இன்றி எஞ்சியிருந்த இரண்டு ஐ.நா.சர்வதேச ஊழியர்களும் வவுனியாவுக்குப் பயணமாயினர். ஐ.சி.ஆர்.சி பிறிதொரு வாகனத் தொடரை அனுப்பியதோடு அது 200 காயமடைந்தோரை அங்கிருந்து அகற்றியது. இதனையடுத்து உடனே, ஜனவரி 29ஆம் திகதிக்கும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வாரத்தில் தினமும் பல்குழல் எறிகணைகள் மற்றும் ஏனைய பீரங்கிக் குண்டுகள் பிரிகே ஆஸ்பத்திரியைத் தாக்கியதோடு, அவற்றுள் 9 சரியாக ஆஸ்பத்தியில் விழுந்தன. ஏற்கனவே காயமடைந்திருந்து ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் உள்ளிட்ட காயமடைந்தவர்கள் மற்றும் பணியாட்கள் பலரும் அங்கு கொல்லப்பட்டனர். சத்திர சிகிச்சைக் கூடமும் தாக்கப்பட்டது. 2009 பெப்ரவரி 4 ஆம் திகதி ஆஸ்பத்திரி தாக்கப்படும் போது அங்கு ஐ.சி.ஆர்.சி. இன் சர்வதேச உறுப்பினர்கள் இருவரும் இருந்தனர். செல்வெடிகள் இலங்கை இராணுவ நிலைகளின் திசையில் இருந்து வந்து கொண்டிருந்தன.

(தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com