Contact us at: sooddram@gmail.com

 

பாரம்பரிய பந்தபாசங்களை சீர்குலைக்கும் அன்னையர் தினம்

இலங்கை உட்பட உலக நாடுகளில் நேற்று அன்னையர் தினம் பெரும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமது சொந்த அன்னையர் மீது அன்பையும், பாசத்தையும் தெரிவிப்பதற்கு இவ்வாறான ஒரு தினம் அவசியம்தானா என்று தமிழ் முஸ்லிம் கலாசாரத்தில் ஈடுபாடு கொண்ட கல்விமான்களும் அறிஞர்களும் ஏளனம் செய்யும் அளவுக்கு அன்னையர் தினம் பணம் சம்பாதிப் பதற்கான ஒரு வழிமுறையாக இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அன்னையர் தினத்தை ஒரு வணிகக் குறியாக வைத்து விளம்பர நிறு வனங்களும் பல்தேச நிறுவனங்களும் கொள்ளை இலாபமிடுவதற்கு தங்கள் முழு கவனத்தையும் செலுத்துகின்றன. அன்னையரை உண்மை யான பாசத்துடன், பராமரிப்பதில் இத்தகைய நிறுவனங்களுக்கு எந்தவொரு அக்கறையோ விருப்பமோ கிடையாது.

அன்னையர் தினத்திற்காக விசேட அன்பளிப்புக்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அன்னையர் தினத்தை விருந்து வைத்து கொண்டாடுவதற்காக நட்சத்திர ஹோட்டல்கள், தங்கள் கட்டணத் தைக் குறைத்து அறவிடுவதும் உண்டு.

வயோதிபப் பருவத்தை எட்டும் தமது அன்னையருக்கு புத்தாடை அணிவித்து அவர்களின் பிள்ளைகள் விருந்துபசாரம் வைத்து கொண்டாடினாலும், அந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு இன்சுவை உணவை ருசி பார்க்கும் வாய்ப்பு கூட பெரும்பான்மை யான அன்னையருக்கு கிடைப்பதில்லை.

எங்கள் அம்மாவுக்கு சக்கரை நோய் இருக்கிறது. அம்மாவின் இருதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அவவுக்கு பொரித்த உணவைக் கொடுக்காதீர்கள், உப்பைக் குறைத்து உணவைப் பரி மாறுங்கள், என்றெல்லாம் அந்த அன்னையரின் பிள்ளைகள் கண்டிப்பாக தங்கள் பணியாட்களுக்கு உத்தரவு பிறப்பிப்பார்கள். நாம் இதுவரை இலங்கையில் நடக்கும் அன்னையர் தினக் கொண்டாட்டங்களைப் பற்றித்தான் குறிப்பிட்டோம்.

இந்தக் கொண்டாட்டங்களை பொதுவாக எமது நாட்டின் செல்வச் சிறப் போடு வாழும் சீமாட்டிகளே தங்கள் அன்னையருக்காக ஒழுங்கு செய்கிறார்கள். அன்றைய தினம் இந்த விருந்துபசாரங்களை பெரு மளவு பணத்தைச் செலவிட்டு நடத்துவதன் மூலம் இந்தச் சீமாட்டி கள் தங்களுக்கு இருக்கும் ஐஸ்வர்யத்தை மற்றவர்களுக்கு இறு மாப்போடு எடுத்துக்காட்டுவதிலும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

அதைவிடத்து, இந்தச் சீமாட்டிகள் தங்கள் அன்னையரைப் பற்றி சிறி தளவேனும் சிந்திப்பதோ கவனிப்பதோ இல்லை. பல அறைகளைக் கொண்ட தங்கள் பங்களாவில் கடைசியிலுள்ள ஒரு அறையில் தங்கள் அன்னையரை இவர்கள் நிரந்தரமாக இருக்கச் செய்து அவர்களை பராமரிப்பதற்கு ஒரு பணிப்பெண்ணையும் வைப்பார்கள்.

அவர்கள் 24 மணித்தியாலயத்தில் எப்போதாவது சில வினாடிகள் அன்னையின் அறையை எட்டிப் பார்த்து அம்மா எபபடியிருக் கிறது. இன்று மாலை டாக்டர் வருவார். உடைகளை மாற்றி சுத்த மாக இருங்கள் என்று வெறுமனே கட்டளையிட்டு சென்று மறைவர். இந்த தனித்து விடப்பட்ட அன்னையருக்கு அந்த வீட்டில் தன் னைப் பொறுப்பாக விட்டிருக்கும் பணிப்பெண்ணே சொந்த மகளைப் போன்று அன்புடன் அக்கறையாக பணிவிடை செய்வார்.

பிள்ளைப் பாசத்தினால் வேதனைப்படும் இந்த அன்னையரை தலை நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கும் கூட அவர்களின் மகன்மாருக்கும் மகள்மாருக்கும் நேரம் இருக்காது. இவ்விதம் தனது அறையில் சகல செளகரியங்களும் இருந்தாலும் தான் பெற்ற பிள்ளைகளின் அரவணைப்பைத் தேடி அலையும் இந்த அன்னையர் இறுதியில் மனம் நொந்துபோய் வயோதிபத்தில் மாண்டு விடுகிறார்கள்.

இது அன்னையர் தினத்தின் ஒருபக்கம். மறுபக்கம், நடுத்தர குடும்பங் களிலும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களிலும் பணப் பற்றாக் குறை இருந்தாலும்கூட அங்கு அன்னையர் பாசத்துடன் அவர் களின் பிள்ளைகள் பணிவிடை செய்கிறார்கள். தங்கள் அன்னை யரைப் பராமரிப்பதற்கு அவர்கள் சம்பளத்திற்கு ஆட்களை வைப்பதில்லை.

மாறாக, அவர்களின் சொந்தப் பிள்ளைகளே அன்னையரின் அனைத் துத் தேவைகளையும் அன்புடன் அவதானித்து வருகின்றனர். ஏழைகளின் இல்லத்தில் அன்னையரை அவர்களின் பிள்ளைகள் அன்பு செலுத்தி பராமரிக்கிறார்கள். இதுதான் வாழ்க்கையின் யதார்த் தம். பணம் இருப்பவர்களிடம் நல்ல உள்ளம் இருக்காது. பணம் இல்லாதவர்களில் அன்பும் பாசமும் மடைதிரண்ட வெள்ளமாக பெருக்கெடுக்கும்.

அன்னையர் தினக் கொண்டாட்டங்களுக்கு மேற்கு நாடுகளிலேயே வித்திட்டப்பட்டது. அங்கு வயோதிபத்தை அடைந்த தங்கள் அன்னையரை அவர்களின் பிள்ளைகள் பணம் செலுத்தி ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்கள். வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு மூன்று தடவைகள் அவர்களின் பிள்ளைகள் அன்னையரை போய் பார்த்து சிற்றுண்டிகளையும் சிறிய பரிசுகளையும் கொடுத்து குசலம் விசாரித்துவிட்டு வந்துவிடு வார்கள். அத்துடன் அவர்களின் அன்பும் பாசமும் நிறைவுபெறும்.

தங்கள் அன்னையரை வருடத்திற்கு ஒரு தடவை பார்க்க வேண்டிய வர்கள் அதற்கு ஒரு சாக்காக அன்னையர் தினத்தை பயன்படுத்து கிறார்கள். ஆனால் அங்கு பிள்ளைகளுக்கும் அன்னையருக்கும் இடையில் பந்தபாசங்கள் இருப்பதில்லை. பெயரளவில் இவர்தான் எனது அன்னை என்பதை மற்றவர்களுக்கு பிரபல்யப்படுத்துவதற் காகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

அதுபோன்றே தந்தையர் தினமும் உலகெங்கிலும் கொண்டாடப்படு கின்றது. மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கியிருக்கும் நம் நாட்டவர்கள் உட்பட பல்வேறு கீழைத்தேசங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் போலி யான அன்னையர், தந்தையர் தினத்தை கொண்டாடும் பழக்கத்தை இனிமேலாவது கைவிட வேண்டும். அவர்கள் அவ்விதம் செய்தால் தான் அவர்களின் பிள்ளைகள் தங்கள் தாய்மார் வயோதிபம் அடையும் போது அன்புடன் பராமரிப்பார்கள் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com