Contact us at: sooddram@gmail.com

 

எங்கள் நாட்டில் விருந்தோம்பல் பண்பு தழைத்தோங்கியுள்ளது

கீழைத்தேய கலாசாரத்தின் பிறப்பிடமாக விளங்குவது பாரத நாடாகும். அங்கு ஆரம்பத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் ருந்தும் அதற்கு முன்னர் பல்லாண்டு காலம் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த மன்னர்களாலும் விருந்தோம்பல் பண்பு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதன்பொருட்டு பண்டைய வீடுகளில் திண்ணைகள் நிர்மாணிக்கப் பட்டிருந்தன. திண்ணையின் ஒரு பகுதியில் ஒரு குடம் நிறைய நீரும், அதையெடுத்து அருந்துவதற்கு அங்கு ஒரு சிரட்டையும் வைக்கப்பட்டிருக்கும். அன்று வாகனங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் மனிதர்கள் மாட்டு வண்டிகளிலும், கால்நடையின் மூலமும் தான் ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு சென்று திரும்பினார்கள். இவ்விதம் பயணம் செய்பவர்கள் சிறிது நேரம் அமர்ந்து, நீரை அருந்தி தாகத்தைத் தீர்த்துக்கொண்டு களைப்பாறுவதற்கு திண்ணை கள் அவர்களுக்கு பேருதவியாக அமைந்திருந்தன. நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு அந்தந்த வீடுகளின் இல்லத்தரசிகள் தங்கள் குடும்பத்திற்கென சமைத்த ஆகாரத்தை அன்னதானமாக கொடுத்து, அவர்களின் பசியைப் போக்கி மகிழ்ச்சியடைவார்கள்.

தூர இடங்களுக்கு செல்பவர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர், தங்கள் பயணத்தை தொடர முடியாது திண்ணையிலேயே தங்கி இரவைப் போக்குவதற்கு அனுமதிக்கும் அந்த வீட்டுத் தலைவர் அவர்களுக்கு இரவு போசனத்தையும், காலை ஆகாரத்தையும் கொடுப்பதுடன், காலைக் கடன்களை செய்து முடிப்பதற்கான வசதி களையும் செய்து கொடுப்பார்.

இதனை தமிழர்களின் விருந்தோம்பல். பண்பாடு என்று அன்று பெருமை யாக அழைத்தார்கள். தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமல்ல, இஸ் லாமிய மதத்தை தழுவியவர்களும் பெருமளவில் சகோதர பாசத் துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் நாங்கள் தமிழர்கள் தான். ஆனால், நீங்கள் இந்து மதத்தை தழுவியவர்கள், நாங்கள் இஸ் லாமிய மதத்தை தழுவியவர்கள் என்று வெளிப்படையாக கூறினா லும், அவர்களும் விருந்தோம்பல் பண்பை கடைப்பிடிக்கத் தவறு வதில்லை.

இந்த விருந்தோம்பல் பண்பு இன்று இலங்கையிலும், வேரூன்றி யுள்ளது. ஒரு தமிழர் அல்லது ஒரு முஸ்லிம் அல்லது ஒரு சிங்கள சகோதரரின் வீட்டுக்கு வருபவர் எந்த இனத்தைச் சார்ந்த வராக இருந்தாலும் கொஞ்சம் சாப்பிடுங்கள், என்று அவர்கள் வருந்தி அழைத்து அன்புத் தொல்லை கொடுப்பதை நாங்கள் எங்கள் நாளாந்த வாழ்க்கையில் பார்க்கின்றோம்.

வெசாக் பெளர்ணமி தினத்திலும் அதற்கு மறுநாளும்தன்சலஎன்ற பெயரில் அன்னதானம் வழங்குவதும் இந்த விருந்தோம்பல் பண் பின் ஓர் அங்கமாகும். அது போன்றே இந்துக்களின் ஆலயங் களில் பூஜை நடந்து முடிந்த பின்னர் அங்குள்ள பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதே வழியில் இஸ்லாமியர்களும் பள்ளிவாசல்களில் கந்தூரி சோற்றை தங்கள் நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் அன்புடன் பகிர்ந்து மகிழ்கிறார்கள்.

இவை அனைத்துமே பண்டைய விருந்தோம்பல் மரபு வழியில் தோன்றிய நற்பழக்கங்களாகும். பொதுவாக நம் நாட்டவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சளைத்தவர்கள் அல்ல. அவ்விதம் உதவி செய்யும் போது, அவரது இனம், மதம், குலம் மற்றும் பிரதேச வேறுபாடுகளை அவர்கள் பொருட்படுத்து வதில்லை. வாகன விபத்தொன்றில் காயமடைந்தவர்களை, தங்கள் சொந்த இரத்த உறவுகளைப் போன்று நம் நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நற்பண்பை உடையவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் இவ்விதம் ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக் கின்றது. அவர்கள் ஒரு விபத்தில் காயமடைந்தவர் உயிரோடு போரா டிக் கொண்டிருப்பதை கண்டாலும், அவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவிப்பார்களே ஒழிய, தங்கள் கைகளால் காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில்லை.

இதுவே கீழைத்தேய நாகரிகத்தின் இன்னுமொரு நற்பண்பாகும். விருந்தோம்பல் இதில் சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் வறுமை காரணமாக பலர் உயிரிழக் கக் கூடிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இலங்கையின் வரலாற்றில் இது வரையில் ஒருவர் கூட உண வின்றி மரணிக்கவில்லை என்ற உண்மையை எடுத்துரைத்து நாம் மார்பு தட்டி பெருமைப்பட முடியும்.

வெசாக் மற்றும் ஏனைய பண்டிகை காலத்தில் நம் நாட்டில் கடைப் பிடிக்கப்படும் விருந்தோம்பல் பண்பை நம் நாட்டவர்கள் தங்களு டைய நாளாந்த வாழ்க்கையிலும், ஒரு நாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் கொடுக்கக் கூடிய மனப்பக்குவம் ஏற்பட்டால், இலங்கை நன்னெறியைக் கடைப்பிடிக்கும் உலகின் அதி உன்னத நாடாக மாறிவிடுவது திண்ணம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com