Contact us at: sooddram@gmail.com

 

வெனிசுலாவில் புதுமை

சோசலிச செல்போன் நிறுவனம்

இடதுசாரிக் கொள்கைகள் நடைமுறையாகிக் கொண்டிருக்கும் வெனிசுலாவில் அந்நாட்டு அரசின் புதுமையான முயற்சியில்சோசலிச நிறுவனங்கள்உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் அந்நாட்டுத் தலைநகர் காரகாசில் உள்ள லா பெடாரே என்ற இடத்தில் லா ஒரினோகியா என்ற பெயருடன் இயங்கி வரும் செல்போன் தயாரிப்பு நிறுவனமாகும். இங்கு செல்போன்களோடு, அதற்குரிய உறைகளும் தயாரிக்கப்படுகின்றன.

மே 2010ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் சீனாவின் உதவியால்தான் சாத்தியமானது. எத்தகைய நிறுவனமாக இயங்கப்போகிறோம் என்று சீன அரசிடம் தெளிவாக எடுத்துரைத்து, அதற்கு சீனாவின் உதவி மிகவும் அவசியம் என்று சாவேஸ் தலைமையிலான அரசு முன்வைத்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு, நெளிவு சுழிவான பணிநேரம் மற்றும் பணியிடத்தில் அபாரமான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல அம்சங்களோடு சிறப்பான முறையில் இந்த நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நிறுவனம் துவங்கப்பட்டு சரியாக ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றியால் உத்வேகம் அடைந்த அரசு மேலும் பல நிறுவனங்களையும் துவக்கிவிட்டது.

லா ஒரினோகியாவில் தற்போது 108 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களின் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லா பெடாரேயின் சமூகக் கவுன்சில் மூலமாக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மட்டுமே இந்த நிறுவனத்தில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்கிறது. உள்ளூர் சமூகத்தினரின் பங்கேற்பு என்பதைத் தாண்டி தேசிய அரசுக்கு வேறு சில இலக்குகளும் இத்தகைய நிறுவனங்களைத் துவக்குவதில் உள்ளது. தேசிய அளவிலான உற்பத்தியை அதிகரிப்பதும், “தொழில்நுட்ப இறையாண்மை”யை வெனிசுலா பெறுவதும் இந்த நிறுவனத்தைத் துவக்கியதன் பின்னணியில் உள்ள நோக்கங்களாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பு மிகவும் முக்கியமானதாகப் பேசப்படுகிறது. உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. போதிய ஓய்வு, நெளிவு சுழிவான பணிநேரம், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால் அவர்களின் பங்களிப்பு மற்றவர்களுக்கு இணையாக இருக்கிறது. இரண்டு வயதிலேயே மாற்றுத் திறனாளியாகிவிட்ட மரிபிள் கார்சியா இந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறார். என்னைப் போன்றவர்களுக்கு சக ஊழியர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள் என்பது அவருடைய கருத்தாகும். அவரைப் போன்ற மற்ற மாற்றுத் திறனாளிகளும் இக்

கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.


இந்த நிறுவனத்தின் நிர்வாகக்குழுவும் தொழிலாளர்களையே கொண்டதாக அமைந்துள்ளது. லூயிஸ் சுல்பரன் என்ற பெண் இந்தத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். அவர்தான் நிர்வாகக்குழுவின் செய்தித்தொடர்பாள ராகவும் இருக்கிறார். ஒரு கூட்டுத்தலைமையில் நிறுவனம் இயங்குகிறது. நிர்வாகக்குழுவின் முடிவுகள் ஏகமனதாகவே எடுக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடு ஏற்படும் பட்சத்தில் பெரும்பான்மை முடிவு நடைமுறைக்கு வரும் என்பது எழுதப்பட்டுள்ள விதியாக இருக்கிறது. தேசிய நலன், தொழிலாளர் நலன் ஆகியவை நிறுவன நலனோடு இணைந்து நிற்பதால் நிர்வாகக்குழுவின் முடிவுகள் ஏகமனதாகவே இதுவரை உள்ளது.

நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேறுகிறதா என்று லூயிஸ் சுப்ரானிடம் கேட்டதற்கு, “இது போன்ற சோசலிச நிறுவனங்களில்தான் உழைப்பு மேல் காதலை ஏற்படுத்துவது சாத்தியம். தனியார் நிறுவனங்களால் அதைச் செய்ய முடியாது. இதுதான் இரண்டு நிறுவனங்களுக்குமிடையிலான வேறுபாடாகும். முன்பு, நான் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு தனி நபருக்காகப் பணியாற்றினேன். தற்போது மக்களுக்காக எனது பணி இருக்கிறது என்பதில் மகிழ்ச்சிஎன்கிறார். தேசிய அளவில் இது போன்ற பல சோசலிச நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருவதோடு, அவற்றிற்கான சந்தைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியிலும் சாவேஸ் தலைமையிலான அரசு முனைந்து நிற்கிறது. சீனாவின் செல்போன் தயாரிப்புத் தொழில்நுட்பம், மற்ற நிறுவனங்களின் செல்போன்களோடு போட்டி போடுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. சோசலிச நிறுவனங்கள் என்பது மக்கள் இவற்றிற்கு வைத்த செல்லப்பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவின் இந்த புதுமையான முயற்சிகள் பொலிவியா, ஈக்குவடார் போன்ற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் இதுபோன்ற நிறுவனங்களைத் துவக்க திட்டமிட்டு வருகிறார்கள். வெனிசுலாவிலும் செல்போன் தயாரிப்பைத் தாண்டி வேறு பல துறைகளிலும் சோசலிச நிறுவனங்கள் உருவானால், நாட்டின் நலனையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று ஹியூகோ சாவேஸ் தலைமையிலான அரசு கருதுகிறது. இந்த நடவடிக்கைகளால் 2012 ஆம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சாவேசின் வெற்றியும் உறுதியாகி வருகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com