Contact us at: sooddram@gmail.com

 

ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக செயற்படமாட்டார் அதற்கான அதிகாரமும் அவரிடமில்லை

“1990 ஆண்டு தசாப்தம் முதல் எல்.ரி.ரி.ஈ. இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமென்றும் அதனுடன் இலங்கை அரசாங்கத்திற்கு யுத்தம் செய்வது அவ்வளவு இலகுவான செயலல்ல என்ற வெளிநாட்டு கொள்கையை இந்தியா கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நியாய பூர்வமான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இந்திய அரசு இருந்து வருகிறது. தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்குவதற்கு ஏற்புடைய வகையில் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு நியாயபூர்வமான யதார்த்தமான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று இந்தியா விரும்புகிறது” “இதே வேளையில் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை தடை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான தீர்மானத்தை எடுத்தமைக்கு ரஜிவ் காந்தியை படுகொலை செய்தமை மட்டுமன்றி எல்.ரி.ரி.ஈ ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற காரணத்தினால்தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் வரையில் தமிழ்நாட்டிலும் பிரிவினைவாத பிரச்சினைகளும் தலைத்தோங்குமென்று இந்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது”. இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை இந்து பத்திரிகை 26.10.2008ம் ஆண்டு திகதியிடப்பட்ட ஒரு கட்டுரையில் இதனை விளக்கிக் கூறியுள்ளது. இந்தக் கட்டுரையில் தமிழ்நாடு அரசியல் பற்றியும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “தமிழ் நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் இலங்கையைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் பலதரப்பட்ட கோணங்களில் இருந்தே கொள்கைகளை நிர்ணயிக்கின்றனர். இவர்கள் இலங்கையை எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு முதல் காஷ்மீரை இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்ற நிலையில் இருக்கின்றனர்.

20 ஆண்டுகாலமாக எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் இலங்கையில் ஏற்படுத்திய பேரழிவைப் பற்றி பொருட்படுத்துவதில்லை. தெற்காசியாவில் பயங்கரவாதிகளின் கொடுமைகளை விஸ்தரிப்பதற்கு முன்னணியில் இருந்து செயற்பட்டது எல்.ரி.ரி.ஈ இயக்கமேயாகும்”. எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் யுத்தத்தில் மேற்கொள்ளும் யுக்திகளையும் இந்து பத்திரிகை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றது. “எல்.ரி.ரி.ஈ. இயக்கமும் அதன் ஆதரவாளர்களும் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு பெரும் இனவாதத்தை தூண்டிவிட்டு இந்திய அரசாங்கத்தை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு தூண்டும் நோக்கத்துடன் பிரச்சினைகளை இலங்கையில் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனால் இலங்கையைப் பற்றி தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் பேச்சளவிலேயே இருக்கின்றதே ஒழிய உண்மையில் நன்மை ஏற்படுத்தவில்லை. அத்துடன் தங்கள் எண்ணத்தை மற்றவர்களுக்கு வலியுறுத்தக்கூடிய வகையில் இவர்கள் நடந்து கொள்கிறார்கள்.” தமிழ்நாட்டின் சம்பிரதாயபூர்வமான அரசியல் 1990ம் ஆண்டு சகாப்தத்தின் பின்னர் இலங்கை பற்றிய இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை மாற்றம் அடைந்தது தொடர்பாகவே செயற்படுகின்றது. அன்று இலங்கை பற்றிய வெளிநாட்டு கொள்கை துரிதமாக மாற்றமடைந்ததென்று இந்து பத்திரிகை குறிப்பிடுகின்றது.

இந்தியாவின் இந்தக் கொள்கை இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது. தமிழ்நாட்டின் கொள்கையும் இதற்கமையவே இருந்து வருகிறது. ஜெயலலிதாவின் அரசாங்கம் இலங்கை பிரச்சினையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது சமீபத்தில் நடந்த தமிழ்நாட்டு மாநில தேர்தலில் மாத்திரமல்ல, கருணாநிதியின் மாநில அரசாங்கத்தில் நிலவிய ஊழல், மோசடிகளை முன்வைத்தே தேர்தலில் வெற்றி பெற்றது.

NDTV  தொலைக்காட்சி சேவை அன்று தெரிவித்தது போன்று தமிழ்நாடு அரசியல் சீசோவைப் போன்று அடிக்கடி பக்கம் மாறுகிறது. தமிழ்நாட்டு அரசியலில் தட்டு மாறும் முறை இருக்கிறது. ஒரு தடவை கருணாநிதி வந்தால் மறுதடவை ஜெயலலிதா வருவார்.

சமீபத்திய தேர்தல் வெற்றியை பொறுத்தமட்டில் தமிழ் நாட்டில் இலங்கைப் பிரச்சினை அந்தளவிற்கு இருக்கவில்லை. இதுவும் இன்னுமொரு காரணமாக இருக்கலாம். இதனால் தான் என்னவோ முதலமைச்சர் தமது முதலாவது உரையில் இலங்கையைப் பற்றி பிரஸ்தாபித்திருக்கிறார்.

எவ்வாறாயினும் ஒரு நாட்டின் அரசாங் கம் தனது நாட்டில் இடம்பெற்ற மாநில தேர்தல் வெற்றி தோல்விகளை அடிப்படை யாக வைத்து இன்னுமொரு நாட்டுடன் அரசியல் தொடர்பினை வைப்பதில்லை. இந்தியா இலங்கையின் மத்திய அரசாங்கத்துடன் மாத்திரமே பேசுகிறது.

இதனால்தான் ஜெயலலிதா தமிழ்நாட்டு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அந்தளவிற்கு பொருட்படுத்துவதற்கான அவசியம் ஏற்படாது. இலங்கை பயங்கரவாத யுத்தத்தில் வெற்றி அடைவதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைத்தமை குறித்து எவ்வித சர்ச்சையும் இல்லை.

இலங்கைக்கு ஆதரவாக இந்தியா இருந்த காரணத்தினால் தான் மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கை விடயத்தில் அநாவசியமாக தலையிடுவதை தவிர்த்துக் கொண்டன. இதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இந்தியாவுடன் நட்புறவான முறையில் நடந்து கொண்டதும் ஒரு முக்கிய காரணமாகும். அன்று வடமராட்சி போர் முன்னேற்றமடைந்திருந்த காலகட்டத்தில் ரஜீவ் காந்தி இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவிற்கு இவ்வாறு கூறினார்.

“உங்களுடைய இராணுவ முயற்சி பலனளிக்காது” என்று கூறினார். அதற்கு பின்னரே பருப்பு மூடைகளை விமானங்கள் வட பகுதியில் பரசூட்கள் மூலம் இறக்கின.

இந்த தடவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அப்படி கூறவில்லை. என்றாலும் இந்தியப் பிரதமமந்திரி மன்மோகன் சிங் அப்போதைய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே நாராயணன், அப்போதைய வெளிவிவகார செயலர் சிவசங்கர் மேனன் மூலம் என்ன தகவலை அனுப்பி வைத்தார் என்பது எங்களுக்கு தெரியாது.

ஆயினும் இலங்கை இராணுவம் வெற்றி வாகை சூடி எல்.ரி.ரி.ஈ.யை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. இங்குதான் இந்த வித்தியாசத்தை நாம் காணுகிறோம். இதற்கான பிரதான காரணம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்குமிடையில் வலுவூன்றியிருந்த நட்புறவேயாகும்.

இதே வேளையில் இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்ற அழுத்தங்களை இலங்கை மீது கொண்டு வரவேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இருந்தது.

இத்தகைய நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் எடுப்பதற்கு தமிழ்நாட்டையும் திருப்திப்படுத்துவதற்காகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அது போன்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார். எல்.ரி.ரி.ஈ.யுடன் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்திலும் ஜனாதிபதி அவர்கள் இதே நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்தார்.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கூட அரசியல் தீர்வொன்றை தமிழர் பிரச்சினைக்கு ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன் ஜனாதிபதி அவர்கள் எல்.ரி.ரி.ஈ. உடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தயாராக இருந்தார். NDTV  உடன் நடந்து கொண்டே பேசுவோம் என்ற நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி இதனைத் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் “நான் நிபந்தனைகள் அற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம் என்றேன். அவர்கள் யுத்தத்தை தொடர்ந்தும் நடத்தட்டும். ஆயினும் நான் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருக்கிறேன்.

NDTV  - சேகர் குப்தா

எனக்கு தயவு செய்து இதற்கு விளக்கமளிக்க சந்தர்ப்பம் தாருங்கள். யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்தாமலும் எல்ரி.ரி.ஈ. யுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதையா நீங்கள் கூறுகின்றீர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் “நாட்டிற்கு சமாதானம் அவசியம் என்பதனால் தான் நான் இவ்விதம் செய்கிறேன்” அன்று இத்தகைய நிலைப்பாட்டில் இருந்த ஜனாதிபதி அவர்கள் இன்று அரசியல் தீர்வொன்றை நாட்டில் ஏற்படுத்துவதை காலதாமதப்படுத்துவதற்கு எவ்வித காரணமும் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

“எனது அரசாங்கம் பேச்சுவார்த்தையின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தயாராக இருக்கிறது. இதன் மூலம் அதிகாரத்தை பரவலாக்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, அரசியல் உரிமைகள் உட்பட எங்கள் தமிழ் சகோதரர்களின் சகல உரிமைகளையும் பிரிவுபடாத ஓர் இலங்கையின் மூலம் அனைத்து மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க நான் விரும்புகிறேன்.” (02.11.2008 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்)

“நான் இறுதி சாதகமான தீர்வை எதிர்பார்த்து அதற்கு ஒரு பெயரை இடவும் உத்தேசித்துள்ளேன். ஐக்கிய இலங்கையின் கீழ் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே எனது இறுதி நோக்கமாகும். (2006 ஆசிய நாடுகளின் ஒன்றியத்தில் ஆற்றிய உரையிலிருந்து) இது விடயத்தில் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியின் நிலைப்பாடும் தெளிவாக இருக்கிறது. என்றாலும் அதனை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவை.

மற்றவர்களின் அவசரத்திற்காக அதனை செய்து முடிக்க இயலாது. 50 ஆண்டுகளுக்கும் கூடுதலாக நிலைத்திருக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து இப்போதுதான் 2 ஆண்டு காலம் கடந்துள்ளது. அவசரப்பட்டு தீர்வு களை ஏற்படுத்தி கையை காயப்படுத்த அனுபவம் மிக்க ஒரு தலைவர் விரும்பமாட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இது தொடர்பாக ஒரு வழிகாட்டலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவருவதற்கு முன்னரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். “ஜனாதிபதி அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விடுத்துள்ள அறிக்கைகளுக்கு ஏற்ப அவர் யதார்த்த பூர்வமான, நியாயமான அதிகாரப் பரவலாக்கலை உண்டாக்க விரும்புகிறார் என்பது தெட்டத்தெளிவாகியுள்ளது” (தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்)

இவை எதனையும் அவசரப்பட்டு செய்து முடிக்க இயலாது. தமிழ் தேசிய கூட்டணியுடன் ஏனைய தமிழ், சிங்கள அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வர முடியும். சிலர் 13வது சட்டத் திருத்த பிரேரணையில் உள்ள சில குற்றங் குறைகளை பூர்த்தி செய்து அதன் அடிப்படையில் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.

“13வது அரசியலமைப்புக்கு மேலதிகமாக செல்வதன் அவசியம் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. 13வது திருத்தச் சட்டம் இப்போதும் அரசியல் சாசனத்தில் ஓர் அங்கமாக இருந்து வருகின்றது. இதற்கமைய தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி அவர்கள் கடப்பாட்டை கொண்டுள்ளார். அதே வேளையில் புலிகளின் வேண்டுகோளுக்கு செவிமடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலும் ஜனாதிபதி இருந்து வருகிறார்.

அது போன்றே இந்திய மத்திய அரசாங்கத்திற்கும், தமிழ் நாட்டின் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் தீர்வை துரிதமாக ஏற்படுத்த வேண்டுமென்ற விருப்பம் இருக்கிறது.

இப்போது அவர்கள் விடுத்து வரும் கருத்துக்களும், அறிக்கைகளும் இதற்கான அழுத்தங்களாக இருக்கலாம். தருஸ்மன் அறிக்கையும் அரசியல் தீர்வை விரைவில் ஏற்படுத்துவதற்கான ஒரு அழுத்தமாகவே இருக்கிறது. ஒவ்வொரு யுத்தத்திலும் மனித உரிமைகள் மீறப்படுவது சகஜமே. இது ஒவ்வொரு நாட்டிலும் யுத்த காலத்தில் நடைபெறுவதுண்டு. தமிழ் நாட்டுக்கும் இது பற்றி தெரியும்.

இதேவேளை இந்திய அரசியல் அமைப்பைவிட சற்று உயர்வான அதிகாரப் பரவலாக்கலை அல்லது புலிகளின் அபிலாஷைகளை ஈடு செய்யக்கூடிய வகையில் இந்தியா செயற்பட தயாராக இருக்கிறதென்று நாம் எவ்விதத்திலும் நினைக்க முடியாது. இலங்கையை பிளவுபடுத்தும் ஒரு தீர்வு இந்தியாவினாலும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததே இதற்கான காரணமாகும்.

இப்படி நடந்தால் இந்தியாவில் உள்ள பிரிவினைவாதிகள் இதனைக் கடைப்பிடித்து நன்மையடைய எத்தனிப்பார்கள். இதே வேளையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் புதிய அரசியல் செயற்பாடுகள் குறித்தும் இந்திய மத்திய அரசாங்கம் அவதானமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தி இலங்கையை மறந்து விடுவதற்கும் இந்திய அரசாங்கம் தயாராக இல்லை. இது பற்றி நல்ல அனுபவம் இலங்கைக்கும் இல்லாமலில்லை.

எனவே, யதார்த்தபூர்வமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவை பேணிப்பாதுகாக்க கூடிய வகையில் “தமிழ்நாட்டின் சீமாட்டி”யை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது இந்தியாவின் பொறுப்பாகும். இலங்கை ஒரு சுயாதீனமான நாடு என்பதே இதற்கான காரணமாகும்.

உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு இருக்கும் மதிப்பை இந்தியா நன்கு அறிந்திருக்கிறது. எனவே நாம் நினைப்பது போன்று பேய் அந்தளவிற்கு கறுப்பாக இல்லை. அந்த தமிழ்நாட்டு சீமாட்டியும் இன்று அரசியலில் தாளிக்கப்பட்டு நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறார்.

“இந்த சீமாட்டிக்கு எது மாநில அரசியல் எது அகில இந்திய அரசியல் என்று பாடம் புகட்ட வேண்டிய அவசியமும் இல்லை. எதிர்க்கட்சியில் இருக்கும் போது அதிகாரத்திற்கு வருவதற்காக எதையும் சொல்வார்கள்.

ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் தாங்கள் சொன்னதை செய்வது அவ்வளவு எளிதான செயலல்ல. எனவே, தாம் பொது மேடைகளில் வெளியிடும் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமற்றவை என்பதை இந்த சீமாட்டி நன்கு உணர்ந்திருப்பார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com