Contact us at: sooddram@gmail.com

 

யுத்தத்திற்கு விரயமான கோடிக்கணக்கான டொலர் இன்று அபிவிருத்திக்கு பயன்படுகிறது

வட மாகாணத்தின் அபிவிருத்திற்காக அரசாங்கம் 2011 முதல் 2013 வரையில் 250 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தி ருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முன்னேற்றத் திற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிதி முதலீட்டு திட்டங்கள் பற்றி கொள்கை விளக்கம் ஒன்றை அளித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாற் கப்ரால் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இவ்வாண்டில் மாத்திரம் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் திட்டங் களுக்காக அரசாங்கம் 70 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. இதில் 50 பில்லியன் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக் காகவும் 20 பில்லியன் ரூபா வீதி அமைப்பு திட்டங்களுக்காகவும் செலவிடப்படும்.

வடக்கில் ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரை ரெயில் பாதை களை அமைத்து, ரெயில் சேவையை மீண்டும் தென்னிலங்கை யின் மாத்தறையிலிருந்து காங்கேசன்துறை வரை நீடிக்கும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் 8.9 பில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளது. இதில் 5.3 பில்லியன் ரூபா இவ்வாண்டில் செல விடப்படும்.

இதேவேளையில் கிழக்கின் அபிவிருத்திக்காக ஏற்கனவே 1 இலட் சத்து 16ஆயிரம் மில்லியன் ரூபா பல்வேறு திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களுக்காக முழுமையாக இவ்வாண்டில் 26,611 மில்லியன் ரூபாவும் முதலீடு செய்யப்படவுள்ளது. இதில் சரியாக 50 வீத முதலீடு கிழக்கின் வீதி அமைப்புக்காக செலவிடப்படும் என்று அஜித் நிவாற் கப்ரால் புள்ளி விபரங்களுடன் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார்.

2009 ஆம் ஆண்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட போது, வட மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி 14.1 சதவீதமாக ஏனைய மாகாணங்களின் அளவுக்கு உயர்ந்திருந்தது என்று சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், நாட்டின் மொத்த அபிவிருத்திக்கு வடபகுதி 2009 ல் 3.3 சதவீத பங்களிப்பை வழங்கியது என்று கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தி திட்டங்களில் வீதி புனரமைத்தல், ரெயில் பாதை களை புனர்நிர்மாணம் செய்தல், ஆஸ்பத்திரிகள் மற்றும் பாலங் களை திருத்தி அமைத்தல், பயங்கரவாத வன்முறையின் போது இவ்விரு மாகாணங்களிலும் மூடப்பட்ட கைத்தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு அர சாங்கம் இப்போது தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வரு கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ்விரு மாகாணங்களிலும் இருக்கும் பாரிய நீர்ப்பாசன திட்டங் களை திருத்தி அமைத்து, உடனடியாக அவற்றின் மூலம் பல்லா யிரக்கணக்கான விளைச்சல் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். மின்சார மற்றும் நீர் விநியோக திட்டங் களை இவ்விரு மாகாணங்களில் விஸ்தரித்தல், இப்பிரதேசங்களில் மேலும் கூடுதலான அளவில் தொழிற் பயிற்சி நிலையங்களையும், ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பை அளிக்கக் கூடிய தொழிற்திறனை புகட்டும் தொழில்நுட்பக் கல்லூரிகளையும் ஏற் படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற் கொண்டு வருகிறது.

இவ்விரு மாகாணங்களில் கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல், மீன்பிடித்து துறைமுகங்களை அமைத்தல் மற்றும் இப்பிரதேசங்களில் உல் லாசப் பிரயாணிகளை ஈர்த்தெடுப்பதற்கான நல்ல பல திட்டங் களை நடைமுறைப்படுத்தும் பணிகளையும் அரசாங்கம் மேற் கொண்டுள்ளது.

இறுதியாக, உள்ளூரில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களை கூடிய விரையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கு தல் போன்ற நற்பணிகளையும் அரசாங்கம் இப்போது நடைமுறைப் படுத்தி வருகிறது.

வடபகுதியில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் பணி மிக விரை வில் முடிவடையும் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக் கிறது என்று தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், இன்னும் மீள்குடியேற்றப்படாத நிலையிலுள்ள 18 ஆயிரம் பேர் அவர்களின் சொந்த இருப்பிடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.

இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவினர் வட பகுதி யில் இதுவரையில் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிலான காணி களிலிருந்து கண்ணிவெடிகளை முற்றாக அகற்றி சாதனையையும் புரிந்துள்ளார்கள்.

யுத்தத்தின் போது படைபலத்தை பெருக்குவதற்காக அரசாங்கம் செல விட்டு வந்த பலகோடி அமெரிக்க டொலர் விரயம் இப்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணத்தை அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் சகல பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திற்காக செலவிடும் என்ற நற்செய்தி யையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com