Contact us at: sooddram@gmail.com

 

யுத்தத்தின் பின்

வடமாகாணத்தில் சகஜநிலை திரும்பிக் கொண்டிருப்பதனால் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் (பகுதி 2)

பயங்கரவாத யுத்தத்தின் பின் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான சேவைகளை ஏற்படுத்தி அரசாங்கம் அவர்களின் வாழ்வை வளமாக்கியது.

அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான செயற் பாடுகள் குறிப்பாக வட மாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாடு குறித்து நாம் நேற்று பிரசுரித்த கட்டுரையின் தொடர்ச்சியை இன்று தருகிறோம்.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதிகமானோருக்கு நீரை வழங்குவதற்கு தடைசெய்யக்கூடிய வகையில் எல். ரி. ரி. ஈயினர் மாவிலாறு வான்கதவை மூடியதைய டுத்து, இலங்கை ஆயுதப்படைகளின் மனிதாபிமான செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் ஆரம்பமானது.

அத்துடன் ஆரம்பமாகிய இராணுவ நடவடிக்கைகளினால் கிழக்கு மாகாணத்தை எமது படைகள் எல். ரி. ரி. ஈ பயங்கரவாதத்திலிருந்து விடுவித்தனர். அதையடுத்து முல்லைத் தீவில் எல். ரி. ரி. ஈயினர் பணயக் கைதிகளாக வைத்திருந்த 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கு கூடுதலான அப்பாவி மக்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக பயங்கரவாதிகளை போர்முனையில் முறியடிக்கும் மனிதாபிமான நடவடிக்கை தொடர்ந்தது.

இவ்விதம் விடுவிக்கப்பட்ட மக்களை எமது ஆயுதப்படை வீரர்களும், வீராங்கனைகளும், பொலிஸாரும் அன்புடன் அரவணைத்து அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கினர். அவர்களை பாதுகாப்பான முறையில் நல்வாழ்வு கிராமங்களுக்கு பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தார்கள்.

சிவில் நிர்வாகத்தினருக்கு உறுதுணை புரியக்கூடிய வகையில் ஆயுதப்படையினர் இத்தகைய பணிவிடைகளை பொது மக்களுக்கு அன்று செய்தனர். இலங்கை மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் முழுமையாக வெற்றி பெறுவதற்கு ஆயுதப்படையினரின் பங்களிப்பு உயர்மட்டத்தில் இருந்தது.

இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த மனிதாபிமான கொள்கை பொதுமக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதமளித்ததுடன் அவர்களின் நல்வாழ்வுக்காக தலையிடும் பணியை சிறந்த முறையில் மேற் கொள்ளப்பட்டமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

எல். ரி. ரி. ஈயினர் 1980 ஆம் ஆண்டு தசாப்தத்தில் கையாண்ட பயங்கரவாத செயற்பாடுகளின் காரணமாகவே அரசாங்கம் அதற்கு மனிதாபிமான முறையில் பதிலளிக்க வேண்டிய நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டது. 30 ஆண்டு காலத்திற்கும் கூடுதலாக நடைபெற்ற யுத்தத்தினால் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நல்வாழ்வை அளிக்கும் முகமாகவே அரசாங்கம் இவ்விதம் மனிதாபிமான கொள்கையை கடைப்பிடித்தது.

2004 ஆம் ஆண்டில் சுனாமி போன்ற பல்வேறு அனர்த்தங்களினால் நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக அரசாங்கத்தின் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு மேலும் கூடுதலான அழுத்தங்கள் ஏற்பட்டன.

கடந்த 24 மாதங்களாக, 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் தனது 30 ஆண்டுக்கும் கூடுதலாக கால அனுபவத்தை அணிகலனாக வைத்து, மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது.

யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈயினர் கையாண்ட ஒரு புதிய யுக்தியின் ஓர் அங்கமாக எல். ரி. ரி. ஈ படையினர் யுத்த முனையில் இருந்து பின்வாங்கி பொதுமக்களை முன்னால் கேடயங்களாக வைத்து, அவர்களுக்கு பின்னால் மறைந்திருந்து அரசாங்கப் படைகளை தாக்க ஆரம்பித்தனர்.

இத்தகைய பய ங்கரமான சூழ்நிலையில் எல். ரி. ரி. ஈ பிடியிலிருந்து தப்பி அரசாங்கத் தரப்பிற்கு வருவதற்கு முயற்சி செய்த பொதுமக்களில் சிலர் எல். ரி. ரி. ஈயின் துப்பாக்கிகளுக்கு இரையானதுடன் பலர் துப்பாக்கி சூட்டுக்கும் இலக்காகினர். எல். ரி. ரி. ஈயினர் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசாங்கம் அரசாங்கத்தரப்பிற்கு வந்துகொண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கு உடனடியாக மனிதாபிமான ரீதியில் உதவி செய்ய ஆரம்பித்தது.

யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் உதவி செய்ய பின்தங்கவில்லை. அந்த மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியத் தேவைகளை அரசாங்கம் தங்கு தடையின்றி வழங்கியது.

இந்த மனிதாபிமான உதவிப் பொருட்களை எடுத்துச் செல்லும் தரைப்பாதைகள் மற்றும் கப்பல் பாதைகளிலும் எல். ரி. ரி. ஈயினர் தாக்குதல்களை நடத்தவும் தவறவில்லை. ஆயினும் அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்கு செய்யும் ஒரு பணிவிடையாக எல். ரி. ரி. ஈயினர் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடபகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான பணிகளை செய்யத் தவறவில்லை.

எல். ரி. ரி. ஈயினர் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்த உடன்படிக்கையை உதா சீனம் செய்து ஷி8தி!(ளியில் அர சாங்கப்படைகளை தாக்க ஆரம்பித்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் எல். ரி. ரி. ஈ பயங்கரவாதிகளை முற்றாக துவம்சம் செய்த ஆயுதப்படையினர் வடபகுதியில் உள்ள பயங்கரவாதி களையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இவ்விதம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்த போதிலும் அரசாங்கப்படையினர் எல். ரி. ரி. ஈயின் பிடியில் இருந்த 2 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் அதிமான பொதுமக்களை விடுவித்தது. யுத்தம் காரணமாக பிரதான வீதியான ஏ9 மூடப்பட்ட போதிலும், அரசாங்கம் மாற்று வழிகளைப் பயன்படுத்தி இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பண்டங்களை அனுப்பி வைக்கத் தவறவில்லை.

அரசாங்கப் படையினர் வன்னியின் மேற்கு திசையிலிருந்து எல். ரி. ரி. ஈயை பின்வாங்கச் செய்வதில் வெற்றி கொண்டிருந்த வேளையில் வன்னியின் எஞ்சிய பிரதேசங்களான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேச பொதுமக்கள் விவசாயம் செய்து வந்த காரணத்தினால் அவர்கள் கையிருப்பில் போதியளவு உணவுப் பொருட்கள் இருந்தன. 2008 ஆம் ஆண்டில் கிளிநொச்சியில் நல்ல அறுவடை இருந்ததனால் அங்கு உணவுக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை.

அரசாங்கம் வடபகுதிக்கு கப்பல்கள் மூலம் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்த போது, அந்தக் கப்பல்களையும் எல். ரி. ரி. ஈயினர் தாக்கி உணவு விநி யோகத்தை சீர்குலைக்கச் செய்தனர்.

இத்தகைய முயற்சிகள் மூலம் எல். ரி. ரி. ஈயினர் சர்வதேச சமூகத்தின் மீது இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து போன தமிழ் சமூகத்தை ஒரு ஆயுதமாக வைத்து, அரசாங்கம் எல். ரி. ரி. ஈ எதிராக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி விடுமாறு அழுத்தங்களை செய்வதற்கு எல். ரி. ரி. ஈ முயற்சி செய்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்து விடப்பட்ட சுமார் 2 லட்சம் மக்களுக்கு அரசாங்கம் உதவிகளை செய்யும் பணியை எல். ரி. ரி. ஈ யினால் தடுத்துவிட முடிய வில்லை. இத்தகைய பல்வேறு சவால் களுக்கு மத்தியிலும் யாழப்பாணத்திற்கும், வன்னிப் பிரதேசத்திற்கும் மனிதாபிமான உதவிகளை செய்து வந்தது.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத எல். ரி. ரி. ஈ கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலும் அரசாங்கப் படைகள் தங்கள் நற்பணிகளை தொடர்ந்தும் மேற்கொண்டுவந்தனர்.

எல். ரி. ரி. ஈ இயக்கம் பொய் தகவல்களை பரப்பி யுத்தத்தினால் குடிபெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை பற்றி போலியான விபரங்களை வெளியிட்டு வந்தனர். என்றாலும் இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் 2009 ஜனவரி மாதம் முதல் ஏறத்தாழ 75ஆயிரம் மக்கள் முதல் ஒன்றரை இலட்சம் பொதுமக்களுக்கு 2009 மார்ச் மாதம் வரை மனிதாபிமான உதவிகளை செய்ததை சர்வதேச அமைப்புகள் இப்போது ஊர்ஜிதம் செய்தது.

அரசாங்கம் ஐ. சி. ஆர். சி. அமைப் பின் உதவியுடன் உணவு, மருந்து வகைகள் உட்பட சகல அத்தியாவசியத் தேவைகளை ஏப்ரல் 2009 முதல் அம்மக்களை எல். ரி. ரி. ஈ பிடியில் இருந்து விடுவிக்கும் வரை தொடர்ச்சி யாக கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். கிறின் ஓஷன் என்ற கப்பல் மூலம் வன்னிப் பிரதேசத்தில் யுத்தத் தினால் காயமடைந்த நோயாளிகளையும் திருகோணமலைக்கு எடுத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவிகளை செய்வதற்கு அரசாங்கம் சகல அதிகாரங்களையும் கொண்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் துரிதமாக மேற்கொண்டது. சில அரச சார்பற்ற அமைப்புகளும், ஏனைய சர்வதேச அமைப்புகளும் அரசாங்கம் வேண்டுமென்றே இடம் பெயர்ந்த மக்களை நீண்ட காலத்திற்கு முகாம்களில் வைத்திருக்க விரும்புகிறது என்ற தப்பபிப்பிராயத்தின் பேரில் அரசாங்கத்தின் நற்பணிகளுக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தியும் தீங்கிழைத்தன.

மூன்று மாதங்களுக்கு கூடுதலாக முகாம்களில் இருக்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கு தாங்கள் உதவப் போவதில்லை என்று இந்த சர்வதேச அமைப்புகள் பிடிவாதம் பிடித்தன. இதனால் இடம்பெயர்ந்த மக்களுக்கு கிடைக்கும் உதவிகள் குறைய ஆரம்பித்ததனால் அம்மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள்.

இதனால் இந்த முகாம்களில் இருந்த கழிவறைகளை தேசிய தரத்திற்கு அமைய சிறப்பாக அமைக்க முடியாதிருந்தது. 2009 ஜூன் மாதம் முதல் வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர் தங்கள் குடும்பத்துடனும், கைக்குழந்தை களுடனும், வலது குறைந்தவர்களுடனும் மற்ற நோயாளிகள் அனைவரும் தங்கள் உறவுக் காரர்களுடன் மீண்டும் இணைந்து வாழ சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

அதுபோன்றே நோயாளிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் தங்கள் உறவுகளுடன் மீணடும் ஒன்றிணைந்து வாழ்வதற்கும் 2009 ஜூன் முதல் வகை செய்யப்பட்டது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்தமை

எல். ரி. ரி. ஈ யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரில் 110 குடும்பங்களை ஓராண்டுக்குள் மீள்குடியமர்த்தப்பட்டமை ஒரு பெரும் சாதனையாகும். மீள் குடிபெயர்ந்தவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் மீள்குடியேற்றத்திட்டம் ஆரம்பமாகியவுடன் அவர்கள் தங்கள் சொந்த இருப்பிடங்களில் மீள்குடிய மர்த்தப்பட்டனர்.

மீள் குடியேற்ற அமைச்சு, மாகாண சபை, அரசாங்க அதிபர்கள் மற்றும் 2(யிகி அமைச்சுகள், இலங்கை இராணுவத்தினர் ஆகியோரின் மனிதாபிமான உதவியின் மூலமே இந்த மீள்குடியேற்றத் திட்டம் பூரண வெற்றி பெற்றது. இந்த முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும், அதன் கிளை நிறுவனங்களும், சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளும், நெறியான திட்டத்தின் மூலம் மீள்குடியேற்றும் பணிகளை நிறைவேற்றுவதற்கு உதவி புரிந்தன.

இலங்கை அரசாங்கம் தனது தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து இதற்கென 360.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டது. இலங் கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மேலும் 2,220 மில்லியன் டொலர்களை இதற்கென வழங்கியது. இதில் 1,799மில்லியன் டொலர்களை அமெரிக்கா கடன் உதவியாக வழங்கியது.

அவற் றைவிட 331 மில்லியன் டொலர்களை அமெரிக்கா அன்பளிக்காகவும் வழங்கியது. வெளிநாட்டு உதவி வழங்கும் அமைப்புகள், நீர்விநியோகம், வீடமைப்பு, நீர்ப்பாசனம் மின் விநியோகம், வீதிகள், ரயில் பாதைகளை புனரமைத்தல், சுகாதார சேவைகளை சீர்திருத்தம் செய்வதற்காக உதவிகளை வழங்கின.

சுகாதார மற்றும் கல்வி சேவைகளுடன் தொடர்புடைய 90 சதவீதமான அமைப்புகள் இப்போது வடபகுதியில் முழுமையாக இயங்கி வருகின்றன. மிகக் குறுகிய காலத்தில் விவசாயம், மீன்பிடித்துறைகள் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டு விவசாய சமூகங்களுக்கும், ஏனை யோருக்கும் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான செயற் பாடுகளிலும் அரசாங்கம் முன்னின்று உழைத்து வருகின்றது.

இன்று வடபகுதியில் மக்கள் பாதுகாப்பாக தங்கள் பிள்ளைகளுடன், குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்கள். இன்று அங்கு சகஜ வாழ்க்கை நிலை கொண்டுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் சீர்குலைந்து போயிருந்த வட மாகாணத்தின் மீள் நிர்மாணப் பணிகள் இப்போது துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றது. எல். ரி. ரி. ஈ பயங்கரவாதத்தினால் இடம்பெயர்ந்து, பெரும் துன்பங்களை அனுபவித்து வந்த மக்களுக்கு இந்நாட்டு மக்கள் பிரஜைகள் அனைவரும் தாராள மனப்போக்குடன் உதவிகளை செய்தார்கள்.

இதன்மூலம் அவர்களுக்கு பல்வகையான உதவிகள் மெனிக்பாம் போன்ற முகாம்களில் செய்து கொடுக் கப்பட்டன. இவ்விதம் இந்நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களின் நல்வாழ்வுக்கு செய்து வந்த உதவிகளை அரசாங்கம் நன்றி உணர்வுடன் நினைவு கூருகின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com