Contact us at: sooddram@gmail.com

 

அணு ஆட்டம்!

யார் அந்த ஓபன் ஹெய்மர்?  

''அணு ஆயுத வல்லரசு என்பதால், அதுவும் அணு ஆயுதத்தை உபயோகித்து இருக்கும் ஒரே நாடு என்பதால், அமெரிக்காவுக்கு சில தார்மீகப் பொறுப்புகள் உள்ளன!''- அமெரிக்க அதிபர் ஒபாமா

ராபர்ட் ஓபன் ஹெய்மர்... சுருக்கமான வார்த்தைகளில் சொன்னால், அணுகுண்டின்  தந்தை. மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். 1945 ஜூலை 16-ம் நாள் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் நடந்த டிரினிட்டி பரிசோதனைதான் உலகின் முதல் அணு ஆயுதப் பரிசோதனை!

ஐந்து மாதங்களுக்கு முன்புதான் முதல் அணுகுண்டு வடிவமைப்பை முழுவதுமாக மாற்றி இருந்தார். ஓபன் ஹெய்மரின் முதல் காதலி ஜீன் டாட்லாக், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். இந்த அழுத்தமிக்க சூழலில் அணுகுண்டுப் பரிசோதனை ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன.

அந்த நாளும் வந்தது. உலகின் முதல் அணு ஆயுதப் பரிசோதனைக்காக கட்டுப்பாட்டுப் பதுங்கு குழிக்குள் நின்று இருந்த ஓபன் ஹெய்மர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். மூச்சுவிடக்கூட திணறினார். தன்னை நிலைகுலையாமல் வைத்திருக்க அருகே இருந்த ஒரு இரும்புத் தூணைப் பிடித்துக்கொண்டார். வானத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தார். '3... 2... 1...’ என்று அறிவிப்பாளர் முடித்ததும், 'எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழு கடல் அவள் வண்ணமடாஎன்று பாரதியார் சொன்னதுபோல, மிகப் பிரமாண்டமான பிரளய ஒளிப் பிழம்பு தோன்றி ஜொலித்தது. அதைத் தொடர்ந்து ஒரு சினங்கொண்ட சிங்கத்தின் கர்ஜனையாக அந்த வெடிப்பு ஒலித்தது. ஆழமாக மூச்சுவிட்ட ஓபன் ஹெய்மர் முகம் இறுக்கத்தின் பிடியில் இருந்து தளர்ந்தது.

'வேலை செய்துவிட்டதுஎன்று மட்டும் அவர் முணுமுணுத்ததாக அருகே இருந்த, அவர் சகோதரர் ஃபிராங் ஓபன் ஹெய்மர் சொன்னார். பரிசோதனை வெடிப்பு வெற்றி அடைந்ததும் பகவத் கீதையின் சுலோகம்தான் தன் மனத்தில் தோன்றியதாக ஓபன் ஹெய்மர் பின்னர் தெரிவித்தார். 'ஓராயிரம் சூரியன்கள் ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக இருக்கும்!’ இந்த மாபெரும் சக்தியைப் பார்த்தபோது இன்னொரு கீதையின் சாரமும் தனக்குள் நினைவு வந்ததாக ஓபன் ஹெய்மர் சொன்னார். அது, 'நான் மரணமாக மாறிவிட்டு இருக்கிறேன்; உலகங்களை உருக்குலையச் செய்பவனாகிவிட்டேன்!’

இந்த இணையற்ற இயற்பியல் அறிஞரின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்வது அவசியம். ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஜவுளி வியாபாரியான ஒரு பணக்கார யூதருக்கு 1904-ம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரின் தாய் ஓர் ஓவியர். நியூயார்க் நகரில் பிறந்து வளர்ந்த ராபர்ட்டும், அவர் தம்பி ஃபிராங்கும் சிறந்த பள்ளிகளுக்குச் சென்று சிறப்பாகப் படித்தனர். ஓபன் ஹெய்மர் தனது 20-வது வயதில் ஐரோப்பாவுக்கு உயர் கல்வி கற்கச் சென்றார். அங்கே தன் ஆசிரியர் ஒருவரோடு ஏதோ உரசல் வர,  அபாயகரமான அமிலத்தில் ஓர் ஆப்பிள் பழத்தைத் தோய்த்து, அவர் மேஜையில் வைத்துவிட்டார். அதைக் கண்டுபிடித்த, பல்கலைக்கழகம் இவரைத் தற்காலிக நீக்கம் செய்ய முடிவெடுத்தபோது, பெற்றோர் மன்றாடித் தடுத்துவிட்டனர்.

ஓயாமல் புகைபிடிக்கும் பழக்கமும், ஓய்வின்றி உழைக்கவும், சாப்பிடவும் மறந்துபோகும் ஓபன் ஹெய்மர் அடிக்கடி மனஅழுத்தத்துக்கு உள்ளானார். பாரிஸில் ஒரு நண்பரை சந்திக்கச் சென்ற ஓபன் ஹெய்மர், தனது இயற்பியல் ஆய்வுகளை விவரித்துக்கொண்டு இருந்த நேரத்தில், திடீரென நண்பரின் மீது தாவிக் குதித்து கழுத்தை நெரித்தார். அந்த நண்பர் அப்போது தப்பித்துக்கொண்டாலும், ஓபன் ஹெய்மரின் மனப் பிரச்னைகள் உலகுக்கு வெட்ட வெளிச்சமாயின.

ஆனாலும் 24-வது வயதிலேயே ஓபன் ஹெய்மருக்கு பிரசித்தி பெற்ற ஒரு கல்வி மானியம் கிடைத்தது.அதைத் தொடர்ந்து, கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியும் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் அவரைத் தமதாக்கிக்கொள்ளப் போட்டியிடவே, இரு கல்வி நிலையங்களிலும் ஓர் ஆண்டு ஆய்வு செய்யலாம் என ஏற்பாடானது.

முதலில் கலிஃபோர்னியா சென்ற ஓபன் ஹெய்மர், அங்கே லினஸ் பாலிங் என்ற அறிஞரோடு நட்பானார். பாலிங்கின் மனைவியுடனும் ஓபன் ஹெய்மர் உரிமையுடன் பழகத் தொடங்கவே, அந்த நட்பு விரைவில் முடிவுக்கு வந்தது.

மீண்டும் ஐரோப்பாவுக்குச் சென்று பரிணாம இயந்திரவியலில் (Quantum Mechanics) ஆய்வுகள் செய்த ஓபன் ஹெய்மர், 1929-ம் வருடம் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தில் பேராசிரியராகப் பொறுப்பு ஏற்றார். அவரது பேரறிவால், மாணவர்களை வசியம் செய்து தன்னைப்போன்றே சிந்திக்கத் தூண்டினார். நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்களோடு பணியாற்றினார். பிற்காலத்தில் புகழ்பெற்ற பல மாணவர்களை உருவாக்கினார். இயற்பியலில் நிறைய ஆய்வுகள் செய்து, ஏராளமான கட்டுரைகள் எழுதினார். எனினும் ஒன்றிரண்டு தலைப்புகளில் மட்டும் ஆழமாகச் சென்று தனக்கென ஓர் இடத்தைத் தேடிக்கொள்ளத் தவறினார்.

1933-ம் ஆண்டு சம்ஸ்கிருத மொழியைப் பயின்றார். பகவத் கீதையை சம்ஸ்கிருத மொழியில் படித்தார். 'தனது வாழ்க்கைத் தத்துவத்தை செம்மைப்படுத்திய புத்தகம் அதுதான்என்றார். இந்து மதத்திலும், ஏனைய மதங்களிலும் ஈடுபாடுகொண்டார். இது மாதிரியான பல்வேறு ஈடுபாடுகளால், மூன்று முறை நோபல் பரிசுக்காகப் பரிசீலிக்கப்பட்டும், தேர்வு பெறத் தவறினார்.

ஓபன் ஹெய்மர், உலக வாழ்க்கையில் இருந்து சற்று ஒதுங்கியே நின்றார். பத்திரிகைகள் படிப்பது இல்லை, வானொலி கேட்பது இல்லை, தேர்தல்களில் வாக்களிப்பது இல்லை. தன் தந்தையார் விட்டுச்சென்ற பெரும் தொகையை அப்படியே கலிஃபோர்னியா பல்கலைக்கழக உயர் கல்வி மாணவர்களின் உதவித் தொகைக்காக வழங்கினார். இடதுசாரிக் கொள்கைகளிலும், இயக்கங்களிலும் ஆர்வமாய் இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் 'பீப்பிள்ஸ் வேர்ல்ட்’ (மக்களின் உலகம்) எனும் பத்திரிகையின் சந்தாதாரராக இருந்தார். ரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் விவாதக் குழுக்களில் பங்கேற்கும் அளவுக்கு இயக்கத்தோடு தொடர்பு. ஆனால், அமெரிக்க அரசின் பாதுகாப்பு சோதனைகளுக்கு உள்ளானபோது, 'தான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அல்லஎன்றும், சக பயணி மட்டுமே என்றும் சொன்னார்.  கம்யூனிஸ்ட் கொள்கைகளில் விருப்பம் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து வரும் கட்டளைகளை ஏற்கவில்லை.

மன்ஹாட்டன் திட்டத்தில் வேலை செய்வதற்காக பாதுகாப்பு அனுமதியை வழங்க அமெரிக்க அரசு தயங்கியபோது, திட்டத் தலைவர் லெஸ்லி குரோவ்ஸ், இந்த திட்டத்துக்கு ஓபன் ஹெய்மர் முக்கியமானவர் என்று வற்புறுத்தினார். திட்டம் வெற்றி அடைந்து, ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதல் நடத்திய நேரத்தில் ராபர்ட் ஓபன் ஹெய்மர் பெயர் அமெரிக்க இல்லங்களில் உரக்கவே ஒலித்தது. அணு இயற்பியல் பற்றி அனைத்து நாடுகளுமே சிந்திக்கத் துவங்கின. மனித குலத்தின் பாதுகாப்பு, எதிர்காலம்பற்றி ஆழமாகக் கவலைகொள்ளத் தொடங்கியது உலகம்!

1947-ம் ஆண்டு அணு சக்தி ஆணையம் துவங்கப்பட்ட போது, அதன் ஆலோசனைக் குழுத் தலைவராக ராபர்ட் ஓபன் ஹெய்மர் நியமிக்கப்பட்டார். ஆயுதப் போட்டிக்கு எதிராகவும், சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டுக்காகவும் உழைத்தவர் என்றாலும், அணு ஆயுதங்களை முழுவதுமாக எதிர்க்கவில்லை ராபர்ட்.

காத்ரீன் ஹாரிசன் எனும் திருமணமான ஒரு பெண்ணோடு நெருங்கிப் பழகினார். அவரைக் கணவரிடம் இருந்து பிரித்து, மணந்துகொண்டார். பீட்டர் என்ற மகனும் டோனி என்ற மகளும் பிறந்தார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் அமெரிக்க அரசின் சந்தேகத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளான பிறகு, விர்ஜின் தீவுகளில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி, ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு, மனைவியோடும் குழந்தைகளோடும் தனியே போனார். பாய்மரப் படகு ஓட்டுவதில் பெரும் பகுதி நேரத்தைக் கழித்தார். 1965-ம் ஆண்டு இறுதியில் ஓபன் ஹெய்மருக்குத் தொண்டையில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வேதியியல் சிகிச்சை, கதிரியக்க மருத்துவம், அறுவை சிகிச்சை அனைத்துமே தோற்றுப்போன நிலையில், 1967, பிப்ரவரி மாதம் 25-ம் தேதி கோமாவுக்குப் போனார். அதற்குப் பின் மூன்றே நாட்களில், அணுகுண்டின் முதல் புள்ளிக்கு முற்றுப் புள்ளி விழுந்தது. 62 வருடங்கள் வாழ்ந்த இந்த இயற்பியல் மேதையின் வாழ்க்கை, அணு சக்தி எனும் நச்சுப் பாம்பின் தலைப் பகுதியாகவே இன்று வரை கருதப்படுகிறது!

 வே.சாண்டல் முத்துராஜ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com