Contact us at: sooddram@gmail.com

 

தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கூறுகின்றார்கள்

புலம்பெயர் மக்களை பிரிக்கும் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காதீர்கள்

இலண்டன் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்- அனைத்து உறவுகளும் இங்கு கூடவும்

பிரான்ஸ் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்- அனைத்து உறவுகளும் இங்கு கூடவும்

பல ஆண்டுகளாக தமிழீழ தேசிய விடுதலை தொடர்பான அனைத்து விடயங்களையம் தமிழர்கள் ஒரணியில் நின்றே செயல்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலப்பகுதியில் புலம்பெயர் தமிழர்களை பல குழுவாக உடைத்துப்போட பல சக்திகள் உருவாகியுள்ளன.

தமிழர்கள் ஒன்றுபட்டால் எதிரி தனக்கு ஆபத்து என மிக நன்றாக அறிந்திருக்கின்றான்.சிலர் தெரிந்தே புலம்பெயர் தமிழர்களை பிரிக்கும் சதி வேலையில் இறங்கியிருக்கின்றார்கள். அவர்களுடன் இதுகாலம் வரை முன்னுரிமை கொடுக்கப்படாதவர்களும், மேடை ஏற அனுமதிக்கப்படாதவர்களும், தமிழீழ செயற்பாட்டாளர்களுடன் கடந்தகாலங்களில் தனிப்பட்ட ரீதியாக முரண்பட்டவர்களும் தமது சுயநலன்களுக்காக புலம்பெயர் தமிழர்களை பிரிக்கும் சூழ்ச்சிக்காரர்களுடன் கைகோர்த்துள்ளார்கள்.

பலர் பழி வாங்களுக்காகவும், பலர் மேடை புகழுக்காகவும், பலர் முன்னுரிமைக்காகவும், சிலர் முதலீட்டாளர்கள், பணத்திற்காகவும், சிலர் இவரை எனக்கு தெரியும் என்பதற்காகவும், சிலர் தொலைக்காட்சிகளில் முகம் காட்ட வேண்டும் என்பதற்காகவும் சுயநலன் மட்டுமே நோக்கமாக புலம்பெயர் தமிழர்களை பிரிக்கும் குழுவுடன் இணைந்துள்ளார்கள்.

இவர்களை அடையாளம் காண்டுகொள்ள, புதிதாக உருவாகியிருக்கும் தமிழர்களின் ஓற்றுமையை உடைத்து சிதைக்கும் குழுக்களின் மேடைகளிலும் நாம்தான் நிகழ்வுகள் செய்வோம் இதுவரை செய்தவர்கள் இனி எதுவும் செய்யத் தேவையில்லை என கூறும் குழுவின் நிகழ்வுகளிலும் பார்க்கலாம்.

இவர்களின் நோக்கம் ஒன்றுதான் தமிழர்களை பிரிக்க வேண்டும் அதற்காக அனைத்து கூட்டங்களுக்கும் வருவார்கள் குழப்பம் ஏற்படுத்துவார்கள். தம்முடன் இணைந்தால் மிக மகிழ்வோடு செல்வார்கள் இல்லாவிட்டால் கூட்டத்தை குழப்பிய மகிழ்வோடு செல்வார்கள். அதாவது இரண்டில் எது நடந்தாலும் இவர்களுக்கு மகிழ்ச்சியே.

 

பிரான்சில் போட்டியாக முள்ளிவாய்க்கால் தினம் அறிவித்தவர்களின் பிரசுரம் - இதை புறக்கணிக்வும்

மாவீரர் நாளை உடைத்தார்கள், விளையாட்டு நிகழ்வுகளை உடைத்தார்கள்..இப்போது அனைத்து இன மக்களுக்கும் உணர்த்தும் நோக்கோடு மத்திய இலண்டன் பகுதியில் நடத்தப்பட இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பேரவலத்தை தாம்தான் நடத்துவோம் என அறிவித்தவர்கள், இப்போது தாமும் நடத்துவோம் என நகரின் புறநகர்ப் பகுதியில் நடாத்த போவதாக அறிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அவலம் என்பது உலகம் அறிய வேண்டியது அதை ஓர் மூலையில் நடத்தவும் மக்களை பிரித்து சிங்கள பேரினவாதத்திற்கு தெரிவிக்கும் எதிர்ப்பு போராட்டத்தின் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. அடி முட்டாள்களும் வெறும் சுயநலன் கொண்டவர்களும் மட்டுமே இப்படி ஓர் பிரிவினைக்கு ஒத்துப்போவார்கள்.

 

இலண்டனில் போட்டியாக முள்ளிவாய்க்கால் தினம் அறிவித்தவர்களின் பிரசுரம் - இதை புறக்கணிக்வும்

வெளிப்படையாக எவ்வித தயக்கவும் வெட்கமும் இன்றி அனைத்து அமைப்புகளின் ஆதரவோடு முள்ளிவாய்க்கால் நினைவுதினம் என விளம்பரம் செய்கின்றார்கள். பிரித்தனியாவில், பிரான்சில் என எங்குமே எவருமே கேள்விப்படாத அமைப்புக்களின் இலட்சினைகளும், பெயர்களும் விளம்பர பிரசுரங்களில் இடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. வெளியிடப்பட்ட இந்த பிரசுரங்களை இணைத்திருக்கின்றோம் நீங்களே பாருங்கள் அவற்றில் இடப்பட்டிருக்கும் அமைப்புகளையோ அவற்றின் செயற்பாடுகளையோ கடந்த காலங்களில் நீங்கள் இந்த உலகில் எங்கேனும் பார்த்து இருக்கின்றீர்களா? இதில் அனைவருக்கும் தெரிந்த ஒரே அமைப்பு நாடுகடந்த அரசு, ஆனால் அவர்களும் இந்த நாளை தேசிய துக்க நாளாக அறிவித்து செத்த வீட்டு நிகழ்வுபோல் அறிவித்துள்ளார்கள் பலர் இந்த தலைப்பை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த போதும் கண்டுகொள்ளவில்லை.

அனைத்து நாடுகளிலும் இதுவரை அனைத்து நிகழ்வுகளை நடாத்திய தமிழர் ஒருங்கிணைப்புக் குழ மற்றும் வழமையான தமிழர் அமைப்புகளால் முள்ளிவாய்க்கால் நிகழ்வு மற்றும் தொடர் பல நிகழ்வுகள் நடாத்தப்படும் புலம்பெயர் மக்கள் தீவிரமாக விசாரித்து வழமையான நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: இப்படி கட்டுரை நாம் எழுதும் பொழுதெல்லாம் பல மின்னஞ்சல்கள் உணர்வாகவும், மிரண்டும் தெனியிலும் எமக்கு வரும் பலர் இதற்கு அஞ்சி எதையும் எழுதுவதில்லை காரணம் பல செயற்பாட்டாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள், உண்மைகளை ஆதாரத்துடன் எமக்கு அனுப்புங்கள்,  ுரண்பாடுகள் இருந்தாலும் நாம் என்றும் மக்களின் ஒற்றுமையின் பக்கமே.

நாங்கள்
தமிழீழ புரட்சிகர
மாணவர்கள்

இதே நிலமைகள்தான் கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றன. அதுசரி தலைவர்தானே உயிருடன் இருக்கின்றார் ஏன் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றார். அது சரி தலைவரை விடுவோம், செயற்பாட்டுத் தலைவர்கள் நெடியவன் விநாயகம், உருத்திரகுமாரன், கேபி போன்றவர்கள் என்ன செய்கின்றார்கள் தலைவர்தான் கண்ணை மூடி இருக்கின்றார் என்றார் இவர்களின் கண்களுமா மூடப்பட்டு இருக்கின்றன....? 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com