Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை நட்புறவுடன் தீர்த்து வைக்கப்படும்

யாழ்ப்பாணத்து தமிழ் மீனவர்களுக்கு இந்திய மீனவர்கள் இழை க்கும் இன்னல்களையும் அவர்களின் மீன் வளத்தை சூறையா டும் சட்டவிரோத செயற்பாடுகளையும் தடுப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈ. பி. டி. பி. அமைப்பின் பொதுச் செயலாளரும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்த தெரிவித்த கருத்துக்கு இந்தியா வில் இருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதற்கான அறிகுறிகள் இப் போது தென்படுகின்றன.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு தமிழர்கள் கெளரவத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக முயன்று வரும் இந்தியா, முதலில் தமிழ் நாட்டு மீனவர்களால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு இழைக்கப்ப டும் இன்னல்களை நீக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கைப் பிரச்சினைக்கு நியாயபூர் வமான தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங் கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய அர சாங்கம், யாழ்ப்பாணத்து மீனவர்களும் இலங்கைத் தமிழர்கள் என்ப தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு இந்திய மீனவர்கள் கடந்த பல் லாண்டுகளாக வேதனை கொடுத்து வரும் துன்புறுத்தல்களை அத்து மீறிப் பிரவேசித்து மீன்வளத்தை சூறையாடும் அராஜகத்தை நிறுத்த இது வரையில் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் உடனடியாக இலங்கை மீனவர்களை இந்திய மீனவர் கள் துன்புறுத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு சமீபத்தில் வருகை தந்திருந்த இந்தியப் பாராளுமன்ற தூதுக் குழுவினருடன் தாம் இலங்கை மீனவ சமூகத்தின் சார்பில் ஒரு மக ஜரை இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன்சிங்கிடம் ஒப்படை க்குமாறு கொடுத்ததாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்கு நியாய பூர்வமான தீர்வை இந்தியா ஏற்படுத்தாவிட்டால் தான் இலங்கை மீன வர்களின் துன்பத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டுவதற்காக 1000 வள்ளங்களில் 5000 மீனவர்களுடன் தமிழ் நாட்டுக்குச் சென்று இது குறித்து முறைப்பாடு செய்ய இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இவ்விதம் நம் நாட்டுத் தமிழர்களான யாழ்ப்பாணத்து மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை இந்திய அரசாங்கம் முதலில் தீர்த்து வைத்த பின்னர் இனப்பிரச்சினையை நல்ல முறையில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறையில் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொண்டு வருவதே சிறந்த முன் மாதிரியான வழிமுறையாக அமையும் என்றும் திரு. டக்ளஸ் தேவா னந்தா தெரிவித்திருந்தார்.

திரு. டக்ளஸ் தேவானந்தாவின் இத்தகைய அழுத்தங்களுக்கு ஒரு சாதக மான பதில் அளிக்கும் வகையில் பாக்குநீரிணையில் மீனவர்களின் அத்துமீறல் மற்றும் மீன்பிடி சம்பந்தமான பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை மற்றும் இந்திய கடற்றொழில் அதிகாரி கள் சமீபத்தில் இணக்கம் கண்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக் குரிய விடயமாகும். சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குச் செல்லாமல் இலங்கை, இந்திய மீனவர்களின் இப்பிரச்சினையை சுமுகமான முறை யில் தீர்ப்பதற்கு இரு தரப்பும் இப்போது இணக்கம் தெரிவித்துள்ளன. சர்வதேச கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்களை விடு விப்பதற்கு இந்திய அதிகாரிகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட் டிருக்கும் இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை அதிகாரிக ளும் இணங்கியிருப்பது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமை ச்சு வட்டாரங்கள் தெரிவித்திருப்பது உண்மையிலேயே இலங்கையின் கடற்றொழிலாளர்களை பெரு மகிழ்ச்சி அடையச் செய்யும் செய்தியா கும்.

இது பற்றி தகவல் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜிதசேனாரத்ன இந்திய அதிகாரிகளுடன் நட்பு ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளை சுமுகமாகத் தீர் த்துக் கொள்வதையே தாம் விரும்புவதாகக் கூறினார். ஆயிரக்கணக் கான இந்திய இழுவைக் கப்பல்கள் இலங்கைக் கடற் பரப்புக்குள் நுழை வதால் இலங்கைக் கடற் பரப்புக்குள் மீன்கள் குறைவடையும் சூழ் நிலை இன்று உருவாகி இருக்கின்றது. இதனால் இலங்கை மீனவர்களு க்குச் சொந்தமான எமது மீன்வளத்தை இந்தியர்கள் சூறையாடுவதை தடு ப்பதற்கும் இதன் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.

இலங்கையின் கடற் பிரதேசத்துக்குள் நுழையும் வெளிநாட்டு மீன்பிடிப் பட குகளை கண்காணிக்கும் பணி எமது கரையோரப் பாதுகாப்பு படையி னருக்கும், கடற்படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் இந்திய மீன்பிடி இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத் துமீறிப் பிரவேசிப்பதைத் தடுக்க முடியும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வைத்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை கைப் பற்றுவதுடன் அதில் உள்ள மீனவர்களை கைது செய்யும் அதிகாரம் கடற்படையினருக்கு இருக்கின்ற போதிலும் அத்தகைய கடுமையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் இந்த வெளிநாட்டுப் படகுகள் இல ங்கை கடல் எல்லைக்குள் வரும் முன்னர் அதனை எச்சரித்து திருப்பி அனுப்புவதற்கு இலங்கைக் கடற்படையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

இவ்விதம் அரசாங்கம் மதி நுட்பமாக எடுக்கும் நடவடிக்கையினால் அநா வசியமான பிரச்சினைகள் உருவாவதை நாம் அனைவரும் தடுத்துவிட லாம். இத்தகைய முயற்சிகள் இலங்கை இந்திய நல்லுறவை மேம் படுத்துவதற்கும் பேருதவியாக அமையும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com