Contact us at: sooddram@gmail.com

 

பிரான்ஸ், கிரீஸ் தேர்தல் உணர்த்துவது...

பிரான்சிலும் கிரீஸிலும் நடைபெற்ற தேர் தல்களில் முடிவுகள் அதிர்ச்சியை ஒன்றும் கொண்டுவரவில்லை. உக்கிர மான உலகப் பொருளாதார நெருக்கடி மக் கள் மீது சொல் லொண்ணா துன்பத்தைத் திணித்துள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக உலக முதலாளித்துவமும், சர்வதேச நிதிமூலதன மும் கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வந்த நடவடிக் கைகளுக்கு எதிராக மக்கள் கிளர் ச்சிகள் மிகவும் விரிவடைந்து வந்ததைப் பார்த் தோம். பொருளாதாரநெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அவை மேற்கொண்ட நட வடிக்கைகள் ஒவ்வொன்றும் புதிய நெருக்கடிகளை உருவாக்கி, மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடு மையான பாதிப்புகளை உருவாக்கின. கடைசியாக அவை மேற்கொண்ட முயற் சிகளில் முக்கியமானது ‘‘சிக்கன நட வடிக்கைகள்’’ என்ற பெயரில் மக்களுக்கு அளித்து வந்த நலத்திட்டங்கள் பலவற்றை நீக்கியதாகும். இதனால் மக்களின் வாழ் நிலை மிகவும் மோசமாக சரிந்தது. இவை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது இயற்கையாகவே கோபமடைய வைத்தது.

ஐரோப்பிய நாடுகளில் பத்து நாடுகள் இன்றையதினம் பொருளாதார மந்தத் தால் அதிகாரபூர்வமாகவே பாதிக்கப் பட்டுள்ளன. இத்தாலி, ஸ்பெயின், பெல் ஜியம், அயர்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனி யா, நெதர்லாந்து, ( ஐரோப்பிய மண்டல நாடுகள் 17இல் இவை ஏழும் வருகின் றன) இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் செக்குடியரசு ஆகிய பத்து நாடுகளும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக வேலையில்லாத் திண்டாட் டம் குறித்த விவரங்கள் திகிலடைய வைக்கின் றன. கிரீஸிலும் ஸ்பெயினிலும் 15 வயதுக்கும் 25 வயதுக்கும் இடையிலு ள்ள இளைஞர்களில் 51 விழுக்காட்டினர் வேலையின்றி அவதிப்படுகின்றார்கள். இத்தாலியிலும் போர்ச்சுக்கல்லிலும் இது 36 விழுக்காடாகும். அயர்லாந்தில் 30 விழுக்காடாகவும், பிரான்சில் 20 விழுக்காடாகவும் இது இருக்கிறது. மற்ற நாடுகளிலும் கிட்டத்தட்ட இதேபோன்ற நிலைமைகள்தான்.

ஐரோப்பாவில் ஆட்சியிலிருந்து உரு ண்ட தலைகளில் நிகோலஸ் சர்கோசி யின் தலை ஒன்பதாவதாகும். (பிரிட்டன், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், டென்மார்க், லாட்வியா, அயர் லாந்து, ஸ்விட்சர்லாந்து ஆகியவை மற்றவைகளாகும்.) ஐரோப்பிய மண்டலத்தில் பிரான் கோ-ஜெர்மன் அச்சு நாடுகளில் இன்னும் பாதி, தேர் தல்களை இன்னும் சந்திக்கவில்லை. ஆயினும், ஜெர்மன் மாநிலங்களில் ஒன் றான செலஸ்விக்-ஹால்ஸ்டீன் (ளுஉாடநளறபை-ழடிடளவநin) 1950களுக்குப்பின் நடைபெற்ற தேர்தல்களிலேயே, சான் சலர் ஏஞ்சலா மெர்கெல்லினுடைய கட்சி மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் ஆய்வு செய்ததுபோல, ஏகாதிபத்திய உலகமயம் தலைமை தாங்கும் சர்வதேச நிதி மூலதனம் உலக முதலாளித் துவத்தை மிகவும் ஆழ மான நெருக்கடி வட்டத்திற்குள் தள்ளிக் கொண்டே இருக்கிறது.

கொள்ளை லாபம் ஈட்டவேண்டும், மூல தனத்தை மிகவும் அரக்கத்தனமாக குவித் திட வேண்டும் என்கிற முதலாளி த்துவத்தின் நடவடிக்கைகளினால் உலக மக்களில் பெரும்பாலானவர் களின் வாங்கும் சக்தி கடுமையாக சுருங்கியிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, முதலாளித்துவம், தங்கள் பொருள்கள் எப்படியாவது விலை போக வேண்டும் என்பதற்காக கடன் கொடுப் பதை மிகவும் எளிதாக்கின. முதலாளித் துவம் கொள்ளை லாபம் அடிப்பது தொடர்வதற்கு இந்நடவடிக்கைத் தற் காலிகமாக அனுமதித்தது. ஆயினும், உலகப் பொருளாதார நிலை மிகவும் மந்த மாக மாறிக் கொண்டிருந்த நிலையில் இவ்வாறு கடன் வாங்கியோர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு (‘ளரb யீசiஅநஉசளைளை) இட்டுச்சென்றது. இத் தகைய மந்த நிலைக்கு மூலகர்த்தாக்க ளான கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப் பாற்று அவதற்காக மிக அதிகமான அள வில் நிதி உதவிகள் (யெடைடிரவ யீயஉமயபநள) அளிக்கப்பட்டன. இவ்வாறு ஆங்காங் குள்ள அரசாங்கங்கள் அபரிமிதமான அளவில் நிதி உதவிகள் செய்ததன் கார ணமாக, தங்கள் பற்றாக் குறை யைச் சமா ளிக்க முடியாத அளவிற்கு மாறின. இவ் வாறு கார்ப்பரேட் திவால் நிலைமைகள் (ஊடிசயீடிசயவந iளேடிடஎநnஉநைள), ஆங்காங்குள்ள அரசாங்கங்களின் திலால்களாக (ளடிஎநசநபைn iளேடிடஎநnஉநைள) மாற்றப்பட்டதால், அரசாங்கங்கள் தங்கள் செலவினங் களை வெட்டிக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகின. இதற்கு அவை, தாங்கள் சமூக செலவினங்க ளுக்கு அளித்து வந்த தொகைகளைக் கடுமையாக வெட்ட வேண்டிய நிர்ப் பந்தத்தால் மட்டுமே செய்திட முடியும். இதற்காக அவைகள் தங்கள் நாடுகளின் உழைக்கும் மக்களின் மீது, அவர்களின் ஊதியங்களை முடக்குவதன் மூலமும், வேலை நேரங்களை அதிகரிப்பதன் மூல மும், ஓய்வூதியப் பயன்களைப் பாதி யாகக் குறைப்பதன் மூலமும், அதிக சுமைகளை ஏற்றின. இவ்வாறான ‘‘சிக் கன நடவடிக்கைகளை’’ அவை மேற்கொண்டன. அரசாங்கங்களில் ஆட்சி புரிந்து வந்தவர்களின் தலைகள் தொடர்ந்து உருள்வதற்கு, இவ்வாறு மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை ஏற்றியதற்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தீயை உமிழ்வதே காரணமாகும்.

இத்தகையசிக்கன நடவடிக்கை கள்மக்களின் வாங்கும் சக்தியை மே லும் சுருக்குவதற்கு இட்டுச் சென்று, தற் போதைய பொருளாதார மந்தநிலையை மேலும் ஆழமாக்கி, மற்றொரு நெருக்கடி க்கும் அடிப்படையாயின. இது அரசாங் கங்களின் வருவாயையும் குறைக்க இட்டுச் சென்றது. ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளுக்கு அவற்றின் திவால் நிலைகளிலிருந்து அவை மீள்வதற்காக ஐரோப்பிய மத்தியவங்கி சுமார் 1.3 டிரில் லியன் அமெரிக்க டாலர்கள் (ஒரு டிரில் லியன் என்பது ஒரு லட்சம் கோடியாகும்) கடன் கொடுத்திருக்கிறது. இவற்றை இந்நாடுகள் 2014இல் திருப்பிச் செலுத்த ஆரம்பித்திட வேண்டும். அப் போது இந்நாடுகளின் நெருக்கடிகள் மேலும் உக்கிரமடையும். அநேகமாக அப்போது அனைத்து நாடுகளுமே தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டுவிடும்.

முதலாளித்துவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கக்கூடிய நெருக் கடியே இது என்பதில் நமக்கு எவ்வித ஐயமுமில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு இந்த முதலாளித்துவ அமைப்பில் நிச்ச யமாகக் கிடையாது. வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம்கிளர்ச்சி இயக்கங்கள் முதலாளித்துவ அமைப்பு முறையையே கேள்விக்கு உட்படுத்தி இருக்கின்றன. ‘‘இவை, இந்த அமைப்பினை செயல் படுத்துவதில் ஏற்பட்ட பிழைகள் அல்ல, மாறாக இந்த அமைப்பே - முதலாளித் துவம் என்கிற அமைப்பே - பிழையான தாகும்’’ என்று பேனர்ஸ் கூறுகிறார். இன் றைய தேவை என்ன? சோச லிச அமைப்பின் மூலமாக, முதலாளித்துவ அமைப்பினை புரட்சிகரமான முறையில் மாற்றக்கூடிய, ஒரு வலுவான அரசியல் சக்தியே, இன்றைய தேவையாகும்.

ஆயினும், வெளியாகியிருக்கும் தேர் தல்முடிவுகளிலிருந்து,அத்தகையதொரு அரசியல் மாற்று உருவாகிவிட்டதாகக் கூறிட முடியாது. பதினேழு ஆண்டுகள் வலதுசாரிகளின் ஆதிக்கத்திலிருந்த பிரான்ஸ் தற்போது ஒரு சோசலிஸ்ட்டை அதிபராகப் பெற்றிருக்கிறது. அவரும் கூட, பிரான்ஸ் மக்களுக்கு ஒரு சோச லிச மாற்றை அளிக்கப்போவதில்லை. இதற்கு முன்பு பிரான்சில் ஆட்சியிலி ருந்த சோசலிஸ்ட் அதிபரான பிரான் காய்ஸ் மிட்டரண்ட்  தான், இன்றைய ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஈரோ நாணயம் உருவாவதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டவர்களில் முத லாமவராவார் என்பதை நாம் நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கிரீஸில், அரசாங்கத்தை அமைக்கக் கூடிய விதத்தில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பட்ட பெரும்பான்மை கிடைத்திட வில்லை. தேர்தலுக்குப் பின் அனை த்துக் கட்சிகளுமே பெரும்பான்மை யைத் திரட்டக்கூடிய விதத்தில் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியின் விளைவு களுக்கு எதிராக பிரம்மாண்டமான மக் கள் திரள் போராட்டங்களுக்குத் தலை மை தாங்கிய கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, முன்பு பெற்றிருந்ததைவிட ஒரு விழுக் காடு கூடுதலாகப் பெற்றுத் தற்போது 8.5 விழுக்காடு வாக்குப் பங்கீட்டினைப்பெற்றிருக்கிறது. ஆயினும் 16.8 விழுக்காடு வாக்குப் பங்கீட்டைப் பெற்றுள்ள சிர்சியா  கட்சி கூட் டணி அரசாங்கத்தில் இணைந்துகொள் ளுமாறு கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தபோதிலும், அத னை ஏற்க அது மறுத்துவிட்டது. கார ணம், கிரீஸில் உள்ள மற்ற அனைத்துக் கட்சிகளுமே, ஏதோ ஒரு விதத்தில், நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலையும் நிதி மூலதனத்தின் நலன்களையும் உயர் த்திப்பிடிப்பதால் மக்கள் போராட்டங் களை மேலும் தீவிரப்படுத்தவே உறுதி பூண்டிருக்கிறோம் என்றும், எனவே அமையவிருக்கும் எந்தவொரு அரசாங் கத்திலும் இணையவோ அல்லது அதனை ஆதரிக்கவோ மாட்டோம் என் றும் பிரகடனம் செய்திருக்கிறது.

ஐரோப்பாவில் நடைபெற்ற தேர்தல் களில் வலதுசாரித் தேசியக் கட்சிகளின் வாக்குப் பங்கீடு அதிகரித்திருப்பதை நாம் மிகவும் கவலையுடன் கவனித்திட வேண்டும். சோவியத் யூனியன் தகர்வுக் குப் பின்னர், ஐரோப்பா முழுவதும் கடந்த இருபதாண்டுகளாக மிகவும் வெறித்தன மான முறையில் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். ஐரோப்பிய ஒன்றியமும், அதன் உறுப்பு நாடுகளும் தனித்தனியாக கம்யூனிசத்தை பாசிசத்துடன் இணைத் துத் தீர்மானங்கள் நிறைவேற்றின. இவ் வாறு, இவைகள் பாசிசத்தின் தோல் விக்கு, கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பும், சோவியத் யூனியன் மேற்கொண்ட தீர் மானகரமான பங்களிப்பும் காரணம் என் கிற மகத்தான வரலாற்றை மாற்றி எழுதிட முயற்சிக்கின்றன. ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் அரண்மனையின் மீது செங்கொடியை ஏற்றியதன் மூலம் பாசிசத்திற்கு எதிரான வெற்றியை உல கத்திற்குப் பிரகடனப்படுத்தியது சோவி யத் யூனியன்தான் என்கிற வரலாற்றை மக்களின் மனதிலிருந்து அகற்றிட அவை முயல்கின்றன.

மற்றொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1930களில் பொரு ளாதார வீழ்ச்சி ஏற்பட்ட சமயத்தில்தான் பாசிசம் தலை தூக்கியது. இன்றைய தினம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தினூடே, பொருளாதார நெருக்கடியின் காரணமாக வளர்ந்து வரும் வேலையில்லாத் திண் டாட்டமும் சேர்ந்துகொண்டு, மக்கள் மத்தியில் பாசிச உணர்வுகளை ஊட்டி வளர்த்திடும். இதற்கு எதிராக மக்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே, முதலாளித்துவத்திற்குப் பதிலாக ஒரு வலுவான அரசியல் மாற்றை உருவாக்குவதன் மூலம் மட் டுமே, அரக்கத்தனமான முறையில் பாசிச சக்திகள் தலைதூக்குவதனைத் தடுத்திட முடியும் மற்றும் மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படுவதிலிருந்து மக்களையும் காப்பாற்றிட முடியும்.

மூலதனத்தின் தாக்குதல் மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதித்திடும் என்பதை உய்த்துணர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுவான ஈரோ நாணயம் உருவாவதற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்த ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் கட்சி கள் வரவிருக்கும் காலங்களில் சோச லிசம் என்கிற அரசியல் மாற்றை வலுப் படுத்தக்கூடிய விதத்தில் நிச்சயமாக முன்னேறிச் செல்லும்.

தமிழில்: ச.வீரமணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com